|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
tirumantiram of tirumUlar -verses 1-548 (in tamil script, unicode format) |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
tirumantiram of tirumUlar |
|
|
|
(10th tirumuRai in nampi ANTAr nampi anthology) |
|
|
|
PART - I : tantirams 1 & 2 (verses 1- 548) |
|
|
|
(in tamil script, unicode/UTF-8 format) |
|
|
|
திருமந்திரம் (திருமூலர் அருளியது ) |
|
|
|
பத்தாம் திருமுறை |
|
|
|
முதல் பாகம் - முதல் இரண்டாம் தந்திரங்கள் |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Acknowledgement : |
|
|
|
Our Sincere thanks go to the following persons for their assistance in the preparation of this work. |
|
|
|
Etext preparation & web version:: K. Kalyanasundaram, Lausanne, Switzerland and |
|
|
|
Proof-reading by Mr. G. Venugopalan, Dubai |
|
|
|
This etext was first put up in Inaimathi, Mylai versions on 1998 and |
|
|
|
converted to this unicode version on 13 Sept. 2002. |
|
|
|
© Project Madurai, 1998-2021. |
|
|
|
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation |
|
|
|
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. |
|
|
|
Details of Project Madurai are available at the website |
|
|
|
https://www.projectmadurai.org/ |
|
|
|
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact. |
|
|
|
Feel free to send the corrections by email to the webmaster "[email protected]". |
|
|
|
|
|
|
|
|
|
10-ம் திருமறை - திருமந்திரம் - 1 |
|
|
|
திருமூலர் அருளியது |
|
|
|
|
|
விநாயகர் காப்பு |
|
|
|
|
|
|
|
ஐந்து கரத்தனை யானை முகத்தனை |
|
|
|
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை |
|
|
|
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப் |
|
|
|
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே. |
|
|
|
|
|
|
|
|
|
பாயிரம் (1-112) |
|
|
|
|
|
1.. கடவுள் வாழ்த்து |
|
|
|
|
|
|
|
1. |
|
|
|
ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள் |
|
|
|
நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந் தான்ஐந்து |
|
|
|
வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச் |
|
|
|
சென்றனன் தானிருந் தான்உணர்ந் தெட்டே. 1 |
|
|
|
|
|
|
|
2. |
|
|
|
போற்றிசைத்து இன்னுயிர் மன்னும் புனிதனை |
|
|
|
நாற்றிசைக் கும்நல்ல மாதுக்கும் நாதனை |
|
|
|
மேற்றிசைக் குள்தென் திசைக்கொரு வேந்தனாம் |
|
|
|
கூற்றுதைத் தானையான் கூறுகின் றேனே. 2 |
|
|
|
|
|
|
|
3. |
|
|
|
ஒக்கநின் றானை உலப்பிலி தேவர்கள் |
|
|
|
நக்கனென்று ஏத்திடும் நாதனை நாள்தொறும் |
|
|
|
பக்கநின் றார்அறி யாத பரமனைப் |
|
|
|
புக்குநின்று உன்னியான் போற்றிசெய் வேனே. 3 |
|
|
|
|
|
|
|
4. |
|
|
|
அகலிடத் தார்மெய்யை அண்டத்து வித்தைப் |
|
|
|
புகலிடத்து என்றனைப் போதவிட் டானைப் |
|
|
|
பகலிடத் தும்இர வும்பணிந் தேத்தி |
|
|
|
இகலிடத் தேஇருள் நீங்கிநின் றேனே. 4 |
|
|
|
|
|
|
|
5. |
|
|
|
சிவனொடுஒக் கும்தெய்வம் தேடினும் இல்லை |
|
|
|
அவனொடுஒப் பார் இங்கு யாவரும் இல்லை |
|
|
|
புவனம் கடந்தன்று பொன்னொளி மின்னும் |
|
|
|
தவனச் சடைமுடித் தாமரை யானே. 5 |
|
|
|
|
|
|
|
6. |
|
|
|
அவனை ஒழிய அமரரும் இல்லை |
|
|
|
அவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை |
|
|
|
அவனன்றி மூவரால் ஆவதொன் றில்லை |
|
|
|
அவனன்றி ஊர்புகு மாறு அறியேனே. 6 |
|
|
|
|
|
|
|
7. |
|
|
|
முன்னைஒப் பாயுள்ள மூவர்க்கும் மூத்தவன் |
|
|
|
தன்னைஒப் பாய்ஒன்றும் இல்லாத் தலைமகன் |
|
|
|
தன்னைஅப் பாயெனில் அப்பனு மாயுளன் |
|
|
|
பொன்னைஒப் பாகின்ற போதகத் தானே. 7 |
|
|
|
|
|
|
|
8. |
|
|
|
தீயினும் வெய்யன் புனலினும் தண்ணியன் |
|
|
|
ஆயினும் ஈசன் அருளறி வாரில்லை |
|
|
|
சேயினும் நல்லன் அணியன்நல் அன்பர்க்குத் |
|
|
|
தாயினும் நல்லன் தாழ்சடை யோனே. 8 |
|
|
|
|
|
|
|
9. |
|
|
|
பொன்னால் புரிந்திட்ட பொற்சடை யென்னப் |
|
|
|
பின்னாற் பிறங்க இருந்தவன் பேர்நந்தி |
|
|
|
என்னால் தொழப்படும் எம்இறை மற்றவன் |
|
|
|
தன்னால் தொழப்படு வாரில்லை தானே. 9 |
|
|
|
|
|
|
|
10. |
|
|
|
தானே இருநிலம் தாங்கிவிண் ணாய்நிற்கும் |
|
|
|
தானே சுடும்அங்கி ஞாயிறும் திங்களும் |
|
|
|
தானே மழைபொழி தையலு மாய்நிற்கும் |
|
|
|
தானே தடவரை தண்கட லாமே. 10 |
|
|
|
|
|
|
|
11. |
|
|
|
அயலும் புடையும்எம் ஆதியை நோக்கில் |
|
|
|
இயலும் பெருந்தெய்வம் யாதுமொன் றில்லை |
|
|
|
முயலும் முயலில் முடிவும் மற் றாங்கே |
|
|
|
பெயலும் மழைமுகிற் பேர்நந்தி தானே. 11 |
|
|
|
|
|
|
|
12. |
|
|
|
கண்ணுத லான்ஒரு காதலின் நிற்கவும் |
|
|
|
எண்ணிலி தேவர் இறந்தார் எனப்பலர் |
|
|
|
மண்ணுறு வார்களும் வானுறு வார்களும் |
|
|
|
அண்ணல் இவன் என்றுஅறியகி லார்களே. 12 |
|
|
|
|
|
|
|
13. |
|
|
|
மண்ணளந் தான்மல ரோன்முதல் தேவர்கள் |
|
|
|
எண்ணளந் தின்னும் நினைக்கிலார் ஈசனை |
|
|
|
விண்ணளந் தாந்தன்னை மேலளந் தாரில்லை |
|
|
|
கண்ணளந் தெங்குங் கடந்துநின் றானே. 13 |
|
|
|
|
|
|
|
14. |
|
|
|
கடந்துநினின் றான்கம லம்மல ராதி |
|
|
|
கடந்துநின் றான்கடல் வண்ணம்எம் மாயன் |
|
|
|
கடந்துநின் றான்அவர்க்கு அப்புறம் ஈசன் |
|
|
|
கடந்துநின் றான்எங்கும் கண்டுநின் றானே. 14 |
|
|
|
|
|
|
|
15. |
|
|
|
ஆதியு மாய்அர னாய்உட லுள்நின்ற |
|
|
|
வேதியு மாய்விரிந்துஆர்ந்துஇருந் தான்அருள் |
|
|
|
சோதியு மாய்ச்சுருங் காததோர் தன்மையுள் |
|
|
|
நீதியு மாய்நித்த மாகிநின் றானே. 15 |
|
|
|
|
|
|
|
16. |
|
|
|
கோது குலாவிய கொன்றைக் குழற்சடை |
|
|
|
மாது குலாவிய வாள்நுதல் பாகனை |
|
|
|
யாது குலாவி அமரரும் தேவரும் |
|
|
|
கோது குலாவிக் குணம்பயில் வாரே. 16 |
|
|
|
|
|
|
|
17. |
|
|
|
காயம் இரண்டுங் கலந்து கொதிக்கினும் |
|
|
|
மாயங் கத்தூரி யதுமிகும் அவ்வழி |
|
|
|
தேசங் கலந்தொரு தேவனென் றெண்ணினும் |
|
|
|
ஈசன் உறவுக் கெதிரில்லை தானே. 17 |
|
|
|
|
|
|
|
18. |
|
|
|
அதிபதி செய்து அளகை வேந்தனை |
|
|
|
நிதிபதி செய்த நிறைதவம் நோக்கி |
|
|
|
அதுபதி ஆதரித்து ஆக்கமது ஆக்கின் |
|
|
|
இதுபதி கொள்என்ற எம்பெரு மானே. 18 |
|
|
|
|
|
|
|
19. |
|
|
|
இதுபதி ஏலங் கமழ்பொழில் ஏழும் |
|
|
|
முதுபதி செய்தவன் மூதறி வாளன் |
|
|
|
விதுபதி செய்தவன் மெய்த்தவம் நோக்கி |
|
|
|
அதுபதி யாக அமருகின் றானே. 19 |
|
|
|
|
|
|
|
20. |
|
|
|
முடிவும் பிறப்பையும் முன்னே படைத்த |
|
|
|
அடிகள் உறையும் அறனெறி நாடில் |
|
|
|
இடியும் முழக்கமும் ஈசர் உருவம் |
|
|
|
கடிமலர்க் குன்ற மலையது தானே. 20 |
|
|
|
|
|
|
|
21. |
|
|
|
வானப் பெருங்கொண்டல் மாலயன் வானவர் |
|
|
|
ஊனப் பிறவி ஒழிக்கும் ஒருவனைக் |
|
|
|
கானக் களிறு கதறப் பிளந்தனம் |
|
|
|
கோனைப் புகழுமின் கூடலு மாமே. 21 |
|
|
|
|
|
|
|
22. |
|
|
|
மனத்தில் எழுகின்ற மாயநன் நாடன் |
|
|
|
நினைத்தது அறிவன் என்னில்தான் நினைக்கிலர் |
|
|
|
எனக்குஇறை அன்பிலன் என்பர் இறைவன் |
|
|
|
பிழைக்கநின் றார்பக்கம் பேணிநின் றானே. 22 |
|
|
|
|
|
|
|
23. |
|
|
|
வல்லவன் வன்னிககு இறையிடை வாரணம் |
|
|
|
நில்லென நிற்பித்த நீதியுள் ஈசனை |
|
|
|
இல்லென வேண்டா இறையவர் தம்முதல் |
|
|
|
அல்லும் பகலும் அருளுகின் றானே. 23 |
|
|
|
|
|
|
|
24. |
|
|
|
போற்றிசைத் தும்புகழ்ந் தும்புனி தன்அடி |
|
|
|
தேற்றுமின் என்றும் சிவனடிக் கேசெல்வம் |
|
|
|
ஆற்றிய தென்று மயலுற்ற சிந்தையை |
|
|
|
மாற்றிநின் றார்வழி மன்னிநின் றானே. 24 |
|
|
|
|
|
|
|
25. |
|
|
|
பிறப்பிலி பிஞ்ஞகன் பேரரு ளாளன் |
|
|
|
இறப்பிலி யாவர்க்கும் இன்பம் அருளும் |
|
|
|
துறப்பிலி தன்னைத் தொழுமின் தொழுதால் |
|
|
|
மறப்பிலி மாயா விருத்தமும் ஆமே. 25 |
|
|
|
|
|
|
|
26. |
|
|
|
தொடர்ந்துனின் றானைத் தொழுமின் தொழுதால் |
|
|
|
படர்ந்துநின் றான்பரி பாரக முற்றும் |
|
|
|
கடந்துநின் றாம்கம லம்மலர் மேலே |
|
|
|
உடந்திருந் தான்அடிப் புண்ணிய மாமே. 26 |
|
|
|
|
|
|
|
27. |
|
|
|
சந்தி எனத்தக்க தாமரை வாண்முகத்து |
|
|
|
அந்தமில் ஈசன் அருள்நமக் கேயென்று |
|
|
|
நந்தியை நாளும் வணங்கப் படும்அவர் |
|
|
|
புந்தியி னுள்ளே புகுந்துநின் றானே. 27 |
|
|
|
|
|
|
|
28. |
|
|
|
இணங்கிநின் றான் எங்கும் ஆகிநின் றானும் |
|
|
|
பிணங்கிநின் றான்பின்முன் னாகிநின் றானும் |
|
|
|
உணங்கிநின் றான்அம ராபதி நாதன் |
|
|
|
வணங்கிநின் றார்க்கே வழித்துணை யாமே. 28 |
|
|
|
|
|
|
|
29. |
|
|
|
காணநில் லாய்அடி யேற்குஉறவுஆருளர் |
|
|
|
நாணநில் லேன்உன்னை நான்தழு விக்கொளக் |
|
|
|
கோணநில் லாத குணத்தடி யார்மனத்து |
|
|
|
ஆணியன் ஆகி அமர்ந்துநின் றானே. 29 |
|
|
|
|
|
|
|
30. |
|
|
|
வான்நின்று அழைக்கும் மழைபோல் இறைவனும் |
|
|
|
தானினறு அழைக்கும்கொல் என்று தயங்குவார் |
|
|
|
ஆன்நின்று அழைக்கு மதுபோல்என் நந்தியை |
|
|
|
நான்நின்று அழைப்பது ஞானம் கருதியே. 30 |
|
|
|
|
|
|
|
31. |
|
|
|
மண்ணகத் தான்ஒக்கும் வானகத் தான்ஒக்கும் |
|
|
|
விண்ணகத் தான்ஒக்கும் வேதகத் தான்ஒக்கும் |
|
|
|
பண்ணகத்து இன்னிசை பாடலுற் றானுக்கே |
|
|
|
கண்ணகத் தேநின்று காதலித் தேனே. 31 |
|
|
|
|
|
|
|
32. |
|
|
|
தேவர் பிரான்நம் பிரான்திசை பத்தையும் |
|
|
|
மேவு பிரான்விரி நீருலகேழையும் |
|
|
|
தாவு பிரான்தன்மை தானறி வாரில்லை |
|
|
|
பாவு பிரான்அருட் பாடலு மாமே. 32 |
|
|
|
|
|
|
|
33. |
|
|
|
பதிபல வாயது பண்டுஇவ் வுலகம் |
|
|
|
விதிபல செய்தொன்றும் மெய்ம்மை உணரார் |
|
|
|
துதிபல தோத்திரம் சொல்ல வல்லாரும் |
|
|
|
மதியிலர் நெஞ்சினுள் வாடுகின் றாரே. 33 |
|
|
|
|
|
|
|
34. |
|
|
|
சாந்து கமழுங் கவாயின் கந்தம்போல் |
|
|
|
வேந்தன் அமரர்க்கு அருளிய மெய்ந்நெறி |
|
|
|
ஆர்ந்த சுடரன்ன ஆயிர நாமமும் |
|
|
|
போந்தும் இருந்தும் புகழுகின் றேனே. 34 |
|
|
|
|
|
|
|
35. |
|
|
|
ஆற்றுகி லாவழி யாகும் இறைவனைப் |
|
|
|
போற்றுமின் போற்றிப் புகழ்மின் புகழ்ந்திடில் |
|
|
|
மேற்றிசைக் கும்கிழக் குத்திசை எட்டொடு |
|
|
|
மாற்றுவன் அப்படி ஆட்டவு மாமே. 35 |
|
|
|
|
|
|
|
36. |
|
|
|
அப்பனை நந்தியை ஆரா அமுதினை |
|
|
|
ஒப்பிலி வள்ளலை ஊழி முதல்வனை |
|
|
|
எப்பரி சாயினும் ஏத்துமின் ஏத்தினால் |
|
|
|
அப்பரி சீசன் அருள்பெற லாமே. 36 |
|
|
|
|
|
|
|
37. |
|
|
|
நானும்நின் றேத்துவன் நாள்தொறும் நந்தியைத் |
|
|
|
தானும்நின் றான்தழல் தான்ஒக்கும் மேனியன் |
|
|
|
வானில்நின் றார்மதி போல்உடல் உள்ளுவந்து |
|
|
|
ஊனில்நின் றாங்கே உயிர்க்கின்ற வாறே. 37 |
|
|
|
|
|
|
|
38. |
|
|
|
பிதற்றொழி யேன்பெரி யான்அரி யானைப் |
|
|
|
பிதற்றொழி யேன்பிற வாஉரு வானைப் |
|
|
|
பிதற்றொழி யேன்எங்கள் பேர்நந்தி தன்னைப் |
|
|
|
பிதற்றொழி யேன்பெரு மைத்தவன் தானே. 38 |
|
|
|
|
|
|
|
39. |
|
|
|
வாழ்த்தவல் லார்மனத் துள்ளுறு சோதியைத் |
|
|
|
தீர்த்தனை அங்கே திளைக்கின்ற தேவனை |
|
|
|
ஏத்தியும் எம்பெரு மான்என்றுஇறைஞ்சியும் |
|
|
|
ஆத்தம் செய் தீசன் அருள்பெற லாமே. 39 |
|
|
|
|
|
|
|
40. |
|
|
|
குறைந்துஅடைந் தீசன் குரைகழல் நாடும் |
|
|
|
நிறைந்துஅடை செம்பொனின் நேர்ஒளி ஒக்கும் |
|
|
|
மறைஞ்சடம் செய்யாது வாழ்த்தவல் லார்க்குப் |
|
|
|
புறஞ்சடம் செய்வான் புகுந்துநின் றானே. 40 |
|
|
|
|
|
|
|
41. |
|
|
|
சினஞ்செய்த நஞ்சுண்ட தேவர் பிரானைப் |
|
|
|
புனஞ்செய்த நெஞ்சிடை போற்றவல் லார்க்குக் |
|
|
|
கனஞ்செய்த வாள்நுதல் பாகனும் அங்கே |
|
|
|
இனஞ்செய்த மான்போல் இணங்கிநின் றானே. 41 |
|
|
|
|
|
|
|
42. |
|
|
|
போய்அரன் தன்னைப் புகழ்வார் பெறுவது |
|
|
|
நாயக னான்முடி செய்தது வேநல்கும் |
|
|
|
மாயகம் சூழ்ந்து வரவல்ல ராகிலும் |
|
|
|
வேயன தோளிக்கு வேந்தொன்றும் தானே. 42 |
|
|
|
|
|
|
|
43. |
|
|
|
அரனடி சொல்லி அரற்றி அழுது |
|
|
|
பரனடி நாடியே பாவிப்ப நாளும் |
|
|
|
உரன்அடி செய்துஅங்கு ஓதுங்கவல் லார்க்கு |
|
|
|
நிரன்அடி செய்து நிறைந்துநின் றானே. 43 |
|
|
|
|
|
|
|
44. |
|
|
|
போற்றிஎன் பார்அம ரர்புனி தன்அடி |
|
|
|
போற்றிஎன் பார்அசு ரர்புனி தன்அடி |
|
|
|
போற்றிஎன் பார்மனி தர்புனி தன்அடி |
|
|
|
போற்றிஎன் அன்புள் பொலியவைத் தேனே. 44 |
|
|
|
|
|
|
|
45. |
|
|
|
விதிவழி அல்லதுஇவ் வேலை உலகம் |
|
|
|
விதிவழி இன்பம் விருத்தமும் இல்லை |
|
|
|
துதிவழி நித்தலும் சோதிப் பிரானும் |
|
|
|
பதிவழி காட்டும் பகலவ னாமே. 45 |
|
|
|
|
|
|
|
46. |
|
|
|
அந்திவண் ணாஅர னேசிவ னேஎன்று |
|
|
|
சிந்தைசெய் வண்ணம் திருந்தடி யார்தொழ |
|
|
|
முந்திவண் ணாமுதல் வாபர னேஎன்று |
|
|
|
புந்தி வண்ணன்எம் மனம்புகுந் தானே. 46 |
|
|
|
|
|
|
|
47. |
|
|
|
மனையுள் இருந்தவர் மாதவர் ஒப்பர் |
|
|
|
நினைவுள் இருந்தவர் நேசத்துள் நிற்பர் |
|
|
|
பனையுள் இருந்த பருந்தது போல |
|
|
|
நினையாத வர்க்கில்லை நின்இன்பந் தானே. 47 |
|
|
|
|
|
|
|
48. |
|
|
|
அடியார் பரவும் அமரர் பிரானை |
|
|
|
முடியால் வணங்கி முதல்வனை முன்னிப் |
|
|
|
படியால் அருளும் பரம்பரன் எந்தை |
|
|
|
விடியா விளக்கென்று மேவிநின் றேனே. 48 |
|
|
|
|
|
|
|
49. |
|
|
|
நரைபசு பாசத்து நாதனை உள்ளி |
|
|
|
உரைபசு பாசததுஒருங்கவல் லார்க்குத் |
|
|
|
திரைபசு பாவச் செழுங்கடல் நீந்திக் |
|
|
|
கரைபசு பாசம் கடநது எய்த லாமே. 49 |
|
|
|
|
|
|
|
50. |
|
|
|
சூடுவன் நெஞ்சிடை வைப்பன் பிரான்என்று |
|
|
|
பாடுவன் பன்மலர் தூவிப் பணிந்துநின் |
|
|
|
றாடுவன் ஆடி அமரர்ப்பி ரான்என்று |
|
|
|
நாடுவன் நான்இன் றறிவது தானே. 50 |
|
|
|
----------- |
|
|
|
|
|
2. வேதச் சிறப்பு |
|
|
|
51. |
|
|
|
வேதத்தை விட்ட அறமில்லை வேதத்தின் |
|
|
|
ஓதத் தகும்அறம் எல்லாம் உளதர்க்க |
|
|
|
வாதத்தை விட்டு மதிஞர் வளமுற்ற |
|
|
|
வேதத்தை ஓதியே வீடுபெற் றார்க்களே. 1 |
|
|
|
|
|
|
|
52. |
|
|
|
வேதம் உரைத்தானும் வேதியன் ஆகிலன் |
|
|
|
வேதம் உரைத்தானும் வேதா விளங்கிட |
|
|
|
வேதம் உரைத்தானும் வேதியர் வேள்விக்காய் |
|
|
|
வேதம் உரைத்தானும் மெய்ப்பொருள் காட்டவே. 2 |
|
|
|
|
|
|
|
53. |
|
|
|
இருக்குஉரு வாம்எழில் வேதத்தின் உள்ளே |
|
|
|
உருக்குஉணர் வாயுணர் வேதத்துள் ஓங்கி |
|
|
|
வெருக்குஉரு வாகிய வேதியர் சொல்லும் |
|
|
|
கருக்குஉரு வாய்நின்ற கண்ணனும் ஆமே. 3 |
|
|
|
|
|
|
|
54. |
|
|
|
திருநெறி யாவது சித்தசித் தன்றிப் |
|
|
|
பெருநெறி யாய பிரானை நினைந்து |
|
|
|
குருநெறி யாம்சிவ மாம்நெறி கூடும் |
|
|
|
ஒருநெறி ஒன்றாக வேதாந்தம் ஓதுமே. 4 |
|
|
|
|
|
|
|
55. |
|
|
|
ஆறங்க மாய்வரும் மாமறை ஓதியைக் |
|
|
|
கூறங்க மாகக் குணம்பயில் வாரில்லை |
|
|
|
வேறங்க மாக விளைவுசெய்து அப்புறம் |
|
|
|
பேறங்க மாகப் பெருக்குகின் றாரே. 5 |
|
|
|
|
|
|
|
56. |
|
|
|
பாட்டும் ஒலியும் பரக்கும் கணிகையர் |
|
|
|
ஆட்டும் அறாத அவனியில் மாட்டாதார் |
|
|
|
வேட்டு விருப்பார் விரதமில் லாதவர் |
|
|
|
ஈட்டும் இடஞ்சென்று இகலல்உற் றாரே. 6 |
|
|
|
--------------- |
|
|
|
|
|
3.. ஆகமச் சிறப்பு |
|
|
|
|
|
|
|
|
|
57. |
|
|
|
அஞ்சன மேனி அரிவையோர் பாகத்தன் |
|
|
|
அஞ்சொ டிருபத்து மூன்றுள ஆகமம் |
|
|
|
அஞ்சலி கூப்பி அறுபத்து அறுவரும் |
|
|
|
அஞ்சா முகத்தில் அரும்பொருள் கேட்டதே. 1 |
|
|
|
|
|
|
|
58. |
|
|
|
அண்ணல் அருளால் அருளும் சிவாகமம் |
|
|
|
எண்ணில் இருபத்தெண் கோடிநூ றாயிரம் |
|
|
|
விண்ணவர் ஈசன் விழுப்பம் உரைத்தனர் |
|
|
|
எண்ணிநின் றப்பொருள் ஏத்துவன் நானே. 2 |
|
|
|
|
|
|
|
59. |
|
|
|
பண்டிதர் ஆவார் பதினெட்டும் பாடையும் |
|
|
|
கண்டவர் கூறும் கருத்தறி வார்என்க |
|
|
|
பண்டிதர் தங்கள் பதினெட்டுப் பாடையும் |
|
|
|
அண்ட முதலான் அறஞ்சொன்ன வாறே. 3 |
|
|
|
|
|
|
|
60. |
|
|
|
அண்ணல் அருளால் அருளுந்திவ் யாகமம் |
|
|
|
விண்ணில் அமரர் தமக்கும் விளங்கரி |
|
|
|
தெண்ணில் எழுபது கோடிநூ றாயிரம் |
|
|
|
எண்ணிலும் நீர்மேல் எழுத்தது ஆகுமே. 4 |
|
|
|
|
|
|
|
61. |
|
|
|
பரனாய் பராபரம் காட்டி உலகில் |
|
|
|
தரனாய்ச் சிவதன்மந் தானேசொல் காலத் |
|
|
|
தரனாய் அமரர்கள் அர்ச்சிக்கு நந்தி |
|
|
|
உரனாகி ஆகமம் ஓங்கிநின் றானே. 5 |
|
|
|
|
|
|
|
62. |
|
|
|
சிவமாம் பரத்தினில் சத்தி சதாசிவம் |
|
|
|
உவமா மகேசர் உருத்திர தேவர் |
|
|
|
தவமால் பிரமீசர் தம்மில்தாம் பெற்ற |
|
|
|
நவஆ கமமெங்கள் நந்திபெற் றானே. 6 |
|
|
|
|
|
|
|
63. |
|
|
|
பெற்றநல் ஆகமங் காரணம் காமிகம் |
|
|
|
உற்றநல் வீரம் உயர்சிந்தியம் வாதுளம் |
|
|
|
மற்றவ் வியாமளம் ஆகும்கா லோத்தரந் |
|
|
|
துற்றநற் சுப்பிரம் சொல்லு மகுடமே. 7 |
|
|
|
|
|
|
|
64. |
|
|
|
அண்ணல் அருளால் அருளும் சிவாகமம் |
|
|
|
எண்ணிலி கோடி தொகுத்திடும் ஆயினும் |
|
|
|
அண்ணல் அறைந்த அறிவுஅறி யாவிடின் |
|
|
|
எண்ணிலி கோடியும் நீர்மேல் எழுத்தே. 8 |
|
|
|
|
|
|
|
65. |
|
|
|
மாரியும் கோடையும் வார்பனி தூங்கநின்று |
|
|
|
ஏரியும் நின்றங்கு இளைக்கின்ற காலத்து |
|
|
|
ஆரிய முந்தமி ழும்உட னேசொலிக் |
|
|
|
காரிகை யார்க்குக் கருணைசெய் தானே. 9 |
|
|
|
|
|
|
|
66. |
|
|
|
அவிழ்கின்ற வாறும் அதுகட்டு மாறும் |
|
|
|
சிமிட்டலைப் பட்டுயிர் போகின்ற வாறும் |
|
|
|
தமிழ்ச்சொல் வடசொல் எனும்இவ் விரண்டும் |
|
|
|
உணர்த்தும் அவனை உணரலு மாமே. 10 |
|
|
|
|
|
|
|
|
|
4.. குரு பாரம்பரியம் |
|
|
|
|
|
|
|
67. |
|
|
|
நந்தி அருள்பெற்ற நாதரை நாடிடின் |
|
|
|
நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி |
|
|
|
மன்று தொழுத பதஞ்சலி வியாக்ரமர் |
|
|
|
என்றிவர் என்னோ டெண்மரு மாமே. 1 |
|
|
|
|
|
|
|
68. |
|
|
|
நந்தி அருளாலே நாதனாம் பேர்பெற்றோம் |
|
|
|
நந்தி அருளாலே மூலனை நாடினோம் |
|
|
|
நந்தி அருளாவ தென்செயும் நாட்டினில் |
|
|
|
நந்தி வழிகாட்ட நானிருந் தேனே. 2 |
|
|
|
|
|
|
|
69. |
|
|
|
மந்திரம் பெற்ற வழிமுறை மாலாங்கன் |
|
|
|
இந்திரன் சோமன் பிரமன் உருத்திரன் |
|
|
|
கந்துருக் காலாங்கி கஞ்ச மலையனோடு |
|
|
|
இந்த எழுவரும் என்வழி யாமே. 3 |
|
|
|
|
|
|
|
70. |
|
|
|
நால்வரும் நாலு திசைக்கொன்று நாதர்கள் |
|
|
|
நால்வரும் நானா விதப்பொருள் கைக்கொண்டு |
|
|
|
நால்வரும் யான்பெற்ற தெல்லாம் பெறுகென |
|
|
|
நால்வரும் தேவராய் நாதர் ஆனார்களே. 4 |
|
|
|
|
|
|
|
71. |
|
|
|
மொழிந்தது மூவர்க்கும் நால்வர்க்கும் ஈசன் |
|
|
|
ஒழிந்த பெருமை இறப்பும் பிறப்பும் |
|
|
|
செழுஞ்சுடர் மூன்றொளி யாகிய தேவன் |
|
|
|
கழிந்த பெருமையைக் காட்டகி லானே. 5 |
|
|
|
|
|
|
|
72.. |
|
|
|
எழுந்துநீர் பெய்யினும் எட்டுத் திசையுஞ் |
|
|
|
செழுந்தண் நியமங்கள் செய்யுமின் என்றண்ணல் |
|
|
|
கொழுந்தண் பவளக் குளிர்சடை யோடே |
|
|
|
அழுந்திய நால்வர்க்கு அருள்புரிந் தானே. 6 |
|
|
|
|
|
|
|
|
|
.5.. திருமூலர் வரலாறு |
|
|
|
|
|
|
|
|
|
73. |
|
|
|
நந்தி திருவடி நான்தலை மேற்கொண்டு |
|
|
|
புந்தியின் உள்ளே புகப்பெய்து போற்றிசெய் |
|
|
|
தந்தி மதிபுனை அரனடி நாள்தொறும் |
|
|
|
சிந்தைசெய் தாகமம் செப்பலுற் றேனே. 1 |
|
|
|
|
|
|
|
74 |
|
|
|
செப்புஞ் சிவாகமம் என்னும்அப் பேர்பெற்றும் |
|
|
|
அப்படி நல்கும் அருள்நந்தி தாள்பெற்றுத் |
|
|
|
தப்பிலா மன்றில் தனிக்கூத்துக் கண்டபின் |
|
|
|
ஒப்பிலா எழுகோடி யுகமிருந் தேனே. 2 |
|
|
|
|
|
|
|
75. |
|
|
|
இருந்தஅக் காரணம் கேள்இந் திரனே |
|
|
|
பொருந்திய செல்வப் புவனா பதியாம் |
|
|
|
அருந்தவச் செல்வியைச் சேவித்து அடியேன் |
|
|
|
பரிந்துடன் வந்தனன் பத்தியி னாலே. 3 |
|
|
|
|
|
|
|
76. |
|
|
|
சதாசிவந் தத்துவம் முத்தமிழ் வேதம் |
|
|
|
மிதாசனி யாதிருந் தேன்இன்ற காலம் |
|
|
|
இதாசனி யாதிருந் தேன்மனம் நீங்கி |
|
|
|
உதாசனி யாதுடனே உணர்ந் தோமால். 4 |
|
|
|
|
|
|
|
77. |
|
|
|
மாலாங்க னேஇங்கு யான்வந்த காரணம் |
|
|
|
நீலாங்க மேனியள் நோழை யாளொடு |
|
|
|
மூலாங்க மாக மொழிந்த திருக்கூத்தின் |
|
|
|
சீலாங்க வேதத்தைச் செப்பவந் தேனே. 5 |
|
|
|
|
|
|
|
78. |
|
|
|
நோழை யாவாள் நிரதிச யானந்தப் |
|
|
|
பேருடை யாளென் பிறப்பறுத்து ஆண்டவள் |
|
|
|
சீருடை யாள்சிவன் ஆவடு தண்டுறை |
|
|
|
சீருடை யாள்பதம் சேர்ந்திருந் தேனே. 6 |
|
|
|
|
|
|
|
79. |
|
|
|
சேர்ந்திருந் தேன்சிவ மங்கைதன் பங்கனைச் |
|
|
|
சேர்ந்திருந் தேன்சிவன் ஆவடு தண்டுறை |
|
|
|
சேர்ந்திருந் தேன்சிவ போதியின் நீழலில் |
|
|
|
சேர்ந்திருந் தேன்சிவன் நாமங்கள் ஓதியே. 7 |
|
|
|
|
|
|
|
80. |
|
|
|
இருந்தேன் இக்காயத்தே எண்ணிலி கோடி |
|
|
|
இருந்தேன் இராப்பகல் அற்ற இடத்தே |
|
|
|
இருந்தேன் இமையவர் ஏத்தும் பதத்தே |
|
|
|
இருந்தேன் என்நந்தி இணையடிக் கீழே. 8 |
|
|
|
|
|
|
|
81. |
|
|
|
பின்னைநின்று என்னே பிறவி பெறுவது |
|
|
|
முன்னைநன் றாக முயல்தவம் செய்கிலர் |
|
|
|
என்னைநன் றாக இறைவன் படைத்தனன் |
|
|
|
தன்னைநன் றாகத் தமிழ்செய்யு மாறே. 9 |
|
|
|
|
|
|
|
82. |
|
|
|
ஞானத் தலைவிதன் நந்தி நகர்புக்கு |
|
|
|
ஊனமில் ஒன்பது கோடி யுகந்தனுள் |
|
|
|
ஞானப்பா லாட்டி நாதனை அர்ச்சித்து |
|
|
|
நானும் இருந்தேன்நற் போதியின் கீழே. 10 |
|
|
|
|
|
|
|
83. |
|
|
|
செல்கின்ற வாறறி சிவமுனி சித்தசன் |
|
|
|
வெல்கின்ற ஞானத்து மிக்கேள் முனிவராய்ப் |
|
|
|
பல்கின்ற தேவர் அசுரர்நரர் தம்பால் |
|
|
|
ஒல்கின்ற வான்வழி யூடுவந் தானே. 11 |
|
|
|
|
|
|
|
84. |
|
|
|
சித்தத்தின் உள்ளே சிறக்கின்ற நூல்களில் |
|
|
|
உத்தம மாகவே ஓதிய வேதத்தின் |
|
|
|
ஒத்த உடலையும் உள்நின்ற உற்பத்தி |
|
|
|
அத்தன் எனக்குஇங்கு அருளால் அளித்ததே. 12 |
|
|
|
|
|
|
|
85. |
|
|
|
யான்பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் |
|
|
|
வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின் |
|
|
|
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம் |
|
|
|
தான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே. 13 |
|
|
|
|
|
|
|
86. |
|
|
|
பிறப்பிலி நாதனைப் பேர்நந்தி தன்னைச் |
|
|
|
சிறப்பொடு வானவர் சென்றுகை கூப்பி |
|
|
|
மறப்பிலர் நெஞ்சினுள் மந்திர மாலை |
|
|
|
உறைப்பொடுங் கூடிநின்று ஓதலு மாமே. 14 |
|
|
|
|
|
|
|
87. |
|
|
|
அங்கிமி காமைவைத் தானுடல் வைத்தான் |
|
|
|
எங்குமி காமைவைத் தான்உலகு ஏழையும் |
|
|
|
தங்குமி காமைவைத் தான் தமிழ்ச் சாத்திரம் |
|
|
|
பொங்கிமி காமைவைத் தான்பொருள் தானுமே. 15 |
|
|
|
|
|
|
|
88. |
|
|
|
அடிமுடி காண்பார் அயன்மால் இருவர் |
|
|
|
படிகண் டிலர்மீண்டும் பார்மிசைக் கூடி |
|
|
|
அடிகண் டிலேன் என்று அச்சுதன் சொல்ல |
|
|
|
முடிகண்டேன் என்று அயன் பொய்மொழிந் தானே. 16 |
|
|
|
|
|
|
|
89. |
|
|
|
பெற்றமும் மானும் மழுவும் பிரிவற்ற |
|
|
|
தற்பரன் கற்பனை யாகும் சராசரத்து |
|
|
|
அற்றமும் நல்கி அடியேன் சிரத்தினில் |
|
|
|
நற்பத முமளித் தானெங்கள் நந்தியே. 17 |
|
|
|
|
|
|
|
90. |
|
|
|
நேயத்தை ஞானத்தை ஞாதுரு வத்தினை |
|
|
|
மாயத்தை மாமாயை தன்னில் வரும்பரை |
|
|
|
ஆயத்தை யச்சிவன் தன்னை யாகோசர |
|
|
|
வீயத்தை முற்றும் விளக்கியிட் டேனே. 18 |
|
|
|
|
|
|
|
91. |
|
|
|
விளக்கிப் பரமாகும் மெய்ஞ்ஞானச் சோதி |
|
|
|
அளப்பில் பெருமையன் ஆனந்த நந்தி |
|
|
|
துளக்கறும் ஆனந்தக் கூத்தன்சொற் போந்து |
|
|
|
வளப்பில் கயிலை வழியில்வந் தேனே. 19 |
|
|
|
|
|
|
|
92. |
|
|
|
நந்தி அருளாலே மூலனை நாடிப்பின் |
|
|
|
நந்தி அருளாலே சதாசிவன் ஆயினேன் |
|
|
|
நந்தி அருளால்மெய்ஞானத்துள் நண்ணினேன் |
|
|
|
நந்தி அருளாலே நானிருந் தேனே. 20 |
|
|
|
|
|
|
|
93. |
|
|
|
இருக்கில் இருக்கும் எண்ணிலி கோடி |
|
|
|
அருக்கின்ற மூலத்துள் அங்கே இருக்கும் |
|
|
|
அருக்கனும் சோமனும் ஆரழல் வீச |
|
|
|
உருக்கிய ரோமம் ஒளிவிடுந் தானே. 21 |
|
|
|
|
|
|
|
94. |
|
|
|
பிதற்றுகின் றேனென்றும் பேர்நந்தி தன்னை |
|
|
|
இயற்றுவன் நெஞ்சத்து இரவும் பகலும் |
|
|
|
முயற்றுவன் ஓங்கொளி வண்ணன்எம் மானை |
|
|
|
இயற்றிகழ் சோதி இறைவனு மாமே. 22 |
|
|
|
|
|
|
|
|
|
6.. அவையடக்கம் |
|
|
|
|
|
|
|
|
|
95. |
|
|
|
ஆரறி வார் எங்கள் அண்ணல் பெருமையை |
|
|
|
யாரறி வார்இந்த அகலமும் நீளமும் |
|
|
|
பேரறி யாத பெருஞ்சுடர் ஒன்றதின் |
|
|
|
வேரறி யாமை விளம்புகின் றேனே. 1 |
|
|
|
|
|
|
|
96. |
|
|
|
பாடவல் லார்நெறி பாட அறிகிலேன் |
|
|
|
ஆடவல் லார்நெறி ஆட அறிகிலேன் |
|
|
|
நாடவல் லார்நெறி நாட அறிகிலேன் |
|
|
|
தேடவல் லார்நெறி தேடகில் லேனே. 2 |
|
|
|
|
|
|
|
97. |
|
|
|
மன்னிய வாய்மொழி யாலும் மதித்தவர் |
|
|
|
இன்னிசை உள்ளே எழுகின்ற ஈசனைப் |
|
|
|
பின்னை உலகம் படைத்த பிரமனும் |
|
|
|
உன்னும் அவனை உணரலு மாமே. 3 |
|
|
|
|
|
|
|
98. |
|
|
|
தத்துவ ஞானம் உரைத்தது தாழ்வரை |
|
|
|
முத்திக்கு இருந்த முனிவரும் தேவரும் |
|
|
|
இத்துடன் வேறா இருந்து துதிசெயும் |
|
|
|
பத்திமை யால் இப் பயனறி யாரே. 4 |
|
|
|
|
|
|
|
|
|
7.. திருமந்திரத் தொகைச் சிறப்பு |
|
|
|
|
|
|
|
|
|
99. |
|
|
|
மூலன் உரைசெய்த மூவா யிரந்தமிழ் |
|
|
|
ஞாலம் அறியவே நந்தி அருளது |
|
|
|
காலை எழுந்து கருத்தறிந் தோதிடின் |
|
|
|
ஞாலத் தலைவனை நண்ணுவர் அன்றே. 1 |
|
|
|
|
|
|
|
100. |
|
|
|
வைத்த பரிசே வகைவகை நன்னூலின் |
|
|
|
முத்தி முடிவிது மூவா யிரத்திலே |
|
|
|
புத்திசெய் பூர்வத்து மூவா யிரம்பொது |
|
|
|
வைத்த சிறப்புத் தருமிவை தானே. 2 |
|
|
|
|
|
|
|
|
|
8.. குரு மட வரலாறு |
|
|
|
|
|
|
|
101. |
|
|
|
வந்த மடம்ஏழும் மன்னும்சன் மார்க்கத்தின் |
|
|
|
முந்தி உதிக்கின்ற மூலன் மடம்வரை |
|
|
|
தந்திரம் ஒன்பது சார்வுமூ வாயிரம் |
|
|
|
சுந்தர ஆகமச் சொல்மொழிந் தானே. 1 |
|
|
|
|
|
|
|
102. |
|
|
|
கலந்தருள் காலாங்கர் தம்பால்அ கோரர் |
|
|
|
நலந்தரு மாளிகைத் தேவர்நா தாந்தர் |
|
|
|
புலங்கொள் பரமானந் தர்போக தேவர் |
|
|
|
நிலந்திகழ் மூவர் நிராமயத் தோரே. 2 |
|
|
|
|
|
|
|
|
|
9.. திரு மும்மூர்த்திகளின் முறைமை |
|
|
|
|
|
|
|
|
|
103. |
|
|
|
அளவில் இளமையும் அந்தமும் ஈறும் |
|
|
|
அளவியல் காலமும் நாலும் உணால் |
|
|
|
தளர்விலன் சங்கரன் தன்னடி யார்சொல் |
|
|
|
அளவில் பெருமை அரியயற் காமே. 1 |
|
|
|
|
|
|
|
104. |
|
|
|
ஆதிப் பிரானும் அணிமணி வண்ணனும் |
|
|
|
ஆதிக் கமலத்து அலர்மிசை யானும் |
|
|
|
சோதிக்கில் மூன்றும் தொடர்ச்சியில் ஒன்றெனார் |
|
|
|
பேதித் துலகம் பிணங்குகின் றார்களே. 2 |
|
|
|
|
|
|
|
105. |
|
|
|
ஈசன் இருக்கும் இருவினைககு அப்புறம் |
|
|
|
பீசம் உலகல் பெருந்தெய்வம் ஆனது |
|
|
|
ஈசன் அதுஇது என்பார் நினைப்பிலார் |
|
|
|
தூசு பிடித்தவர் தூரறிந் தார்களே. 3 |
|
|
|
|
|
|
|
106. |
|
|
|
சிவன்முதல் மூவரோடு ஐவர் சிறந்த |
|
|
|
அவைமுதல் ஆறிரண்டு ஒன்றோடு ஒன் றாகும் |
|
|
|
அவைமுதல் விந்துவும் நாதமும் ஓங்கச் |
|
|
|
சவைமுதற் சங்கரன் தன்பெயர் தானே. 4 |
|
|
|
|
|
|
|
107. |
|
|
|
பயன் அறிந்து அவ்வழி எண்ணும் அளவில் |
|
|
|
அயனொடு மால்நமககு அன்னியம் இல்லை |
|
|
|
நயனங்கள் மூன்றுடை நந்தி தமராம் |
|
|
|
வயனம் பெறுவீர் அவ் வானவ ராலே. 5 |
|
|
|
|
|
|
|
108. |
|
|
|
ஓலக்கம் சூழ்ந்த உலப்பிலி தேவர்கள் |
|
|
|
பாலொத்த மேனி பணிந்தடி யேன் தொழ |
|
|
|
மாலுக்கும் ஆதிப் பிரமற்கும் ஒப்புநீ |
|
|
|
ஞாலத்து நம்மடி நல்கிடுஎன் றானே. 6 |
|
|
|
|
|
|
|
109. |
|
|
|
வானவர் என்றும் மனிதர் இவர் என்றும் |
|
|
|
தேனமர் கொன்றைச் சிவனருள் அல்லது |
|
|
|
தானமர்ந்து ஓரும் தனித்தெய்வம் மற்றில்லை |
|
|
|
ஊனமர்ந் தோரை உணர்வது தானே. 7 |
|
|
|
|
|
|
|
110. |
|
|
|
சோதித்த பேரொளி மூன்று ஐந்து எனநின்ற |
|
|
|
ஆதிக்கண் ஆவது அறிகிலர் ஆதர்கள் |
|
|
|
நீதிக்கண் ஈசன் நெடுமால் அயனென்று |
|
|
|
பேதித் தவரைப் பிதற்றுகின் றாரே. 8 |
|
|
|
|
|
|
|
111. |
|
|
|
பரத்திலே ஒன்றாய் உள் ளாய்ப்புற மாகி |
|
|
|
வரத்தினுள் மாயவ னாய்அய னாகித் |
|
|
|
தரத்தினுள் தான்பல தன்மைய னாகிக் |
|
|
|
கரத்தினுள் நின்று கழிவுசெய் தானே. 9 |
|
|
|
|
|
|
|
112. |
|
|
|
தானொரு கூறு சதாசிவன் எம்மிறை |
|
|
|
வானொரு கூறு மருவியும் அங்குளான் |
|
|
|
கோனொரு கூறுஉடல் உள்நின்று உயிர்க்கின்ற |
|
|
|
தானொரு கூறு சலமய னாமே. 10 |
|
|
|
|
|
|
|
|
|
பாயிரம் முற்றிற்று |
|
|
|
---------------------- |
|
|
|
|
|
திருமந்திரம் - முதல் தந்திரம் (113-336) |
|
|
|
|
|
1.. உபதேசம் |
|
|
|
|
|
113. |
|
|
|
விண்ணின்று இழிந்து வினைக்கீடாய் மெய்க்கொண்டு |
|
|
|
தண்ணின்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்து |
|
|
|
உண்ணின்று உருக்கியோர் ஒப்பிலா ஆனந்தக் |
|
|
|
கண்ணின்று காட்டிக் களிம்பறுத் தானே. 1 |
|
|
|
|
|
|
|
114. |
|
|
|
களிம்பறுத் தான்எங்கள் கண்ணுதல் நந்தி |
|
|
|
களிம்பறுத் தான்அருள் கண்விழிப் பித்துக் |
|
|
|
களிம்பணு காத கதிரொளி காட்டிப் |
|
|
|
பளிங்கிற் பவளம் பதித்தான் பதியே. 2 |
|
|
|
|
|
|
|
115. |
|
|
|
பதிபசு பாசம் எனப்பகர் மூன்றில் |
|
|
|
பதியினைப் போற்பசு பாசம் அனாதி |
|
|
|
பதியினைச் சென்றணு காப்பசு பாசம் |
|
|
|
பதியணு கிற்பசு பாசம் நில் லாவே. 3 |
|
|
|
|
|
|
|
116. |
|
|
|
வேயின் எழுங்கனல் போலேஇம் மெய்யெனும் |
|
|
|
கோயி லிருந்து குடிகொண்ட கோன்நந்தி |
|
|
|
தாயினும் மும்மலம் மாற்றித் தயாஎன்னும் |
|
|
|
தோயம தாய் எழுஞ் சூரிய னாமே. 4 |
|
|
|
|
|
|
|
117. |
|
|
|
சூரிய காந்தமும் சூழ்பஞ்சும் போலவே |
|
|
|
சூரிய காந்தம் சூழ்பஞ்சைச் சுட்டிடா |
|
|
|
சூரியன் சந்நிதி யிற்சுடு மாறுபோல் |
|
|
|
சூரியன் தோற்றமுன் அற்ற மலங்களே. 5 |
|
|
|
|
|
|
|
118. |
|
|
|
மலங்கள்ஐந் தாமென மாற்றி அருளித் |
|
|
|
தலங்கள்ஐந் தானற் சதாசிவ மான |
|
|
|
புலங்களைந் தான்அப் பொதுவினுள் நந்தி |
|
|
|
நலங்களைந் தான்உள் நயந்தான் அறிந்தே. 6 |
|
|
|
|
|
|
|
119. |
|
|
|
அறிவுஐம் புலனுட னேநான் றதாகி |
|
|
|
நெறியறி யாதுற்ற நீர்ஆழம் போல |
|
|
|
அறிவுஅறி வுள்ளே அழிந்தது போலக் |
|
|
|
குறியறி விப்பான் குருபர னாமே. 7 |
|
|
|
|
|
|
|
120. |
|
|
|
ஆமேவு பால்நீர் பிரிக்கின்ற அன்னம்போல் |
|
|
|
தாமே தனிமன்றில் தன்னந் தனிநித்தம் |
|
|
|
தீமேவு பல்கர ணங்களுள் உற்றன |
|
|
|
தாமேழ் பிறப்பெரி சார்ந்தவித் தாமே. 8 |
|
|
|
|
|
|
|
121. |
|
|
|
வித்தைக் கெடுத்து வியாக்கிரத் தேமிகச் |
|
|
|
சுத்தத் துரியம் பிறந்து துடக்கற |
|
|
|
ஒத்துப் புலனுயிர் ஒன்றாய் உடம்பொடு |
|
|
|
செத்திட் டிருப்பார் சிவயோகி யார்களே. 9 |
|
|
|
|
|
|
|
122. |
|
|
|
சிவயோக மாவது சித்தசித் தென்று |
|
|
|
தவயோகத் துள்புக்குத் தன்னொளி தானாய் |
|
|
|
அவயோகஞ் சாராது அவன்பதி போக |
|
|
|
நவயோக நந்தி நமக்களித் தானே. 10 |
|
|
|
|
|
|
|
123. |
|
|
|
அளித்தான் உலகெங்கும் தானான உண்மை |
|
|
|
அளித்தான் அமரர் அறியா உலகம் |
|
|
|
அளித்தான் திருமன்றுள் ஆடுந் திருத்தாள் |
|
|
|
அளித்தான் போன்பத்து அருள்வெளி தானே. 11 |
|
|
|
|
|
|
|
124. |
|
|
|
வெளியில் வெளிபோய் விரவிய வாறும் |
|
|
|
அளியில் அளிபோய் அடங்கிய வாறும் |
|
|
|
ஒளியில் ஒளிபோய் ஒடுங்கிய வாறும் |
|
|
|
தெளியும் அவரே சிவ சித்தர் தாமே. 12 |
|
|
|
|
|
|
|
125. |
|
|
|
சித்தர் சிவலோகம் இங்கே தரிசித்தோர் |
|
|
|
சத்தமும் சத்த முடிவுந்தம் முள்கொண்டோ ர் |
|
|
|
நித்தர் நிமலர் நிராமயர் நீள்பர |
|
|
|
முத்தர்தம் முத்தி முதல்முப்பத் தாறே. 13 |
|
|
|
|
|
|
|
126. |
|
|
|
முப்பதும் ஆறும் படிமுத்தி ஏணியாய் |
|
|
|
ஒப்பிலா ஆனந்தத் துள்ளொளி புக்குச் |
|
|
|
செப்ப அரிய சிவங்கண்டு தான்தெளிந்து |
|
|
|
அப்பரி சாக அமர்ந்திருந் தாரே. 14 |
|
|
|
|
|
|
|
127. |
|
|
|
இருந்தார் சிவமாகி எங்குந் தாமாகி |
|
|
|
இருந்தார் சிவன்செயல் யாவையும் நோக்கி |
|
|
|
இருந்தார் முக்காலத்து இயல்பைக் குறித்தங்கு |
|
|
|
இருந்தார் இழவுவந்து எய்திய சோம்பே. 15 |
|
|
|
|
|
|
|
128. |
|
|
|
சோம்பர் இருப்பது சுத்த வெளியிலே |
|
|
|
சோம்பர் கிடப்பதும் சுத்த வெளியிலே |
|
|
|
சோம்பர் உணர்வு சுருதி முடிந்திடஞ் |
|
|
|
சோம்பர் கண் டார்அச் சுருதிக்கண் தூக்கமே. 16 |
|
|
|
|
|
|
|
129. |
|
|
|
தூங்கிக்கண் டார்சிவ லோகமும் தம்முள்ளே |
|
|
|
தூங்கிக்கண் டார்சிவ யோகமும் தம்முள்ளே |
|
|
|
தூங்கிக்கண் டார்சிவ போகமும் தம்முள்ளே |
|
|
|
தூங்கிக்கண் டார்நிலை சொல்வதெவ் வாறே. 17 |
|
|
|
|
|
|
|
130. |
|
|
|
எவ்வாறு காண்பான் அறிவு தனக்கெல்லை |
|
|
|
அவ்வாறு அருட்செய்வன் ஆதிஅரன் தானும் |
|
|
|
ஒவ்வாத மன்றுள் உமைகாண ஆடிடும் |
|
|
|
செவ்வானிற் செய்ய செழுஞ்சுடர் மாணிக்கமே. 18 |
|
|
|
|
|
|
|
131. |
|
|
|
மாணிக்கத் துள்ளே மரகதச் சோதியாய் |
|
|
|
மாணிக்கத் துள்ளே மரகத மாடமாய் |
|
|
|
ஆணிப்பொன் மன்றில் ஆடுந் திருக்கூத்தைப் |
|
|
|
பேணித் தொழுதென்ன பேறுபெற் றாரே. 19 |
|
|
|
|
|
|
|
132. |
|
|
|
பெற்றார் உலகிற் பிரியாப் பெருநெறி |
|
|
|
பெற்றார் உலகிற் பிறவாப் பெரும்பயன் |
|
|
|
பெற்றார் அம்மன்றில் பிரியாப் பெரும்பேறு |
|
|
|
பெற்றார் உலகுடன் பேசாப் பெருமையே. 20 |
|
|
|
|
|
|
|
133. |
|
|
|
பெருமை சிறுமை அறிந்தெம் பிரான்போல் |
|
|
|
அருமை எளிமை அறிந்தறி வார்ஆர் |
|
|
|
ஒருமையுள் ஆமைபோல் உள்ஐந்து அடக்கி |
|
|
|
இருமையுங் கேட்டிருந் தார்புரை அற்றே. 21 |
|
|
|
|
|
|
|
134. |
|
|
|
புரைஅற்ற பாலினுள் நெய்கலந் தாற்போல் |
|
|
|
திரைஅற்ற சிந்தைநல் ஆரியன் செப்பும் |
|
|
|
உரையற்று உணர்வோர் உடம்பிங்கு ஒழிந்தால் |
|
|
|
கரையற்ற சோதி கலந்தசத் தாமே. 22 |
|
|
|
|
|
|
|
135. |
|
|
|
சத்த முதல் ஐந்துந் தன்வழித் தான்சாரில் |
|
|
|
சித்துக்குச் சித்தன்றி சேர்விடம் வேறுண்டோ |
|
|
|
சுத்த வெளியிற் சுடாற் சுடர்சேரும் |
|
|
|
அத்தம் இதுகுறித் தாண்டுகொள் அப்பிலே. 23 |
|
|
|
|
|
|
|
136. |
|
|
|
அப்பினில் கூர்மை ஆதித்தன் வெம்மையால் |
|
|
|
உப்பெனப் பேர்ப்பெற்று உருச்செய்த அவ்வுரு |
|
|
|
அப்பினிற் கூடிய தொன்றாகு மாறுபோல் |
|
|
|
செப்பினிற் சீவன் சிவத்துள் அடங்குமே. 24 |
|
|
|
|
|
|
|
137. |
|
|
|
அடங்குபேர் அண்டத்து அணுஅண்டம் சென்றங்கு |
|
|
|
இடங்கொண்டது இல்லை இதுவன்றி வேறுண்டோ |
|
|
|
கடந்தொறும் நின்ற உயிர்க்கரை காணில் |
|
|
|
திடம்பெற நின்றான் திருவடி தானே. 25 |
|
|
|
|
|
|
|
138. |
|
|
|
திருவடி யேசிவ மாவது தோல் |
|
|
|
திருவடி யேசிவ லோகஞ்சிந் திக்கில் |
|
|
|
திருவடி யேசெல் கதியது செப்பில் |
|
|
|
திருவடி யேதஞ்சம் உள்தெளி வார்க்கே. 26 |
|
|
|
|
|
|
|
139. |
|
|
|
தெளிவு குருவின் திருமேனி காண்டல் |
|
|
|
தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல் |
|
|
|
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் |
|
|
|
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே. 27 |
|
|
|
|
|
|
|
140. |
|
|
|
தானே புலன்ஐந்துந் தன்வசம் ஆயிடும் |
|
|
|
தானே புலன்ஐந்துந் தன்வசம் போயிடும் |
|
|
|
தானே புலன்ஐந்துந் தன்னில் மடைமாறும் |
|
|
|
தானே தனித்துஎம் பிரான்தனைச் சந்தித்தே. 28 |
|
|
|
|
|
|
|
141. |
|
|
|
சந்திப் பதுநந்தி தன்திருத் தாளிணை |
|
|
|
சிந்திப் பதுநந்தி செய்ய திருமேனி |
|
|
|
வந்திப் பதுநந்தி நாமம்இன் வாய்மையால் |
|
|
|
புந்திக்குள் நிற்பது நந்திபொற் பாதமே. 29 |
|
|
|
|
|
|
|
142. |
|
|
|
போதந் தரும்எங்கள் புண்ணிய நந்தியைப் |
|
|
|
போதந் தனில்வைத்துப் புண்ணியர் ஆயினார் |
|
|
|
நாதன் நடத்தால் நயனங் களிகூர |
|
|
|
வேதந் துதித்திடப் போயடைந்தார் விண்ணே. 30 |
|
|
|
|
|
|
|
|
|
2.. யாக்கை நிலையாமை |
|
|
|
|
|
143. |
|
|
|
மண்ணொன்று கண்டீர் இருவகைப் பாத்திரம் |
|
|
|
திண்ணென்று இருந்தது தீவினைச் சேர்ந்தது |
|
|
|
விண்ணின்று நீர்விழின் மீண்டுமண் ணானார்ப்போல் |
|
|
|
எண்ணின்றி மாந்தர் இறக்கின்ற வாறே. 1 |
|
|
|
|
|
|
|
144. |
|
|
|
பண்டம்பெய் கூரை பழகி விழுந்தக்கால் |
|
|
|
உண்ட அப் பெண்டிரும் மக்களும் பின்செலார் |
|
|
|
கொண்ட விரதமும் ஞானமும் அல்லது |
|
|
|
மண்டி அவருடன் வழிநட வாதே. 2 |
|
|
|
|
|
|
|
145. |
|
|
|
ஊரெலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப் |
|
|
|
போனை நீக்கிப் பிணமென்று போட்டுச் |
|
|
|
சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு |
|
|
|
நீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே. 3 |
|
|
|
|
|
|
|
146. |
|
|
|
காலும் இரண்டு முகட்டலகு ஒன்றுள |
|
|
|
பாலுள் பருங்கழி முப்பத் திரண்டுள |
|
|
|
மேலுள கூரை பிரியும் பிரிந்தால்முன் |
|
|
|
போலுயிர் மீளப் புக அறி யாதே. 4 |
|
|
|
|
|
|
|
147. |
|
|
|
சீக்கை விளைந்தது செய்வினை மூட்டிற்ற |
|
|
|
ஆக்கை பிரிந்தது அலகு பழுத்தது |
|
|
|
மூக்கினிற் கைவைத்து மூடிட்டுக் கொண்டுபோய்க் |
|
|
|
காக்கைக் குப்பலி காட்டிய வாறே. 5 |
|
|
|
|
|
|
|
148. |
|
|
|
அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார் |
|
|
|
மடக்கொடி யாரொடு மந்தணங் கொண்டார் |
|
|
|
இடப்பக்க மேஇறை நொந்தது என்றார் |
|
|
|
கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந் தாரே. 6 |
|
|
|
|
|
|
|
149. |
|
|
|
மன்றத்தே நம்பி மாடம் எடுத்தது |
|
|
|
மன்றத்தே நம்பி சிவிகைபெற் றேறினான் |
|
|
|
மன்றத்தே நம்பி முக்கோடி வழங்கினான் |
|
|
|
சென்றத்தா என்னத் திரிந்திலன் தானே. 7 |
|
|
|
|
|
|
|
150. |
|
|
|
வாசந்தி பேசி மணம்புணர்ந்து அப்பதி |
|
|
|
நேசந் தெவிட்டி நினைப்பொழி வார்பின்னை |
|
|
|
ஆசந்தி மேல்வைத்து அமைய அழுதிட்டுப் |
|
|
|
பாசந்தீச் சுட்டுப் பலியட்டி னார்களே. 8 |
|
|
|
|
|
|
|
151. |
|
|
|
கைவிட்டு நாடிக் கருத்தழிந் தச்சற |
|
|
|
நெய்யட்டிச் சோறுண்ணும் ஐவரும் போயினார் |
|
|
|
மையிட்ட கண்ணாளும் மாடும் இருக்கவே |
|
|
|
மெய்விட்டுப் போக விடைகொள்ளு மாறே. 9 |
|
|
|
|
|
|
|
152. |
|
|
|
பந்தல் பிரிந்தது பண்டாரங் கட்டற்ற |
|
|
|
ஒன்பது வாசலும் ஒக்க அடைத்தன |
|
|
|
துன்புறு காலந் துரிசுவர மேன்மேல் |
|
|
|
அன்புடை யார்கள் அழுதகன் றார்களே. 10 |
|
|
|
|
|
|
|
153 |
|
|
|
நாட்டுக்கு நாயகன் நம்மூர்த் தலைமகன் |
|
|
|
காட்டுச் சிவிகையொன்று ஏறிக் கடைமுறை |
|
|
|
நாட்டார்கள் பின்செல்ல முன்னே பறைகொட்ட |
|
|
|
நாட்டுக்கு நம்பி நடக்கின்ற வாறே. 11 |
|
|
|
|
|
|
|
154. |
|
|
|
முப்பதும் முப்பதும் முப்பத் தறுவரும் |
|
|
|
செப்ப மதிளுடைக் கோயிலுள் வாழ்பவர் |
|
|
|
செப்ப மதிலுடைக் கோயில் சிதைந்தபின் |
|
|
|
ஒப்ப அனைவரும் ஓட்டெடுத் தார்களே. 12 |
|
|
|
|
|
|
|
155. |
|
|
|
மதுவூர் குழலியும் மாடும் மனையும் |
|
|
|
இதுவூர் ஒழிய இதணம் தேறிப் |
|
|
|
பொதுவூர் புறஞ்சுடு காடது நோக்கி |
|
|
|
மதுவூர வாங்கியே வைத்தகன் றார்களே. 13 |
|
|
|
|
|
|
|
156. |
|
|
|
வைச்சகல் வுற்றது கண்டு மனிதர்கள் |
|
|
|
அச்சக லாதென நாடும் அரும்பொருள் |
|
|
|
பிச்சது வாய்ப்பின் தொடர்வுறு மற்றவர் |
|
|
|
எச்சக லாநின் றிளைக்கின்ற வாறே. 14 |
|
|
|
|
|
|
|
157. |
|
|
|
ஆர்த்தெழு சுற்றமும் பெண்டிரும் மக்களும் |
|
|
|
ஊர்த்துறைக் காலே ஒழிவர் ஒழிந்தபின் |
|
|
|
வேர்த்தலை போக்கி விறகிட்கு எரிமூட்டி |
|
|
|
நீர்த்தலை மூழ்குவர் நீதியி லோரே. 15 |
|
|
|
|
|
|
|
158. |
|
|
|
வளத்திடை முற்றத்தோர் மாநிலம் முற்றுங் |
|
|
|
குளத்தின் மண்கொண்டு குயவன் வனைந்தான் |
|
|
|
குடமுடைந் தால் அவை ஓடென்று வைப்பர் |
|
|
|
உடலுடைந் தால்இறைப் போதும் வையாரே. 16 |
|
|
|
|
|
|
|
159. |
|
|
|
ஐந்து தலைப்பறி ஆறு சடையுள |
|
|
|
சந்தவை முப்பது சார்வு பதினெட்டுப் |
|
|
|
பந்தலும் ஒன்பது பந்தி பதினைந்து |
|
|
|
வெந்து கிடந்தது மேலறி யோமே. 17 |
|
|
|
|
|
|
|
160. |
|
|
|
அத்திப் பழமும் அறைக்கீரை நல்வித்தும் |
|
|
|
கொத்தி உலைபெய்து கூழட்டு வைத்தனர் |
|
|
|
அத்திப் பழத்தை அறைக்கீரை வித்துண்ணக் |
|
|
|
கத்தி எடுத்தவர் காடுபுக் காரே. 18 |
|
|
|
|
|
|
|
161. |
|
|
|
மேலும் முகடில்லை கீழும் வடிம்பில்லை |
|
|
|
காலும் இரண்டு முகட்டலக் கொன்றுண்டு |
|
|
|
ஓலையான் மேய்ந்தவர் ஊடு வாயாமை |
|
|
|
வேலையான் மேய்ந்ததோர் வெள்ளித் தளிகையே. 19 |
|
|
|
|
|
|
|
162. |
|
|
|
கூடம் கிடந்தது கோலங்கள் இங்கில்லை |
|
|
|
ஆடும் இலையமும் அற்றது அறுதலும் |
|
|
|
பாடுகின் றார்சிலர் பண்ணில் அழுதிட்டுத் |
|
|
|
தேடிய தீயினில் தீயவைத் தார்க்களே. 20 |
|
|
|
|
|
|
|
163. |
|
|
|
முட்டை பிறந்தது முந்_று நாளினில் |
|
|
|
இட்டது தானிலை ஏதேனும் ஏழைகாள் |
|
|
|
பட்டது பார்மணம் பன்னிரண்டி ஆண்டினில் |
|
|
|
கெட்டது எழுபதில் கேடறி யீரே. 21 |
|
|
|
|
|
|
|
164. |
|
|
|
இடிஞ்சில் இருக்க விளக்கொ கொண்டான் |
|
|
|
முடிஞ்ச தறியார் முழங்குவர் மூடர் |
|
|
|
விடிஞ்சுஇரு ளாவது அறியா உலகம் |
|
|
|
படிஞ்சு கிடந்து பதைக்கின்ற வாறே. 22 |
|
|
|
|
|
|
|
165. |
|
|
|
மடல்விரி கொன்றையன் மாயன் படைத்த |
|
|
|
உடலும் உயிரும் உருவந் தொழாமல் |
|
|
|
இடர்ப்படந்து ஏழா நரகிற் கிடப்பர் |
|
|
|
குடர்ப்பட வெந்தமர் கூப்பிடு மாறே. 23 |
|
|
|
|
|
|
|
166. |
|
|
|
குடையும் குதிரையும் கொற்றவா ளுங்கொண்டு |
|
|
|
இடையும்அக் காலம் இருந்தது நடுவே |
|
|
|
புடையு மனிதனார் போக்கும்அப் போதே |
|
|
|
அடையும் இடம்வலம் ஆருயி ராமே. 24 |
|
|
|
|
|
|
|
167. |
|
|
|
காக்கை கவாலென் கண்டார் பழிக்கிலென் |
|
|
|
பாற்றுளி பெய்யிலென் பல்லோர் பழிச்சிலென் |
|
|
|
தோற்பையுள் நின்று தொழிலறச் செய்தூட்டுங் |
|
|
|
கூத்தன் புறப்பட்டுப் போன இக்கூட்டையே. 25 |
|
|
|
|
|
|
|
|
|
3.. செல்வம் நிலையாமை |
|
|
|
168. |
|
|
|
அருளும் அரசனும் ஆனையம் தேரும் |
|
|
|
பொருளும் பிறர்கொள்ளப் போவதன் முன்னம் |
|
|
|
தெருளும் உயிரொடும் செல்வனைச் சோன் |
|
|
|
மருளும் பினையவன் மாதவ மன்றே. 1 |
|
|
|
|
|
|
|
169. |
|
|
|
இயக்குறு திங்கள் இரும்பிழப்பு ஒக்கும் |
|
|
|
துயக்குறு செல்வத்தைச் சொல்லவும் வேண்டா |
|
|
|
மயக்கற நாடுமின் வானவர் கோனைப் |
|
|
|
பெயற்கொண்டல் போலப் பெருஞ்செல்வ மாமே. 2 |
|
|
|
|
|
|
|
170. |
|
|
|
தன்னது சாயை தனக்குத வாதுகண்டு |
|
|
|
என்னது மாடென்று இருப்பர்கள் ஏழைகள் |
|
|
|
உன்னுயிர் போம்உடல் ஒக்கப் பிறந்தது |
|
|
|
கண்ணது காணொளி கண்டுகொ ளீரே. 3 |
|
|
|
|
|
|
|
171. |
|
|
|
ஈட்டிய தேன்பூ மணங்கண் டிரதமும் |
|
|
|
கூட்டிக் கொணர்ந்தொரு கொம்பிடை வைத்திடும் |
|
|
|
ஓட்டித் துரந்திட்டு அதுவலி யார்கொளக் |
|
|
|
காட்டிக் கொடுத்தது கைவிட்ட வாறே. 4 |
|
|
|
|
|
|
|
172. |
|
|
|
தேற்றத் தெளிமின் தெளிந்தீர் கலங்கன்மின் |
|
|
|
ஆற்றுப் பெருக்கிற் கலக்கி மலக்காதே |
|
|
|
மாற்றிக் களைவீர் மறுத்துங்கள் செல்வத்தைக் |
|
|
|
கூற்றன் வருங்கால் குதிக்கலு மாமே. 5 |
|
|
|
|
|
|
|
173. |
|
|
|
மகிழ்கின்ற செல்வமும் மாடும் உடனே |
|
|
|
கவிழ்கின்ற நீர்மிசைச் செல்லும் கலம்போல் |
|
|
|
அவிழ்கின்ற ஆக்கைக்கோர் வீடுபே றாகச் |
|
|
|
சிமிழொன்று வைத்தமை தேர்ந்தறி யாரே. 6 |
|
|
|
|
|
|
|
174. |
|
|
|
வாழ்வும் மனைவியும் மக்கள் உடன்பிறந் |
|
|
|
தாரும் அளவு ஏது எமக்கென்பர் ஒண்பொருள் |
|
|
|
மேவும் அதனை விரிவுசெய் வார்கட்குக் |
|
|
|
கூவும் துணையொன்று கூடலு மாமே. 7 |
|
|
|
|
|
|
|
175. |
|
|
|
வேட்கை மிகுத்தது மெய்கொள்வார் இங்கிலை |
|
|
|
பூட்டுந் தறியொன்று போம்வழி ஒன்பது |
|
|
|
நாட்டிய தாய்தமர் வந்து வணங்கிப்பின் |
|
|
|
காட்டிக் கொடுத்தவர் கைவிட்ட வாறே. 8 |
|
|
|
|
|
|
|
176. |
|
|
|
உடம்போடு உயிரிடை விட்டோ டும் போது |
|
|
|
அடும்பரிசு ஒன்றில்லை அண்ணலை எண்ணும் |
|
|
|
விடும்பரி சாய்நின்ற மெய்ந்நமன் தூதர் |
|
|
|
சுடும்பரி சத்தையுஞ் சூழகி லாரே. 9 |
|
|
|
|
|
|
|
|
|
4.. இளமை நிலையாமை |
|
|
|
|
|
177. |
|
|
|
கிழக்கெழுந்த் தோடிய ஞாயிறு மேற்கே |
|
|
|
விழக்கண்டும் தேறார் விழியிலா மாந்தர் |
|
|
|
குழக்கன்று மூத்தெரு தாய்ச்சில நாளில் |
|
|
|
விழக்கண்டும் தேறார் வியனுல கோரே. 1 |
|
|
|
|
|
|
|
178. |
|
|
|
ஆண்டு பலவுங் கழிந்தன அப்பனைப் |
|
|
|
பூண்டுகொண் டாரும் புகுந்தறி வாரில்லை |
|
|
|
நீண்டன காலங்கள் நீண்டு கொடுக்கினும் |
|
|
|
தூண்டு விளக்கின் சுடரறி யாரே. 2 |
|
|
|
|
|
|
|
179. |
|
|
|
தேய்ந்தற் றொழிந்த இளமை கடைமுறை |
|
|
|
ஆய்ந்தற்ற பின்னை அரிய கருமங்கள் |
|
|
|
பாய்ந்தற்ற கங்கைப் படர்சடை நந்தியை |
|
|
|
ஓர்ந்துற்று கொள்ளும் உயிருள்ள போதே. 3 |
|
|
|
|
|
|
|
180. |
|
|
|
விரும்புவர் முன்என்னை மெல்லியன் மாதர் |
|
|
|
கரும்பு தகர்த்துக் கடைக்கொண்ட நீர்போல் |
|
|
|
அரும்பொத்த மென்முலை ஆயிழை யார்க்கும் |
|
|
|
கரும்பொத்துக் காஞ்சிரங் காயுமொத் தேனே. 4 |
|
|
|
|
|
|
|
181. |
|
|
|
பாலன் இளையன் விருத்தன் எனநின்ற |
|
|
|
காலங் கழிவன கண்டும் அறிகிலார் |
|
|
|
ஞாலம்கடந்து அண்டம் ஊடறுத் தான்அடி |
|
|
|
மேலுங் கிடந்து விரும்புவன் நானே. 5 |
|
|
|
|
|
|
|
182. |
|
|
|
காலை ஏழுந்தவர் நித்தலும் நித்தலும் |
|
|
|
மாலை படுவதும் வாணாள் கழிவதும் |
|
|
|
சாலும்அவ் ஈசன் சலவிய னாகிலும் |
|
|
|
ஏல நினைப்பவர்ககு இன்பம்செய் தானே. 6 |
|
|
|
|
|
|
|
183. |
|
|
|
பருவூசி ஐந்துமோர் பையினுள் வாழும் |
|
|
|
பருவூசி ஐந்தும் பறக்கும் விருகம் |
|
|
|
பருவூசி ஐந்தும் பனித்தலைப் பட்டால் |
|
|
|
பருவூசிப் பையும் பறக்கின்ற வாறே. 7 |
|
|
|
|
|
|
|
184. |
|
|
|
கண்ணதும் காய்கதி ரோனும் உலகினை |
|
|
|
உண்ணின்று அளக்கின்றது ஒன்றும் அறிகிலார் |
|
|
|
விண்ணுறு வாரையும் வினையுறு வாரையும் |
|
|
|
எண்ணுறும் முப்பதில் ஈர்ந்தொழிந் தாரே. 8 |
|
|
|
|
|
|
|
185. |
|
|
|
ஒன்றிய ஈரெண் கலையும் உடனுற |
|
|
|
நின்றது கண்டு நினைக்கிலர் நீசர்கள் |
|
|
|
கன்றிய காலன் கருக்குழி வைத்தபின் |
|
|
|
சென்றதில் வீழ்வர் திகைப்பொழி யாரே. 9 |
|
|
|
|
|
|
|
186. |
|
|
|
எய்திய நாளில் இளமை கழியாமை |
|
|
|
எய்திய நாளில் இசையினால் ஏத்துமின் |
|
|
|
எய்திய நாளில் எறிவ து அறியாமல் |
|
|
|
எய்திய நாளில் இருந்துகண் டேனே. 10 |
|
|
|
|
|
|
|
|
|
5.. உயிர் நிலையாமை |
|
|
|
|
|
187. |
|
|
|
தழைக்கின்ற செந்தளிர்த் தண்மலர்க் கொம்பில் |
|
|
|
இழைக்கின்றது எல்லாம் இறக்கின்ற கண்டும் |
|
|
|
பிழைப்பின்றி எம்பெரு மானடி ஏத்தார் |
|
|
|
அழைக்கின்ற போதுஅறி யாரவர் தாமே. 1 |
|
|
|
|
|
|
|
188. |
|
|
|
ஐவர்க்கு ஒருசெய் விளைந்து கிடந்தது |
|
|
|
ஐவரும் அச்செய்யைக் காத்து வருவர்கள் |
|
|
|
ஐவர்க்கு நாயகன் ஓலை வருதலால் |
|
|
|
ஐவரும் அச்செய்யைக் காவல் விட்டாரே. 2 |
|
|
|
|
|
|
|
189. |
|
|
|
மத்தளி ஒன்றுள தாளம் இரண்டுள |
|
|
|
அத்துள்ளே வாழும் அரசனும் அங்குளன் |
|
|
|
அத்துள்ளெ வாழும் அரசன் புறப்பட்டால் |
|
|
|
மத்தளி மண்ணாய் மயங்கிய வாறே. 3 |
|
|
|
|
|
|
|
190. |
|
|
|
வேங்கட நாதனை வேதாந்தக் கூத்தனை |
|
|
|
வேங்கடத் துள்ளே விளையாடு நந்தியை |
|
|
|
வேங்கடம் என்றே விரகுஅறி யாதவர் |
|
|
|
தாங்கவல் லாருயிர் தாமறி யாரே. 4 |
|
|
|
|
|
|
|
191. |
|
|
|
சென்றுணர் வாந்திசை பத்துந் திவாகரன் |
|
|
|
அன்றுணர் வால் அளக் கின்ற தறிகிலர் |
|
|
|
நின்றுண ரார்இந் நிலத்தின் மனிதர்கள் |
|
|
|
பொன்றுணர் வாரிற் புணர்க்கின்ற மாயமே. 5 |
|
|
|
|
|
|
|
192. |
|
|
|
மாறு திருத்தி வரம்பிட்ட பட்டிகை |
|
|
|
பீறும் அதனைப் பெரிதுணர்ந் தாரிலை |
|
|
|
கூறும் கருமயிர் வெண்மயி ராவது |
|
|
|
ஈறும் பிறப்புமொ ராண்டெனும் நீரே. 6 |
|
|
|
|
|
|
|
193. |
|
|
|
துடுப்பிடு பானைக்கும் ஒன்றே அரிசி |
|
|
|
அடுப்பிடு மூன்றிற்கும் அஞ்சொ கொள்ளி |
|
|
|
அடுத்தொ யாமற் கொடுமின் அரிசி |
|
|
|
விடுத்தன நாள்களும் மேற்சென் றனவே. 7 |
|
|
|
|
|
|
|
194. |
|
|
|
இன்புறு வண்டிங்கு இனமலர் மேற்போய் |
|
|
|
உண்பது வாச மதுபோல் உயிர்நிலை |
|
|
|
இன்புற நாடி நினைக்கிலும் மூன்றொளி |
|
|
|
கண்புற நின்ற கருத்துள்நில் லானே. 8 |
|
|
|
|
|
|
|
195. |
|
|
|
ஆம்விதி நாடி அறஞ்செய்மின் அந்நிலம் |
|
|
|
போம்விதி நாடிப் புனிதனைப் போற்றுமின் |
|
|
|
நாம்விதி வேண்டும் அதென்சொலின் மானிடர் |
|
|
|
ஆம்விதி பெற்ற அருமைவல் லார்க்கே. 9 |
|
|
|
|
|
|
|
196. |
|
|
|
அவ்வியம் பேசி அறங்கெட நில்லன்மின் |
|
|
|
வெவ்விய னாகிப் பிறர்ப்பொருள் வவ்வன்மின் |
|
|
|
செவ்விய னாகிச் சிறந்துண்ணும் போதொரு |
|
|
|
தவ்விகொ டுண்மின் தலைப்பட்ட போதே. 10 |
|
|
|
|
|
|
|
|
|
6.. கொல்லாமை |
|
|
|
|
|
197. |
|
|
|
பற்றாய நற்குரு பூசைக்கும் பன்மலர் |
|
|
|
மற்றோர் அணுக்களைக் கொல்லாமை ஒண்மலர் |
|
|
|
நற்றார் நடுக்கற்ற தீபமும் சித்தமும் |
|
|
|
உற்றாரும் ஆவி அமர்ந்திடம் உச்சியே. 1 |
|
|
|
|
|
|
|
198. |
|
|
|
கொல்லிடு குத்தென்று கூறிய மாக்களை |
|
|
|
வல்லடிக் காரர் வலிக்கயிற் றாற்கட்டிச் |
|
|
|
செல்லிடு நில்லென்று தீவாய் நரகிடை |
|
|
|
நில்லிடும் என்று நிறுத்துவர் தாமே, 2 |
|
|
|
|
|
|
|
|
|
7.. புலால் மறுத்தல் |
|
|
|
|
|
199. |
|
|
|
பொல்லாப் புலாலை நுகரும் புலையரை |
|
|
|
எல்லாரும் காண இயமன்றன் தூதுவர் |
|
|
|
செல்லாகப் பற்றித் தீவாய் நரகத்தில் |
|
|
|
மல்லாக்கத் தள்ளி முறித்துவைப் பாரே. 1 |
|
|
|
|
|
|
|
200. |
|
|
|
கொலையே களவுகள் காமம் பொய்கூறல் |
|
|
|
மலைவான பாதகமாம் அவை நீக்கித் |
|
|
|
தலையாம் சிவனடி சார்ந்தின்பம் சார்ந்தோர்க்கு |
|
|
|
இலையாம் இவைஞானா னந்தத் திருத்தலே. 2 |
|
|
|
|
|
|
|
|
|
8.. பிறன்மனை நயவாமை |
|
|
|
201. |
|
|
|
ஆத்த மனையாள் அகத்தில் இருக்கவே |
|
|
|
காத்த மனையாளைக் காமுறுங் காளையர் |
|
|
|
காய்ச்ச பலாவின் கனியுண்ண மாட்டாமல் |
|
|
|
ஈச்சம் பழத்துக்கு இடருற்ற வாறே. 1 |
|
|
|
|
|
|
|
202. |
|
|
|
திருத்தி வளர்த்ததோர் தேமாங் கனியை |
|
|
|
அருத்தமென் றெண்ணி அறையில் புதைத்துப் |
|
|
|
பொருத்தம் இலாத புளிமாங் கொம்பேறிக் |
|
|
|
கருத்தறி யாதவர் காலற்ற வாறே. 2 |
|
|
|
|
|
|
|
203. |
|
|
|
பொருள்கொண்ட கண்டனும் போதத்தை யாளும் |
|
|
|
இருள்கொண்ட மின்வெளி கொண்டுநின் றோரும் |
|
|
|
மருள்கொணட மாதர் மயலுறு வார்கள் |
|
|
|
மருள்கொண்ட சிந்தையை மாற்றகில் லாரே. 3 |
|
|
|
|
|
|
|
|
|
9.. மகளிர் இழிவு |
|
|
|
204. |
|
|
|
இலைநல வாயினும் எட்டி பழுத்தால் |
|
|
|
குலைநல வாங்கனி கொண்டுண லாகா |
|
|
|
முலைநலங் கொண்டு முறுவல்செய் வார்மேல் |
|
|
|
விலகுறு நெஞ்சினை வெய்துகொள் ளீரே. 1 |
|
|
|
|
|
|
|
205. |
|
|
|
மனைபுகு வார்கள் மனைவியை நாடில் |
|
|
|
சுனைபுகு நீர்போல் சுழித்துடன் வாங்கும் |
|
|
|
கனவது போலக் கசிந்தெழும் இன்பம் |
|
|
|
நனவது போலவும் நாடவொண் ணாதே. 2 |
|
|
|
|
|
|
|
206. |
|
|
|
இயலுறும் வாழ்க்கை இளம்பிடி மாதர் |
|
|
|
புயலுறும் புல்லின் புணர்ந்தவ ரேயினும் |
|
|
|
மயலுறும் வானவர் சாரஇரும் என்பார் |
|
|
|
அயலுறப் பேசி அகன்றொழிந் தாரே. 3 |
|
|
|
|
|
|
|
207. |
|
|
|
வையகத் தேமட வாரொடும் கூடியென் |
|
|
|
மெய்யகத் தோடும் வைத்த விதியது |
|
|
|
கையகத் தேகரும் பாலையின் சாறுகொள் |
|
|
|
மெய்யகத் தேபெரு வேம்பது வாமே. 4 |
|
|
|
|
|
|
|
208. |
|
|
|
கோழை ஒழுக்கம் குளமூடு பாசியில் |
|
|
|
ஆழ நடுவர் அளப்புறு வார்களைத் |
|
|
|
தாழத் துடக்கித் தடுக்ககில் லாவிடில் |
|
|
|
பூழை நுழைந்தவர் போகின்ற வாறே. 5 |
|
|
|
|
|
|
|
|
|
10..நல்குரவு |
|
|
|
209. |
|
|
|
புடைவை கிழிந்தது போயிற்று வாழ்க்கை |
|
|
|
அடையப்பட் டார்களும் அன்பில ராயினார் |
|
|
|
கொடையில்லை கோளில்லை கொண்டாட்ட மில்லை |
|
|
|
நடையில்லை நாட்டில் இயங்குகின் றார்கட்கே. 1 |
|
|
|
|
|
|
|
210. |
|
|
|
பொய்க்குழி தூர்ப்பான் புலா புலருதென்று |
|
|
|
அக்குழி தூர்க்கும் அரும்பண்டம் தேடுவீர் |
|
|
|
எக்குழி தூர்த்தும் இறைவனை ஏத்துமின் |
|
|
|
அக்குழி தூரும் அழுக்கற்ற போதே. 2 |
|
|
|
|
|
|
|
211. |
|
|
|
கற்குழி தூரக் கனகமும் தேடுவர் |
|
|
|
அக்குழி தூர்க்கை யாவர்க்கும் அரியது |
|
|
|
அக்குழி தூர்க்கும் அறிவை அறிந்தபின் |
|
|
|
அக்குழி தூரும் அழுக்கற்ற வாறே. 3 |
|
|
|
|
|
|
|
212. |
|
|
|
தொடர்ந்தெழு சுற்றம் வினையினுந் தீய |
|
|
|
கடந்தோர் ஆவி கழிவதன் முன்னே |
|
|
|
உடந்தொரு காலத்து உணர்விளக்கு ஏற்றித் |
|
|
|
தொடர்ந்துநின்று அவ்வழி தூர்க்கலு ம் ஆமே. 4 |
|
|
|
|
|
|
|
213. |
|
|
|
அறுத்தன ஆறினும் ஆனினம் மேவி |
|
|
|
அறுத்தனர் ஐவரும் எண்ணிலி துன்பம் |
|
|
|
ஒறுத்தன வல்வினை ஒன்றல்ல வாழ்வை |
|
|
|
வெறுத்தனன் ஈசனை வேண்டிநின் றானே. 5 |
|
|
|
|
|
|
|
|
|
11.. அக்கினி காரியம் |
|
|
|
214. |
|
|
|
வசையில் விழுப்பொருள் வானும் நிலனும் |
|
|
|
திசையும் திசைபெறு தேவர் குழாமும் |
|
|
|
விசையும் பெருகிய வேத முதலாம் |
|
|
|
அசைவிலா அந்தணர் ஆகுதி வேட்கிலே. 1 |
|
|
|
|
|
|
|
215. |
|
|
|
ஆகுதி வேட்கும் அருமறை அந்தணர் |
|
|
|
போகதி நாடிப் புறங்கொடுத்து உண்ணுவர் |
|
|
|
தாம்விதி வேண்டித் தலைப்படு மெய்ந்நெறி |
|
|
|
தாமறி வாலே தலைப்பட்ட வாறே. 2 |
|
|
|
|
|
|
|
216. |
|
|
|
அணைதுணை அந்தணர் அங்கியுள் அங்கி |
|
|
|
அணைதுணை வைத்ததின் உட்பொரு ளான |
|
|
|
இணைதுணை யாமத்து இயங்கும் பொழுது |
|
|
|
துணையணை யாயதோர் தூய்நெறி யாமே. 3 |
|
|
|
|
|
|
|
217. |
|
|
|
போதிரண் டோ திப் புரிந்தருள் செய்திட்டு |
|
|
|
மாதிரண் டாகி மகிழ்ந்துட னேநிற்குந் |
|
|
|
தாதிரண் டாகிய தண்ணம் பறவைகள் |
|
|
|
வேதிரண் டாகி வெறிக்கின்ற வாறே. 4 |
|
|
|
|
|
|
|
218. |
|
|
|
நெய்நின்று எரியும் நெடுஞ்சுட ரேசென்று |
|
|
|
மைநின்று எரியும் வகையறி வார்க்கட்கு |
|
|
|
மைநின்று அவிழ்தரும் அத்தின மாம் என்றும் |
|
|
|
செய்நின்ற செல்வம் தீயது வாமே. 5 |
|
|
|
|
|
|
|
219. |
|
|
|
பாழி அகலும் எரியும் திரிபோலிட்டு |
|
|
|
ஊழி அகலும் உறுவினை நோய்பல |
|
|
|
வாழிசெய்து அங்கி உதிக்க அவைவிழும் |
|
|
|
வீழிசெய்து அங்கி வினைசுடு மாமே. 6 |
|
|
|
|
|
|
|
220. |
|
|
|
பெருஞ்செல்வம் கேடென்று முன்னே படைத்த |
|
|
|
வருஞ்செல்வம் தந்த தலைவனை நாடும் |
|
|
|
வருஞ்செல்வதது இன்பம் வரஇருந் தெண்ணி |
|
|
|
அருஞ்செல்வத்து ஆகுதி வேட்கநின் றாரே. 7 |
|
|
|
|
|
|
|
221. |
|
|
|
ஒண்சுட ரானை உலப்பிலி நாதனை |
|
|
|
ஒண்சுட ராகிஎன் உள்ளத்து இருக்கின்ற |
|
|
|
கண்சுட ரோன் உலகு ஏழும் கடந்த அத் |
|
|
|
தண்சுடர் ஓமத் தலைவனு மாமே. 8 |
|
|
|
|
|
|
|
222. |
|
|
|
ஓமத்துள் அங்கியின் உள்ளுளன் எம்மிறை |
|
|
|
ஈமத்துள் அங்கி இரதங்கொள் வானுளன் |
|
|
|
வேமத்துள் அங்கி விளைவு வினைக்கடல் |
|
|
|
கோமத்துள் அங்கி குரைகடல் தானே. 9 |
|
|
|
|
|
|
|
223. |
|
|
|
அங்கி நிறுத்தும் அருந்தவர் ஆரணத்து |
|
|
|
தங்கி இருக்கும் வகையருள்செய்தவர் |
|
|
|
எங்கும் நிறுத்தி இளைப்பப் பெரும்பதி |
|
|
|
பொங்கி நிறுத்தும் புகழது வாமே. 10 |
|
|
|
|
|
|
|
|
|
12.. அந்தண ரொழுக்கம் |
|
|
|
|
|
224. |
|
|
|
அந்தணர் ஆவோர் அறுதொழில் பூண்டுளோர் |
|
|
|
செந்தழல் ஓம்பிமுப் போதும் நியமஞ்செய் |
|
|
|
தந்தவ நற்கரு மத்துநின்று ஆங்கிட்டுச் |
|
|
|
சந்தியும் ஓதிச் சடங்கறுப் போர்களே. 1 |
|
|
|
|
|
|
|
225. |
|
|
|
வேதாந்தங் கேட்க விருப்பொடு முப்பதப் |
|
|
|
போதாந்த மான பிரணவத் துள்புக்கு |
|
|
|
நாதந்த வேதாந்த போதாந்த நாதனை |
|
|
|
ஈதாந்தம் எனாதுகண்டு இன்புறு வோர்க்களே. 2 |
|
|
|
|
|
|
|
226. |
|
|
|
காயத் திரியே கருதுசா வித்திரி |
|
|
|
ஆய்தற்கு உவப்பர் மந்திரம் ஆங்கு உன்னி |
|
|
|
நேயத் தேரேறி நினைவுற்று நேயத்தாய் |
|
|
|
மாயத்துள் தோயா மறையோர்கள் தாமே. 3 |
|
|
|
|
|
|
|
227. |
|
|
|
பெருநெறி யான பிரணவம் ஓர்ந்து |
|
|
|
குருநெறி யாலுரை கூடிநால் வேதத் |
|
|
|
திருநெறி யான கிரியை யிருந்து |
|
|
|
சொரூபமது ஆனோர் துகளில்பார்ப் பாரே. 4 |
|
|
|
|
|
|
|
228. |
|
|
|
சத்திய மும்தவம் தானவன் ஆதலும் |
|
|
|
எய்த்தரும் இந்தியம் ஈட்டியே வாட்டலும் |
|
|
|
ஒத்த உயிர்கள் உண்டா யுணர்வுற்று |
|
|
|
பெத்தம் அறுத்தலும் ஆகும் பிரமமே. 5 |
|
|
|
|
|
|
|
229. |
|
|
|
வேதாந்தங் கேட்க விரும்பிய வேதியர் |
|
|
|
வேதாந்தங் கேட்டுந்தம் வேட்கை ஒழிந்திலர் |
|
|
|
வேதாந்த மாவது வேட்கை ஒழிந்திடம் |
|
|
|
வேதாந்தங் கேட்டவர் வேட்கை விட்டாரே. 6 |
|
|
|
|
|
|
|
230. |
|
|
|
நூலும் சிகையும் நுவலிற் பிரமமோ |
|
|
|
நூலது கார்ப்பாசம் நுண்சிகை கேசமாம் |
|
|
|
நூலது வேதாந்தம் நுண்சிகை ஞானமாம் |
|
|
|
நூலுடை அந்தணர் காணும் நுவலிலே. 7 |
|
|
|
|
|
|
|
231. |
|
|
|
சத்தியம் இன்றித் தனிஞானம் தானின்றி |
|
|
|
ஒத்த விடயம்விட் டோ டும் உணர்வின்றிப் |
|
|
|
பத்தியும் இன்றிப் பரன் உண்மை யின்றிப் |
|
|
|
பித்தேறும் மூடர் பிராமணர் தாமன்றே. 8 |
|
|
|
|
|
|
|
232. |
|
|
|
திருநெறி யாகிய சித்தசித் தின்றிக் |
|
|
|
குருநெறி யாலே குருபதம் சேர்ந்து |
|
|
|
கரும நியமாதி கைவிட்டுக் காணும் |
|
|
|
துரிய சமாதியாந் தூய்மறை யோர்க்கே. 9 |
|
|
|
|
|
|
|
233. |
|
|
|
மறையோர் அவரே மறையவர் ஆனால் |
|
|
|
மறையோர்தம் வேதாந்த வாய்மையினால் தூய்மை |
|
|
|
குறையோர்தன் மற்றுள்ள கோலா கலமென்று |
|
|
|
அறிவோர் மறைதொந்து அந்தண ராமே. 10 |
|
|
|
|
|
|
|
234. |
|
|
|
அந்தண்மை பூண்ட அருமறை அந்தத்துச் |
|
|
|
சிந்தைசெய் அந்தணர் சேரும் செழும்புவி |
|
|
|
நந்துதல் இல்லை நரபதி நன்றாகும் |
|
|
|
அந்தியும் சந்தியும் ஆகுதி பண்ணுமே. 11 |
|
|
|
|
|
|
|
235. |
|
|
|
வேதாந்த ஞானம் விளங்க விதியிலோர் |
|
|
|
நாதாந்த போதம் நணுகிய போக்கது |
|
|
|
போதாந்த மாம்பரன் பாற்புகப் புக்கதால் |
|
|
|
நாதாந்த முத்தியும் சித்தியும் நண்ணுமே. 12 |
|
|
|
|
|
|
|
236. |
|
|
|
ஒன்றும் இரண்டும் ஒருங்கிய காலத்து |
|
|
|
நன்றும் இருந்தும் நலம்பல பேசினும் |
|
|
|
வென்று விளங்கும் விகிர்தனை நாடுவர் |
|
|
|
சென்று வணங்குந் திருவுடை யோரே. 13 |
|
|
|
|
|
|
|
237. |
|
|
|
தானே விடும்பற்று இரண்டும் தரித்திட |
|
|
|
நானே விடப்படும் ஏதொன்றை நாடாது |
|
|
|
பூமேவு நான்முகன் புண்ணிய போகனாய் |
|
|
|
ஓமேவும் ஓர்ஆ குதிஅவி உண்ணவே. 14 |
|
|
|
|
|
|
|
|
|
13.. அரசாட்சி முறை .(.இராச தோடம்.). |
|
|
|
238. |
|
|
|
கல்லா அரசனும் காலனும் நேரொப்பர் |
|
|
|
கல்லா அரசனிற் காலன் மிகநல்லன் |
|
|
|
கல்லா அரசன் அறம் ஓரான் கொல்லென்பான் |
|
|
|
நல்லாரைக் காலன் நணுகநில் லானே. 1 |
|
|
|
|
|
|
|
239. |
|
|
|
நாள்தோறும் மன்னவன் நாட்டில் தவநெறி |
|
|
|
நாள்தோறும் நாடி அவன்நெறி நாடானேல் |
|
|
|
நாள்தோறும் நாடு கெடுமூட நண்ணுமால் |
|
|
|
நாள்தோறும் செல்வம் நரபதி குன்றுமே. 2 |
|
|
|
|
|
|
|
240. |
|
|
|
வேட நெறிநில்லார் வேடம்பூண் டென்பயன் |
|
|
|
வேட நெறிநிற்பார் வேடம்மெய் வேடமே |
|
|
|
வேட நெறிநில்லார் தம்மை விறல்வேந்தன் |
|
|
|
வேட நெறிசெய்தால் வீடது வாமே. 3 |
|
|
|
|
|
|
|
241. |
|
|
|
மூடங் கெடாதோர் சிகைநூல் முதற்கொள்ளில் |
|
|
|
வாடும் புவியும் பெருவாழ்வு மன்னனும் |
|
|
|
பீடுஒன் றிலனாகும் ஆதலாற் பேர்த்துணர்ந்து |
|
|
|
ஆடம் பரநூல் சிகையறுத் தால்நன்றே. 4 |
|
|
|
|
|
|
|
242. |
|
|
|
ஞானமி லாதார் சடைசிகை நூல்நண்ணி |
|
|
|
ஞானிகள் போல நடிக்கின் றவர் தம்மை |
|
|
|
ஞானிக ளாலே நரபதி சோதித்து |
|
|
|
ஞானமுண் டாக்குதல் நலமாகும் நாட்டிற்கே. 5 |
|
|
|
|
|
|
|
243. |
|
|
|
ஆவையும் பாவையும் மற்றுஅற வோரையும் |
|
|
|
தேவர்கள் போற்றும் திருவேடத் தாரையும் |
|
|
|
காவலன் காப்பவன் காவாது ஒழிவனேல் |
|
|
|
மேவும் மறுமைக்கு மீளா நரகமே. 6 |
|
|
|
|
|
|
|
244. |
|
|
|
திறந்தரு முத்தியும் செல்வமும் வேண்டின் |
|
|
|
மறந்தும் அறநெறி யேஆற்றல் வேண்டும் |
|
|
|
சிறந்தநீர் ஞாலம் செய்தொழில் யாவையும் |
|
|
|
அறைந்திடில் வேந்தனுககு ஆறில் ஒன் றாமே. 7 |
|
|
|
|
|
|
|
245. |
|
|
|
வேந்தன் உலகை மிகநன்று காப்பது |
|
|
|
வாய்ந்த மனிதர்கள் அவ்வழி யாநிற்பர் |
|
|
|
போந்திவ் வுலகைப் பிறர்க்கொள்ளத் தாங்கொள்ளப் |
|
|
|
பாய்ந்த புலியன்ன பாவகத் தானே. 8 |
|
|
|
|
|
|
|
246. |
|
|
|
கால்கொண்டு கட்டிக் கனல்கொண்டு மேலேற்றிப் |
|
|
|
பால்கொண்டு சோமன் முகம்பற்றி உண்ணாதோர் |
|
|
|
மால்கொண்டு தேறலை உண்ணும் மருளரை |
|
|
|
மேல்கொண்டு தண்டஞ்செய் வேந்தன் கடனே. 9 |
|
|
|
|
|
|
|
247. |
|
|
|
தத்தம்சமயத் தகுதிநில் லாதாரை |
|
|
|
அத்தன் சிவன் சொன்ன ஆகம நூல்நெறி |
|
|
|
எத்தண் டமுஞ்செயும் அம்மையில் இம்மைக்கே |
|
|
|
மெய்த்தண்டம் செய்வதுஅவ் வேந்தன் கடனே. 10 |
|
|
|
|
|
|
|
|
|
14.. வானச் சிறப்பு |
|
|
|
248. |
|
|
|
அமுதூறு மாமழை நீரத னாலே |
|
|
|
அமுதூறும் பன்மரம் பார்மிசை தோற்றும் |
|
|
|
கமுகூறு தெங்கு கரும்பொடு வாழை |
|
|
|
அமுதூறுங் காஞ்சிரை ஆங்கது வாமே. 1 |
|
|
|
|
|
|
|
249. |
|
|
|
வரையிடை நின்றிழி வான்நீர் அருவி |
|
|
|
உரையில்லை உள்ளத் தகத்துநின் றூறும் |
|
|
|
நுரையில்லை மாசில்லை நுண்ணிய தெண்ணீர் |
|
|
|
கரையில்லை எந்தை கழுமணி யாறே. 2 |
|
|
|
|
|
|
|
|
|
15.. தானச் சிறப்பு |
|
|
|
250. |
|
|
|
ஆர்க்கும் இடுமின் அவாவர் என்னன்மின் |
|
|
|
பார்த்திருந்து உண்மின் பழம்பொருள் போற்றன்மின் |
|
|
|
வேட்கை உடையீர் விரைந்தொல்லை உண்ணன்மின் |
|
|
|
காக்கை கரைந்துண்ணும் காலம் அறிமினே. 1 |
|
|
|
|
|
|
|
|
|
16.. அறஞ்செய்வான் திறம் |
|
|
|
251. |
|
|
|
தாமறி வார்அண்ணல் தாள்பணி வார்அவர் |
|
|
|
தாமறி வார்அறம் தாங்கிநின் றார்அவர் |
|
|
|
தாமறி வார்சில தத்துவர் ஆவர்கள் |
|
|
|
தாமறி வார்க்குத் தமர்பர னாமே. 1 |
|
|
|
|
|
|
|
252. |
|
|
|
யாவர்க்கு மாம்இறை வற்குஒரு பச்சிலை |
|
|
|
யாவர்க்கு மாம்பசு வுக்கொரு வாயுறை |
|
|
|
யாவர்க்கு மாம் உண்ணும் போதொரு கைப்பிடி |
|
|
|
யாவர்க்கு மாம்பிறர்க்கு இன்னுரை தானே. 2 |
|
|
|
|
|
|
|
253. |
|
|
|
அற்றுநின் றார்உண்ணும் ஊணே அறன்என்னும் |
|
|
|
கற்றன போதம் கமழ்பவர் மானிடர் |
|
|
|
உற்றுநின்று ஆங்கொரு கூவல் குளத்தினில் |
|
|
|
பற்றிவந் துண்ணும் பயனறி யாரே. 3 |
|
|
|
|
|
|
|
254. |
|
|
|
அழுக்கினை ஓட்டி அறிவை நிறையீர் |
|
|
|
தழுக்கிய நாளில் தருமமும்செய்யீர் |
|
|
|
விழித்திருந்து என்செய்வீர் வெம்மை பரந்து |
|
|
|
விழிக்கஅன்று என்செய்வீர் ஏழைநெஞ்சீரே. 4 |
|
|
|
|
|
|
|
255. |
|
|
|
தன்னை அறியாது தான்நலன் என்னாதுஇங்கு |
|
|
|
இன்மை அறியாது இளையர்என்று ஓராது |
|
|
|
வன்மையில் வந்திடும்கூற்றம் வருமுன்னம் |
|
|
|
தன்மையில் நல்ல தவஞ்செய்யும் நீரே. 5 |
|
|
|
|
|
|
|
256. |
|
|
|
துறந்தான் வழிமுதல் சுற்றமும் இல்லை |
|
|
|
இறந்தான் வழிமுதல் இன்பமும் இல்லை |
|
|
|
மறந்தான் வழிமுதல் வந்திலன் ஈசன் |
|
|
|
அறந்தான் அறியும் அளவறி வாரே. 6 |
|
|
|
|
|
|
|
257. |
|
|
|
தான்தவம் செய்வதாம் செய்தவத்து அவ்வழி |
|
|
|
மான்தெய்வ மாக மதிக்கும் மனிதர்கள் |
|
|
|
ஊன் தெய்வ மாக உயிர்க்கின்ற பல்லுயிர் |
|
|
|
நான்தெய்வம் என்று நமன்வரு வானே. 7 |
|
|
|
|
|
|
|
258. |
|
|
|
திளைக்கும் வினைக்கடல் தீர்வுறு தோணி |
|
|
|
இளைப்பினை நீக்கும் இருவழி உண்டு |
|
|
|
கிளைக்கும் தனக்கும் அக் கேடில் புகழோன் |
|
|
|
விளைக்கும் தவமறம் மேற்றுணை யாமே. 8 |
|
|
|
|
|
|
|
259. |
|
|
|
பற்றது வாய்நின்ற பற்றினைப் பார்மிசை |
|
|
|
அற்றம் உரையான் அறநெறிக் கல்லது |
|
|
|
உற்று உங்களால் ஒன்றும் ஈந்தது வேதுணை |
|
|
|
மற்றண்ணல் வைத்த வழிகொள்ளு மாறே. 9 |
|
|
|
|
|
|
|
|
|
17.. அறஞ்செயான் திறம் |
|
|
|
260. |
|
|
|
எட்டி பழுத்த இருங்கனி வீழ்ந்தன |
|
|
|
ஒட்டிய நல்லறம் செய்யா தவர்செல்வம் |
|
|
|
வட்டிகொணடு ஈட்டியே மண்ணில் முகந்திடும் |
|
|
|
பட்டிப் பதகர் பயன்அறி யாரே. 1 |
|
|
|
|
|
|
|
261. |
|
|
|
ஒழிந்தன காலங்கள் ஊழியும் போயின |
|
|
|
கழிந்தன கற்பனை நாளுங் குறுகிப் |
|
|
|
பிழிந்தன போலத்தம் போடர் ஆக்கை |
|
|
|
அழிந்தன கண்டும் அறம்அறி யாரே. 2 |
|
|
|
|
|
|
|
262. |
|
|
|
அறம்அறி யார்அண்ணல் பாதம் நினையுந் |
|
|
|
திறம்அறி யார்சிவ லோக நகர்க்குப் |
|
|
|
புறம்அறி யார்பலர் பொய்மொழி கேட்டு |
|
|
|
மறம்அறி வார்பகை மன்னிநின் றாரே. 3 |
|
|
|
|
|
|
|
263. |
|
|
|
இருமலும் சோகையும் ஈளையும் வெப்பும் |
|
|
|
தருமஞ்செய் யாதவர் தம்பால தாகும் |
|
|
|
உருமிடி நாகம் உரோணி கழலை |
|
|
|
தருமம்செய் வார்பக்கல் தாழகி லாவே. 4 |
|
|
|
|
|
|
|
264. |
|
|
|
பரவப் படுவான் பரமனை ஏத்தார் |
|
|
|
இரவலர்க்கு ஈதலை யாயினும் ஈயார் |
|
|
|
கரகத்தால் நீராட்டிக் காவை வளர்க்கார் |
|
|
|
நரகத்தில் நிற்றிரோ நல்நெஞ்சி னீரே. 5 |
|
|
|
|
|
|
|
265. |
|
|
|
வழிநடப் பாரின்றி வானோர் உலகம் |
|
|
|
கழிநடப் பார்நடந் தார்கருப் பாரும் |
|
|
|
மழிநடக் கும்வினை மாசற ஓட்டிட்டு |
|
|
|
வழிநடப் பார்வினை ஓங்கிநின் றாரே. 6 |
|
|
|
|
|
|
|
266. |
|
|
|
கனிந்தவர் ஈசன் கழலடி காண்பர் |
|
|
|
துணிந்தவர் ஈசன் துறக்கமது ஆள்வர் |
|
|
|
மலிந்தவர் மாளும் துணையும்ஒன் றின்றி |
|
|
|
மெலிந்த சினத்தினுள் வீழ்ந்தொழிந் தாரே. 7 |
|
|
|
|
|
|
|
267. |
|
|
|
இன்பம் இடரென்று இரண்டுற வைத்தது |
|
|
|
முன்பவர் செய்கையி னாலே முடிந்தது |
|
|
|
இன்பம் அதுகண்டும் ஈகிலாப் பேதைகள் |
|
|
|
அன்பிலார் சிந்தை அறமறி யாரே. 8 |
|
|
|
|
|
|
|
268. |
|
|
|
கெடுவதும் ஆவதும் கேடில் புகழோன் |
|
|
|
நடுவல்ல செய்து இன்பம் நாடவும் ஒட்டான் |
|
|
|
இடுவதும் ஈவதும் எண்ணுமின் இன்பம் |
|
|
|
படுவது செய்யின் பசுவது வாமே. 9 |
|
|
|
|
|
|
|
269. |
|
|
|
செல்வம் கருதிச் சிலர்பலர் வாழ்வெனும் |
|
|
|
புல்லறி வாளரைப் போற்றிப் புலராமல் |
|
|
|
இல்லங் கருதி இறைவனை ஏத்துமின் |
|
|
|
வில்லி இலக்கெய்த விற்குறி யாமே. 10 |
|
|
|
|
|
|
|
|
|
18.. அன்புடைமை |
|
|
|
270. |
|
|
|
அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவிலார் |
|
|
|
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார் |
|
|
|
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின் |
|
|
|
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே. 1 |
|
|
|
|
|
|
|
271. |
|
|
|
பொன்னைக் கடந்திலங் கும்புலித் தோலினன் |
|
|
|
மின்னிக் கிடந்து மிளிரும் இளம்பிறை |
|
|
|
துன்னிக் கிடந்த சுடுபொடி யாடிக்குப் |
|
|
|
பின்னிக் கிடந்ததென் பேரன்பு தானே. 2 |
|
|
|
|
|
|
|
272. |
|
|
|
என்பே விறகா இறைச்சி அறுத்திட்டுப் |
|
|
|
பொன்போற் கனலிற் பெரிய வறுப்பினும் |
|
|
|
அன்போடு உருகி அகங்குழை வார்க்கன்றி |
|
|
|
என்போல் மணியினை எய்தஒண் ணாதே. 3 |
|
|
|
|
|
|
|
273. |
|
|
|
ஆர்வம் உடையவர் காண்பார் அரன்தன்னை |
|
|
|
ஈரம் உடையவர் காண்பார் இணையடி |
|
|
|
பாரம் உடையவர் காண்பார் பவந்தன்னைக் |
|
|
|
கோர நெறிகொடு கொங்குபுக் காரே. 4 |
|
|
|
|
|
|
|
274. |
|
|
|
என்அன் புருக்கி இறைவனை ஏத்துமின் |
|
|
|
முன்அன் புருக்கி முதல்வனை நாடுமின் |
|
|
|
பின்அன் புருக்கிப் பெருந்தகை நந்தியும் |
|
|
|
தன்அன் பெனக்கே தலைநின்ற வாறே. 5 |
|
|
|
|
|
|
|
275. |
|
|
|
தானொரு காலம் சயம்பு என் றேத்தினும் |
|
|
|
வானொரு காலம் வழித்துணை யாய்நிற்கும் |
|
|
|
தேனொரு பால்திகழ் கொன்றை அணிசிவன் |
|
|
|
தானொரு வண்ணம்என் அன்பில்நின் றானே. 6 |
|
|
|
|
|
|
|
276. |
|
|
|
முன்படைத்து இன்பம் படைத்த முதலிடை |
|
|
|
அன்புஅடைத்து எம்பெரு மானை அறிகிலார் |
|
|
|
வன்படைத்து இந்த அகலிடம் வாழ்வினில் |
|
|
|
அன்புஅடைத் தான்தன் அகலிடத் தானே. 7 |
|
|
|
|
|
|
|
277. |
|
|
|
கருத்துறு செம்பொன்செய் காய்கதிர்ச் சோதி |
|
|
|
இருத்தியும் வைத்தும் இறைவன் என்று ஏத்தியும் |
|
|
|
அருத்தியுள் ஈசனை யாரருள் வேண்டில் |
|
|
|
விருத்தி கொடுத்திடும் விண்ணவர் கோனே. 8 |
|
|
|
|
|
|
|
278. |
|
|
|
நித்தலும் துஞ்சும் பிறப்பையும் செய்தவன் |
|
|
|
வைத்த பரிசு அறிந் தேயும் மனிதர்கள் |
|
|
|
இச்சையு ளேவைப்பர் எந்தை பிரானென்று |
|
|
|
நச்சியே அண்ணலை நாடுகி லாரே. 9 |
|
|
|
|
|
|
|
279. |
|
|
|
அன்பின் உள் ளான்புறத்தான் உட லாயுளான் |
|
|
|
முன்பின்உள் ளான்முனி வர்க்கும் பிரானவன் |
|
|
|
அன்பின்உள் ளாகி அமரும் அரும்பொருள் |
|
|
|
அன்பினுள் ளார்க்கே அணைதுணை யாமே. 10 |
|
|
|
|
|
|
|
|
|
19.. அன்பு செய்வாரை அறியும் சிவன். |
|
|
|
280. |
|
|
|
இகழ்ந்ததும் பெற்றதும் ஈசன் அறியும் |
|
|
|
உகந்தருள் செய்திடும் உத்தம நாதன் |
|
|
|
கொழுந்தன்பு செய்தருள் கூரவல் லார்க்கு |
|
|
|
மகிழ்ந்தன்பு செய்யும் அருளது வாமே. 1 |
|
|
|
|
|
|
|
281. |
|
|
|
இன்பப் பிறவிக்கு இயல்வது செய்தவன் |
|
|
|
துன்பப் பிறவித் தொழில்பல என்னினும் |
|
|
|
அன்பிற் கலவிசெய்து ஆதிப் பிரான்வைத்த |
|
|
|
முன்பிப் பிறவி முடிவது தானே. 2 |
|
|
|
|
|
|
|
282. |
|
|
|
அன்புறு சிந்தையின் மேலெழும் அவ்வொளி |
|
|
|
இன்புறு கண்ணியொடு ஏற்க இசைந்தன |
|
|
|
துன்புறு கண்ணி ஐந் தாடும் துடக்கற்று |
|
|
|
நண்புறு சிந்தையை நாடுமின் நீரே. 3 |
|
|
|
|
|
|
|
283. |
|
|
|
புணர்ச்சியுள் ஆயிழை மேல்அன்பு போல |
|
|
|
உணர்ச்சியுள் ஆங்கே ஒடுங்கவல் லாருக்கு |
|
|
|
உணர்ச்சியில் லாது குலாவி உலாவி |
|
|
|
அணைத்தலும் இன்பம் அதுவிது வாமே. 4 |
|
|
|
|
|
|
|
284. |
|
|
|
உற்றுநின் றாரொடும் அத்தகு சோதியைச் |
|
|
|
சித்தர்கள் என்றும் தொந்தறி வாரில்லை |
|
|
|
பத்திமை யாலே பணிந்தடி யார்தொழ |
|
|
|
முத்தி கொடுத்தவர் முன்புநின் றானே. 5 |
|
|
|
|
|
|
|
285. |
|
|
|
கண்டேன் கமழ்தரு கொன்றையி னான்அடி |
|
|
|
கண்டேன் கரியுரி யான்தன் கழலிணை |
|
|
|
கண்டேன் கமல மலர்உறை வானடி |
|
|
|
கண்டேன் கழலதென் அன்பினுள் யானே. 6 |
|
|
|
|
|
|
|
286. |
|
|
|
நம்பனை நானா விதப்பொரு ளாகுமென்று |
|
|
|
உம்பரில் வானவர் ஓதுந் தலைவனை |
|
|
|
இன்பனை இன்பத் திடைநின்று இரதிக்கும் |
|
|
|
அன்பனை யாரும் அறியகி லாரே. 7 |
|
|
|
|
|
|
|
287. |
|
|
|
முன்பு பிறப்பும் இறப்பும் அறியாதார் |
|
|
|
அன்பில் இறைவனை யாம்அறி வோம்என்பர் |
|
|
|
இன்பப் பிறப்பும் இறப்பும் இலான்நந்தி |
|
|
|
அன்பில் அவனை அறியகி லாரே. 8 |
|
|
|
|
|
|
|
288. |
|
|
|
ஈசன் அறியும் இராப்பக லுந்தன்னைப் |
|
|
|
பாசத்துள் வைத்துப் பரிவுசெய் வார்களைத் |
|
|
|
தேசுற்று இருந்து செயலற் றிருந்திடில் |
|
|
|
ஈசன்வந்து எம்மிடை ஈட்டிநின் றானே. 9 |
|
|
|
|
|
|
|
289. |
|
|
|
விட்டுப் பிடிப்பதென் மேதகு சோதியைத் |
|
|
|
தொட்டுத் தொடர்வன் தொலையாப் பெருமையை |
|
|
|
எட்டும் என் ஆருயி ராய்நின்ற ஈசனை |
|
|
|
மட்டுக் கலப்பது மஞ்சனம் ஆமே. 10 |
|
|
|
|
|
|
|
|
|
20.. கல்வி. |
|
|
|
290. |
|
|
|
குறிப்பறிந் தேன்உடல் உயிரது கூடிச் |
|
|
|
செறிப்பறிந் தேன்மிகு தேவர் பிரானை |
|
|
|
மறிப்பறி யாதுவந்துஉள்ளம் புகுந்தான் |
|
|
|
கறிப்பறி யாமிகுங் கல்விகற் றேனே. 1 |
|
|
|
|
|
|
|
291. |
|
|
|
கற்றறி வாளர் கருதிய காலத்துக் |
|
|
|
கற்றறி வாளர் கருத்திலோர் கண்ணுண்டு |
|
|
|
கற்றறி வாளர் கருதி உரைசெய்யுங் |
|
|
|
கற்றறி காட்டக் கயல்உள வாக்குமே. 2 |
|
|
|
|
|
|
|
292. |
|
|
|
நிற்கின்ற போதே நிலையுடை யான்கழல் |
|
|
|
கற்கின்ற செய்மின் கழிந்தறும் பாவங்கள் |
|
|
|
சொற்குன்றல் இன்றித் தொழுமின் தொழுதபின் |
|
|
|
மற்றொன்று இலாத மணிவிளக் காமே. 3 |
|
|
|
|
|
|
|
293. |
|
|
|
கல்வி யுடையார் கழிந்தோடிப் போகின்றார் |
|
|
|
பல்லி யுடையார் பாம்பரிந்து உண்கின்றார் |
|
|
|
எல்லியுன் காலையும் ஏத்தும் இறைவனை |
|
|
|
வல்லியுள் வாதித்த காயமும் ஆமே. 4 |
|
|
|
|
|
|
|
294. |
|
|
|
துணையது வாய்வரும் தூயநற் சோதி |
|
|
|
துணையது வாய்வரும் தூயநற் சொல்லாம் |
|
|
|
துணையது வாய்வரும் தூயநற் கந்தம் |
|
|
|
துணையது வாய்வரும் தூயநற் கல்வியே. 5 |
|
|
|
|
|
|
|
295. |
|
|
|
நூலொன்று பற்றி நுனியேற மாட்டாதார் |
|
|
|
பாலொன்று பற்றினால் பண்பின் பயங்கெடும் |
|
|
|
கோலொன்று பற்றினால் கூடாப் பறவைகள் |
|
|
|
மாலொன்று பற்றி மயங்குகின் றார்க்களே. 6 |
|
|
|
|
|
|
|
296. |
|
|
|
ஆய்ந்துகொள் வார்க்குஅரன் அங்கே வெளிப்படும் |
|
|
|
தோய்ந்த நெருப்பது தூய்மணி சிந்திடும் |
|
|
|
ஏய்ந்த இளமதி எட்டவல் லார்கட்கு |
|
|
|
வாய்ந்த மனமல்கு நூலேணி யாமே. 7 |
|
|
|
|
|
|
|
297. |
|
|
|
வழித்துணை யாய்மருந் தாயிருந் தார்முன் |
|
|
|
கழித்துணை யாம்கற் றிலாதவர் சிந்தை |
|
|
|
ஒழித்துணை யாம்உம் பராய்உல கேழும் |
|
|
|
வழித்துணை யாம்பெருந் தன்மைவல் லானே. 8 |
|
|
|
|
|
|
|
298. |
|
|
|
பற்றது பற்றில் பரமனைப் பற்றுமின் |
|
|
|
முற்றது எல்லா முதல்வன் அருள்பெறில் |
|
|
|
கிற்ற விரகிற் கிளரொளி வானவர் |
|
|
|
கற்றவர் போன்பம் உற்றுநின் றாரே. 9 |
|
|
|
|
|
|
|
299 |
|
|
|
கடலுடை யான்மலை யான்ஐந்து பூதத்து |
|
|
|
உடலுடை யான்பல ஊழிதொ றூழி |
|
|
|
அடல்விடை யேறும் அமரர்கள் நாதன் |
|
|
|
இடமுடை யார்நெஞ்சத் தில்லிருந் தானே. 10 |
|
|
|
|
|
|
|
|
|
21.. கேள்வி கேட்டமைதல். |
|
|
|
300. |
|
|
|
அறங்கேட்டும் அந்தணர் வாய்மொழி கேட்டும் |
|
|
|
மறங்கேட்டும் வானவர் மந்திரங் கேட்டும் |
|
|
|
புறங்கேட்டும் பொன்னுரை மேனிஎம் ஈசன் |
|
|
|
திறங்கேட்டும் பெற்ற சிவகதி தானே. 1 |
|
|
|
|
|
|
|
|
|
|
|
301. |
|
|
|
தேவர் பிரானைத் திவ்விய மூர்த்தியை |
|
|
|
யாவர் ஒருவர் அறிவார் அறிந்தபின் |
|
|
|
ஓதுமின் கேள்மின் உணர்மின் உணர்ந்தபின் |
|
|
|
ஓதி உணர்ந்தவர் ஓங்கி நின்றாரே. 2 |
|
|
|
|
|
|
|
302. |
|
|
|
மயன்பணி கேட்பது மாநந்தி வேண்டின் |
|
|
|
அயன்பணி கேட்பது அரன்பணி யாலே |
|
|
|
சிவன்பணி கேட்பவர் தேவரும் ஆவர் |
|
|
|
பயன்பணி கேட்பது பற்றது வாமே. 3 |
|
|
|
|
|
|
|
303. |
|
|
|
பெருமான் இவனென்று பேசி இருக்கும் |
|
|
|
திருமானிடர் பின்னைத் தேவரும் ஆவர் |
|
|
|
வருமா தவர்க்கு மகிழ்ந்தருள் செய்யும் |
|
|
|
அருமா தவத்தெங்கள் ஆதிப் பிரானே. 4 |
|
|
|
|
|
|
|
304. |
|
|
|
ஈசன் அருளும் இறப்பும் பிறப்பையும் |
|
|
|
பேசி யிருந்து பிதற்றி மகிழ்வெய்தி |
|
|
|
நேசமு மாகும் நிகழொளி யாய்நின்று |
|
|
|
வாச மலர்க்கந்தம் மன்னிநின் றானே. 5 |
|
|
|
|
|
|
|
305. |
|
|
|
விழுப்பமும் கேள்வியும் மெய்நின்ற ஞானத்து |
|
|
|
ஒழுக்கமும் சிந்தை உணர்கின்ற போது |
|
|
|
வழுக்கி விடாவிடில் வானவர் கோனும் |
|
|
|
இழுக்கின்றி எண்ணிலி காலம தாமே. 6 |
|
|
|
|
|
|
|
306. |
|
|
|
சிறியார் மணற்சோற்றில் தேக்கிடு மாபோல் |
|
|
|
செறிவால் அனுபோகம் சித்திக்கும் என்னில் |
|
|
|
குறியாதது ஒன்றைக் குறியாதார் தம்மை |
|
|
|
அறியாது இருந்தார் அவராவார் அன்றே. 7 |
|
|
|
|
|
|
|
307. |
|
|
|
உறுதுணை யாவது உயிரும் உடம்பும் |
|
|
|
உறுதுணை யாவது உலகுறு கேள்வி |
|
|
|
செறிதுணை யாவது சிவனடிச் சிந்தை |
|
|
|
பெறுதுணை கேட்கிற் பிறப்பில்லை தானே. 8 |
|
|
|
|
|
|
|
308. |
|
|
|
புகழநின் றார்க்கும் புராணன்எம் ஈசன் |
|
|
|
இகழநின் றார்க்கும் இடும்பைக்கு இடமாம் |
|
|
|
மகிழநின் றாதியை ஓதி உணராக் |
|
|
|
கழியநின் றார்க்கொரு கற்பசு வாமே. 9 |
|
|
|
|
|
|
|
309. |
|
|
|
வைத்துணர்ந் தான்மனத் தொடும்வாய் பேசி |
|
|
|
ஒத்துணர்ந் தான்உரு ஒன்றொடொன்று ஒவ்வாது |
|
|
|
அச்சுஉழன்று ஆணி கலங்கினும் ஆதியை |
|
|
|
நச்சு உணர்ந் தார்க்கே நணுகலு மாமே. 10 |
|
|
|
|
|
|
|
|
|
22.. கல்லாமை |
|
|
|
310. |
|
|
|
கல்லா தவரும் கருத்தறி காட்சியை |
|
|
|
வல்லார் எனில்அருட் கண்ணான் மதித்துளோர் |
|
|
|
கல்லாதார் உண்மைபற் றாநிற்பர் கற்றோரும் |
|
|
|
கல்லாதார் இன்பம் காணுகி லாரே. 1 |
|
|
|
|
|
|
|
311. |
|
|
|
வல்லார்கள் என்றும் வழியொன்றி வாழ்கின்றார் |
|
|
|
அல்லா தவர்கள் அறிவு பலஎன்பார் |
|
|
|
எல்லா இடத்தும் உளன்எங்கள் தம் இறை |
|
|
|
கல்லா தவர்கள் கலப்பறி யாரே. 2 |
|
|
|
|
|
|
|
312. |
|
|
|
நில்லா நிலையை நிலையாக நெஞ்சத்து |
|
|
|
நில்லாக் குரம்பை நிலையென்று உணர்வீர்காள் |
|
|
|
எல்லா உயிர்க்கும் இறைவனே ஆயினும் |
|
|
|
கல்லாதார் நெஞ்சத்துக் காணஒண் ணாதே. 3 |
|
|
|
|
|
|
|
313. |
|
|
|
கில்லேன் வினைத்துய ராக்கும் மயலானேன் |
|
|
|
கல்லேன் அரநெறி அறியாத் தகைமையின் |
|
|
|
வல்லேன் வழங்கும் பொருளே மனத்தினுள் |
|
|
|
கல்லேன் கழியநின்று ஆடவல் லேனே. 4 |
|
|
|
|
|
|
|
314. |
|
|
|
நில்லாது சீவன் நிலையன்று எனஎண்ணி |
|
|
|
வல்லார் அறத்தும் தவத்துளும் ஆயினார் |
|
|
|
கல்லா மனித்தர் கயவர் உலகினில் |
|
|
|
பொல்லா வினைத்துயர் போகஞ்செய் வாரே. 5 |
|
|
|
|
|
|
|
315. |
|
|
|
விண்ணினின் உள்ளே விளைந்த விளங்கனி |
|
|
|
கண்ணினின் உள்ளே கலந்துஅங் கிருந்தது |
|
|
|
மண்ணினின் உள்ளே மதித்து மதித்துநின் |
|
|
|
றெண்ணி எழுதி இளைத்துவிட் டாரே. 6 |
|
|
|
|
|
|
|
316. |
|
|
|
கணக்கறிந் தார்க்கு அன்றிக் காணஒண் ணாதது |
|
|
|
கணக்கறிந் தார்க்கு அன்றிக் கைகூடாக் காட்சி |
|
|
|
கணக்கறிந்து உண்மையைக் கண்டுஅண்ட நிற்கும் |
|
|
|
கணக்கறிந் தார்கல்வி கற்றறிந் தாரே. 7 |
|
|
|
|
|
|
|
317. |
|
|
|
கல்லாத மூடரைக் காணவும் ஆகாது |
|
|
|
கல்லாத மூடர்சொல் கேட்கக் கடன்அன்று |
|
|
|
கல்லாத மூடர்க்குக் கல்லாதார் நல்லராம் |
|
|
|
கல்லாத மூடர் கருத்தறி யாரே. 8 |
|
|
|
|
|
|
|
318. |
|
|
|
கற்றும் சிவஞானம் இல்லாக் கலதிகள் |
|
|
|
சுற்றமும் வீடார் துரிசுஅறார் மூடர்கள் |
|
|
|
மற்றும் பலதிசை காணார் மதியிலோர் |
|
|
|
கற்றன்பில் நிற்போர் கணக்கறிந் தார்களே. 9 |
|
|
|
|
|
|
|
319. |
|
|
|
ஆதிப் பிரான்அம ரர்க்கும் பரஞ்சுடர் |
|
|
|
சோதி அடியார் தொடரும் பெருந்தெய்வம் |
|
|
|
ஓதி உணரவல் லோம்என்பர் உள்நின்ற |
|
|
|
சோதி நடத்தும் தொடர்வறி யாரே. 10 |
|
|
|
|
|
|
|
|
|
23.. நடுவு நிலைமை |
|
|
|
320. |
|
|
|
நடுவுநின் றார்க்கு அன்றி ஞானமும் இல்லை |
|
|
|
நடுவுநின் றார்க்கு நரகமும் இல்லை |
|
|
|
நடுவுநின் றார்நல்ல தேவரும் ஆவர் |
|
|
|
நடுவுநின் றார்வழி நானும்நின் றேனே. 1 |
|
|
|
|
|
|
|
321. |
|
|
|
நடுவுநின் றான்நல்ல கார்முகில் வண்ணன் |
|
|
|
நடுவுநின் றான்நல்ல நான்மறை யோதி |
|
|
|
நடுவுநின் றார்ச்சிலர் ஞானிகள் ஆவோர் |
|
|
|
நடுவுநின் றார்நல்ல நம்பனு மாமே. 2 |
|
|
|
|
|
|
|
322. |
|
|
|
நடுவுநின் றார்சிலர் ஞானிக ளாவார் |
|
|
|
நடுவுநின் றார்சிலர் தேவரு மாவார் |
|
|
|
நடுவுநின் றார்சிலர் நம்பனு மாவார் |
|
|
|
நடுவுநின் றாரொடு நானும்நின் றேனே. 3 |
|
|
|
|
|
|
|
323. |
|
|
|
தோன்றிய எல்லாம் துடைப்பன் அவனன்றி |
|
|
|
ஏன்றுநின் றாரென்றும் ஈசன் இணையடி |
|
|
|
மூன்றுநின் றார்முதல் வன்திரு நாமத்தை |
|
|
|
நான்றுநின் றார்நடு வாகிநின் றாரே. 4 |
|
|
|
|
|
|
|
|
|
24.. கள்ளுண்ணாமை |
|
|
|
324. |
|
|
|
கழுநீர்ப் பசுப்பெறிற் கயந்தொறும் தேரா |
|
|
|
கழுநீர் விடாய்த்துத்தம் காயம்சுருக்கும் |
|
|
|
முழுநீர்க் கள்ளுண்போர் முறைமை அகன்றோர் |
|
|
|
செழுநீர்ச் சிவன்தன் சிவானந்தத் தேறலே. 1 |
|
|
|
கா |
|
|
|
325. |
|
|
|
சித்தம் உருக்கிச் சிவமாம் சமாதியில் |
|
|
|
ஒத்த சிவானந்தம் ஓவாத தேறலைச் |
|
|
|
சுத்த மதுவுண்ணச் சிவானந்தம் விட்டிடா |
|
|
|
நித்தல் இருத்தல் கிடத்தல் கீழ்க் காலே. 2 |
|
|
|
|
|
|
|
326. |
|
|
|
காமமும் கள்ளும் கலதிகட் கேயாகும் |
|
|
|
மாமல மும்சம யத்துள் மயலுறும் |
|
|
|
போமதி யாகும் புனிதன் இணையடி |
|
|
|
ஓமய ஆனந்தத் தேறல் உணர்வுண்டே. 3 |
|
|
|
|
|
|
|
327. |
|
|
|
வாமத்தோர் தாமும் மதுவுண்டு மாள்பவர் |
|
|
|
காமத்தோர் காமக்கள் ளுண்டே கலங்குவர் |
|
|
|
ஓமத்தோர் உள்ளொளிக் குள்ளே உணர்வர்கள் |
|
|
|
நாமத்தோர் அன்றே நணுகுவர் தாமே. 4 |
|
|
|
|
|
|
|
328. |
|
|
|
உள்ளுண்மை ஓரார் உணரார் பசுபாசம் |
|
|
|
வள்ளன்மை நாதன் அருளினன் வாழ்வுறார் |
|
|
|
தெள்ளுண்மை ஞானச் சிவயோகம் சேர்வுறார் |
|
|
|
கள்ளுண்ணும் மாந்தர் கருத்தறி யாரே. 5 |
|
|
|
|
|
|
|
329. |
|
|
|
மயக்கும் சமய மலமன்னு மூடர் |
|
|
|
மயக்கு மதுவுண்ணும் மாமூடர் தேரார் |
|
|
|
மயக்குறு மாமாயை மாயையின் வீடு |
|
|
|
மயக்கில் தெளியின் மயக்குறும் அன்றே. 6 |
|
|
|
|
|
|
|
330. |
|
|
|
மயங்குந் தியங்கும் கள்வாய்மை அழிக்கும் |
|
|
|
இயங்கும் மடவார்தம் இன்பமே எய்தி |
|
|
|
முயங்கும் நயங்கொண்ட ஞானத்து முந்தார் |
|
|
|
இயங்கும் இடையறா ஆனந்தம் எய்துமே. 7 |
|
|
|
|
|
|
|
331. |
|
|
|
இராப்பகல் அற்ற இடத்தே இருந்து |
|
|
|
பராக்கற ஆனந்தத் தேறல் பருகார் |
|
|
|
இராப்பகல் அற்ற இணையடி இன்பத்து |
|
|
|
இராப்பகல் மாயை இரண்டிடத் தேனே. 8 |
|
|
|
|
|
|
|
332. |
|
|
|
சத்தியை வேண்டிச் சமயத்தோர் கள்ளுண்பர் |
|
|
|
சத்தி அழிந்தது தம்மை மறத்தலால் |
|
|
|
சத்தி சிவஞானம் தன்னில் தலைப்பட்டுச் |
|
|
|
சத்திய ஞானஆ னந்தத்திற் சார்தலே. 9 |
|
|
|
|
|
|
|
333. |
|
|
|
சத்தன் அருள்தரின் சத்தி அருளுண்டாம் |
|
|
|
சத்தி அருள்தரின் சத்தன் அருளுண்டாம் |
|
|
|
சத்தி சிவமாம் இரண்டும் தன் உள்வைக்கச் |
|
|
|
சத்தியம் எண்சித்தித் தன்மையு மாமே. 10 |
|
|
|
|
|
|
|
334. |
|
|
|
தத்துவம் நீக்கி மருள்நீக்கித் தானாகிப் |
|
|
|
பொய்த்தவம் நீக்கிமெய்ப் போகத்துட் போகியே |
|
|
|
மெய்த்த சகமுண்டு விட்டுப் பரானந்தச் |
|
|
|
சித்திய தாக்கும் சிவானந்தத் தேறலே. 11 |
|
|
|
|
|
|
|
335. |
|
|
|
யோகிகள் கால்கட்டி ஒண்மதி ஆனந்தப் |
|
|
|
போத அமுதைப் பொசித்தவர் எண்சித்தி |
|
|
|
மோகியர் கள்ளுண்டு மூடராய் மோகமுற்று |
|
|
|
ஆகும் மதத்தால் அறிவழிந் தாரே. 12 |
|
|
|
|
|
|
|
336. |
|
|
|
உண்ணீர் அமுத முறும் ஊறலைத்திறந்து |
|
|
|
எண்ணீர் குரவன் இணையடித் தாமரை |
|
|
|
நண்ணீர் சமாதியின் நாடிநீ ரால்நலம் |
|
|
|
கண்ணாற் றொடேசென்று கால்வழி காணுமே. 13 |
|
|
|
|
|
|
|
|
|
முதல் தந்திரம் முற்றிற்று |
|
|
|
--------- |
|
|
|
|
|
இரண்டாந் தந்திரம் (337 548) |
|
|
|
|
|
|
|
|
|
.1.. அகத்தியம் |
|
|
|
|
|
|
|
|
|
.337.. |
|
|
|
நடுவுநில் லாதிவ் வுலகஞ் சாந்து |
|
|
|
கெடுகின்ற தெம்பெரு மானென்ன ஈசன் |
|
|
|
நடுவுள அங்கி அகத்திய நீபோய் |
|
|
|
முடுகிய வையத்து முன்னிரென் றானே. |
|
|
|
|
|
|
|
.338.. |
|
|
|
அங்கி உதயம் வளர்க்கும் அகத்தியன் |
|
|
|
அங்கி உதயஞ்செய் மேல்பா லவனொடு |
|
|
|
மங்கி உதயஞ்செய் வடபால் தவமுனி |
|
|
|
எங்கும் வளங்கொள் இலங்கொளி தானே |
|
|
|
---------------- |
|
|
|
|
|
2.. பதிவலியில் வீரட்டம் எட்டு |
|
|
|
|
|
|
|
.339.. |
|
|
|
கருத்துறை அந்தகன் தன்போல் அசுரன் |
|
|
|
வரத்தின் உலகத் துயிர்க்களை எல்லாம் |
|
|
|
வருத்தஞ்செய் தானென்று வானவர் வேண்டக் |
|
|
|
குருத்துயர் சூலங்கைக் கொண்டுகொன் றானே |
|
|
|
|
|
|
|
.340.. |
|
|
|
கொலையிற் பிழைத்த பிரசா பதியைத் |
|
|
|
தலையைத் தடிந்திட்டுத் தானங்கி யிட்டு |
|
|
|
நிலையுல குக்கிவன் வேண்டுமென் றெண்ணித் |
|
|
|
தலையை யாந்திட்டுச் சந்திசெய் தானே |
|
|
|
|
|
|
|
.341.. |
|
|
|
எங்கும் பரந்தும் இருநிலந் தாங்கியுந் |
|
|
|
தங்கும் படித்தவன் தாளுணர் தேவர்கள் |
|
|
|
பொங்கும் சினத்துள் அயன்தலை முன்னற |
|
|
|
அங்குஅச் சுதனை உதிரங்கொண் டானே |
|
|
|
|
|
|
|
.342.. |
|
|
|
எங்குங் கலந்துமென் உள்ளத் தெழுகின்ற |
|
|
|
அங்க முதல்வன் அருமறை .(1).யோதிபாற் |
|
|
|
பொங்குன்ய் சலந்தரன் போர்ச்செய்ய நீர்மையின் |
|
|
|
அங்கு விரற்குறித் தாழிசெய் தானே |
|
|
|
.(1). யோகிபாற் |
|
|
|
|
|
|
|
.343.. |
|
|
|
அப்பணி செஞ்சடை ஆதி புராதனன் |
|
|
|
முப்புரம் செற்றனன் என்பர்கள் மூடர்க்கள் |
|
|
|
முப்புர மாவது மும்மல காரியம் |
|
|
|
அப்புரம் எய்தமை யாரறி வாரே |
|
|
|
|
|
|
|
.344.. |
|
|
|
முத்தீ கொளுவி முழங்கொ வேள்வியுள் |
|
|
|
அத்தி யுரியர னாவ தறிகிலர் |
|
|
|
சத்தி கருதிய தாம்பல தேவரும் |
|
|
|
அத்தீயின் உள்ளெழுந் தன்று கொலையே |
|
|
|
|
|
|
|
.345.. |
|
|
|
மூலத் துவாரத்து மூளும் ஒருவனை |
|
|
|
மேலைத் துவாரத்து மேலுற நோக்கிமுற் |
|
|
|
காலுற்றுக் காலனைக் காய்ந்தங்கி யோகமாய் |
|
|
|
ஞாலக் கடவூர் நலமாய் இருந்ததே |
|
|
|
|
|
|
|
.346.. |
|
|
|
இருந்த மனத்தை இசைய இருத்திப் |
|
|
|
பொருந்தி இலிங்க வழியது போக்கித் |
|
|
|
திருந்திய காமன் செயலழித் தங்கண் |
|
|
|
அருந்தவ யோகங் கொறுக்கை அமர்ந்ததே |
|
|
|
------------ |
|
|
|
|
|
3.. இலிங்க புராணம் |
|
|
|
.347.. |
|
|
|
அடிசேர்வன் என்னஎம் ஆதியை நோக்கி |
|
|
|
முடிசேர் மலைமக னார்மக ளாகித் |
|
|
|
திடமார் தவஞ்செய்து தேவர் அறியப் |
|
|
|
படியார அர்ச்சித்துப் பத்திசெய் தாளே |
|
|
|
|
|
|
|
.348.. |
|
|
|
திரிகின்ற முப்புரஞ் செற்ற பிரானை |
|
|
|
அரியனென் றெண்ணி அயர்வுற வேண்டா |
|
|
|
புரிவுடை யாளர்க்குப் பொய்யலன் ஈசன் |
|
|
|
பரிவொடு நின்று பரிசறி வானே |
|
|
|
|
|
|
|
.349.. |
|
|
|
ஆழி வலங்கொண் டயன்மால் இருவரும் |
|
|
|
ஊழி வலஞ்செய்ய ஒண்சுட ராதியும் |
|
|
|
ஆழி கொடுத்தனன் அச்சுதற்க் கவ்வழி |
|
|
|
.(1).வாழி பிரமற்கும் வாள்கொடுத் தானே |
|
|
|
.(1).வாழிப் பிரமற்கும் |
|
|
|
|
|
|
|
.350.. |
|
|
|
தாங்கி இருபது தோளுந் தடவரை |
|
|
|
ஓங்க எடுத்தவன் ஒப்பில் பெருவலி |
|
|
|
ஆங்கு நொத்தம ராவென் றழைத்தபின் |
|
|
|
நீங்கா அருள்செய்தான் நின்மலன் தானே |
|
|
|
|
|
|
|
|
|
|
|
.351.. |
|
|
|
உறுவது அறிதண்டி ஒண்மணற் கூட்டி |
|
|
|
அறுவகை ஆன்ஐந்தும் ஆட்டத்தன் தாதை |
|
|
|
செறுவகை செய்து சிதைப்ப முனிந்து |
|
|
|
மறுமழு வால்வெட்டி மாலைபெற் றானே |
|
|
|
|
|
|
|
.352.. |
|
|
|
ஓடிவந் தெல்லாம் ஒருங்கிய தேவர்கள் |
|
|
|
வாடி முகமும் வருத்தத்துத் தாஞ்சென்று |
|
|
|
நாடி இறைவா நமேன்று கும்பிட |
|
|
|
ஈடில் புகழோன் எழுகவென் றானே. |
|
|
|
------------ |
|
|
|
|
|
4.. தக்கன் வேள்வி |
|
|
|
.353.. |
|
|
|
தந்தைபி ரான்வெகுண் டாந்தக்கன் வேள்வியை |
|
|
|
வெந்தழல் ஊடே புறப்பட விண்ணவர் |
|
|
|
முந்திய பூசை முடியார் முறைகெட்டுச் |
|
|
|
சிந்தினர் அண்ணல் சினஞ்செய்த போதே |
|
|
|
|
|
|
|
.354.. |
|
|
|
சந்தி செயக்கண் டெழுகின் றாதானும் |
|
|
|
எந்தை யிவனல்ல யாமே உலகினிற் |
|
|
|
பந்தஞ்செய் பாசத்து வீழ்ந்து தவஞ்செய்ய |
|
|
|
அந்தமி லானும் அருள்புரிந் தானே |
|
|
|
|
|
|
|
.355.. |
|
|
|
அப்பரி சேயய நார்ப்பதி வேள்வியுள் |
|
|
|
அப்பரி சேயங்கி அதிசய மாகிலும் |
|
|
|
அப்பரி சேயது நீர்மையை யுள்கலந் |
|
|
|
தப்பரி சேசிவன் ஆலிக்கின் றானே |
|
|
|
|
|
|
|
.356.. |
|
|
|
அப்பரி சேஅயன் மால்முதல் தேவர்கள் |
|
|
|
அப்பரி சேயவ ராகிய காரணம் |
|
|
|
அப்பரி சங்கி யுளநாளும் உள்ளிட் |
|
|
|
டப்பரி சாகி .(1).அலர்ந்திருந் தானே |
|
|
|
.(1). அலந்திருந் |
|
|
|
.(1). அமர்ந்திருந் |
|
|
|
|
|
|
|
.357.. |
|
|
|
.(1). அலர்ந்திருந் தானென் றமரர் துதிப்பக் |
|
|
|
குலந்தரும் கீழங்கி கோளுற நோக்கிச் |
|
|
|
சிவந்த பரமிது சென்று கதுவ |
|
|
|
உவந்த பெருவழி யோடி வந்தானே |
|
|
|
.(1). அலந்திருந் |
|
|
|
|
|
|
|
.358.. |
|
|
|
அரிபிர மந்தக்கன் அருக்க னுடனே |
|
|
|
வருமதி வாலை வன்னிநல் இந்திரன் |
|
|
|
சிரமுக நாசி .(1).சிறந்தகை தோள்தான் |
|
|
|
அரனருள் இன்றி அழிந்தநல் லோரே |
|
|
|
.(1). சிந்தைகை |
|
|
|
|
|
|
|
.359.. |
|
|
|
செவிமந் திரஞ்சொல்லுஞ் செய்தவத் தேவர் |
|
|
|
அவிமந் திரத்தின் அடுக்களை கோலிச் |
|
|
|
செவிமந் திரஞ்செய்து தாமுற நோக்குங் |
|
|
|
குவிமந் திரங்கொல் கொடியது வாமே |
|
|
|
|
|
|
|
.360.. |
|
|
|
நல்லார் நவகுண்டம் ஒன்பதும் இன்புறப் |
|
|
|
பல்லார் அமரர் பரிந்தருள் செய்கென |
|
|
|
வில்லாற் புரத்தை விளங்கொ கோத்தவன் |
|
|
|
பொல்லா அசுரர்கள் பொன்றும் படிக்கே |
|
|
|
|
|
|
|
.361.. |
|
|
|
தெளிந்தார் கலங்கினும் நீகலங் காதே |
|
|
|
அளித்தாங் கடைவதெம் ஆதிப் பிரானை |
|
|
|
.(1).விளிந்தா னது தக்கன் வேள்வியை வீயச் |
|
|
|
சுளிந்தாங் கருள்செய்த தூய்மொழி யானே |
|
|
|
.(1). விளிந்தானத் தக்கனவ் வேள்வியை |
|
|
|
---------- |
|
|
|
|
|
.5.. பிரளயம் |
|
|
|
.362.. |
|
|
|
கருவரை மூடிக் கலந்தெழும் வெள்ளத் |
|
|
|
திருவருங் கோவென் றிகல இறைவன் |
|
|
|
ஒருவனும் நீருற ஓங்கொளி யாகி |
|
|
|
அருவரை யாய்நின் றருள் புரிந் தானே |
|
|
|
|
|
|
|
.363.. |
|
|
|
அலைகடல் ஊடறுத் தண்டத்து வானோர் |
|
|
|
தலைவன் எனும்பெயர் தான்றலை மேற்கொண்டு |
|
|
|
உலகார் அழற்கண் டுள்விழா தோடி |
|
|
|
அலைவாயில் வீழாமல் அஞ்சலென் றானே |
|
|
|
|
|
|
|
.364.. |
|
|
|
தண்கடல் விட்ட தமரருந் தேவரும் |
|
|
|
எண்கடல் சூழெம் பிரானென் றிறைஞ்சுவர் |
|
|
|
விண்கடல் செய்தவர் மேலெழுந் தப்புறங் |
|
|
|
கண்கடல் செய்யுங் கருத்தறி யாரே. |
|
|
|
|
|
|
|
.365.. |
|
|
|
சமைக்கவல் லானைச் சயம்புவென் றேத்தி |
|
|
|
அமைக்கவல் லாரிவ் வுலகத்து ளாரே |
|
|
|
திகைத்தெண் ணீரிற் கடலொலி ஓசை |
|
|
|
மிகைக்கொள அங்கி மிகாமைவைத் தானே |
|
|
|
|
|
|
|
.366.. |
|
|
|
பண்பழி செய்வழி பாடுசென் றப்புறங் |
|
|
|
கண்பழி யாத கமலத் திருக்கின்ற |
|
|
|
நண்பழி யாளனை நாடிச்சென் றச்சிரம் |
|
|
|
விண்பழி யாத விருத்திகொண் டானே. |
|
|
|
------------ |
|
|
|
|
|
6.. சக்கரப்பேறு |
|
|
|
.367.. |
|
|
|
மால்போ தகனென்னும் வண்மைக்கிங் காங்காரங் |
|
|
|
கால்போதகங் கையினோ டந்தரச் சக்கர |
|
|
|
மேல்போக வெள்ளி மலைஅம ராபதி |
|
|
|
பார்ப்போக மேழும் படைத்துடை யானே |
|
|
|
|
|
|
|
.368.. |
|
|
|
சக்கரம் பெற்றுநல் தாமோ தரந்தானும் |
|
|
|
சக்கரந் தன்னைத் .(1).தரிக்கவொண் ணாமையால் |
|
|
|
மிக்கரன் தன்னை விருப்புடன் அர்ச்சிக்கத் |
|
|
|
தக்கநற் சக்தியைத் தாங்கூறு செய்ததே |
|
|
|
.(1). திரிக்கவொண் |
|
|
|
|
|
|
|
.369.. |
|
|
|
கூறது வாகக் குறித்துநற் சக்கரங் |
|
|
|
கூறது செய்து கொடுத்தனன் மாலுக்குக் |
|
|
|
கூறது செய்து கொடுத்தனன் சத்திக்குக் |
|
|
|
கூறது செய்து .(1).தரித்தனன் கோலமே |
|
|
|
.(1). கொடுத்தனன் |
|
|
|
|
|
|
|
.370.. |
|
|
|
தக்கன்றன் வேள்வி தகர்த்தநல் வீரர்பால் |
|
|
|
தக்கன்றன் வேள்வியில் தாமோ தரந்தானுஞ் |
|
|
|
சக்கரந் தன்னைச் சசிமுடி மேல்விட |
|
|
|
அக்கி உமிழ்ந்தது வாயுக் கரத்திலே |
|
|
|
-------------- |
|
|
|
|
|
7.. எலும்பும் கபாலமும் |
|
|
|
.371.. |
|
|
|
எலும்புங் கபாலமும் ஏந்தி எழுந்த |
|
|
|
வலம்பன் மணிமுடி வானவ ராதி |
|
|
|
எலும்புங் கபாலமும் ஏந்தில நாகில் |
|
|
|
எலும்புங் கபாலமும் இற்றுமண் ணாமே |
|
|
|
---------- |
|
|
|
|
|
.8.. அடிமுடி தேடல் |
|
|
|
.372.. |
|
|
|
பிரமனும் மாலும் பிரானேநான் என்னப் |
|
|
|
பிரமன்மால் தங்கள்தம் பேதைமை யாலே |
|
|
|
பரமன் அனலாய்ப் பரந்துமுன் நிற்க |
|
|
|
அரனடி தேடி அரற்றுகின் றாரே. |
|
|
|
|
|
|
|
.373.. |
|
|
|
ஆமே ழுலகுற நின்றேம் அண்ணலுந் |
|
|
|
தாமே ழுலகில் தழற்பிழம் பாய்நிற்கும் |
|
|
|
வானே ழுலகுறும் மாமணி கண்டனை |
|
|
|
.(1).நானே அறிந்தேன் அவனாண்மை யாலே |
|
|
|
.(1). நானே அறிந்தேனென் ஆண்மையி னாலே |
|
|
|
|
|
|
|
.374.. |
|
|
|
ஊனாய் உயிராய் உணர்வங்கி யாய்முன்னஞ் |
|
|
|
சேணாய்வா னோரங்கித் திருவுரு வாய் அண்டத் |
|
|
|
தாணுவும் ஞாயிறுந் தண்மதி யுங்கடந் |
|
|
|
தாண்முழு தண்டமு மாகிநின் றானே |
|
|
|
|
|
|
|
.375.. |
|
|
|
நின்றான் நிலமுழு தண்டத்துள் நீளியன் |
|
|
|
அன்றே யவன்வடி வஞ்சின ராய்ந்தது |
|
|
|
சென்றார் இருவர் திருமுடி மேற்செல |
|
|
|
நன்றாங் கழலடி நாடவொண் ணாதே. |
|
|
|
|
|
|
|
.376.. |
|
|
|
சேவடி ஏத்துஞ் செறிவுடை வானவர் |
|
|
|
மூவடி தாவென் றானும் முனிவரும் |
|
|
|
பாவடி யாலே பதஞ்செய் பிரமனுந் |
|
|
|
தாவடி யிட்டுத் தலைப்பெய்து மாறே |
|
|
|
|
|
|
|
.377.. |
|
|
|
தானக் கமலத் திருந்த சதுமுகன் |
|
|
|
தானக் கருங்.(1).கடல் வாழித் தலைவனும் |
|
|
|
ஊனத்தின் உள்ளே உயிர்போல் உணர்கின்ற |
|
|
|
தானப் பெரும்பொருள் தன்மைய தாமே |
|
|
|
.(1).கடலூழித் |
|
|
|
|
|
|
|
.378.. |
|
|
|
ஆலிங் கனஞ்செய் தெழுந்த பரஞ்சுடர் |
|
|
|
மேலிங்ஙன் வைத்ததோர் மெய்ந்நெறி முங்கண் |
|
|
|
டாலிங் கனஞ்செய் துலகம் வலம்வருங் |
|
|
|
கோலிங் கமைஞ்சருள் கூடலு மாமே |
|
|
|
|
|
|
|
.379.. |
|
|
|
வாள்கொடுத் தானை வழிபட்ட தேவர்கள் |
|
|
|
ஆள்கொடுத் தெம்போல் அரனை அறிகிலர் |
|
|
|
ஆள்கொடுத் தின்பங் கொடுத்துக் கோளாகத் |
|
|
|
தாள்கொடுத் தானடி சாரகி லாரே |
|
|
|
|
|
|
|
.380.. |
|
|
|
ஊழி வலஞ்செய்தங் கோரும் ஒருவற்கு |
|
|
|
வாழி சதுமுகன் வந்து வெளிப்படும் |
|
|
|
வீழித் தலைநீர் விதித்தது தாவென |
|
|
|
ஊழிக் கதிரோன் ஒளியைவென் றானே |
|
|
|
------------- |
|
|
|
|
|
9.. .(1).படைத்தல் |
|
|
|
.(1). சிருஷ்டி. (1). சர்வ சிருஷ்டி |
|
|
|
|
|
|
|
.381.. |
|
|
|
ஆதியோ டந்தம் இலாத .(1).பராபரம் |
|
|
|
போதம தாகப் புணரும் பராபரை |
|
|
|
சோதி யதனிற் பரந்தோன்றத் தோன்றுமாந் |
|
|
|
தீதில் பரையதன் பால்திகழ் நாதமே |
|
|
|
.(1). பராபரன் |
|
|
|
|
|
|
|
.382.. |
|
|
|
நாதத்தில் விந்துவும் நாதவிந் துக்களில் |
|
|
|
தீதற் றகம்வந்த சிவன்சத்தி என்னவே |
|
|
|
பேதித்து ஞானங் கிரியை பிறத்தலால் |
|
|
|
வாதித்த விச்சையில் வந்தெழும் விந்துவே |
|
|
|
|
|
|
|
.383.. |
|
|
|
இல்லது சத்தி இடந்தனில் உண்டாகிக் |
|
|
|
கல்லொளி போலக் கலந்துள் ளிருந்திடும் |
|
|
|
வல்லது ஆக வழிசெய்த அப்பொருள் |
|
|
|
சொல்லது சொல்லிடில் தூராதி தூரமே |
|
|
|
|
|
|
|
.384.. |
|
|
|
தூரத்திற் சோதி தொடர்ந்தொரு சத்தியாய் |
|
|
|
ஆர்வத்து நாதம் அணைந்தொரு விந்துவாய்ப் |
|
|
|
பாரச் சதாசிவம் பார்முதல் ஐந்துக்கும் |
|
|
|
சார்வத்து சத்திஓர் சாத்துமா னாமே |
|
|
|
|
|
|
|
.385.. |
|
|
|
மானின்கண் வானாகி வாயு வளர்ந்திடும் |
|
|
|
கானின்கண் நீருங் கலந்து கடினமாய்த் |
|
|
|
தேனின்கண் ஐந்துஞ் செறிந்தைந்து பூதமாய்ப் |
|
|
|
பூவின்கண் நின்று பொருந்தும் புவனமே |
|
|
|
|
|
|
|
.386.. |
|
|
|
புவனம் படைப்பான் ஒருவன் ஒருத்தி |
|
|
|
புவனம் படைப்பார்க்குப் புத்திரர் ஐவர் |
|
|
|
புவனம் படைப்பானும் பூமிசை யானாய் |
|
|
|
புவனம் படைப்பானப் புண்ணியன் தானே |
|
|
|
|
|
|
|
.387.. |
|
|
|
புண்ணியன் நந்தி பொருந்தி உலகெங்கும் |
|
|
|
தண்ணிய மானை வளர்த்திடுஞ் சத்தியுஞ் |
|
|
|
கண்ணியல் பாகக் கலவி முழுதுமாய் |
|
|
|
மண்ணியல் பாக மலர்ந்தெழு பூவிலே |
|
|
|
|
|
|
|
.388.. |
|
|
|
நீரகத் தின்பம் பிறக்கும் நெருப்பிடை |
|
|
|
.(1).காயத்திற் சோதி பிறக்கும்அக் காற்றிடை |
|
|
|
ஓர்வுடை நல்லுயிர்ப் பாதம் ஒலிசத்தி |
|
|
|
நீரிடை மண்ணின் நிலைபிறப் பாமே |
|
|
|
.(1). காய்கதிர்ச் |
|
|
|
|
|
|
|
.389.. |
|
|
|
உண்டுல கேழும் உமிழ்ந்தான் உடனாகி |
|
|
|
அண்டத் தமரர் தலைவனும் ஆதியுங் |
|
|
|
கண்டச் சதுர்முகக் காரணன் தன்னொடும் |
|
|
|
பண்டிவ் வுலகம் படைக்கும் பொருளே |
|
|
|
|
|
|
|
.390.. |
|
|
|
ஓங்கு பெருங்கடல் உள்ளுறு வானொடும் |
|
|
|
பாங்கார் கயிலைப் பராபரன் தானும் |
|
|
|
வீங்குங் கமல மலர்மிசை மேலயன் |
|
|
|
ஆங்குயிர் வைக்கும் அதுவுணர்ந் தானே |
|
|
|
|
|
|
|
.391.. |
|
|
|
காரணன் அன்பிற் கலந்தெங்கும் நின்றவன் |
|
|
|
நாரணன் நின்ற நடுவுட லாய்நிற்கும் |
|
|
|
பாரணன் அன்பிற் பதஞ்செய்யும் நான்முகன் |
|
|
|
ஆரண மாஉல காயமர்ந் தானே |
|
|
|
|
|
|
|
.392.. |
|
|
|
பயன்எளி தாம்பரு மாமணி செய்ய |
|
|
|
நயன்எளி தாகிய நம்பன்ஒன் றுண்டு |
|
|
|
அயஓளி யாயிருந் தங்கே படைக்கும் |
|
|
|
பயனெளி தாம்வய ணந்தெளிந் தேனே |
|
|
|
|
|
|
|
.393.. |
|
|
|
போக்கும் வரவும் புனிதன் அருள்புரிந் |
|
|
|
தாக்கமுஞ் சிந்தைய தாகின்ற காலத்து |
|
|
|
மேக்கு மிகநின்ற எட்டுத் திசையொடுந் |
|
|
|
தாக்குங் கலக்குந் தயாபரன் தானே |
|
|
|
|
|
|
|
.394.. |
|
|
|
நின்றுயி ராக்கு நிமலன்என் னாருயிர் |
|
|
|
ஒன்றுயி ராக்கும் அளவை உடலுற |
|
|
|
முன்துய ராக்கும் உடற்குந் துணையதா |
|
|
|
நன்றுயிர்ப் பானே நடுவுநின் றானே |
|
|
|
|
|
|
|
.395.. |
|
|
|
ஆகின்ற தன்மையில் அக்கணி கொன்றையன் |
|
|
|
வேகின்ற செம்பொனின் மேலணி மேனியன் |
|
|
|
போகின்ற சீவன் புகுந்துட லாய்உளன் |
|
|
|
ஆகின்ற தன்மைசெய் ஆண்டகை யானே |
|
|
|
|
|
|
|
.396.. |
|
|
|
ஒருவன் ஒருத்தி விளையாடல் உற்றார் |
|
|
|
இருவர் விளையாட்டும் எல்லாம் விளைக்கும் |
|
|
|
பருவங்கள் தோறும் பயன்பல வான |
|
|
|
திருவொன்றிற் செய்கை செகமுற்று மாமே |
|
|
|
|
|
|
|
.397.. |
|
|
|
புகுந்தறி வான்புவ னாபதி அண்ணல் |
|
|
|
புகுந்தறி வான்புரி சக்கரத் தண்ணல் |
|
|
|
புகுந்தறி வான்மலர் மேலுறை புத்தேள் |
|
|
|
புகுந்தறி யும்முடிக் காகிநின் றாரே |
|
|
|
|
|
|
|
.398.. |
|
|
|
ஆணவச் சத்தியும் ஆம்அதில் ஐவருங் |
|
|
|
காரிய காரண ஈசர் கடைமுறை |
|
|
|
பேணிய ஐந்தொழி லால்விந்து விற்பிறந்து |
|
|
|
ஆணவம் நீங்கா தவரென லாகுமே |
|
|
|
|
|
|
|
.399.. |
|
|
|
உற்றமுப் பாலொன்று மாயாள் உதயமா |
|
|
|
மற்றைய மூன்று மாயோ தயம்விந்து |
|
|
|
.(1).பெற்றவன் நாதம் பரையிற் பிறத்தலால் |
|
|
|
துற்ற பரசிவன் தொல்விளை யாட்டிதே |
|
|
|
.(1). பெற்றவள் |
|
|
|
|
|
|
|
.400.. |
|
|
|
ஆகாய மாதி சதாசிவ ராதியென் |
|
|
|
போகாத சத்தியுட் போந்துடன் போந்தனர் |
|
|
|
மாகாய ஈசன் அரன்மால் பிரமனாம் |
|
|
|
ஆகாயம் பூமி காண .(1).அளித்தலே |
|
|
|
.(1). அளித்ததே |
|
|
|
|
|
|
|
.401.. |
|
|
|
அளியார் முக்கோணம் வயிந்தவந் தன்னில் |
|
|
|
அளியார் திரிபுரை யாமவள் தானே |
|
|
|
அளியார் சதாசிவ மாகி அமைவாள் |
|
|
|
அளியார் கருமங்கள் ஐந்துசெய் வாளே |
|
|
|
|
|
|
|
.402.. |
|
|
|
வாரணி கொங்கை மனோன்மணி மங்கலி |
|
|
|
காரணி காரிய மாகக் கலந்தவள் |
|
|
|
வாரணி ஆரணி வானவர் மோகினி |
|
|
|
பூரணி .(1).போதாதி போதமு மாமே |
|
|
|
.(1). பூதாதி |
|
|
|
|
|
|
|
.403.. |
|
|
|
நின்றது தானாய் நிறைந்த மகேசுரன் |
|
|
|
சென்றங் கியங்கும் அரந்திரு மாலவன் |
|
|
|
மன்றது செய்யும் மலர்மிசை மேலயன் |
|
|
|
என்றிவ ராக இசைந்திருந் தானே |
|
|
|
|
|
|
|
.404.. |
|
|
|
ஒருவனு மேஉல கேழும் படைத்தான் |
|
|
|
ஒருவனு மேஉல கேழும் அளித்தான் |
|
|
|
ஒருவனு மேஉல கேழுந் துடைத்தான் |
|
|
|
ஒருவனு .(1).மேஉல கோடுயிர் தானே |
|
|
|
.(1). மேஉடலோடுயிர் |
|
|
|
|
|
|
|
.405.. |
|
|
|
செந்தா மரைவண்ணன் தீவண்ணன் எம் இறை |
|
|
|
மைந்தார் முகில்வண்ணன் மாயஞ்செய் பாசத்தும் |
|
|
|
கொந்தார் குழலியர் கூடிய கூட்டத்தும் |
|
|
|
.(1).அந்தார் பிறவி அறுத்துநின் றானே |
|
|
|
.(1). ஐந்தார் பிறவி அமைத்து நின்றானே |
|
|
|
|
|
|
|
.406.. |
|
|
|
தேடுந் திசைஎட்டுஞ் சீவன் உடல்உயிர் |
|
|
|
கூடும் பிறவிக் குணஞ்செய்த மாநந்தி |
|
|
|
ஊடும் அவர்தம் துள்ளத்துள் ளேநின்று |
|
|
|
நாடும் வழக்கமும் நான்அறிந் தேனே |
|
|
|
|
|
|
|
.407.. |
|
|
|
ஓராய மேஉல கேழும் படைப்பதும் |
|
|
|
ஓராய மேஉல கேழும் அளிப்பதும் |
|
|
|
ஓராய மேஉல கேழுந் துடைப்பதும் |
|
|
|
ஓராய மே.(1).உல கோடுயிர் தானே |
|
|
|
.(1). உடலோடுயிர் தானே |
|
|
|
|
|
|
|
.408.. |
|
|
|
நாதன் ஒருவனும் நல்ல இருவருங் |
|
|
|
கோது குலத்தொடுங் கூட்டிக் குழைத்தனர் |
|
|
|
ஏது பணியென் றிசையும் இருவருக் |
|
|
|
காதி இவனே அருளுகின் றானே |
|
|
|
|
|
|
|
.409.. |
|
|
|
அப்பரி செண்பத்து நான்குநூ றாயிரம் |
|
|
|
மெய்ப்பரி செய்தி விரிந்துயி ராய்நிற்கும் |
|
|
|
பொய்ப்பரி செய்திப் புகலும் மனிதர்கட் |
|
|
|
கிப்பரி சேஇருள் மூடிநின் றானே |
|
|
|
|
|
|
|
.410.. |
|
|
|
ஆதித்தன் சந்திரன் அங்கிஎண் பாலர்கள் |
|
|
|
போதித்த வானொலி பொங்கிய நீர்ப்புவி |
|
|
|
வாதித்த சத்தாதி வாக்கு மனாதிகள் |
|
|
|
ஓதுற்ற மாயையின் விந்துவின் உற்றதே |
|
|
|
--------------- |
|
|
|
|
|
10.. .(1).காத்தல் |
|
|
|
.(1). திதி |
|
|
|
|
|
|
|
.411.. |
|
|
|
புகுந்துநின் றான்வெளி யாய்இரு ளாகிப் |
|
|
|
புகுந்துநின் றான்புகழ் வாய்இகழ் வாகிப் |
|
|
|
புகுந்துநின் றான்உட லாய்உயி ராகிப் |
|
|
|
புகுந்துநின் றான்புந்தி மன்னிநின் றானே |
|
|
|
|
|
|
|
.412.. |
|
|
|
தானே திசையொடு தேவரு மாய்நிற்குந் |
|
|
|
தானே உடலுயிர் தத்துவ மாய்நிற்குந் |
|
|
|
தானே கடல்மலை யாதியு மாய்நிற்குந் |
|
|
|
தானே உலகில் தலைவனு மாமே |
|
|
|
|
|
|
|
.413.. |
|
|
|
உடலாய் உயிராய் உலகம தாகிக் |
|
|
|
கடலாய் கார்முகில் நீர்ப்பொழி வானாய் |
|
|
|
இடையாய் உலப்பிலி எங்குந்தா னாகி |
|
|
|
அடையார் .(1).பெருவழி அண்ணல் நின்றானே |
|
|
|
.(1). பெருவெளி |
|
|
|
|
|
|
|
.414.. |
|
|
|
தேடுந் திசைஎட்டுஞ் சீவன் உடல்உயிர் |
|
|
|
.(1).கூடு மரபிற் குணஞ்செய்த மாநந்தி |
|
|
|
ஊடும் அவர்தம துள்ளத்து ளேநின்று |
|
|
|
நாடும் வழக்கமும் நான்அறிந் தேனே |
|
|
|
.(1). கூடும்பிறவிக் |
|
|
|
|
|
|
|
.415.. |
|
|
|
தானொரு காலந் தனிச்சுட ராய்நிற்குந் |
|
|
|
தானொரு கால்சண்ட மாருத மாய்நிற்குந் |
|
|
|
தானொரு காலந் தண்மழை யாய்நிற்குந் |
|
|
|
தானொரு காலந்தண் மாயனு மாமே |
|
|
|
|
|
|
|
.416.. |
|
|
|
அன்பும் அறிவும் அடக்கமு மாய்நிற்கும் |
|
|
|
இன்பமும் இன்பக் கலவியு மாய்நிற்கும் |
|
|
|
முன்புறு காலமும் ஊழியு மாய்நிற்கும் |
|
|
|
அன்புற ஐந்தில் அமர்ந்துநின் றானே |
|
|
|
|
|
|
|
.417.. |
|
|
|
உற்று வனைவான் அவனே உலகினைப் |
|
|
|
பெற்று வனைவான் அவனே பிறவியைச் |
|
|
|
சுற்றிய சாலுங் குடமுஞ் சிறுதூதை |
|
|
|
மற்றும் அவனே வனையவல் லானே |
|
|
|
|
|
|
|
.418.. |
|
|
|
உள்ளுயிர்ப் பாயுட லாகிநின் றான்நந்தி |
|
|
|
வெள்ளுயி ராகும் வெளியான் நிலங்கொளி |
|
|
|
உள்ளுயிர்க் கும்உணர் வேயுட லுட்பரந் |
|
|
|
தள்ளுயி ராவண்ணந் தாங்கிநின் றானே |
|
|
|
|
|
|
|
.419.. |
|
|
|
தாங்கருந் தன்மையுந் தானவை பல்லுயிர் |
|
|
|
வாங்கிய காலத்து மற்றோர் பிறிதில்லை |
|
|
|
ஓங்கி எழுமைக்கும் யோகாந்த மவ்வழி |
|
|
|
தாங்கிநின் றானும்அத் தாரணி தானே |
|
|
|
|
|
|
|
.420.. |
|
|
|
அணுகினுஞ் சேயவன் அங்கியிற் கூடி |
|
|
|
நணுகினும் ஞானக் கொழுந்தொன்று நல்கும் |
|
|
|
பணுகினும் பார்மிசைப் பல்லுயி ராகித் |
|
|
|
தணிகினும் மண்ணுடல் அண்ணல்செய் வானே |
|
|
|
---------------- |
|
|
|
|
|
11.. .(1).அழித்தல் |
|
|
|
.(1). சங்காரம் |
|
|
|
|
|
|
|
.421.. |
|
|
|
அங்கிசெய் தீசன் அகலிடஞ் சுட்டது |
|
|
|
அங்கிசெய் தீசன் அலைகடற் சுட்டது |
|
|
|
அங்கிசெய் தீசன் அசுரரைச் சுட்டது |
|
|
|
அங்கியவ் வீசற்குக் கைஅம்பு தானே |
|
|
|
|
|
|
|
.422.. |
|
|
|
இலயங்கள் மூன்றினும் ஒன்றுகற் பாந்த |
|
|
|
நிலையன் றழிந்தமை நின்றுணர்ந் தேனால் |
|
|
|
உலைதந்த மெல்லா போலும் உலகம் |
|
|
|
மலைதந்த மானிலந் தான்வெந் ததுவே |
|
|
|
|
|
|
|
.423.. |
|
|
|
பதஞ்செய்யும் பாரும் பனிவரை எட்டும் |
|
|
|
உதஞ்செய்யும் ஏழ்கடல் ஓதம் முதலாங் |
|
|
|
குதஞ்செய்யும் அங்கி கொளுவியா காசம் |
|
|
|
விதஞ்செய்யும் நெஞ்சில் வியப்பில்லை தானே |
|
|
|
|
|
|
|
.424.. |
|
|
|
கொண்டல் வரைநின் றிழிந்த குலக்கொடி |
|
|
|
அண்டத்துள் ஊறி யிருந்தெண் டிசையாதி |
|
|
|
ஒன்றின் பதந்செய்த ஓம்என்ற அப்புறக் |
|
|
|
குண்டத்தின் மேலங்கி கோலிக் கொண்டானே |
|
|
|
|
|
|
|
.425.. |
|
|
|
நித்தசங் காரம் உறக்கத்து நீள்மூடம் |
|
|
|
வைத்தசங் காரமுஞ் சாக்கிரா தீதமாஞ் |
|
|
|
சுத்தசங் காரந் தொழிலற்ற கேவலம் |
|
|
|
உய்த்தசங் காரம் பரன் அருள் உண்மையே |
|
|
|
|
|
|
|
.426.. |
|
|
|
நித்தசங் காரம் இரண்டுடல் நீவுதல் |
|
|
|
வைத்தசங் காரமும் மாயாசங் காரமாஞ் |
|
|
|
சுத்தசங் காரம் மனாதீதந் தோய்வுறல் |
|
|
|
உய்த்தசங் காரஞ் சிவன் அருள் உண்மையே |
|
|
|
|
|
|
|
.427.. |
|
|
|
நித்தசங் காரம் கருவிடர் நீக்கினால் |
|
|
|
ஒத்தசங் காரமும் உடலுயிர் நீவுதல் |
|
|
|
|
|
|
|
சுத்தசங் காரம் அதீதத்துட் டோ ய்வுறல் |
|
|
|
உய்த்தசங் காரம் பரனருள் உண்மையே |
|
|
|
|
|
|
|
(1) வைத்தசங் காரங் கேவலம் ஆன்மாவுக் |
|
|
|
குய்த்தசங் காரம் சிவமாகும் உண்மையே. |
|
|
|
|
|
|
|
.428.. |
|
|
|
நித்தசங் காரமும் நீடிளைப் பாற்றலின் |
|
|
|
வைத்தசங் காரமும் மன்னும் அனாதியிற் |
|
|
|
சுத்தசங் காரமுந் தோயாப் பரன்அருள் |
|
|
|
உய்த்தசங் காரமும் நாலா மதிக்கிலே |
|
|
|
|
|
|
|
.429.. |
|
|
|
பாழே முதலா எழும்பயிர் அப்பயிர் |
|
|
|
பாழாய் அடங்கினும் பண்டைப்பாழ் பாழாகா |
|
|
|
வாழாச்சங் காரத்தின் மாலயன் செய்தியாம் |
|
|
|
பாழாம் பயிராய் அடங்கும்அப் பாழிலே |
|
|
|
|
|
|
|
.430.. |
|
|
|
தீயவைத் தார்மிங்கள் சேரும் வினைதனை |
|
|
|
மாயவைத் தான்வைத்த வன்பதி ஒன்றுண்டு |
|
|
|
காயம்வைத் தாங்கலந் தெங்கும் நினைப்பதோர் |
|
|
|
ஆயம்வைத் தானுணர் வாரவைத் தானே |
|
|
|
-------------- |
|
|
|
|
|
12.. .(1).மறைத்தல் |
|
|
|
.(1). திரோபவம் |
|
|
|
|
|
|
|
.431.. |
|
|
|
உள்ளத் தொருவனை உள்ளுறு சோதியை |
|
|
|
உள்ளம்விட் டோ ரடி .(1).நீங்கா ஒருவனை |
|
|
|
.(2).உள்ளமுந் தானும் உடனே இருக்கினும் |
|
|
|
உள்ளம் அவனை உருவறி யாதே |
|
|
|
.(1).நீங்கா தொருவனை |
|
|
|
.(2).உள்ளமும் அவனும் உறவா யிருந்தும் |
|
|
|
|
|
|
|
.432.. |
|
|
|
இன்பப் பிறவி படைத்த இறைவனுந் |
|
|
|
துன்பஞ்செய் பாசத் துயருள் .(1).அடைத்தனன் |
|
|
|
என்பிற் கொளுவி இசைந்துறு தோற்றசை |
|
|
|
முன்பிற் கொளுவி முடிகுவ தாமே |
|
|
|
.(1).அடைந்தனன் |
|
|
|
|
|
|
|
.433.. |
|
|
|
இறையவன் மாதவன் இன்பம் படைத்த |
|
|
|
மறையவன் மூவரும் வந்துடன் கூடி |
|
|
|
இறையவன் செய்த இரும்பொறி யாக்கை |
|
|
|
மறையவன் வைத்த .(1).பரிசறி யாதே |
|
|
|
.(1).பரிசறி யாரே |
|
|
|
|
|
|
|
.434.. |
|
|
|
காண்கின்ற கண்ணொளி காதல்செய் தீசனை |
|
|
|
ஆண்பெண் அலியுரு வாய்நின்ற ஆதியை |
|
|
|
ஊண்படு நாவுடை நெஞ்சம் உணர்ந்திட்டுச் |
|
|
|
சேண்படு பொய்கைச் செயலணை யாரே |
|
|
|
|
|
|
|
.435.. |
|
|
|
தெருளும் உலகிற்குந் தேவர்க்கும் இன்பம் |
|
|
|
அருளும் வகைசெய்யும் ஆதிப் பிரானுஞ் |
|
|
|
சுருளுஞ் சுடருறு தூவெண் சுடரும் |
|
|
|
இருளும் அறநின் றிருட்டறை யாமே |
|
|
|
|
|
|
|
.436.. |
|
|
|
அரைகின் றருள்தரும் அங்கங்கள் ஓசை |
|
|
|
உரைக்கின்ற ஆசையும் ஒன்றோடொன் றொவ்வாப் |
|
|
|
பரக்கும் உருவமும் பாரகந் தானாய்க் |
|
|
|
கரகின் றவைசெய்த காண்டகை யானே. |
|
|
|
|
|
|
|
.437.. |
|
|
|
ஒளித்துவைத் தேனுள் ளுறவுணர்ந் தீசனை |
|
|
|
வெளிப்பட்டு நின்றருள் செய்திடு மீண்டே |
|
|
|
களிப்பொடுங் காதன்மை என்னும் பெருமை |
|
|
|
வெளிப்பட் டிறைஞ்சினும் வேட்சியு மாமே |
|
|
|
|
|
|
|
.438.. |
|
|
|
நின்றது தானாய் நிறைந்த மகேசுரன் |
|
|
|
சென்றங் .(1).கியங்கும் அரந்திரு மாலவன் |
|
|
|
மன்றது செய்யும் மலர்மிசை மேலயன் |
|
|
|
என்றிவ ராகி இசைந்திருந் தானே |
|
|
|
.(1). கியங்கி யயந்திரு |
|
|
|
|
|
|
|
.439.. |
|
|
|
ஒருங்கிய பாசத்துள் உத்தமச் .(1).சித்தன் |
|
|
|
இருங்கரை மேலிருந் தின்புற நாடி |
|
|
|
வருங்கரை ஓரா வகையினிற் கங்கை |
|
|
|
அருங்கரை பேணில் அழுக்கற லாமே |
|
|
|
.(1). சித்தின் |
|
|
|
|
|
|
|
.440.. |
|
|
|
மண்ணொன்று தான்பல நற்கல மாயிடும் |
|
|
|
உண்ணின்ற யோனிகட் கெல்லாம் ஒருவனே |
|
|
|
கண்ணொன்று தான்பல காணுந் தனைக்காணா |
|
|
|
அண்ணலும் இவ்வண்ண மாகிநின் றானே. |
|
|
|
|
|
|
|
|
|
.13.. .(1).அருளல் |
|
|
|
.(1). அநுக்கிரகம் |
|
|
|
|
|
|
|
.441.. |
|
|
|
எட்டுத் திசையும் எறிகின்ற காற்றொடு |
|
|
|
வட்டத் திரையனல் மாநிலம் ஆகாயம் |
|
|
|
ஒட்டி உயிர்நிலை என்னுமிக் காயப்பை |
|
|
|
கட்டி .(1).அவிழ்ப்பான் கண்ணுதல் காணுமே |
|
|
|
.(1). அவிழ்க்கின்ற |
|
|
|
|
|
|
|
.442.. |
|
|
|
உச்சியில் ஓங்கி ஒளிதிகழ் நாதத்தை |
|
|
|
நச்சியே இன்பங்கொள் வார்க்கு நமன்இல்லை |
|
|
|
விச்சும் விரிசுடர் மூன்றும் உலகுக்குத் |
|
|
|
தச்சு மவனே சமைக்கவல் லானே |
|
|
|
|
|
|
|
.443.. |
|
|
|
.(1).குசவன் திரிகையில் ஏற்றிய மண்ணைக் |
|
|
|
.(1).குசவன் மனத்துற்ற தெல்லாம் வனைவன் |
|
|
|
.(2).குசவனைப் போல்எங்கள் கோன்நந்தி வேண்டில் |
|
|
|
.(3).அசைவில் உலகம் அதுயிது வாமே |
|
|
|
.(1). குயவன் |
|
|
|
.(2). குயவனைப் |
|
|
|
.(3). அயைவில் |
|
|
|
|
|
|
|
.444.. |
|
|
|
விரியுடை யான்விகிர் தன்மிகு பூதப் |
|
|
|
படையுடை யான்பரி சேஉல காக்குங் |
|
|
|
கொடையுடை யாங்குணம் எண்குண மாகுஞ் |
|
|
|
சடையுடை யாஞ்சிந்தை சார்ந்துநின் றானே |
|
|
|
|
|
|
|
.445.. |
|
|
|
உகந்துநின் றேபடைத் தான்உல கேழும் |
|
|
|
உகந்துநின் றேபடைத் தான்பல ஊழி |
|
|
|
உகந்துநின் றேபடைத் தான்ஐந்து பூதம் |
|
|
|
உகந்துநின் றேஉயிர் ஊன்படைத் தானே |
|
|
|
|
|
|
|
.446.. |
|
|
|
படைத்துடை யான்பண் டுலகங்கள் ஏழும் |
|
|
|
படைத்துடை யான்பல தேவரை முன்னே |
|
|
|
படைத்துடை யான்பல சீவரை முன்னே |
|
|
|
படைத்துடை யான்பர மாகிநின் றானே |
|
|
|
|
|
|
|
.447.. |
|
|
|
.(1).ஆதி படைத்தனன் ஐம்பெரும் .(2).பூதம் |
|
|
|
.(1).ஆதி படைத்தனன் .(3).ஆசில்பல் ஊழி |
|
|
|
.(1).ஆதி படைத்தனன் எண்ணிலி தேவரை |
|
|
|
.(1).ஆதி படைத்தவை தாங்கிநின் றானே |
|
|
|
.(1). அனாதி |
|
|
|
.(2). பூதங்கள் |
|
|
|
.(3). ஆயபல் ஊழிகள் |
|
|
|
|
|
|
|
.448.. |
|
|
|
அகன்றான் .(1).அகலிடம் ஏழுமொன் றாகி |
|
|
|
இவன்றா னெனநின் றெளியனும் அல்லன் |
|
|
|
சிவன்றான் பலபல .(2).சீவனும் ஆகி |
|
|
|
நவின்றான் உலகுறு நம்பனு மாமே |
|
|
|
.(1). கடலிடம் |
|
|
|
.(2). சீவரும் |
|
|
|
|
|
|
|
.449.. |
|
|
|
உண்ணின்ற சோதி உறநின்ற ஓருடல் |
|
|
|
விண்ணின் றமரர் விரும்பும் விழுப்பொருள் |
|
|
|
மண்ணின்ற வானோர் புகழ்திரு மேனியன் |
|
|
|
கண்ணின்ற மாமணி .(1).மாபோத மாமே |
|
|
|
.(1). மாபோதகமே |
|
|
|
|
|
|
|
.450.. |
|
|
|
ஆரும் அறியாத அண்டத் திருவுருப் |
|
|
|
பார்முத லாகப் பயிலுங் கடத்திலே |
|
|
|
நீரினிற் பால்போல நிற்கின்ற நேர்மையைச் |
|
|
|
சோராமற் காணுஞ் சுகம்அறிந் தேனே |
|
|
|
|
|
|
|
|
|
14.. .(1). கரு உற்பத்தி |
|
|
|
.(1). கர்ப்பக்கிரியை |
|
|
|
|
|
|
|
.451.. |
|
|
|
ஆக்குகின் றான்முன் பிரிந்த இருபத்தஞ் |
|
|
|
சாக்குகின் றானவ னாதிஎம் ஆருயிர் |
|
|
|
ஆக்குகின் றான்கர்ப்பக் கோளகை யுள்ளிருந் |
|
|
|
தாக்குகின் றான்அவன் ஆவ தறிந்தே |
|
|
|
|
|
|
|
.452.. |
|
|
|
அறிகின்ற மூலத்தின் மேல்அங்கி அப்புச் |
|
|
|
செறிகின்ற ஞானத்துச் செந்தாள் கொளுவிப் |
|
|
|
பொறைநின்ற இன்னுயிர் போந்துற நாடிப் |
|
|
|
பறிகின்ற பத்தெனும் பாரஞ்செய் தானே |
|
|
|
|
|
|
|
.453.. |
|
|
|
இன்புறு காலத் திருவர்முன் பூறிய |
|
|
|
துன்புறு பாசத் துயர்மனை வானுளன் |
|
|
|
பண்புறு காலமும் பார்மிசை வாழ்க்கையும் |
|
|
|
அன்புறு காலத் தமைத்தொழிந் தானே |
|
|
|
|
|
|
|
.454.. |
|
|
|
கருவை ஒழிந்தவர் கண்டநால் மூவேழ் |
|
|
|
புருடன் உடலில் பொருந்துமற் றோரார் |
|
|
|
திருவின் கருக்குழி தேடிப் புகுந்த |
|
|
|
உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே |
|
|
|
|
|
|
|
.455.. |
|
|
|
விழுந்தது லிங்கம் விரிந்தது யோனி |
|
|
|
ஒழிந்த முதல்ஐந்தும் ஈரைந்தொ டேறிப் |
|
|
|
பொழிந்த புனல்பூதம் போற்றுங் கரணம் |
|
|
|
ஒழிந்த நுதல்உச்சி உள்ளே ஒளித்ததே |
|
|
|
|
|
|
|
.456.. |
|
|
|
பூவின் மணத்தைப் பொருந்திய வாயுவுந் |
|
|
|
தாவி உலகில் தரிப்பித்த வாறுபோல் |
|
|
|
மேவிய சீவனில் மெல்லநீள் வாயுவுங் |
|
|
|
கூவி அவிழுங் குறிக்கொண்ட போதே |
|
|
|
|
|
|
|
.457.. |
|
|
|
போகின்ற எட்டும் புகுகின்ற பத்தெட்டும் |
|
|
|
.(1).மூழ்கின்ற முத்தனும் ஒன்பது வாய்தலும் |
|
|
|
நாகமும் எட்டுடன் நாலு புரவியும் |
|
|
|
பாகன் .(2).விடானெனிற் .(3).பன்றியு மாமே |
|
|
|
.(1). ஆகிப்படைத்தன |
|
|
|
.(2). விடாவிடிற் |
|
|
|
.(3). பந்தியு |
|
|
|
|
|
|
|
.458.. |
|
|
|
ஏற எதிர்க்கில் இறையவன் றானாகும் |
|
|
|
மாற எதிர்க்கில் .(1).அரியவன் றானாகும் |
|
|
|
நேரொக்க வைக்கின் நிகர்ப்போதத் தானாகும் |
|
|
|
பேரொத்த மைந்தனும் பேரர சாளுமே |
|
|
|
.(1). அரியயன் |
|
|
|
|
|
|
|
.459.. |
|
|
|
ஏயங் கலந்த இருவர்தஞ் சாயத்துப் |
|
|
|
பாயுங் கருவும் உருவா மெனப்பல |
|
|
|
காயங் கலந்தது காணப் பதிந்தபின் |
|
|
|
மாயங் கலந்த மனோலய மானதே |
|
|
|
|
|
|
|
.460.. |
|
|
|
கர்ப்பத்துக் கேவல மாயாள் .(1).கிளைகூட்ட |
|
|
|
நிற்குந் துரியமும் பேதித்து நினைவெழ |
|
|
|
வற்புறு காமியம் எட்டாதல் மாயேயஞ் |
|
|
|
சொற்புறு தூய்மறை வாக்கினாஞ் சொல்லே |
|
|
|
.(1). கிளைக்கூட்ட |
|
|
|
|
|
|
|
.461.. |
|
|
|
என்பால் மிடைந்து நரம்பு வாக்கட்டிச் |
|
|
|
செம்பால் இறைச்சி திருந்த மனைசெய்து |
|
|
|
இன்பால் உயிர்நிலை செய்த இறையோங்கும் |
|
|
|
.(1).நன்பால் ஒருவனை நாடுகின் றேனே |
|
|
|
.(1). நண்பால் |
|
|
|
|
|
|
|
.462.. |
|
|
|
பதஞ்செய்யும் பால்வண்ணன் மேனிப் பகலோன் |
|
|
|
இதஞ்செய்யு மொத்துடல் எங்கும் புகுந்து |
|
|
|
குதஞ்செய்யும் அங்கியின் கோபந் தணிப்பான் |
|
|
|
விதஞ்செய்யு மாறே விதித்தொழிந் தானே |
|
|
|
|
|
|
|
.463.. |
|
|
|
ஒழிபல செய்யும் வினையுற்ற நாளே |
|
|
|
வழிபல நீராடி வைத்தெழு வாங்கிப் |
|
|
|
பழிபல செய்கின்ற பாசக் கருவைச் |
|
|
|
சுழிபல வாங்கிச் சுடாமல்வைத் தானே |
|
|
|
|
|
|
|
.464.. |
|
|
|
சுக்கில நாடியில் தோன்றிய வெள்ளியும் |
|
|
|
அக்கிர மத்தே தோன்றுமவ் வியோனியும் |
|
|
|
புக்கிடும் எண்விரல் புறப்பட்டு நால்விரல் |
|
|
|
அக்கரம் எட்டும்எண் சாணது வாகுமே |
|
|
|
|
|
|
|
.465.. |
|
|
|
போகத்துள் ஆங்கே புகுந்த புனிதனுங் |
|
|
|
.(1).கோசத்துள் ஆகங்கொணர்ந்த கொடைத்தொழில் |
|
|
|
ஏகத்துள் ஆங்கே இரண்டெட்டு மூன்றைந்து |
|
|
|
மோகத்துள் ஆங்கொரு முட்டைசெய் தானே |
|
|
|
.(1). கோகத்துள் |
|
|
|
|
|
|
|
.466.. |
|
|
|
பிண்டத்தில் உள்ளுறு பேதைப் புலன்ஐந்தும் |
|
|
|
பிண்டத்தி னூடே பிறந்து மாத்தது |
|
|
|
அண்டத்தின் உள்ளுறு சீவனும் அவ்வகை |
|
|
|
அண்டத்து நாதத் தமர்ந்திருந் தானே |
|
|
|
|
|
|
|
.467.. |
|
|
|
இலைபொறி யேற்றி யெனதுடல் ஈசன் |
|
|
|
துலைப்பொறி யிற்கரு ஐந்துட னாட்டி |
|
|
|
நிலைபொறி முப்பது நீர்மை கொளுவி |
|
|
|
உலைப்பொறி ஒன்பதில் ஒன்றுசெய் தானே |
|
|
|
|
|
|
|
.468.. |
|
|
|
இன்புற் றிருவர் இசைவித்து வைத்தமண் |
|
|
|
துன்பக் கலசம் அணைவான் ஒருவனே |
|
|
|
ஒன்பது நீர்ச்சால் கலசம் பதினெட்டு |
|
|
|
வெந்தது சூளை விளைந்தது தானே |
|
|
|
|
|
|
|
.469.. |
|
|
|
அறியீ ருடம்பினி லாகிய வாறும் |
|
|
|
பிறியீ ரதனிற் பெருகுங் குணங்கள் |
|
|
|
செறியீ ரவற்றினுட் சித்திகள் இட்ட |
|
|
|
தறியவீ ரைந்தினு ளானது பிண்டமே |
|
|
|
|
|
|
|
.470.. |
|
|
|
உடல்வைத்த வாறும் உயிர்வைத்த வாறும் |
|
|
|
மடைவைத்த ஒன்பது வாய்தலும் வைத்துத் |
|
|
|
திடம்வைத்த தாமரைச் சென்னியுள் அங்கிக் |
|
|
|
கடைவைத்த ஈசனைக் கைகலந் தேனே |
|
|
|
|
|
|
|
.471.. |
|
|
|
கேட்டுநின் றேன்எங்குங் கேடில் பெருஞ்சுடர் |
|
|
|
மூட்டுகின் றான்முதல் யோனி மயனவன் |
|
|
|
கூட்டுகின் றான்குழம் பின்கரு வையுரு |
|
|
|
நீட்டுநின் றாகத்து நேர்ப்பட்ட வாறே |
|
|
|
|
|
|
|
.472.. |
|
|
|
பூவுடன் மொட்டுப் பொருந்த அலர்ந்தபின் |
|
|
|
காவுடைத் தீபங் கலந்து பிறந்திடும் |
|
|
|
நீரிடை நின்ற குமிழி நிழலதாய்ப் |
|
|
|
பாருடல் எங்கும் பரந்தெட்டும் பற்றுமே |
|
|
|
|
|
|
|
.473.. |
|
|
|
எட்டினுள் ஐந்தாகும் இந்திரி யங்களும் |
|
|
|
கட்டிய மூன்று கரணமு மாய்விடும் |
|
|
|
ஒட்டிய பாச உணர்வென்னுங் காயப்பை |
|
|
|
கட்டி அவிழ்த்திடுங் கண்ணுதல் காணுமே |
|
|
|
|
|
|
|
.474.. |
|
|
|
கண்ணுதல் நாமங் கலந்துடம் பாயிடைப் |
|
|
|
பண்ணுதல் செய்து பசுபாசம் நீங்கிட |
|
|
|
எண்ணிய வேதம் இசைந்த பரப்பினை |
|
|
|
மண்முத லாக வகுத்துவைத் தானே |
|
|
|
|
|
|
|
.475.. |
|
|
|
அருளல்ல தில்லை அரனவன் அன்றி |
|
|
|
அருளில்லை யாதலி னவ்வோர் உயிரைத் |
|
|
|
தருகின்ற போதிரு கைத்தாயர் தம்பால் |
|
|
|
வருகின்ற நண்பு வகுத்திடுந் தானே |
|
|
|
|
|
|
|
.476.. |
|
|
|
வகுத்த பிறவியை மாதுநல் லாளுந் |
|
|
|
தொகுத்திருள் நீக்கிய சோதி யவனும் |
|
|
|
பகுத்துணர் வாக்கிய பல்லுயிர் எல்லாம் |
|
|
|
வகுத்துள்ளும் நின்றதோர் மாண்பது வாமே |
|
|
|
|
|
|
|
.477.. |
|
|
|
மாண்பது வாக வளர்கின்ற .(1).வன்னியுங் |
|
|
|
காண்பது ஆண்பெண் அலியெனுங் கற்பனை |
|
|
|
பூண்பது மாதா பிதாவழி போலவே |
|
|
|
ஆம்பதி செய்தானச் சோதிதன் ஆண்மையே |
|
|
|
.(1). வன்னியைக் |
|
|
|
|
|
|
|
.478.. |
|
|
|
ஆண்மிகில் ஆணாகும் பெண்மிகிற் பெண்ணாகும் |
|
|
|
பூணிரண் டொத்துப் பொருந்தில் அலியாகும் |
|
|
|
தாண்மிகு மாகில் தரணி முழுதாளும் |
|
|
|
பாணவ மிக்கிடில் பாய்ந்ததும் இல்லையே |
|
|
|
|
|
|
|
.479.. |
|
|
|
பாய்ந்தபின் னஞ்சோடில் ஆயுளும் நூறாகும் |
|
|
|
பாய்ந்தபின் நாலோடில் பாரினில் எண்பதாம் |
|
|
|
பாய்ந்திடும் வாயுப் பகுத்தறிந் திவ்வகை |
|
|
|
பாய்ந்திடும் யோகிக்குப் பாய்ச்சலு மாமே |
|
|
|
|
|
|
|
.480.. |
|
|
|
பாய்கின்ற வாயுக் குறையிற் குறளாகும் |
|
|
|
பாய்கின்ற வாயு விளைக்கின் முடமாகும் |
|
|
|
பாய்கின்ற வாயு நடுப்படிற் கூனாகும் |
|
|
|
பாய்கின்ற வாயுமா தர்க்கில்லை பார்க்கிலே |
|
|
|
|
|
|
|
.481.. |
|
|
|
மாதா உதரம் மலமிகில் மந்தனாம் |
|
|
|
மாதா உதரம் சலமிகில் மூங்கையாம் |
|
|
|
மாதா உதரம் இரண்டொக்கில் கண்ணில்லை |
|
|
|
மாதா உதரத்தில் வந்த குழவிக்கே. |
|
|
|
|
|
|
|
.482.. |
|
|
|
குழவியும் ஆணாம் வலத்தது வாகில் |
|
|
|
குழவியும் பெண்ணாம் இடத்தது வாகில் |
|
|
|
குழவியும் இரண்டாம் அபான னெதிர்க்கில் |
|
|
|
குழவி அலியாகுங் கொண்டகால் ஒக்கிலே |
|
|
|
|
|
|
|
.483.. |
|
|
|
கொண்டநல் வாயு இருவர்க்கும் .(1).ஒத்தெழில் |
|
|
|
கொண்ட குழவியுங் கோமள மாயிடுங் |
|
|
|
கொண்டநல் வாயு இருவர்க்குங் குழறிடில் |
|
|
|
கொண்டதும் இல்லையாங் கோள்வளை யாட்கே |
|
|
|
.(1). ஒத்தேறில் |
|
|
|
|
|
|
|
.484.. |
|
|
|
கோள்வளை உந்தியிற் கொண்ட குழவியுந் |
|
|
|
தால்வளை யுள்ளே தயங்கிய சோதியாம் |
|
|
|
பால்வளர்ந் துள்ளே பகலவன் பொன்னுருப் |
|
|
|
போல்வளர்ந் துள்ளே பொருந்துரு வாமே |
|
|
|
|
|
|
|
.485.. |
|
|
|
உருவம் வளர்ந்திடும் ஒண்டிங்கள் பத்திற் |
|
|
|
பருவம தாகவே பாரினில் வந்திடும் |
|
|
|
மருவி வளர்ந்திடு மாயையி னாலே |
|
|
|
அருவம தாவதிங் காரறி வாரே |
|
|
|
|
|
|
|
.486.. |
|
|
|
இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் |
|
|
|
தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்திலன் |
|
|
|
பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன் |
|
|
|
கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே |
|
|
|
|
|
|
|
.487.. |
|
|
|
இன்புற நாடி இருவருஞ் .(1).சந்தித்துத் |
|
|
|
துன்புறு பாசத்தில் தோன்றி வளர்ந்தபின் |
|
|
|
முன்புற நாடி நிலத்தின்முன் தோன்றிய |
|
|
|
தொன்புற நாடிநின் றோதலு மாமே |
|
|
|
.(1). சிந்தித்துத் |
|
|
|
|
|
|
|
.488.. |
|
|
|
குயிற்குஞ்சு முட்டையைக் காக்கைக் கூட்டிட்டால் |
|
|
|
அயிர்ப்பின்றிக் காக்கை வளர்க்கின் றதுபோல் |
|
|
|
இயக்கில்லை போக்கில்லை ஏனென்ப தில்லை |
|
|
|
மயக்கத்தால் காக்கை வளர்க்கின்ற வாறே |
|
|
|
|
|
|
|
.489.. |
|
|
|
முதற்கிழங் காய்முளை யாயம் முளைப்பின் |
|
|
|
அதற்புத லாய்ப்பல மாய்நின் றளிக்கும் |
|
|
|
அதற்கது வாயின்ப மாவதுபோல |
|
|
|
அதற்கது வாய்நிற்கும் ஆதிப் பிரானே |
|
|
|
|
|
|
|
.490.. |
|
|
|
ஏனோர் பெருமைய னாகிலும் எம்மிறை |
|
|
|
ஊனே சிறுமையுள் உட்கலந் தங்குளன் |
|
|
|
வானோர் அறியும் அளவல்லன் மாதேவன் |
|
|
|
தானே அறியுந் தவத்தினி னுள்ளே |
|
|
|
|
|
|
|
.491.. |
|
|
|
பரத்திற் கரைந்து பதிந்தநற் காயம் |
|
|
|
உருத்தரித் திவ்வுடல் ஓங்கிட வேண்டித் |
|
|
|
திரைக்கடல் உப்புத் திரண்டது போலத் |
|
|
|
திரித்துப் பிறக்குந் திருவரு ளாலே |
|
|
|
|
|
|
|
|
|
15.. மூவகைச்சீவ வர்க்கம் |
|
|
|
|
|
|
|
.492.. |
|
|
|
சத்தி சிவன்விளை யாட்டால் உயிராக்கி |
|
|
|
ஒத்த இருமாயா கூட்டத் திடைப்பூட்டிச் |
|
|
|
சுத்தம தாகுந் துரியம் புரிவித்துச் |
|
|
|
சித்தம் புகுந்து சிவமய மாக்குமே |
|
|
|
|
|
|
|
.493.. |
|
|
|
விஞ்ஞானர் நால்வரு மெய்ப்பிரள யாகலத் |
|
|
|
தஞ்ஞானர் மூவருந் தாங்கு சகலத்தின் |
|
|
|
அஞ்ஞானர் மூவரு மாகும் பதின்மராம் |
|
|
|
விஞ்ஞான ராதியர் வேற்றுமை தானே |
|
|
|
|
|
|
|
.494.. |
|
|
|
விஞ்ஞானர் கேவலத் தாரது விட்டவர் |
|
|
|
தஞ்ஞானர் அட்டவித் தேசராஞ் சார்ந்துளோர் |
|
|
|
எஞ்ஞானர் ஏழ்கோடி மந்திர நாயகர் |
|
|
|
மெய்ஞானர் ஆணவம் விட்டுநின் றாரே |
|
|
|
|
|
|
|
.495.. |
|
|
|
இரண்டா வதில்முத்தி எய்துவர் அத்தனை |
|
|
|
இரண்டாவ துள்ளே இருமல பெத்தர் |
|
|
|
இரண்டாகு நூற்றெட்டு ருத்திரர் என்பர் |
|
|
|
முரண்சேர் சகலத்தர் மும்மலத் தாரே |
|
|
|
|
|
|
|
.496.. |
|
|
|
பெத்தெத்த சித்தொடு பேண்முத்தச் சித்தது |
|
|
|
ஒத்திட் டிரண்டிடை யூடுற்றார் சித்துமாய் |
|
|
|
மத்தது மும்மலம் வாட்டுகை மாட்டாதார் |
|
|
|
சத்தத் தமிழ்ந்து சகலத்து ளாரே |
|
|
|
|
|
|
|
.497.. |
|
|
|
சிவமாகி ஐவகைத் திண்மலஞ் செற்றோர் |
|
|
|
அவமாகார் சித்தர்முத் தாந்தத்து வாழ்வார் |
|
|
|
பவமான தீர்வோர் பசுபாசம் அற்றோர் |
|
|
|
நவமான தத்துவம் .(1).நாடிக்கண் டோ ரே |
|
|
|
.(1). நாடிக்கொண் டாரே |
|
|
|
|
|
|
|
.498.. |
|
|
|
விஞ்ஞானர் ஆணவ கேவல மேவுவோர் |
|
|
|
விஞ்ஞானர் மாயையில் தங்கும் இருமலர் |
|
|
|
அஞ்ஞானர் அச்சக லத்தர் சகலராம் |
|
|
|
விஞ்ஞான ராதிகள் ஒன்பான்வே றுயிர்களே |
|
|
|
|
|
|
|
.499.. |
|
|
|
விஞ்ஞான கன்மத்தால் மெய்யகங் கூடிய |
|
|
|
அனையான கன்மத்தி நால்சுவர் யோனிபுக் |
|
|
|
கெஞ்ஞான மெய்தீண்டி யேயிடை யிட்டுப்போய் |
|
|
|
மெய்ஞ்ஞான ராகிச் சிவமேவல் உண்மையே |
|
|
|
|
|
|
|
.500.. |
|
|
|
ஆணவந் துற்ற வவித்தா நனவற்றோர் |
|
|
|
காணிய விந்துவா நாத சகலாதி |
|
|
|
ஆணவ மாதி யடைந்தோ ரவரன்றே |
|
|
|
சேணுயர் சத்தி சிவதத் துவமாமே வரன்றே |
|
|
|
சேணுயர் சத்தி சிவதத் துவமாமே |
|
|
|
|
|
|
|
|
|
16.. பாத்திரம். |
|
|
|
|
|
|
|
501.. |
|
|
|
திலமத் தனைபொன் சிவஞானிக்கு ஈந்தால் |
|
|
|
பலமுத்தி சித்தி பரபோக மும் |
|
|
|
தரும்நிலமத் தனைபொன்னை நின்மூடர்க்கு ஈந்தால் |
|
|
|
பலமும்அற் றெபர போகமும் குன்றுமே. |
|
|
|
|
|
|
|
.502.. |
|
|
|
கண்டிருந் தாருயிர் உண்டிடுங் காலனைக் |
|
|
|
கொண்டிருந் தாருயிர் கொள்ளும் குணத்தனை |
|
|
|
நன்றுணர்ந் தார்க்கருள் செய்திடு நாதனைச் |
|
|
|
சென்றுணர்ந் தார்சிலர் தேவரு மாமே. |
|
|
|
|
|
|
|
503.. |
|
|
|
கைவிட்டி லேன்கரு வாகிய காலத்து |
|
|
|
மெய்விட்டி லேன்விகிர் தன்அடி தேடுவன் |
|
|
|
பொய்விட்டு நானே புரிசடை யானடி |
|
|
|
நெய்விட் டிலாத விடிஞ்சிலு மாமே. |
|
|
|
|
|
|
|
504.. |
|
|
|
ஆவன ஆவ அழிவ அழிவன |
|
|
|
போவன போவ புகுவ புகுவன |
|
|
|
காவலன் பேர்நந்தி காட்டித்துக் கண்டவன் |
|
|
|
ஏவன செய்யும் இளங்கிளை யோனே. |
|
|
|
|
|
|
|
|
|
17.. அபாத்திரம். |
|
|
|
|
|
|
|
505.. |
|
|
|
கோல வறட்டைக் குனிந்து குளகிட்டுப் |
|
|
|
பாலைக் கறந்து பருகுவதே ஒக்கும் |
|
|
|
சீலமும் நோன்பும் இலாதவர்க்கு ஈந்தது |
|
|
|
காலங் கழிந்த பயிரது ஆகுமே. |
|
|
|
|
|
|
|
506. |
|
|
|
ஈவது யோக இயம நியமங்கள் |
|
|
|
சார்வ தறிந்தன்பு தங்கு மவர்க்கன்றி |
|
|
|
ஆவ தறிந்தன்பு தங்கா தவர்க்களுக்கு |
|
|
|
ஈவ பெரும்பிழை என்றுகொள் ளீரே.. |
|
|
|
|
|
|
|
507.. |
|
|
|
ஆமாறு அறியான் அதிபஞ்ச பாதகன் |
|
|
|
தோமாறும் ஈசற்குந் தூய குரவற்கும் |
|
|
|
காமாதி விட்டோ ர்க்குந் தரல்தந்து கற்பிப்போன் |
|
|
|
போமா நரகில் புகான்போதங் கற்கவே. |
|
|
|
|
|
|
|
508.. |
|
|
|
மண்மலை யத்தனை மாதனம் ஈயினும் |
|
|
|
அண்ணல் இவனென்றே அஞ்சலி அத்தனாய் |
|
|
|
எண்ணி இறைஞ்சாதார்ககு ஈந்த இருவரும் |
|
|
|
நண்ணுவர் ஏழா நரகக் குழியிலே. |
|
|
|
|
|
|
|
|
|
18.. தீர்த்தம். |
|
|
|
|
|
|
|
509.. |
|
|
|
உள்ளத்தின் உள்ளே உளபல தீர்த்தங்கள் |
|
|
|
மெள்ளக் குடைந்துநின் றாடார் வினைகெடப் |
|
|
|
பள்ளமும் மேடும் பரந்து திரிவரே |
|
|
|
கள்ள மனமுடைக் கல்வியி லோரே. |
|
|
|
|
|
|
|
510.. |
|
|
|
தளியறி வாளர்க்குத் தண்ணிதாய்த் தோன்றும் |
|
|
|
குளியறி வாளர்க்குக் கூடவும் ஒண்ணான் |
|
|
|
வளியறி வாளர்க்கு வாய்க்கினும் வாய்க்கும் |
|
|
|
தெளியறி வாளர்தம் சிந்தையு ளானே. |
|
|
|
|
|
|
|
511.. |
|
|
|
உள்ளத்தின் உள்ளே உணரும் ஒருவனைக் |
|
|
|
கள்ளத்தி னாரும் கலந்தறி வார்இல்லை |
|
|
|
வெள்ளத்தை நாடி விடும்அவர் தீவினைப் |
|
|
|
பள்ளத்தல் இட்டதோர் பத்துள் ளாமே. |
|
|
|
|
|
|
|
512.. |
|
|
|
அறிவார் அமரர்கள் ஆதிப் பிரானைச் |
|
|
|
செறிவான் உறைபதம் சென்று வலங்கொள் |
|
|
|
மறியார் வளைக்கை வருபுனல் கங்கைப் |
|
|
|
பொறியார் புனல்மூழ்கப் புண்ணிய ராமே. |
|
|
|
|
|
|
|
513.. |
|
|
|
கடலில் கெடுத்துக் குளத்தினில் காண்டல். |
|
|
|
(1).உடலுற்றுத் தேடுவார் தம்மைஒப் பாரிலர் |
|
|
|
திடமுற்ற நந்தி திருவரு ளால்சென்று |
|
|
|
உடலிற் புகுந்தமை ஒன்றறி யாரே. |
|
|
|
(1). உடலுறத். |
|
|
|
|
|
|
|
514.. |
|
|
|
கலந்தது நீரது உடம்பில் கறுக்கும் |
|
|
|
கலந்தது நீரது உடம்பில் சிவக்கும் |
|
|
|
கலந்தது நீரது உடம்பில் வெளுக்கும் |
|
|
|
கலந்தது நீர்அனல் காற்றது வாமே. |
|
|
|
|
|
|
|
|
|
19.. .(1). திருக்கோயில். |
|
|
|
|
|
(1). திருக்கோயிலிழிவு. |
|
|
|
|
|
|
|
515.. |
|
|
|
தாவர லிங்கம் பறித்தொன்றில் தாபித்தால் |
|
|
|
ஆவதன் முன்னே அரசு நிலைகெடும் |
|
|
|
சாவதன் முன்னே பெருநோய் அடுத்திடும் |
|
|
|
காவலன் பேர்நந்தி கட்டுரைத் தானே. |
|
|
|
|
|
|
|
516.. |
|
|
|
கட்டுவித் தார்மதில் கல்லொன்று வாங்கிடில் |
|
|
|
வெட்டுவிக் கும்அபி டேகத்து அரசரை |
|
|
|
முட்டுவிக் கும்முனி வேதிய ராயினும் |
|
|
|
வெட்டுவித் தேவிடும் விண்ணவன் ஆணையே. |
|
|
|
|
|
|
|
517.. |
|
|
|
ஆற்றரு நோய்மிக்கு அவனி மழையின்றிப் |
|
|
|
போற்றரு மன்னரும் போர்வலி குன்றுவர் |
|
|
|
கூற்றுதைத் தான்திருக் கோயில்கள் எல்லாம் |
|
|
|
சாற்றிய பூசைகள் தப்பிடில் தானே. |
|
|
|
|
|
|
|
518.. |
|
|
|
முன்னவ னார்கோயில் பூசைகள் முட்டிடின் |
|
|
|
மன்னர்க்குத் தீங்குள .(1).வாரி வளம்குன்றும் |
|
|
|
கன்னம் களவு மிகுத்திடும் காசினி |
|
|
|
என்னரு நந்தி எடுத்துரைத் தானே. |
|
|
|
(1). மாரி. |
|
|
|
|
|
|
|
519.. |
|
|
|
பேர்கொண்ட பார்ப்பான் பிரான்தன்னை அர்ச்சித்தால் |
|
|
|
போர்கொண்ட வேந்தர்க்குப் பொல்லா வியாதியாம் |
|
|
|
பார்கொண்ட நாட்டுக்குப் பஞ்சமு மாம்என்றே |
|
|
|
சீர்க்கொண்ட நந்தி தொந்துரைத் தானே. |
|
|
|
|
|
|
|
|
|
20.. அதோமுக தெரிசனம் |
|
|
|
|
|
|
|
520.. |
|
|
|
எம்பெரு மான்இறை வாமுறை யோஎன்று |
|
|
|
வம்பவிழ் வானோர் அசுரன் வலிசொல்ல |
|
|
|
அம்பவள மேனி அறுமுகன் போயவர் |
|
|
|
தம்பகை கொல்லென்ற தற்பரன் தானே. |
|
|
|
|
|
|
|
521.. |
|
|
|
அண்டமொடு எண்டிசை தாங்கும் அதோமுகம் |
|
|
|
கண்டங் கறுத்த கருத்தறி வாரில்லை |
|
|
|
உண்டது நஞ்சென்று உரைப்பர் உணர்விலோர் |
|
|
|
வெண்டலை மாலை விரிசடை யோற்கே. |
|
|
|
|
|
|
|
522.. |
|
|
|
செய்தான் அறியுஞ் செழுங்கடல் வட்டத்துப் |
|
|
|
பொய்யே யுரைத்துப் புகழும் மனிதர்கள் |
|
|
|
மெய்யே உரைக்கில் விண்ணோர் தொழச்செய்வன் |
|
|
|
மைதாழ்ந்து இலங்கும் மிடறுடை யோனே. |
|
|
|
|
|
|
|
523.. |
|
|
|
நந்தி எழுந்து நடுவுற ஓங்கிய |
|
|
|
செந்தீக் கலந்துள் சிவனென நிற்கும் |
|
|
|
முந்திக் கலந்தங்கு உலகம் வலம்வரும் |
|
|
|
அந்தி இறைவன் அதோமுகம் ஆமே. |
|
|
|
|
|
|
|
524.. |
|
|
|
அதோமுகம் கீழண்ட மான புராணன் |
|
|
|
அதோமுகம் தன்னொடும் எங்கும் முயலும் |
|
|
|
சதோமுகத் து ஒண்மலர்க் கண்ணிப் பிரானும் |
|
|
|
அதோமுகன் ஊழித் தலைவனு மாமே. |
|
|
|
|
|
|
|
525.. |
|
|
|
அதோமுகம் மாமல ராயது கேளும் |
|
|
|
அதோமுகத் தால் ஒரு நூறாய் விரிந்து |
|
|
|
அதோமுகம் ஆகிய அந்தமில் சத்தி |
|
|
|
அதோமுகம் ஆகி அமர்ந்திருந் தானே. |
|
|
|
|
|
|
|
|
|
21.. சிவ நிந்தை. |
|
|
|
|
|
|
|
526..தெளிவுறு ஞானத்துச் சிந்தையின் உள்ளே |
|
|
|
அளிவுறு வார்அம ராபதி நாடி |
|
|
|
எளியனென்று ஈசனை நீசர் இகழில் |
|
|
|
கிளியொன்று பூஞையால் கீழது வாகுமே. |
|
|
|
|
|
|
|
527.. |
|
|
|
முளிந்தவர் வானவர் தானவர் எல்லாம் |
|
|
|
விளிந்தவர் மெய்ந்நின்ற ஞானம் உணரார் |
|
|
|
அளிந்தமுது ஊறிய ஆதிப் பிரானைத் |
|
|
|
தளிந்தவர்ககு அல்லது தாங்கஒண் ணாதே. |
|
|
|
|
|
|
|
528.. |
|
|
|
அப்பகை யாலே அசுரரும் தேவரும் |
|
|
|
நற்பகை செய்து நடுவே முடிந்தனர் |
|
|
|
எப்பகை யாகிலும் எய்தார் இறைவனைப் |
|
|
|
பொய்ப்பகை செய்யினும் ஒன்றுபத் தாமே. |
|
|
|
|
|
|
|
529.. |
|
|
|
போகமும் மாதர் புலவி அதுநினைந்து |
|
|
|
ஆகமும் உள்கலந்து அங்குஉள ராதலில் |
|
|
|
வேதிய ராயும் விகிர்தன்நாம் என்கின்ற |
|
|
|
நீதியுள் ஈசன் நினைப்பொழி வாரே. |
|
|
|
|
|
|
|
|
|
22.. குரு நிந்தை. |
|
|
|
|
|
|
|
530.. |
|
|
|
பெற்றிருந் தாரையும் பேணார் கயவர்கள் |
|
|
|
உற்றிருந் தாரை உளைவன சொல்லுவர் |
|
|
|
கற்றிருந் தார்வழி உற்றிருந் தாரவர் |
|
|
|
பெற்றிருந் தார்அன்றி யார்பெறும் பேறே. |
|
|
|
|
|
|
|
531.. |
|
|
|
ஓரெழுத்து ஒருபொருள் உணரக் கூறிய |
|
|
|
சீரெழுத் தாளரைச் சிதையச் செப்பினோர் |
|
|
|
ஊரிடைச் சுணங்கனாய்ப் பிறந்தங் கு ஓர்உகம் |
|
|
|
.(1). வாரிடைக் கிருமியாய் .(2).மாய்வர் மண்ணிலே. |
|
|
|
(1). பாரிடைக். |
|
|
|
(2). படிகுவர், பழகுவர். |
|
|
|
|
|
|
|
532.. |
|
|
|
பத்தினி பத்தர்கள் தத்துவ ஞானிகள் |
|
|
|
சித்தங் கலங்கச் சிதைவுகள் செய்தவர் |
|
|
|
அத்தமும் ஆவியும் ஆண்டொன்றில் .(1). மாண்டிடும் |
|
|
|
சத்தியம் .(2).ஈது சதாநந்தி ஆணையே. |
|
|
|
(1). மாய்ந்திடுஞ். |
|
|
|
(2). சொன்னோம். |
|
|
|
|
|
|
|
533.. |
|
|
|
மந்திரம் ஓரெழுத்து உரைத்த மாதவர் |
|
|
|
சிந்தையில் நொந்திடத் தீமைகள் செய்தவர் |
|
|
|
நுந்திய சுணங்கனாய்ப் பிறந்து நூறுரு |
|
|
|
வந்திடும் புலையராய் மாய்வர் மண்ணிலே. |
|
|
|
|
|
|
|
534. |
|
|
|
ஈசன் அடியார் இதயம் கலங்கிடத் |
|
|
|
தேசமும் நாடும் சிறப்பும் அழிந்திடும் |
|
|
|
வாசவன் பீடமும் மாமன்னர் பீடமும் |
|
|
|
நாசமது ஆகுமே நம்நந்தி ஆணையே. |
|
|
|
|
|
|
|
535.. |
|
|
|
சன்மார்க்க சற்குருச் சந்நிதி பொய்வான் |
|
|
|
நன்மார்க்க மும்குன்றி ஞானமும் தங்காது |
|
|
|
தொன்மார்க்க மாய துறையும் மறந்திட்டுப் |
|
|
|
பன்மார்க்க மும்கெட்டுப் பஞ்சமும் ஆமே. |
|
|
|
|
|
|
|
536.. |
|
|
|
கைப்பட்ட மாமணி தானிடை கைவிட்டு |
|
|
|
மெய்ப்பட்ட கல்லைச் சுமப்போன் விதிபோன்றும் |
|
|
|
கைப்பட்ட நெய்பால் தயிர்நிற்கத் தானறக் |
|
|
|
கைப்பிட்டுண் பான்போன்றுங் கன்மிஞானிக் கொப்பே. |
|
|
|
|
|
|
|
|
|
23.. மயேசுர நிந்தை. |
|
|
|
|
|
|
|
537.. |
|
|
|
ஆண்டான் அடியவர் ஆர்க்கும் விரோதிகள் |
|
|
|
ஆண்டான் அடியவர் ஐயமேற் .(1).றுண்பவர் |
|
|
|
ஆண்டான் அடியரை வேண்டாது பேசினோர் |
|
|
|
தாம்தாம் விழுவது தாழ்நர காமே. |
|
|
|
(1). றுண்பார். |
|
|
|
|
|
|
|
538.. |
|
|
|
ஞானியை நிந்திப் பவனும் நலன் என்றே |
|
|
|
ஞானியை வந்திப் பவனுமே நல்வினை |
|
|
|
யான கொடுவினை தீர்வார் அவன்வயம் |
|
|
|
போன பொழுதே புகுஞ்சிவ போகமே. |
|
|
|
|
|
|
|
|
|
24.. பொறையுடைமை. |
|
|
|
|
|
|
|
539.. |
|
|
|
பற்றிநின் றார்நெஞ்சில் பல்லிதான் ஒன்றுண்டு |
|
|
|
முற்றிக் கிடந்தது மூக்கையும் .(1). நாவையும் |
|
|
|
தெற்றிக் கிடந்து சிதைக்கின்ற சிந்தையுள் |
|
|
|
வற்றா தொழிவது மாகமை யாமே. |
|
|
|
(1). நாவியும். |
|
|
|
|
|
|
|
540.. |
|
|
|
ஓலக்கம் சூழ்ந்த உலப்பிலி தேவர்கள் |
|
|
|
பாலொத்த .(1).மேனியன் பாதம் பணிந்துய்ய |
|
|
|
மாலுக்கும் ஆதி பிரமற்கும் .(2).மன்னவன். |
|
|
|
(3).ஞாலத் திவன்மிக நல்லன்என் றாரே |
|
|
|
.(1). மேனி பணிந்தடியேன் தொழ. |
|
|
|
(2). ஒப்புநீ. |
|
|
|
(3). ஞாலத்து நம்மடி நல்கிடென்றாலே. |
|
|
|
|
|
|
|
541.. |
|
|
|
ஞானம் விளைந்தவர் நம்மிடம் மன்னவர் |
|
|
|
சேனை வளைந்து திசைதொரும் கைதொழ |
|
|
|
ஊனை விளைத்திடும் உம்பர்தம் ஆதியை |
|
|
|
ஏனை .(1).விளைந்தருள் எட்டலு மாமே. |
|
|
|
(1). வளைந்தருள். |
|
|
|
|
|
|
|
542.. |
|
|
|
வல்வகை யானும் மனையிலும் மன்றிலும் |
|
|
|
பல்வகை யானும் பயிற்றி பதஞ்செய்யும் |
|
|
|
கொல்லையி னின்று குதிகொள்ளும் கூத்தனுக்கு |
|
|
|
எல்லையி லாத இலயம்உண் டாமே. |
|
|
|
|
|
|
|
25.. பெரியாரைத் துணைகோடல். |
|
|
|
|
|
|
|
543.. |
|
|
|
ஓடவல் லார்தம ரோடு நடாவுவன் |
|
|
|
பாடவல் லாரொளி பார்மிசை வாழ்குவன் |
|
|
|
தேடவல் லார்க்கருள் தேவர் பிரானொடும் |
|
|
|
கூடவல் லாரடி கூடுவன் யானே. |
|
|
|
|
|
|
|
544.. |
|
|
|
தாமிடர்ப் பட்டுத் தளிர்போல் தயங்கினும் |
|
|
|
மாமனதது அங்குஅன்பு வைத்தது இலையாகும் |
|
|
|
நீஇடர்ப் பட்டிருநது என்செய்வாய் நெஞ்சமே |
|
|
|
போமிடத் து என்னொடும் போதுகண் டாயே. |
|
|
|
|
|
|
|
545. |
|
|
|
அறிவார் அமரர் தலைவனை நாடிச் |
|
|
|
செறிவார் பெறுவர் .(1). சிலர்தத் துவத்தை |
|
|
|
நெறிதான் மிகமிக நின்றருள் செய்யும் |
|
|
|
பெரியார் உடன்கூடல் போன்ப மாமே. |
|
|
|
(1). சிவதத்துவத்தை. |
|
|
|
|
|
|
|
546.. |
|
|
|
தார்சடை யான்தன் தமராய் உலகினில் |
|
|
|
போர புகழா எந்தை பொன்னடி சேருவர் |
|
|
|
வாயடை யாவுள்ளம் தேர்வார்ககு அருள்செய்யும் |
|
|
|
கோவந்தடைந் து அந்நெறி கூடலு மாமே. |
|
|
|
|
|
|
|
547.. |
|
|
|
உடையான் அடியார் அடியா ருடன்போய்ப் |
|
|
|
படையார் அழல்மேனிப் பதிசென்று புக்கேன் |
|
|
|
கடையார நின்றவர் கண்டறி விப்ப |
|
|
|
உடையான் வருகென ஓலம் என் றாரே. |
|
|
|
|
|
|
|
548.. |
|
|
|
அருமைவல் லோன்கலை .(1).ஞானத்துள் தோன்றும் |
|
|
|
பெருமைவல் லோன்பிற விச்சுழி நீந்தும் |
|
|
|
உரிமைவல் லோன்உணர்ந்து ஊழி இருக்கும் |
|
|
|
திருமைவல் லாரொடு சேர்ந்தனன் யானே.. |
|
|
|
(1). ஞாலத்துள் |
|
|
|
|
|
|
|
|
|
|
|
இரண்டாம் தந்திரம் முற்றிற்று |
|
|
|
------------------ |
|
|
|
|
|
|
|
|
|
|
|
This webpage was last revised on 31 July 2021. |
|
|
|
Please send your comments and corrections to the webmaster (pmadurai AT gmail.com). |
|
|
|
|
|
|
|
|