|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
tirumantiram of tirumUlar -part IIa (verses 549- 883) (in tamil script, unicode format) |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
tirumantiram of tirumUlar - part II |
|
|
|
(10th tirumuRai in nampi ANTAr nampi anthology) |
|
|
|
(in Tamil Script, unicode/utf-8 format) |
|
|
|
திருமூலர் அருளிய திருமந்திரம் |
|
|
|
பத்தாம் திருமுறை |
|
|
|
மூன்றாம் தந்திரம் (549- 883) |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Acknowledgement : |
|
|
|
Our Sincere thanks go to the following persons for their assistance in the preparation of this work. |
|
|
|
Etext preparation & web version:: K. Kalyanasundaram, Lausanne, Switzerland and |
|
|
|
Proof-reading by Mr. G. Venugopalan, Dubai |
|
|
|
This etext was first put up in Inaimathi, Mylai versions on 1998 and converted to this unicode version on 13 Sept. 2002. |
|
|
|
|
|
|
|
© Project Madurai, 1998-2021. |
|
|
|
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation |
|
|
|
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. |
|
|
|
Details of Project Madurai are available at the website |
|
|
|
https://www.projectmadurai.org/ |
|
|
|
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact. |
|
|
|
Feel free to send the corrections by email to the webmaster "[email protected]". |
|
|
|
|
|
|
|
|
|
திருமூலர் அருளிய திருமந்திரம் |
|
|
|
மூன்றாம் தந்திரம் (செய்யுட்கள் 549- 883) |
|
|
|
|
|
1.. அட்டாங்க யோகம் |
|
|
|
|
|
|
|
.549.. |
|
|
|
.(1). உரைத்தன வற்கரி ஒன்று மூடிய |
|
|
|
நிரைத்த இராசி நிரைமுறை எண்ணிப் |
|
|
|
.(2). பிரச்சதம் எட்டும் பேசியே நந்தி |
|
|
|
நிரைத்த இயமம் நியமஞ்செய் தானே |
|
|
|
.(1). உரைத்த நவாக்கிரி |
|
|
|
.(2). பிரைச்சதம் |
|
|
|
|
|
|
|
.550.. |
|
|
|
செய்த இயம நியமஞ் சமாதிசென் |
|
|
|
றுய்யப் பராசக்தி உத்தர பூருவ |
|
|
|
மெய்த கவச நியாசங்கள் முத்திரை |
|
|
|
எய்த வுரைசெய்வன் இந்நிலை தானே |
|
|
|
|
|
|
|
.551.. |
|
|
|
அந்நெறி இந்நெறி என்னாதட் டாங்கத் |
|
|
|
தன்னெறி சென்று சமாதியி லேநின்மின் |
|
|
|
நன்னெறி செல்வார்க்கு ஞானத்தி லேகலாம் |
|
|
|
புன்னெறி .(1). யாகத்திற் போக்கில்லை யாகுமே |
|
|
|
.(1). யாக்கத்திற் |
|
|
|
|
|
|
|
.552.. |
|
|
|
இயம நியமமே எண்ணிலா ஆதனம் |
|
|
|
நயமுறு பிராணாயா மம்.(1).பிரத்தி யாகாரஞ் |
|
|
|
சயமிகு தாரணை தியானஞ் சமாதி |
|
|
|
அயமுறும் அட்டாங்க மாவது மாமே |
|
|
|
.(1). நண்பிரத்தி |
|
|
|
|
|
|
|
|
|
2.. இயமம் |
|
|
|
|
|
|
|
.553.. |
|
|
|
எழுந்துநீர் பெய்யினும் எட்டுத் திசையுஞ் |
|
|
|
செழுந்த ணியமங்கள் செய்மினென் றண்ணல் |
|
|
|
கொழுந்தண் பவளக் குளிர்சடை யோடே |
|
|
|
அழுந்திய நால்வர்க் கருள்புரிந் தானே |
|
|
|
|
|
|
|
.554.. |
|
|
|
கொல்லான்பொய் கூறான் களவிலான் எண்குணன் |
|
|
|
நல்லான் அடக்க முடையான் நடுச்செய்ய |
|
|
|
வல்லான் பகுந்துண்பான் மாசிலான் கட்காமம் |
|
|
|
இல்லான் இயமத் திடையில்நின் றானே |
|
|
|
|
|
|
|
|
|
3.. நியமம் |
|
|
|
|
|
|
|
.555.. |
|
|
|
ஆதியை வேதத்தின் அப்பொரு ளானைச் |
|
|
|
சோதியை ஆங்கே சுடுகின்ற அங்கியைப் |
|
|
|
பாதியுள் மன்னும் பரசக்தி யோடுடன் |
|
|
|
நீதி .(1). யுணர்ந்து நியமத்த னாமே |
|
|
|
.(1). யுணர்ந்த |
|
|
|
|
|
|
|
.556.. |
|
|
|
தூய்மை .(1). அருளூண் சுருக்கம் பொறைசெவ்வை |
|
|
|
வாய்மை நிலைமை வளர்த்தலே மற்றிவை |
|
|
|
காமங் களவு கொலையெனக் காண்பவை |
|
|
|
நேமியீ ரைந்து நியமத்த னாமே |
|
|
|
.(1). அருளுண் |
|
|
|
|
|
|
|
.557.. |
|
|
|
தவஞ்செபஞ் சந்தோடம் ஆத்திகந் தானஞ் |
|
|
|
சிவன்றன் விரதமே சித்தாந்தக் கேள்வி |
|
|
|
மகஞ்சிவ பூசையொண் மதிசொல்லீர் ஐந்து |
|
|
|
நிவம்பல செய்யின் நியமத்த னாமே |
|
|
|
|
|
|
|
|
|
4.. ஆதனம் |
|
|
|
|
|
|
|
.558.. |
|
|
|
பங்கய மாதி பரந்தபல் ஆதனம் |
|
|
|
அங்குள வாம்இரு நாலும் அவற்றினுள் |
|
|
|
சொங்கில்லை யாகச் சுவத்திக மெனமிகத் |
|
|
|
தங்க இருப்பத் தலைவனு மாமே |
|
|
|
|
|
|
|
.559.. |
|
|
|
ஓரணை யப்பத மூருவின் மேலேறிட் |
|
|
|
டார வலித்ததன் மேல்வைத் தழகுறச் |
|
|
|
சீர்திகழ் கைகள் அதனைத்தன் மேல்வைக்கப் |
|
|
|
பார்திகழ் பத்மா சனமென லாகுமே |
|
|
|
|
|
|
|
.560.. |
|
|
|
துரிசில் வலக்காலைத் தோன்றவே மேல்வைத்து |
|
|
|
அரிய முழந்தாளி லங்கையை நீட்டி |
|
|
|
உருசி யொடுமுடல் செவ்வே யிருத்திப் |
|
|
|
பரிசு பெறுமது பத்திரா சனமே |
|
|
|
|
|
|
|
.561.. |
|
|
|
ஒக்க அடியிணை யூருவில் ஏறிட்டு |
|
|
|
முக்கி யுடலை முழங்கை தனில்ஏற்றித் |
|
|
|
தொக்க அறிந்து துளங்கா திருந்திடிற் |
|
|
|
குக்குட ஆசனங் கொள்ளலு மாமே |
|
|
|
|
|
|
|
.562.. |
|
|
|
பாத முழந்தாளிற் பாணி களைநீட்டி |
|
|
|
ஆதர வோடும்வாய் அங்காந் தழகுறக் |
|
|
|
கோதில் நயனங் கொடிமூக்கி லேயுறச் |
|
|
|
சீர்திகழ் சிங்கா தனமெனச் செப்புமே |
|
|
|
|
|
|
|
.563.. |
|
|
|
பத்திரங் கோமுகம் பங்கயங் கேசரி |
|
|
|
சொத்திரம் வீரஞ் சுகாதனம் ஓரேழு |
|
|
|
.(1). முத்தம மாமுது ஆசனம் எட்டெட்டுப் |
|
|
|
பத்தொடு நூறு பலஆ சனமே |
|
|
|
.(1). முத்த மயூரமுது |
|
|
|
|
|
|
|
|
|
5.. பிராணாயாமம் |
|
|
|
|
|
|
|
.564.. |
|
|
|
ஐவர்க்கு நாயகன் அவ்வூர்த் தலைமகன் |
|
|
|
உய்யக்கொண்டேறுங் குதிரைமற் றொன்றுண்டு |
|
|
|
மெய்யர்க்குப்பற்றுக்கொடுக்குங் கொடாதுபோய்ப் |
|
|
|
பொய்யரைத் துள்ளி விழுத்திடுந் தானே |
|
|
|
|
|
|
|
.565.. |
|
|
|
ஆரிய னல்லன் குதிரை இரண்டுள |
|
|
|
வீசிப் பிடிக்கும் விரகறி வாரில்லை |
|
|
|
கூரிய நாதன் குருவின் அருள்பெற்றால் |
|
|
|
வாரிப் பிடிக்க வசப்படுந் தானே |
|
|
|
|
|
|
|
.566.. |
|
|
|
புள்ளினும் மிக்க புரவியை மேற்கொண்டாற் |
|
|
|
கள்ளுண்ண வேண்டாந் தானே களிதருந் |
|
|
|
துள்ளி நடப்பிக்குஞ் சோம்பு தவிர்ப்பிக்கும் |
|
|
|
உள்ளது சொன்னோம் உணர்வுடை யோருக்கே |
|
|
|
|
|
|
|
.567.. |
|
|
|
பிராணன் மனத்தொடும் பேரா .(1).தடங்கிப் |
|
|
|
பிராண னிருக்கிற் பிறப்பிறப் பில்லை |
|
|
|
பிராணன் மடைமாறிப் பேச்சறி வித்துப் |
|
|
|
பிராண னடைபேறு பெற்றுண்டீர் நீரே |
|
|
|
.(1). தடக்கிப் |
|
|
|
|
|
|
|
.568.. |
|
|
|
ஏறுதல் பூரகம் ஈரெட்டு வாமத்தால் |
|
|
|
ஆறுதல் .(1). கும்பம் அறுபத்து நாலதில் |
|
|
|
ஊறுதல் முப்பத் திரண்டதி ரேசகம் |
|
|
|
மாறுதல் ஒன்றின்கண் வஞ்சக மாமே |
|
|
|
.(1). கும்பகம் |
|
|
|
|
|
|
|
.569.. |
|
|
|
வளியினை வாங்கி .(1). வயத்தில் அடக்கில் |
|
|
|
பளிங்கொத்துக் காயம் பழுக்கினும் பிஞ்சாந் |
|
|
|
தௌiயக் குருவின் திருவருள் பெற்றால் |
|
|
|
வளியினும் வேட்டு வளியனு மாமே |
|
|
|
.(1). வயிற்றில் |
|
|
|
|
|
|
|
.570.. |
|
|
|
எங்கே இருக்கினும் பூரி இடத்திலே |
|
|
|
அங்கே யதுசெய்ய ஆக்கைக் கழிவில்லை |
|
|
|
அங்கே பிடித்தது விட்டள வுஞ்செல்லச் |
|
|
|
சங்கே குறிக்கத் தலைவனு மாமே |
|
|
|
|
|
|
|
.571.. |
|
|
|
ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்குங் |
|
|
|
காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாரில்லை |
|
|
|
காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாளர்க்குக் |
|
|
|
கூற்றை யுதைக்குங் குறியது வாமே |
|
|
|
|
|
|
|
.572.. |
|
|
|
மேல்கீழ் நடுப்பக்க மிக்குறப் பூரித்துப் |
|
|
|
பாலாம் இரேசகத் தாலுட் பதிவித்து |
|
|
|
மாலாகி யுந்தியுட் கும்பித்து வாங்கவே |
|
|
|
ஆலாலம் உண்டான் அருள்பெற லாமே |
|
|
|
|
|
|
|
.573.. |
|
|
|
வாமத்தில் ஈரெட்டு மாத்திரை பூரித்தே |
|
|
|
ஏமுற்ற முப்பத் திரண்டும் இரேசித்துக் |
|
|
|
காமுற்ற பிங்கலைக் கண்ணாக இவ்விரண் |
|
|
|
டோ மத்தால் எட்டெட்டுக் கும்பிக்க உண்மையே |
|
|
|
|
|
|
|
.574.. |
|
|
|
இட்ட தவ்வீ டிளகா திரேசித்துப் |
|
|
|
புட்டிப் படத்தச நாடியும் பூரித்துக் |
|
|
|
கொட்டிப் பிராணன் அபானனுங் கும்பித்து |
|
|
|
நட்டம் இருக்க நமனில்லை நமக்கே |
|
|
|
|
|
|
|
.575.. |
|
|
|
புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை |
|
|
|
நெறிப்பட வுள்ளே நின்மல மாக்கில் |
|
|
|
உறுப்புச் சிவக்கும் உரோமங் கறுக்கும் |
|
|
|
புறப்பட்டுப் போகான் புரிசடை யோனே |
|
|
|
|
|
|
|
.576.. |
|
|
|
கூடம் எடுத்துக் குடிபுக்க மங்கையர் |
|
|
|
ஓடுவர் மீளுவர் பன்னிரண் டங்குலம் |
|
|
|
நீடுவர் எண்விரல் கண்டிப்பர் நால்விரல் |
|
|
|
கூடிக் கொளிற்கோல அஞ்செழுத் தாமே |
|
|
|
|
|
|
|
.577.. |
|
|
|
பன்னிரண் .(1). டானை பகலஇர வுள்ளது |
|
|
|
பன்னிரண் டானையைப் பாகன் அறிகிலன் |
|
|
|
பன்னிரண் டானையைப் பாகன் அறிந்தபின் |
|
|
|
பன்னிரண் டானைக்குப் பகல்இர வில்லையே |
|
|
|
.(1). டானைக்குப் |
|
|
|
|
|
|
|
|
|
6.. பிரத்தியாகாரம் |
|
|
|
|
|
|
|
|
|
.578.. |
|
|
|
கண்டுகண் டுள்ளே கருத்துற வாங்கிடிற் |
|
|
|
கொண்டுகொண் டுள்ளே குணம்பல காணலாம் |
|
|
|
பண்டுகந் தெங்கும் பழமறை தேடியை |
|
|
|
இன்றுகண் டிங்கே இருக்கலு மாமே |
|
|
|
|
|
|
|
.579.. |
|
|
|
நாபிக்குக் கீழே .(1). பன்னிரெண் டங்குலந் |
|
|
|
தாபிக்கு மந்திரந் தன்னை அறிகிலர் |
|
|
|
தாபிக்கு மந்திரந் தன்னை அறிந்தபின் |
|
|
|
கூவிக்கொண் டீசன் .(2). குடியிருந் தானே |
|
|
|
.(1). நாலிரண்டண்-குலம் |
|
|
|
.(2). குடிபுகுந்தானே |
|
|
|
|
|
|
|
.580.. |
|
|
|
மூலத் திருவிரல் மேலுக்கு முன்நின்ற |
|
|
|
பாலித்த யோனிக் கிருவிரற் கீழ்நின்ற |
|
|
|
கோலித்த குண்டலி யுள்ளேழுஞ் செஞ்சுடர் |
|
|
|
ஞாலத்து நாபிக்கு நால்விரற் கீழதே |
|
|
|
|
|
|
|
.581.. |
|
|
|
நாசிக் கதோமுகம் பன்னிரண் டங்குலம் |
|
|
|
நீசித்தம் வைத்து நினையவும் வல்லையேல் |
|
|
|
மாசித்த மாயோகம் வந்து தலைப்பெய்துந் |
|
|
|
தேகத்துக் கென்றுஞ் சிதைவில்லை .(1). யாமே |
|
|
|
.(1). யாகுமே |
|
|
|
.(1). தானே |
|
|
|
|
|
|
|
.582.. |
|
|
|
சோதி இரேகைச் சுடரொளி தோன்றிடிற் |
|
|
|
கோதில் பரானந்தம் என்றே குறிக்கொண்மின் |
|
|
|
நேர்திகழ் கண்டத்தே நிலவொளி எய்தினால் |
|
|
|
ஓதுவ துன்னுடல் உன்மத்த மாமே |
|
|
|
|
|
|
|
.583.. |
|
|
|
மூலத் துவாரத்தை மொக்கர மிட்டிரு |
|
|
|
மேலைத் துவாரத்தின் மேல்மனம் வைத்திரு |
|
|
|
வேலொத்த கண்ணை வௌiயில் விழித்திரு |
|
|
|
காலத்தை வெல்லுங் கருத்திது தானே |
|
|
|
|
|
|
|
.584.. |
|
|
|
எருவிடும் வாசற் கிருவிரன் மேலே |
|
|
|
கருவிடும் வாசற் கிருவிரற் கீழே |
|
|
|
உருவிடுஞ் சோதியை உள்கவல் லார்க்குக் |
|
|
|
கருவிடுஞ் சோதி கலந்துநின் றானே |
|
|
|
|
|
|
|
.585.. |
|
|
|
ஒருக்கால் உபாதியை ஒண்சோதி தன்னைப் |
|
|
|
பிரித்துணர் வந்த உபாதிப் பிரிவைக் |
|
|
|
கரைத்துணர் வுன்னல் கரைதல்உள் நோக்கல் |
|
|
|
பிரத்தியா காரப் பெருமைய தாமே |
|
|
|
|
|
|
|
.586.. |
|
|
|
புறப்பட்ட வாயுப் புகவிடா வண்ணந் |
|
|
|
திறப்பட்டு நிச்சயஞ் சேர்ந்துடன் நின்றால் |
|
|
|
உறப்பட்டு நின்றது உள்ளமும் அங்கே |
|
|
|
புறப்பட்டுப் போகான் பெருந்தகை யானே |
|
|
|
|
|
|
|
.587.. |
|
|
|
குறிப்பினின் உள்ளே குவலயந் தோன்றும் |
|
|
|
வெறுப்பிருள் நங்கி விகிர்தனை நாடுங் |
|
|
|
சிறப்புறு சிந்தையைச் சிக்கென் றுணரில் |
|
|
|
அறிப்புறு காட்சி அமரரு மாமே |
|
|
|
|
|
|
|
|
|
7.. தாரணை |
|
|
|
|
|
|
|
.588.. |
|
|
|
கோணா மனத்தைக் குறிக்கொண்டு கீழ்க்கட்டி |
|
|
|
வீணாத்தண் டூடே வௌiயுறத் தானோக்கிக் |
|
|
|
காணாக்கண் கேளாச் செவியென் றிருப்பார்க்கு |
|
|
|
வாணாள் அடைக்கும் வழியது வாமே |
|
|
|
|
|
|
|
.589.. |
|
|
|
மலையார் சிரத்திடை வானீர் அருவி |
|
|
|
நிலையாரப் பாயும் நெடுநாடி யூடே |
|
|
|
சிலையார் பொதுவில் திருநட மாடுந் |
|
|
|
தொலையாத ஆனந்தச் சோதிகண் டேனே |
|
|
|
|
|
|
|
.590.. |
|
|
|
மேலை நிலத்தினாள் வேதகப் பெண்பிள்ளை |
|
|
|
மூல நிலத்தில் எழுகின்ற மூர்த்தியை |
|
|
|
ஏல எழுப்பி இவளுடன் சந்திக்கப் |
|
|
|
பாலனும் ஆவான் .(1). பராநந்தி ஆணையே |
|
|
|
.(1). பார்நந்தி |
|
|
|
|
|
|
|
.591.. |
|
|
|
கடைவாச லைக்கட்டிக் காலை எழுப்பி |
|
|
|
இடைவாசல் நோக்கி இனிதுள் இருத்தி |
|
|
|
மடைவாயிற் கொக்குப்போல் வந்தித் திருப்பார்க் |
|
|
|
குடையாமல் ஊழி இருக்கலு மாமே |
|
|
|
|
|
|
|
.592.. |
|
|
|
கலந்த உயிருடன் காலம் அறியில் |
|
|
|
கலந்த உயிரது காலின் நெருக்கங் |
|
|
|
கலந்த உயிரது காலது கட்டிற் |
|
|
|
கலந்த உயிருடல் காலமும் நிற்குமே |
|
|
|
|
|
|
|
.593.. |
|
|
|
வாய்திற வாதார் மனத்திலோர் மாடுண்டு |
|
|
|
வாய்திறப் பாரே வளியிட்டுப் பாய்ச்சுவர் |
|
|
|
வாய்திற வாதார் மதியிட்டு மூட்டுவர் |
|
|
|
கோய்திற வாவிடிற் கோழையுமாமே |
|
|
|
|
|
|
|
.594.. |
|
|
|
வாழலு மாம்பல காலும் மனத்திடைப் |
|
|
|
போழ்கின்ற வாயு புறம்படாப் பாய்ச்சுறில் |
|
|
|
எழுசா லேகம் இரண்டு பெருவாய்தல் |
|
|
|
பாழி பெரியதோர் பள்ளி அறையே |
|
|
|
|
|
|
|
.595.. |
|
|
|
நிரம்பிய ஈரைந்தில் ஐந்திவை போனால் |
|
|
|
இரங்கி விழித்திருந் தென்செய்வை பேதாய் |
|
|
|
வரம்பினைக் கோலி வழிசெய்கு வார்க்குக் |
|
|
|
குரங்கினைக் .(1). கொட்டை பொதியலு மாமே |
|
|
|
.(1). கோட்டைப் |
|
|
|
|
|
|
|
.596.. |
|
|
|
முன்னம் வந்தனர் எல்லாம் முடிந்தனர் |
|
|
|
பின்னை வந்தவர்க் கென்ன பிரமாணம் |
|
|
|
முன்னுறு கோடி உறுகதி பேசிடில் |
|
|
|
என்ன மாயம் இடிகரை நிற்குமே |
|
|
|
|
|
|
|
.597.. |
|
|
|
அரித்த வுடலைஐம் பூதத்தில் வைத்துப் |
|
|
|
பொருத்தஐம் பூதஞ்சத் தாதியிற் போந்து |
|
|
|
தெரித்த மனாதிசத் தாதியிற் செல்லத் |
|
|
|
தரித்தது தாரணை தற்பரத் தோடே |
|
|
|
|
|
|
|
|
|
8.. தியானம் |
|
|
|
|
|
|
|
|
|
.598.. |
|
|
|
வருமாதி யீரெட்டுள் வந்த தியானம் |
|
|
|
பொருவாத புந்தி புலன்போக மேவல் |
|
|
|
உருவாய சத்தி பரத்தியான முன்னுங் |
|
|
|
குருவார் சிவத்தியானம் யோகத்தின் கூறே |
|
|
|
|
|
|
|
.599.. |
|
|
|
கண்ணாக்கு மூக்குச் செவஞானக் கூட்டத்துட் |
|
|
|
பண்ணாக்கி நின்ற பழம்பொருள் ஒன்றுண்(டு) |
|
|
|
அண்ணாக்கின் உள்ளே அகண்ட ஔiகாட்டிப் |
|
|
|
.(1). புண்ணாக்கி நம்மைப் பிழைப்பித்த வாறே |
|
|
|
.(1). பிண்ணாக்கி |
|
|
|
|
|
|
|
.600.. |
|
|
|
ஒண்ணா நயனத்தில் உற்ற ஔiதன்னைக் |
|
|
|
கண்ணாரப் பார்த்துக் கலந்தங் கிருந்திடில் |
|
|
|
விண்ணாறு வந்து வௌiகண் டிடவோடிப் |
|
|
|
பண்ணாமல் நின்றது பார்க்கலு மாமே |
|
|
|
|
|
|
|
.601.. |
|
|
|
ஒருபொழு துன்னார் உடலோ டுயிரை |
|
|
|
ஒருபொழு துன்னார் உயிருட் சிவனை |
|
|
|
ஒருபொழு துன்னார் சிவனுறை சிந்தையை |
|
|
|
ஒருபொழு துன்னார் சந்திரப் .(1). பூவே |
|
|
|
.(1). பூவையே |
|
|
|
|
|
|
|
.602.. |
|
|
|
மனத்து விளக்கினை மாண்பட ஏற்றிச் |
|
|
|
சினத்து விளக்கினைச் செல்ல நெருக்கி |
|
|
|
அனைத்து விளக்குந் திரியொக்கத் தூண்ட |
|
|
|
மனத்து விளக்கது மாயா விளக்கே |
|
|
|
|
|
|
|
.603.. |
|
|
|
எண்ணா யிரத்தாண்டு யோகம் இருக்கினும் |
|
|
|
கண்ணார் அமுதினைக் கண்டறி வாரில்லை |
|
|
|
உண்ணாடிக் குள்ளே ஔiயுற .(1). நோக்கினால் |
|
|
|
கண்ணாடி போலக் .(2). கலந்துநின் றானே |
|
|
|
.(1). நோக்கிற் |
|
|
|
.(1). நோக்கிடிற் |
|
|
|
.(2). கலந்திருந்தானே |
|
|
|
|
|
|
|
.604.. |
|
|
|
நாட்டமும் இரண்டும் நடுமூக்கில் வைத்திடில் |
|
|
|
வாட்டமும் இல்லை மனைக்கும் அழிவில்லை |
|
|
|
ஓட்டமும் இல்லை உணர்வில்லை தானில்லை |
|
|
|
.(1). தேட்டமும் இல்லை சிவனவ நாமே |
|
|
|
.(1). வேட்டமும் |
|
|
|
|
|
|
|
.605.. |
|
|
|
நயனம் இரண்டும் நாசிமேல் வைத்திட் |
|
|
|
டுயர்வெழா வாயுவை உள்ளே அடக்கித் |
|
|
|
துயரற நாடியே தூங்கவல் லார்க்குப் |
|
|
|
பயனிது காயம் பயமில்லை தானே |
|
|
|
|
|
|
|
.606.. |
|
|
|
மணிகடல் யானை .(1). வார்குழல் மேகம் |
|
|
|
அணிவண்டு தும்பி வளைபேரி கையாழ் |
|
|
|
தணிந்தெழு நாதங்கள் தாமிவை பத்தும் |
|
|
|
பணிந்தவர்க் கல்லது பார்க்கஒண் ணாதே |
|
|
|
.(1). வளர்க்குழல் |
|
|
|
|
|
|
|
.607.. |
|
|
|
கடலொடு மேகங் களிறொடும் ஓசை |
|
|
|
அடவெழும் வீணை அண்டரண் டத்துச் |
|
|
|
.(1). சுடர்மன்னு வேணுச் சுரிசங்கின் ஓசை |
|
|
|
திடமறி யோகிக்கல் லாற்றெறி யாதே |
|
|
|
.(1). சுடர்மனு |
|
|
|
.(1). சுடர்மணி |
|
|
|
|
|
|
|
.608.. |
|
|
|
ஈசன் இயல்பும் இமையவர் ஈட்டமும் |
|
|
|
பாசம் இயங்கும் பரிந்துய ராய்நிற்கும் |
|
|
|
ஓசை யதன்மணம் போல விடுவதோர் |
|
|
|
ஓசையாம் ஈசன் உணரவல் லார்க்கே |
|
|
|
|
|
|
|
.609.. |
|
|
|
நாத முடிவிலே நல்லாள் இருப்பது |
|
|
|
நாத முடிவிலே நல்யோகம் இருப்பது |
|
|
|
நாத முடிவிலே நாட்டம் இருப்பது |
|
|
|
நாத முடிவிலே நஞ்சுண்ட கண்டனே |
|
|
|
|
|
|
|
.610.. |
|
|
|
உதிக்கின்ற ஆறினும் உள்ளங்கி ஐந்துந் |
|
|
|
துதிக்கின்ற தேசுடைத் தூங்கிருள் நீங்கி |
|
|
|
அதிக்கின்ற .(1). ஐவருள் நாதம் ஒடுங்கக் |
|
|
|
கதிக்கொன்றை ஈசன் கழல்சேர லாமே |
|
|
|
.(1). ஐவர் அருள்நாதமோடும் |
|
|
|
|
|
|
|
.611.. |
|
|
|
பள்ளி அறையிற் பகலே இருளில்லை |
|
|
|
கொள்ளி அறையிற் கொளுந்தாமற் காக்கலாம் |
|
|
|
ஒள்ளி தறியிலோ ரோசனை நீளிது |
|
|
|
வெள்ளி அறையில் விடிவில்லை தானே |
|
|
|
|
|
|
|
.612.. |
|
|
|
கொண்ட விரதங் குறையாமற் றானொன்றித் |
|
|
|
தண்டுடன் ஓடித் தலைப்பட்ட யோகிக்கு |
|
|
|
மண்டல மூன்றினும் ஒக்க வளர்ந்தபின் |
|
|
|
பிண்டமும் ஊழி பிரியா திருக்குமே |
|
|
|
|
|
|
|
.613.. |
|
|
|
அவ்வவர் மண்டல மாம்பரி சொன்றுண்டு |
|
|
|
அவ்வவர் மண்டலத் தவ்வவர் தேவராம் |
|
|
|
அவ்வவர் மண்டலம் அவ்வவர்க் கேவரில் |
|
|
|
அவ்வவர் மண்டல மாயமற் றோர்க்கே |
|
|
|
|
|
|
|
.614.. |
|
|
|
இளைக்கின்ற நெஞ்சத் திருட்டறை உள்ளே |
|
|
|
முளைக்கின்ற மண்டலம் மூன்றினும் ஒன்றித் |
|
|
|
துளைப்பெரும் பாசந் துருவிடு மாகில் |
|
|
|
இளைப்பின்றி மார்க்கழி ஏற்றம தாமே |
|
|
|
|
|
|
|
.615.. |
|
|
|
முக்குண மூடற வாயுவை மூலத்தே |
|
|
|
சிக்கென மூடித் திரித்துப் பிடித்திட்டுத் |
|
|
|
தக்க வலமிடம் நாழிகை சாதிக்க |
|
|
|
வைக்கும் உயர்நிலை வானவர் கோனே |
|
|
|
|
|
|
|
.616.. |
|
|
|
நடலித்த நாபிக்கு நால்விரன் மேலே |
|
|
|
மடலித்த வாணிக் கிருவிரல் உள்ளே |
|
|
|
கடலித் திருந்து கருதவல் லார்கள் |
|
|
|
சடலத் தலைவனைத் தாமறிந் தாரே |
|
|
|
|
|
|
|
.617.. |
|
|
|
.(1). அறிவாய சத்தென்னு மாறா றகன்று |
|
|
|
செறிவான மாயை சிதைத்தரு ளாலே |
|
|
|
பிறியாத பேரரு ளாயிடும் பெற்றி |
|
|
|
நெறியான அன்பர் நிலையறிந் தாரே |
|
|
|
.(1). அறியா யசந்தென்னு |
|
|
|
|
|
|
|
|
|
9.. சமாதி |
|
|
|
|
|
|
|
.618.. |
|
|
|
சமாதி யமாதியிற் றான்செல்லக் கூடும் |
|
|
|
சமாதி யமாதியிற் றானெட்டுச் சித்தி |
|
|
|
சமாதி யமாதியில் தங்கினோர்க் கன்றே |
|
|
|
சமாதி யமாதி தலைப்படுந் தானே |
|
|
|
|
|
|
|
.619.. |
|
|
|
விந்துவும் நாதமும் மேருவில் ஓங்கிடிற் |
|
|
|
சந்தியி லான சமாதியிற் கூடிடும் |
|
|
|
அந்த மிலாத அறிவின் அரும்பொருள் |
|
|
|
சுந்தரச் சோதியுந் தோன்றிடுந் தானே |
|
|
|
|
|
|
|
.620.. |
|
|
|
மன்மனம் எங்குண்டு வாயுவும் அங்குண்டு |
|
|
|
மன்மனம் எங்கில்லை வாயுவும் அங்கில்லை |
|
|
|
மன்மனத் துள்ளே மகிழ்ந்திருப் பார்க்கு |
|
|
|
மன்மனத் துள்ளே மனோலய மாமே |
|
|
|
|
|
|
|
.621.. |
|
|
|
விண்டலர் கூபமும் விஞ்சத் தடவியுங்- |
|
|
|
கண்டுணர் வாகக் கருதி யிருப்பர்கள் |
|
|
|
செண்டு வௌiயிற் செழுங்கிரி யத்திடை |
|
|
|
கொண்டு குதிரை குசைசெறுத் தாரே |
|
|
|
|
|
|
|
.622.. |
|
|
|
மூல நாடி .(1). முகட்டல குச்சியுள் |
|
|
|
நாலு வாசல் நடுவுள் இருப்பிர்காள் |
|
|
|
மேலை வாசல் வௌiயுறக் கண்டபின் |
|
|
|
காலன் வார்த்தை கனாவிலும் இல்லையே |
|
|
|
.(1). முக்கடல் |
|
|
|
|
|
|
|
.623.. |
|
|
|
மண்டலம் ஐந்து வரைகளும் ஈராறு |
|
|
|
கொண்டிட நிற்குங் குடிகளும் ஆறெண்மர் |
|
|
|
கண்டிட நிற்குங் கருத்து நடுவாக |
|
|
|
உண்டு நிலாவிடும் ஓடும் பதத்தையே |
|
|
|
|
|
|
|
.624.. |
|
|
|
பூட்டொத்து மெய்யிற் பொறிபட்ட வாயுவைத் |
|
|
|
தேட்டற்ற வந்நிலஞ் சேரும் படிவைத்து |
|
|
|
நாட்டத்தை மீட்டு நயனத் திருப்பார்க்குத் |
|
|
|
தோட்டத்து மாம்பழந் தூங்கலு மாமே |
|
|
|
|
|
|
|
.625.. |
|
|
|
உருவறி யும்பரி சொன்றுண்டு வானோர் |
|
|
|
கருவரை பற்றிக் கடைந்தமு துண்டார் |
|
|
|
அருவரை யேறி அமுதுண்ண மாட்டார் |
|
|
|
திருவரை யாமனந் தீர்ந்தற்ற வாறே |
|
|
|
|
|
|
|
.626.. |
|
|
|
நம்பனை யாதியை நான்மறை ஓதியைச் |
|
|
|
செம்பொனின் உள்ளே திகழ்கின்ற சோதியை |
|
|
|
அன்பினை யாக்கி யருத்தி ஒடுக்கிப்போய்க் |
|
|
|
கொம்பேறிக் கும்பிட்டுக் கூட்டமிட் டாரே |
|
|
|
|
|
|
|
.627.. |
|
|
|
மூலத்து மேலது முச்சது ரத்தது |
|
|
|
காலத் திசையிற் கலக்கின்ற சந்தினில் |
|
|
|
மேலைப் பிறையினில் நெற்றிநேர் நின்ற |
|
|
|
கோலத்தின் கோலங்கள் வெவ்வேறு கொண்டதே |
|
|
|
|
|
|
|
.628.. |
|
|
|
கற்பனை யற்றுக் கனல்வழி யேசென்று |
|
|
|
சிற்பனை எல்லாஞ் சிருட்டித்த பேரொளிப் |
|
|
|
பொற்பினை நாடிப் புணர்மதி யோடுற்றுத் |
|
|
|
தற்பர மாகத் தகுந்தண் சமாதியே |
|
|
|
|
|
|
|
.629.. |
|
|
|
தலைப்பட் டிருந்திடத் தத்துவங் கூடும் |
|
|
|
வலைப்பட் டிருந்திடும் மாதுநல் லாளுங் |
|
|
|
குலைப்பட் டிருந்திடுங் கோபம் அகலுந் |
|
|
|
துலைப்பட் டிருந்திடுந் தூங்கவல் லார்க்கே |
|
|
|
|
|
|
|
.630.. |
|
|
|
சோதித் தனிச்சுட ராய்நின்ற தேவனும் |
|
|
|
ஆதியும் .(1). உள்நின்ற சீவனு மாகுமால் |
|
|
|
ஆதிப் பிரமன் பெருங்கடல் வண்ணனும் |
|
|
|
ஆதி அடிபணிந் தன்புறு வாரே |
|
|
|
.(1). முன்நின்ற |
|
|
|
|
|
|
|
.631.. |
|
|
|
சமாதிசெய் வார்க்குத் தகும்பல யோகஞ் |
|
|
|
சமாதிகள் வேண்டாம் இறையுட னேகிற் |
|
|
|
சமாதிதா னில்லை தானவ னாகிற் |
|
|
|
சமாதியில் எட்டெட்டுச் சித்தியும் எய்துமே |
|
|
|
|
|
|
|
|
|
10.. அட்டாங்கயோகப் பேறு |
|
|
|
|
|
|
|
இயமம் |
|
|
|
.632.. |
|
|
|
போதுகந் தேறும் புரிசடை யானடி |
|
|
|
யாதுகந் தாரம ராபதிக் கேசெல்வர் |
|
|
|
ஏதுகந் தானிவன் என்றருள் செய்திடு |
|
|
|
மாதுகந் தாடிடு மால்விடை யோனே |
|
|
|
|
|
|
|
நியமம் |
|
|
|
.633.. |
|
|
|
பற்றிப் பதத்தன்பு வைத்துப் பரன்புகழ் |
|
|
|
கற்றிருந் தாங்கே கருது மவர்கட்கு |
|
|
|
முற்றெழுந் தாங்கே முனிவர் எதிர்வரத் |
|
|
|
தெற்றுஞ் சிவபதஞ் சேரலு மாமே |
|
|
|
|
|
|
|
ஆதனம் |
|
|
|
.634.. |
|
|
|
வந்தித் தவஞ்செய்து வானவர் கோவாய்த் |
|
|
|
திருந்தம ராபதிச் செல்வன் இவனெனத் |
|
|
|
தருந்தண் முழவங் குழலும் இயம்ப |
|
|
|
இருந்தின்பம் எய்துவர் ஈசன் அருளே |
|
|
|
|
|
|
|
பிராணாயாமம் |
|
|
|
.635.. |
|
|
|
செம்பொற் சிவகதி சென்றெய்துங் காலத்துக் |
|
|
|
கும்பத் தமரர் குழாம்வந் தெதிர்கொள்ள |
|
|
|
எம்பொற் றலைவன் இவனா மெனச்சொல்ல |
|
|
|
இன்பக் கலவி இருக்கலு மாமே |
|
|
|
|
|
|
|
பிரத்தியாகாரம் |
|
|
|
.636.. |
|
|
|
சேருறு காலந் திசைநின்ற தேவர்கள் |
|
|
|
ஆரிவன் என்ன அரனாம் இவனென்ன |
|
|
|
ஏருறு தேவர்கள் எல்லாம் எதிர்கொள்ளக் |
|
|
|
காருறு கண்டனை மெய்கண்ட வாறே |
|
|
|
|
|
|
|
தாரணை |
|
|
|
.637.. |
|
|
|
நல்வழி நாடி நமன்வழி மாற்றிடுஞ் |
|
|
|
சொல்வழி யாளர் சுருங்காப் பெருங்கொடை |
|
|
|
இல்வழி யாளர் இமையவர் எண்டிசைப் |
|
|
|
பல்வழி எய்தினும் பார்வழி யாகுமே |
|
|
|
|
|
|
|
தியானம் |
|
|
|
.638.. |
|
|
|
தூங்க.(1).வல் லார்க்கும் துணையேழ் புவனமும் |
|
|
|
வாங்கவல் லார்க்கும் வலிசெய்து .(2). நின்றிடுந் |
|
|
|
தேங்க.(3).வல் லார்க்கும் திளைக்கும் அமுதமுந் |
|
|
|
தாங்கவல் லார்க்குந் தன்னிட மாமே |
|
|
|
.(1). வல்லார்க்குத் |
|
|
|
.(1). நின்றிட்டுத் |
|
|
|
.(1). வல்லார்க்குத் |
|
|
|
|
|
|
|
சமாதி |
|
|
|
.639.. |
|
|
|
காரிய மான உபாதியைத் தாங்கடந் |
|
|
|
தாரிய காரணம் ஏழுந்தன் பாலுற |
|
|
|
ஆரிய காரண மாய தவத்திடைத் |
|
|
|
தாரியல் தற்பரஞ் சேர்தல் சமாதியே |
|
|
|
|
|
|
|
|
|
11.. அட்டமா சித்தி |
|
|
|
|
|
|
|
பரகாயப் பிரவேசம் |
|
|
|
.640.. |
|
|
|
பணிந்தெண் திசையும் பரமனை நாடித் |
|
|
|
துணிந்தெண் திசையுந் தொழுதெம் பிரானை |
|
|
|
அணிந்தெண் திசையினும் அட்டமா சித்தி |
|
|
|
தணிந்தெண் திசைசென்று தாபித்த வாறே |
|
|
|
|
|
|
|
.641. |
|
|
|
பரிசறி வானவர் பண்பன் அடியெனத் |
|
|
|
துரிசற நாடியே தூவௌi கண்டேன் |
|
|
|
அரிய தெனக்கில்லை அட்டமா சித்தி |
|
|
|
பெரிதருள் செய்து பிறப்பறுத் தானே |
|
|
|
|
|
|
|
.642.. |
|
|
|
குரவன் அருளிற் குறிவழி மூலன் |
|
|
|
பரையின் .(1). மணமிகு சங்கட்டம் பார்த்துத் |
|
|
|
தெரிதரு சாம்பவி கேசரி சேரப் |
|
|
|
பெரிய சிவகதி பேறெட்டாஞ் சித்தியே |
|
|
|
.(1). மனமிகு சக்கட்ட மார்த்துத் |
|
|
|
|
|
|
|
.643.. |
|
|
|
காயாதி பூதங் கலைகால மாயையில் |
|
|
|
ஆயா தகல அறிவொன் றனாதியே |
|
|
|
ஓயாப் பதியதன் உண்மையைக் கூடினால் |
|
|
|
வீயாப் பரகாயம் மேவலு மாமே |
|
|
|
|
|
|
|
.644.. |
|
|
|
இருபதி நாயிரத் தெண்ணூறு பேதம் |
|
|
|
மருவிய கன்ம மாமந்த யோகந் |
|
|
|
தருமிவை காய உழைப்பாகுந் தானே |
|
|
|
.(1). அருமிகு நான்காய் அடங்குமா சித்திக்கே |
|
|
|
.(1). அருமிரு |
|
|
|
|
|
|
|
.645.. |
|
|
|
மதிதனில் ஈராறாய் மன்னுங் கலையின் |
|
|
|
உதய மதுநா லொழியவோ ரெட்டுப் |
|
|
|
பதியுமஈ ராறாண்டு பற்றறப் பார்க்கில் |
|
|
|
திதமான ஈராறு சித்திக ளாமே |
|
|
|
|
|
|
|
.646.. |
|
|
|
நாடும் பிணியாகு நஞ்சனஞ் சூழ்ந்தக்கால் |
|
|
|
நீடுங் கலைகல்வி நீள்மேதை கூர்ஞானம் |
|
|
|
பீடொன்றி னால்வாயாச் சித்திபே தத்தின் |
|
|
|
நீடுங் துரங்கேட்டல் நீண்முடி வீராறே |
|
|
|
|
|
|
|
.647.. |
|
|
|
ஏழா னதிற்சண்ட வாயுவின் வேகியாந் |
|
|
|
தாழா நடைபல யோசனை சார்ந்திடுஞ் |
|
|
|
சூழான ஓரெட்டில் தோன்றா நரைதிரை |
|
|
|
தாழான ஒன்பதிற் றான்பர காயமே |
|
|
|
|
|
|
|
.648.. |
|
|
|
ஈரைந்திற் பூரித்துத் தியான உருத்திரன் |
|
|
|
.(1). ஏர்வொன்று பன்னொன்றில் ஈராறாம் எண்சித்தி |
|
|
|
சீரொன்று மேலேழ் கீழேழ் புவிச்சென்று |
|
|
|
.(2). ஏருன்று வியாபியாய் நிற்றல்ஈ ராறே |
|
|
|
.(1). நேரொன்று |
|
|
|
.(2). ஓரொன்று |
|
|
|
(3) ஏரொன்று |
|
|
|
.649.. |
|
|
|
தானே அணுவுஞ் சகத்துத்தன் .(1). நொய்ம்மையும் |
|
|
|
மானாக் .(2). கனமும் பரகாயத் தேகமுந் |
|
|
|
தானாவ தும்பர காயஞ்சேர் தன்மையும் |
|
|
|
ஆனாத வுண்மையும் .(3). வியாபியு மாம்எட்டே |
|
|
|
.(1). நோன்மையும் |
|
|
|
.(2). ககனமும் |
|
|
|
.(3). வியாப்பிய |
|
|
|
|
|
|
|
.650.. |
|
|
|
தாங்கிய தன்மையுந் தானணுப் பல்லுயிர் |
|
|
|
வாங்கிய காலத்து மற்றோர் குறையில்லை |
|
|
|
யாங்கே எழுந்தோம் அவற்றுள் எழுந்துமிக் |
|
|
|
.(1). கோங்கி வரமுத்தி முந்திய வாறே |
|
|
|
.(1). கோண்-கிய வாமுத்தி |
|
|
|
|
|
|
|
.651.. |
|
|
|
முந்திய முந்நூற் றறுபது காலமும் |
|
|
|
வந்தது நாழிகை வான்முத லாயிடச் |
|
|
|
சிந்தை .(1). செயச்செய மண்முதல் தேர்ந்தறிந் |
|
|
|
துந்தியில் நின்று உதித்தெழு மாறே |
|
|
|
.(1). செய் மண் முதல் தேர்ந்தறி வார்வல முந்தியுள் |
|
|
|
(2) துந்தியுள் |
|
|
|
|
|
|
|
.652.. |
|
|
|
சித்தந் திரிந்து சிவமய மாகியே |
|
|
|
முத்தந் தெரிந்துற்ற மோனர் சிவமுத்தர் |
|
|
|
சுத்தம் பெறலாம் ஐந்தில் தொடக்கற்றோர் |
|
|
|
சித்தம் பரத்தில் திருநடத் தோரே |
|
|
|
|
|
|
|
.653.. |
|
|
|
ஒத்தஇவ் வொன்பது வாயுவும் ஒத்தன |
|
|
|
ஒத்தஇவ் வொன்பதின் மிக்க தனஞ்செயன் |
|
|
|
ஒத்தஇவ் வொன்பதில் ஒக்க இருந்திட |
|
|
|
ஒத்த வுடலும் உயிரும் இருந்ததே |
|
|
|
|
|
|
|
.654.. |
|
|
|
இருக்குந் தனஞ்செயன் ஒன்பது காலில் |
|
|
|
இருக்கும் இருநூற் றிருபத்து மூன்றாய் |
|
|
|
இருக்கு .(1). முடலி லிருந்தில வாகில் |
|
|
|
இருக்கும் உடலது வீங்கி வெடித்ததே |
|
|
|
.(1). முடலீ திருந்தில |
|
|
|
|
|
|
|
.655.. |
|
|
|
வீங்குங் கழலை சிரங்கொடு குட்டமும் |
|
|
|
வீங்கும் வியாதிகள் சோகை பலவதாய் |
|
|
|
வீங்கிய வாதமுங் கூனு .(1). முடமதாய் |
|
|
|
வீங்கு வியாதிகள் கண்ணில் மருவியே |
|
|
|
.(1). முடமதாம் |
|
|
|
|
|
|
|
.656.. |
|
|
|
கண்ணில் வியாதி யுரோகந் தனஞ்செயன் |
|
|
|
கண்ணிலிவ் வாணிகள் காச மவனல்லன் |
|
|
|
கண்ணினிற் கூர்மன் கலந்தில நாதலாற் |
|
|
|
கண்ணினிற் சோதி கலந்ததும் இல்லையே |
|
|
|
|
|
|
|
.657.. |
|
|
|
நாடியின் ஓசை நயனம் இருதயந் |
|
|
|
தூடி யளவுஞ் சுடர்விடு சோதியைத் |
|
|
|
தேவருள் ஈசன் திருமால் பிரமனும் |
|
|
|
ஓவற நின்றங் குணர்ந்திருந் .(1).தாரே |
|
|
|
.(1). தார்க்களே |
|
|
|
|
|
|
|
.658.. |
|
|
|
ஒன்பது வாசல் உடையதோர் பிண்டத்துள் |
|
|
|
ஒன்பது நாடி யுடையதோ ரோரிடம் |
|
|
|
ஒன்பது நாடி ஒடுங்கவல் லார்கட்(கு) |
|
|
|
ஒன்பது .(1). காட்சி யிலைபல வாமே |
|
|
|
.(1). வாசல் உலைநலமாமே |
|
|
|
|
|
|
|
.659.. |
|
|
|
ஓங்-கிய அங்கிக்கீழ் ஒண்சுழு னைச்செல்ல |
|
|
|
வாங்கி இரவி மதிவழி ஓடிடத் |
|
|
|
தாங்கி உலகங்கள் ஏழுந் தரித்திட |
|
|
|
ஆங்கது சொன்னோம் .(1). அருவழி யோர்க்கே |
|
|
|
.(1). அறிவுடை |
|
|
|
|
|
|
|
.660.. |
|
|
|
தலைப்பட்ட வாறண்ணல் தையலை நாடி |
|
|
|
வலைப்பட்ட பாசத்து வன்பிணை மான்போல் |
|
|
|
துலைப்பட்ட நாடியைத் தூவழி செய்தால் |
|
|
|
விலைக்குண்ண வைத்ததோர் வித்தது வாமே |
|
|
|
|
|
|
|
.661.. |
|
|
|
ஓடிச்சென் றங்கே ஒருபொருள் கண்டவர் |
|
|
|
நாடியி னுள்ளாக நாதம் எழுப்புவர் |
|
|
|
தேடிச்சென் றங்கே தேனை முகந்துண்டு |
|
|
|
பாடியுள் நின்ற பகைவரைக் கட்டுமே |
|
|
|
|
|
|
|
.662.. |
|
|
|
கட்டிட்ட தாமரை ஞாளத்தில் ஒன்பது |
|
|
|
மட்டிட்ட .(1). கன்னியர் மாதுடன் சேர்ந்தனர் |
|
|
|
.(2). கட்டிட்டு நின்று களங்கனி யூடுபோய்ப் |
|
|
|
பொட்டிட்டு நின்று பூரண மானதே |
|
|
|
.(1). கண்ணியர் |
|
|
|
.(2). தட்டிட்டு நின்று தளண்-களி W\டுபோய்ப் |
|
|
|
|
|
|
|
.663.. |
|
|
|
பூரண சத்தி ஏழுமூன் றறையாக |
|
|
|
ஏரணி கன்னியர் எழுநூற்றஞ் சாக்கினார் |
|
|
|
நாரணன் நான்முக னாதிய ஐவர்க்குங் |
|
|
|
காரண மாகிக் கலந்து விரிந்ததே |
|
|
|
|
|
|
|
.664.. |
|
|
|
விரிந்து குவிந்து விளைந்தஇம் மங்கை |
|
|
|
கரந்துள் எழுந்து கரந்தங் கிருக்கிற் |
|
|
|
பரந்து குவிந்தது பார்முதற் பூதம் |
|
|
|
இரைந்தெழு வாயு விடத்தினில் .(1). ஒடுங்கே |
|
|
|
.(1). ஓண்-கே |
|
|
|
|
|
|
|
.665.. |
|
|
|
இடையொடு பிங்கலை என்னும் இரண்டு |
|
|
|
மடைபடு வாயுவு மாறியே நிற்குந் |
|
|
|
தடையவை .(1). யாறேழுந் தண்சுட ருள்ளே |
|
|
|
மிடைவளர் மின்கொடி தன்னில் ஒடுங்கே |
|
|
|
.(1). யாறெழுந் |
|
|
|
|
|
|
|
.666.. |
|
|
|
ஒடுங்கி ஒருங்கி யுணர்ந்தங் கிருக்கில் |
|
|
|
மடங்கி அடங்கிடும் வாயு வதனுள் |
|
|
|
மடங்கி மடங்கிடு மன்னுயி ருள்ளே |
|
|
|
நடங்கொண்ட .(1). கூத்தனும் நாடுகின் றானே |
|
|
|
.(1). கூத்தனை நாடுகின் றேனே |
|
|
|
|
|
|
|
.667.. |
|
|
|
நாடியின் உள்ளே நாதத் தொனியுடன் |
|
|
|
தேடி யுடன்சென்றத் திருவினைக் கைக்கொண்டு |
|
|
|
பாடியுள் நின்ற பகைவரைக் கட்டிட்டு |
|
|
|
மாடி ஒருகை மணிவிளக் கானதே |
|
|
|
|
|
|
|
.668.. |
|
|
|
அணுமாதி சித்திக ளானவை கூறில் |
|
|
|
அணுவில் அணுவின் பெருமையில் நேர்மை |
|
|
|
இணுகாத வேகார் பரகாய மேவல் |
|
|
|
.(1).அணுவத் தனையெங்குந் (2)தானாத லென்றெட்டே |
|
|
|
.(1). அணுமைத் |
|
|
|
(2) தானாக |
|
|
|
|
|
|
|
.669.. |
|
|
|
எட்டா கியசித்தி யோரெட்டி யோகத்தாற் |
|
|
|
கிட்டாப் பிராணனே செய்தாற் கிடைத்திடும் |
|
|
|
ஒட்டா நடுநாடி மூலத்த னல்பானு |
|
|
|
விட்டான் மதியுண்ண வும்வரு மேலதே |
|
|
|
|
|
|
|
.670.. |
|
|
|
சித்திக ளெட்டன்றிச் சேரெட்டி யோகத்தாற் |
|
|
|
புத்திக ளானவை எல்லாம் புலப்படுஞ் |
|
|
|
சித்திகள் எண்சித்தி தானாந் திரிபுரை |
|
|
|
சத்தி அருள்தரத் தானுள வாகுமே |
|
|
|
|
|
|
|
அணிமா |
|
|
|
.671.. |
|
|
|
எட்டிவை தன்னோ டெழிற்பரங் கைகூடப் |
|
|
|
பட்டவர் சித்தர் பரலோகஞ் சேர்தலால் |
|
|
|
இட்டம துள்ளே .(1). இறுக்கல் பரகாட்சி |
|
|
|
எட்டு வரப்பு மிடந்தானின் றெட்டுமே |
|
|
|
.(1). இருக்கல் |
|
|
|
|
|
|
|
.672.. |
|
|
|
மந்தர மேறு மதிபானு வைமாற்றிக் |
|
|
|
கந்தாய்க் குழியிற் கசடற வல்லார்க்குத் |
|
|
|
தந்தின்றி நற்.(1).கா மியலோகஞ் சார்வாகும் |
|
|
|
அந்த வுலகம் அணிமாதி யாமே |
|
|
|
.(1). காய மிய |
|
|
|
|
|
|
|
.673.. |
|
|
|
முடிந்திட்டு வைத்து முயங்கிலோ ராண்டில் |
|
|
|
அணிந்த அணிமாகை தானாம் இவனுந் |
|
|
|
தணிந்தவப் பஞ்சினுந் தானொய்ய தாகி |
|
|
|
மெலிந்தங் கிருந்திடும் வெல்லவொண் ணாதே |
|
|
|
|
|
|
|
லகிமா |
|
|
|
.674.. |
|
|
|
ஆகின்ற வத்தனி நாயகி தன்னுடன் |
|
|
|
போகின்ற தத்துவம் எங்கும் புகல தாய்ச் |
|
|
|
சாகின்ற காலங்கள் தன்வழி நின்றிடின் |
|
|
|
மாய்கின்ற தையாண்டின் மாலகு வாகுமே |
|
|
|
|
|
|
|
.675.. |
|
|
|
மாலகு வாகிய மாயனைக் கண்டபின் |
|
|
|
தானொளி யாகித் தழைத்தங் கிருந்திடும் |
|
|
|
பாலொளி யாகிப் பரந்தெங்கு நின்றது |
|
|
|
மேலொளி யாகிய மெய்ப்பொருள் காணுமே |
|
|
|
|
|
|
|
மகிமா |
|
|
|
.676.. |
|
|
|
மெய்ப்பொருள் சொல்லிய மெல்லிய லாளுடன் |
|
|
|
தற்பொரு ளாகிய தத்துவங் கூடிடக் |
|
|
|
கைப்பொரு ளாகக் கலந்திடு மோராண்டின் |
|
|
|
மைப்பொரு ளாகு மகிமாவ தாகுமே |
|
|
|
|
|
|
|
.677.. |
|
|
|
ஆகின்ற காலொளி யாவது கண்டபின் |
|
|
|
போகின்ற காலங்கள் போவது மில்லையாம் |
|
|
|
மேனின்ற காலம் வௌiயுற .(1). நின்றன |
|
|
|
.(2). தானின்ற காலங்கள் தன்வழி யாகுமே |
|
|
|
.(1). நின்றபின் |
|
|
|
.(2). தாழ்கின்ற |
|
|
|
|
|
|
|
.678.. |
|
|
|
தன்வழி யாகத் தழைத்திடு ஞ்aனமுந் |
|
|
|
தன்வழி .(1). யாகத் தழைத்திடும் வையகந் |
|
|
|
தன்வழி யாகத் தழைத்த பொருளெல்லாந் |
|
|
|
தன்வழி தன்னரு ளாகிநின் றானே |
|
|
|
.(1). மீதாகத் |
|
|
|
|
|
|
|
பிராத்தி |
|
|
|
.679.. |
|
|
|
நின்றன தத்துவ நாயகி தன்னுடன் |
|
|
|
கண்டன பூதப் .(1). படையவை யெல்லாங் |
|
|
|
கொண்டவை யோராண்டு கூட இருந்திடில் |
|
|
|
விண்டது வேநல்ல பிராத்தி யதாகுமே |
|
|
|
.(1). படையானவையெலாண்- |
|
|
|
|
|
|
|
கரிமா |
|
|
|
.680.. |
|
|
|
ஆகின்ற மின்னொளி யாவது கண்டபின் |
|
|
|
பாகின்ற பூவிற் பரப்பவை காணலா |
|
|
|
.(1). மேகின்ற காலம் வௌiயுற நின்றது |
|
|
|
போகின்ற காலங்கள் போவது மில்லையே |
|
|
|
.(1). மேனின்ற |
|
|
|
|
|
|
|
.681.. |
|
|
|
போவதொன் றில்லை வருவது தானில்லை |
|
|
|
சாவதொன் றில்லை தழைப்பது தானில்லை |
|
|
|
தாமத மில்லை தமரகத் தின்னொளி |
|
|
|
யாவது மில்லை யறிந்துகொள் வார்க்கே |
|
|
|
|
|
|
|
.682.. |
|
|
|
அறிந்த பராசத்தி யுள்ளே அமரில் |
|
|
|
பறிந்தது பூதப் படையவை யெல்லாங் |
|
|
|
குவிந்தவை யோராண்டு கூட இருக்கில் |
|
|
|
.(1). விரிந்தது பரகாய மேவலு மாமே |
|
|
|
.(1). விரிந்த |
|
|
|
|
|
|
|
பிராகாமியம் |
|
|
|
.683.. |
|
|
|
ஆன விளக்கொளி யாவ தறிகிலர் |
|
|
|
மூல விளக்கொளி முன்னே யுடையவர் |
|
|
|
கான விளக்கொளி கண்டுகொள் வார்கட்கு |
|
|
|
மேலை விளக்கொளி வீடௌi தாநின்றே |
|
|
|
|
|
|
|
ஈசத்துவம் |
|
|
|
.684.. |
|
|
|
நின்ற சதாசிவ நாயகி தன்னுடன் |
|
|
|
கண்டன பூதப் படையவை எல்லாங் |
|
|
|
கொண்டவை யோராண்டு கூடி யிருந்திடிற் |
|
|
|
பண்டையவ் வீசன் தத்துவ மாகுமே |
|
|
|
|
|
|
|
.685.. |
|
|
|
ஆகின்ற சந்திரன் .(1). தன்னொளி யாயவன் |
|
|
|
ஆகின்ற சந்திரன் தட்பமு மாயிடும் |
|
|
|
ஆகின்ற சந்திரன் தன்கலை கூடிடில் |
|
|
|
ஆகின்ற சந்திரன் தானவ நாமே |
|
|
|
.(1). தண்ணளி |
|
|
|
|
|
|
|
.686.. |
|
|
|
தானே படைத்திட வல்லவ னாயிடுந் |
|
|
|
தானே யளித்திட வல்லவ னாயிடுந் |
|
|
|
தானே சங்காரத் தலைவனு மாயிடுந் |
|
|
|
தானே யிவனெனுந் தன்மைய னாமே |
|
|
|
|
|
|
|
.687.. |
|
|
|
தன்மைய தாகத் தழைத்த கலையினுள் |
|
|
|
பன்மைய தாகப் பரந்தஐம் பூதத்தை |
|
|
|
வன்மைய தாக மறித்திடில் ஓராண்டின் |
|
|
|
மென்மைய தாகிய மெய்பொருள் காணுமே |
|
|
|
|
|
|
|
வசித்துவம் |
|
|
|
.688.. |
|
|
|
மெய்ப்பொரு ளாக விளைந்தது வேதெனின் |
|
|
|
நற்பொரு ளாகிய நல்ல வசித்துவங் |
|
|
|
கைப்பொரு ளாகக் கலந்த உயிர்க்கெல்லாந் |
|
|
|
தற்பொரு ளாகிய தன்மைய னாகுமே |
|
|
|
|
|
|
|
.689.. |
|
|
|
தன்மைய தாகத் தழைத்த பகலவன் |
|
|
|
மென்மைய தாகிய மெய்ப்பொருள் கண்டிடின் |
|
|
|
பொன்மைய தாகப் புலன்களும் போயிட |
|
|
|
நன்மைய தாகிய நற்கொடி காணுமே |
|
|
|
|
|
|
|
.690.. |
|
|
|
நற்கொடி யாகிய நாயகி தன்னுடன் |
|
|
|
அக்கொடி யாகம் அறிந்திடில் ஓராண்டு |
|
|
|
பொற்கொடி யாகிய புவனங்கள் போய்வருங் |
|
|
|
கற்கொடி யாகிய காமுக னாமே |
|
|
|
|
|
|
|
.691.. |
|
|
|
காமரு தத்துவ மானது வந்தபின் |
|
|
|
பூமரு கந்தம் புவனம தாயிடும் |
|
|
|
மாமரு .(2). வுன்னிடை மெய்த்திடு மானனாய் |
|
|
|
நாமரு வுமஔi நாயக மானதே |
|
|
|
.(1). வுன்னிடம் எய்திடு |
|
|
|
|
|
|
|
.692.. |
|
|
|
நாயக மாகிய நல்லொளி கண்டபின் |
|
|
|
தாயக மாகத் தழைத்தங் கிருந்திடும் |
|
|
|
போயக மான புவனங்கள் கண்டபின் |
|
|
|
பேயக மாகிய பேரொளி காணுமே |
|
|
|
|
|
|
|
.693.. |
|
|
|
பேரொளி யாகிய பெரியஅவ் .(1). வேட்டையும் |
|
|
|
பாரொளி யாகப் பதைப்புறக் கண்டவன் |
|
|
|
தாரொளி யாகத் தரணி முழுதுமாம் |
|
|
|
ஓரொளி யாகிய காலொளி காணுமே |
|
|
|
.(1). வெட்டையும் |
|
|
|
|
|
|
|
.694.. |
|
|
|
காலோ டுயிருங் கலக்கும் வகைசொல்லிற் |
|
|
|
காலது அக்கொடி நாயகி தன்னுடன் |
|
|
|
காலது ஐஞ்நூற் றொருபத்து மூன்றையங் |
|
|
|
காலது .(1). வேண்டிக் கொண்டஇவ் வாறே |
|
|
|
.(1). பெண்மண்டிக் |
|
|
|
|
|
|
|
.695.. |
|
|
|
ஆறது வாகும் அமிர்தத் தலையினுள் |
|
|
|
ஆறது ஆயிர முந்நூற் றொடைஞ்சுள |
|
|
|
ஆறது வாயிர மாகு மருவழி |
|
|
|
ஆறது வாக வளர்ப்ப திரண்டே |
|
|
|
|
|
|
|
.696.. |
|
|
|
இரண்டினின் மேலே சதாசிவ நாயகி |
|
|
|
இரண்டது கால்கொண் டெழுவகை சொல்லில் |
|
|
|
இரண்டது ஆயிரம் ஐம்பதோ டொன்றாய்த் |
|
|
|
திரண்டது காலம் எடுத்ததும் அஞ்சே |
|
|
|
|
|
|
|
.697.. |
|
|
|
அஞ்சுடன் அஞ்சு முகமுள நாயகி |
|
|
|
அஞ்சுடன் அஞ்சது வாயுத மாவது |
|
|
|
அஞ்சது வன்றி இரண்டது வாயிரம் |
|
|
|
அஞ்சது காலம் எடுத்துளும் ஒன்றே |
|
|
|
|
|
|
|
.698.. |
|
|
|
ஒன்றது வாகிய தத்துவ நாயகி |
|
|
|
ஒன்றது கால்கொண் டூர்வகை சொல்லிடில் |
|
|
|
ஒன்றது வென்றிகொள் ஆயிரம் ஆயிரம் |
|
|
|
ஒன்றது காலம் எடுத்துளும் முன்னே |
|
|
|
|
|
|
|
.699.. |
|
|
|
முன்னெழும் அக்கலை நாயகி தன்னுடன் |
|
|
|
முன்னுறு வாயு முடிவகை சொல்லிடின் |
|
|
|
முன்னுறும் .(1). ஐம்பத் தொன்றுடன் அஞ்சுமாய் |
|
|
|
முன்னுறு வாயு முடிவகை யாமே |
|
|
|
.(1). ஐம்பதொ டொன்றுடன் |
|
|
|
|
|
|
|
.700.. |
|
|
|
ஆய்வரும் அத்தனி நாயகி தன்னுடன் |
|
|
|
ஆய்வரு வாயு அளப்பது சொல்லிடில் |
|
|
|
ஆய்வரும் ஐஞ்நூற்று முப்பதொ டொன்பது |
|
|
|
மாய்வரு வாயு வளப்புள் ளிருந்ததே |
|
|
|
|
|
|
|
.701.. |
|
|
|
இருநிதி யாகிய எந்தை யிடத்து |
|
|
|
இருநிதி வாயு இயங்கு நெறியில் |
|
|
|
இருநூற்று முப்பத்து மூன்றுடன் அஞ்சாய் |
|
|
|
இருநிதி வாயு இயங்கும் எழுத்தே |
|
|
|
|
|
|
|
.702.. |
|
|
|
எழுகின்ற சோதியுள் நாயகி தன்பால் |
|
|
|
எழுகின்ற வாயு இடமது சொல்லில் |
|
|
|
எழுநூற் றிருபத் தொன்பா னதுநாலாய் |
|
|
|
எழுந்துடன் அங்கி இருந்ததிவ் வாறே |
|
|
|
|
|
|
|
.703.. |
|
|
|
ஆறது கால்கொண் டிரதம் விளைத்திடும் |
|
|
|
ஏழது கால்கொண் டிரட்டி இறக்கிட |
|
|
|
எட்டது கால்கொண் டிடவகை .(1). யொத்தபின் |
|
|
|
ஒன்பது மாநிலம் ஒத்தது வாயுவே |
|
|
|
.(1). ஏற்றபின் |
|
|
|
|
|
|
|
.704.. |
|
|
|
சந்திரன் சூரியன் தற்பரன் தாணுவிற் |
|
|
|
சந்திரன் தானுந் தலைப்படுந் தன்மையைச் |
|
|
|
சந்தியி லேகண்டு தானாஞ் சகமுகத் |
|
|
|
துந்திச் சமாதி யுடையொளி யோகியே |
|
|
|
|
|
|
|
|
|
|
|
.705.. |
|
|
|
அணங்கற்ற மாதல் அருஞ்சன நீவல் |
|
|
|
வணங்குற்ற கல்விமா ஞான மிகுத்தல் |
|
|
|
.(1). சுணங்குற்ற வாயர் சித்திதூரங் கேட்டல் |
|
|
|
நுணங்கற் றிரோதல்கால் வேகத்து நுந்தலே |
|
|
|
.(1). சிணண்-குற்ற வாயர் சித்திதாண்- கேட்டல் |
|
|
|
|
|
|
|
.706.. |
|
|
|
மரணஞ் .(1). சரைவிடல் வண்பர காயம் |
|
|
|
இரணஞ் சேர்பூமி இறந்தோர்க் களித்தல் |
|
|
|
அரணன் .(2). திருவுற வாதன்மூ வேழாங் |
|
|
|
.(3). கரனுறு கேள்வி கணக்கறிந் தோனே |
|
|
|
.(1). சிறைவிடல் |
|
|
|
.(2). திருவுரு |
|
|
|
.(3). கரணுறு |
|
|
|
|
|
|
|
.707.. |
|
|
|
ஓதம் ஒலிக்கும் உலகை வலம்வந்து |
|
|
|
பாதங்கள் நோவ நடந்தும் பயனில்லை |
|
|
|
காதலில் அண்ணலைக் காண இனியவர் |
|
|
|
நாதன் இருந்த நகரறி வாரே. |
|
|
|
|
|
|
|
.708.. |
|
|
|
மூல முதல்வேதா மாலரன் முன்னிற்கக் |
|
|
|
கோலிய ஐம்முகன் கூறப் பரவிந்து |
|
|
|
சாலப் பரநாதம் விந்துத் தனிநாதம் |
|
|
|
பாலித்த சத்தி பரைபரன் பாதமே |
|
|
|
|
|
|
|
.709.. |
|
|
|
ஆதார யோகத் ததிதே வொடுஞ்சென்று |
|
|
|
மீதான தற்பரை மேவும் பரனொடு |
|
|
|
மேதாதி யீரெண் கலைசெல்ல மீதொளி |
|
|
|
ஓதா அசிந்தமீ தானந்த யோகமே |
|
|
|
|
|
|
|
.710.. |
|
|
|
மதியமும் ஞாயிறும் வந்துடன் கூடித் |
|
|
|
துதிசெய் பவரவர் தொல்வா னவர்கள் |
|
|
|
விதியது செய்கின்ற மெய்யடி யார்க்குப் |
|
|
|
பதியது காட்டும் பரமன்நின் றானே |
|
|
|
|
|
|
|
.711.. |
|
|
|
பொட்டெழக் குத்திப் பொறியெழத் தண்டிட்டு |
|
|
|
.(2). நட்டறி வார்க்கு நமனில்லை தானே |
|
|
|
கட்டவல் லார்கள் .(1). கரந்தெங்குந் தானாவர் |
|
|
|
மட்டவிழ் தாமரை யுள்ளே மணஞ்செய்து |
|
|
|
.(1). கலந்தெண்-குந் |
|
|
|
.(2). நட்டிடு |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
12.. கலை நிலை |
|
|
|
|
|
|
|
.712.. |
|
|
|
காதல் வழிசெய்த கண்ணுதல் அண்ணலைக் |
|
|
|
காதல் வழிசெய்து கண்ணுற நோக்கிடிற் |
|
|
|
காதல் வழிசெய்து கங்கை வழிதருங் |
|
|
|
காதல் வழிசெய்து காக்கலு மாமே |
|
|
|
|
|
|
|
.713.. |
|
|
|
காக்கலு மாகுங் கரணங்கள் நான்கையுங் |
|
|
|
காக்கலு மாகுங் கலைபதி நாறையுங் |
|
|
|
காக்கலு மாகுங் கலந்தநல் வாயுவுங் |
|
|
|
காக்கலு மாகுங் கருத்துற நில்லே |
|
|
|
|
|
|
|
.714.. |
|
|
|
நிலைபெற நின்றது நேர்தரு வாயு |
|
|
|
சிலைபெற நின்றது தீபமும் ஒத்துக் |
|
|
|
கலைவழி நின்ற கலப்பை அறியில் |
|
|
|
.(1). அலைவற வாகும் வழியிது வாமே |
|
|
|
.(1). மலைவறி |
|
|
|
|
|
|
|
.715.. |
|
|
|
புடையொன்றி நின்றிடும் பூதப் பிரானை |
|
|
|
மடையொன்றி நின்றிட வாய்த்த வழியுஞ் |
|
|
|
சடையொன்றி நின்றஅச் சங்கர நாதன் |
|
|
|
விடையொன்றி லேறியே வீற்றிருந் தானே |
|
|
|
|
|
|
|
.716.. |
|
|
|
இருக்கின்ற காலங்கள் ஏதும் அறியார் |
|
|
|
பெருக்கின்ற காலப் பெருமையை நோக்கி |
|
|
|
ஒருக்கின்ற வாயு வொளிப்பெற நிற்கத் |
|
|
|
தருக்கொன்றி நின்றிடுஞ் சாதக னாமே |
|
|
|
|
|
|
|
.717.. |
|
|
|
சாதக மானஅத் தன்மையை நோக்கியே |
|
|
|
மாதவ மான வழிபாடு செய்திடும் |
|
|
|
போதக மாகப் புகலுறப் பாய்ச்சினால் |
|
|
|
வேதக மாக விளைந்து கிடக்குமே |
|
|
|
|
|
|
|
.718.. |
|
|
|
கிடந்தது தானே கிளர்பயன் மூன்று |
|
|
|
நடந்தது தானேஉள் நாடியுள் நோக்கிப் |
|
|
|
படர்ந்தது தானே பங்கய மாகத் |
|
|
|
தொடர்ந்தது தானேஅச் சோதியுள் நின்றே |
|
|
|
|
|
|
|
.719.. |
|
|
|
தனே எழுந்தஅத் தத்துவ நாயகி |
|
|
|
ஊனே வழிசெய்தெம் உள்ளே யிருந்திடும் |
|
|
|
வானோர் உலகீன்ற அம்மை மதித்திடத் |
|
|
|
தேனே பருகிச் சிவாலய மாகுமே |
|
|
|
|
|
|
|
.720.. |
|
|
|
திகழும் படியே செறிதரு வாயு |
|
|
|
அழியும் படியை அறிகில ராரும் |
|
|
|
அழியும் படியை அறிந்தபின் நந்தி |
|
|
|
திகழ்கின்ற வாயுவைச் சேர்தலு மாமே |
|
|
|
|
|
|
|
.721.. |
|
|
|
சோதனை தன்னில் துரிசறிக் காணலாம் |
|
|
|
நாதனும் நாயகி தன்னிற் பிரியுநாள் |
|
|
|
.(1). சாதன மாகுங் குருவை வழிபட்டு |
|
|
|
மாதன மாக மதித்துக்கொள் ளீரே |
|
|
|
.(1). சாதக மாகுண்- குருவழி பட்டு |
|
|
|
|
|
|
|
.722.. |
|
|
|
ஈராறு கால்கொண் டெழுந்த புரவியைப் |
|
|
|
பேராமற் கட்டிப் பெரிதுண்ண வல்லீரேல் |
|
|
|
நீரா யிரமும் நிலமாயி ரத்தாண்டும் |
|
|
|
பேராது காயம் பிரான்நந்தி ஆணையே |
|
|
|
|
|
|
|
.723.. |
|
|
|
ஓசையில் ஏழும் ஔiயிங்கண் ஐந்தும் |
|
|
|
நாசியில் மூன்றும் நாவில் இரண்டுந் |
|
|
|
தேசியுந் தேசனுந் தன்னிற் பிரியுநாள் |
|
|
|
மாசறு சோதி வகுத்துவைத் தானே |
|
|
|
|
|
|
|
|
|
13.. காயசித்தி உபாயம் |
|
|
|
|
|
|
|
|
|
.724.. |
|
|
|
உடம்பார் அழியில் உயிரார் அழிவர் |
|
|
|
திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார் |
|
|
|
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே |
|
|
|
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே |
|
|
|
|
|
|
|
.725.. |
|
|
|
உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன் |
|
|
|
உடம்பினுக் குள்ளே யுறுபொருள் கண்டேன் |
|
|
|
உடம்புளே உத்தமன் கோயில்கொண் டான் என்று |
|
|
|
உடம்பினை யானிருந் தோம்புகின் றேனே |
|
|
|
|
|
|
|
.726.. |
|
|
|
.(1). சுழற்றிக் கொடுக்கவே சுத்திக் கழியுங் |
|
|
|
கழற்றி மலத்தைக் கமலத்துப் பூரித்து |
|
|
|
உழற்றிக் கொடுக்கும் உபாயம் அறிவார்க்கு |
|
|
|
அழற்றித் தவிர்ந்துடல் அஞ்சன மாமே |
|
|
|
.(1). சுழித்துக் |
|
|
|
|
|
|
|
.727.. |
|
|
|
அஞ்சனம் போன்றுட லையறு மந்தியில் |
|
|
|
வஞ்சக வாத மறுமத்தி யானத்திற் |
|
|
|
செஞ்சிறு காலையிற் செய்திடிற் பித்தறும் |
|
|
|
நஞ்சறச் சொன்னோம் நரைதிரை நாசமே |
|
|
|
|
|
|
|
.728.. |
|
|
|
மூன்று மடக்குடைப் பாம்பிரண் டெட்டுள |
|
|
|
வேன்ற வியந்திரம் பன்னிரண் டங்குலம் |
|
|
|
.(1). நான்றவிம் முட்டை யிரண்டையங் கட்டியிட்டு |
|
|
|
ஊன்றி யிருக்க உடம்பழி யாதே |
|
|
|
.(1). நான்றவிழ் |
|
|
|
|
|
|
|
.729.. |
|
|
|
நூறும் அறுபதும் ஆறும் வலம்வர |
|
|
|
நூறும் அறுபதும் ஆறும் இடம்வர |
|
|
|
நூறும் அறுபதும் ஆறும் எதிரிட |
|
|
|
நூறும் அறுபது மாறும் புகுவரே |
|
|
|
|
|
|
|
.730.. |
|
|
|
சத்தியார் கோயி லிடம்வலஞ் சாதித்தான் |
|
|
|
மத்தியா னத்திலே .(1). வாத்தியங் கேட்கலாந் |
|
|
|
தித்தித்த கூத்துஞ் சிவனும் வௌiப்படுஞ் |
|
|
|
சத்தியஞ் .(2). சொன்னோஞ் சதாநந்தி ஆணையே |
|
|
|
.(1). வாக்கியண்- |
|
|
|
.(2). சொன்னேன் |
|
|
|
|
|
|
|
.731.. |
|
|
|
திறத்திறம் விந்து திகழு மகார |
|
|
|
முறப்பெற வேநினைந் தோதுஞ் சகார |
|
|
|
மறிப்பது மந்திர மன்னிய நாத |
|
|
|
மறப்பெற யோகிக் கறநெறி யாமே |
|
|
|
|
|
|
|
.732.. |
|
|
|
உந்திச் சுழியி .(1). னுடனேர் பிராணனைச் |
|
|
|
சிந்தித் தெழுப்பிச் சிவமந் திரத்தினால் |
|
|
|
முந்தி முகட்டின் நிறுத்தி அபானனைச் |
|
|
|
சிந்தித் தெழுப்பச் சிவனவ நாமே |
|
|
|
.(1). Wடனே |
|
|
|
|
|
|
|
.733.. |
|
|
|
மாறா மலக்குதந் தன்மே லிருவிரற் |
|
|
|
கூறா இலங்கத்தின் கீழே குறிக்கொண்மின் |
|
|
|
ஆறா உடம்பிடை அண்ணலும் அங்குளன் |
|
|
|
கூறா உபதேசங் கொண்டது காணுமே |
|
|
|
|
|
|
|
.734.. |
|
|
|
நீல நிறனுடை நேரிழை யாளொடுஞ் |
|
|
|
சாலவும் புல்லிச் சதமென் றிருப்பார்க்கு |
|
|
|
ஞாலம் அறிய நரைதிரை மாறிடும் |
|
|
|
பாலனு மாவர் பராநந்தி ஆணையே |
|
|
|
|
|
|
|
.735.. |
|
|
|
அண்டஞ் சுருங்கில் அதற்கோ ரழிவில்லை |
|
|
|
பிண்டஞ் சுருங்கிற் பிராணன் நிலைபெறும் |
|
|
|
உண்டி சுருங்கில் உபாயம் பலவுள |
|
|
|
கண்டங் கறுத்த கபாலியு மாமே |
|
|
|
|
|
|
|
.736.. |
|
|
|
பிண்டத்துள் உற்ற பிழக்கடை வாசலை |
|
|
|
அண்டத்துள் உற்று அடுத்தடுத் தேகிடில் |
|
|
|
வண்டிச் சிக்கு மலர்க்குழல் மாதரார் |
|
|
|
கண்டிச் சிக்குநற் காயமு மாமே |
|
|
|
|
|
|
|
.737.. |
|
|
|
சுழலும் பெருங்கூற்றுத் தொல்லைமுன் சீறி |
|
|
|
அழலும் இரத்ததுள் அங்கியுள் ஈசன் |
|
|
|
கழல்கொள் திருவடி காண்குறில் ஆங்கே |
|
|
|
நிழலுளுந் தெற்றுளும் நிற்றலு மாமே |
|
|
|
|
|
|
|
.738.. |
|
|
|
நான்கண்ட வன்னியும் நாலு கலையேழுந் |
|
|
|
தான்கண்ட .(1). வாயுச் சரீர முழுதொடும் |
|
|
|
ஊன்கண்டு கொண்ட வுணர்வு மருந்தாக |
|
|
|
மாங்கன்று நின்று வளர்க்கின்ற வாறே |
|
|
|
.(1). வாயுவுன்ய் சரீர |
|
|
|
|
|
|
|
.739.. |
|
|
|
ஆகுஞ் சனவேத சத்தியை அன்புற |
|
|
|
.(1). நீகொள்ளின் நெல்லின் வளர்கின்ற நேர்மையைப் |
|
|
|
பாகு படுத்திப் பல்கோடி களத்தினால் |
|
|
|
ஊழ்கொண்ட மந்திரத் தன்னால் ஒடுங்கே |
|
|
|
.(1). நீர்க்கொள நெல்லின் |
|
|
|
|
|
|
|
|
|
14.. கால சக்கரம் |
|
|
|
|
|
|
|
.740.. |
|
|
|
மதிவட்ட மாக வரையைந்து நாடி |
|
|
|
இதுவிட்டிங் கீரா றமர்ந்த அதனாற் |
|
|
|
பதிவட்டத் துள்நின்று பாலிக்கு மாறு |
|
|
|
மதுவிட்டுப் போமாறு மாயலுற் றேனே |
|
|
|
|
|
|
|
.741.. |
|
|
|
உற்றறி வைந்தும் உணர்ந்தறி வாறேழுங் |
|
|
|
கற்றறி வெட்டுங் கலந்தறி வொன்பதும் |
|
|
|
பற்றிய பத்தும் பலவகை நாழிகை |
|
|
|
.(1). அற்ற தறியா தழிகின்ற வாறே |
|
|
|
.(1). அற்றறியா |
|
|
|
|
|
|
|
.742.. |
|
|
|
அழிகின்ற ஆண்டவை ஐயைஞ்சு மூன்று |
|
|
|
மொழிகின்ற முப்பத்து மூன்றென்ப தாகுங் |
|
|
|
கழிகின்ற காலறு பத்திரண் டென்ப |
|
|
|
தெழுகின்ற ஈரைம்ப தெண்ணற் றிருந்தே |
|
|
|
|
|
|
|
.743.. |
|
|
|
திருந்து தினமத் தினத்தி நொடுநின் |
|
|
|
றிருந்தறி நாளொன் றிரண்டெட்டு மூன்று |
|
|
|
பொருந்திய நாளொடு புக்கறிந் தோங்கி |
|
|
|
வருந்துத லின்றி மனைபுக லாமே |
|
|
|
|
|
|
|
.744.. |
|
|
|
மனைபுகு வீரும் மகத்திடை நீராடி |
|
|
|
எனவிரு பத்தஞ்சும் ஈரா றதனால் |
|
|
|
தனையறிந் தேறட்டுத் தற்குறி யாறு |
|
|
|
வினையறி யாறு விளங்கிய நாலே |
|
|
|
|
|
|
|
.745.. |
|
|
|
நாலுங் கடந்தது நால்வரும் நாலைந்து |
|
|
|
பாலங் கடந்தது பத்துப் பதினைந்து |
|
|
|
கோலங் கடந்த குணத்தாண்டு மூவிரண் |
|
|
|
டாலங் கடந்ததொன் றாரறி வாரே |
|
|
|
|
|
|
|
.746.. |
|
|
|
ஆறும் இருபதுக் கையஞ்சு மூன்றுக்குந் |
|
|
|
தேறு மிரண்டு மிருபத்தொ டாறிவை |
|
|
|
கூறு மதியொன் றினுக்கிரு பத்தேழு |
|
|
|
வேறு பதியங்க ணாள்விதித் தானே |
|
|
|
|
|
|
|
.747.. |
|
|
|
விதித்த இருபத்தெட் டொடுமூன் றறையாகத் |
|
|
|
தொகுத்தறி முப்பத்து மூன்று தொகுமின் |
|
|
|
பதித்தறி .(1). பத்தெட்டும் பாரா திகணால் |
|
|
|
உதித்தறி மூன்றிரண் டொன்றின் முறையே |
|
|
|
.(1). பத்தெட்டுப் |
|
|
|
|
|
|
|
.748.. |
|
|
|
முறைமுறை யாய்ந்து முயன்றில ராகில் |
|
|
|
இறையிறை யார்க்கும் இருக்க அரிது |
|
|
|
மறையது காரண மற்றொன்று மில்லை |
|
|
|
பறையறை யாது பணிந்து முடியே |
|
|
|
|
|
|
|
.749.. |
|
|
|
முடிந்த தறியார் முயல்கின்ற மூர்க்கர் |
|
|
|
இட்ஞ்சில் இருக்க விளக்கெரி கொண்டு |
|
|
|
கடிந்தனன் மூளக் கதுவவல் லார்க்கு |
|
|
|
நடந்திடும் பாரினில் நண்ணலு மாமே |
|
|
|
|
|
|
|
.750.. |
|
|
|
நண்ணு சிறுவிர னாணாக மூன்றுக்கும் |
|
|
|
பின்னிய மார்பிடைப் பேராமல் ஒத்திடுஞ் |
|
|
|
சென்னியின் மூன்றுக்குன்ய் சேரவே .(1). நின்றிடும் |
|
|
|
உன்னி .(2). யுணர்ந்திடும் ஓவியந் தானே |
|
|
|
.(1). நின்றிடில் |
|
|
|
.(2). அணைந்திடும் |
|
|
|
|
|
|
|
.751.. |
|
|
|
ஓவிய மான வுணர்வை அறிமின்கள் |
|
|
|
பாவிக ளித்தின் பயனறி வாரில்லை |
|
|
|
தீவினை யாமுடன் மண்டல மூன்றுக்கும் |
|
|
|
பூவில் இருந்திடும் புண்ணியத் தண்டே |
|
|
|
|
|
|
|
.752.. |
|
|
|
தண்டுடன் ஓடித் தலைப்பெய்த யோகிக்கு |
|
|
|
மண்டல மூன்று .(1). மகிழ்ந்துடல் ஒத்திடுங் |
|
|
|
கண்டவர் கண்டனர் காணார் வினைப்பயன் |
|
|
|
பிண்டம் பிரியப் பிணங்குகின் றாரே |
|
|
|
.(1). மகிழ்ந்துடன் |
|
|
|
|
|
|
|
.753.. |
|
|
|
பிணங்கி அழிந்திடும் பேறது கேள்நீ |
|
|
|
அணங்குட னாதித்த னாறு விரியின் |
|
|
|
வணங்குட னேவந்த வாழ்வு குலைந்து |
|
|
|
சுணங்கனுக் காகச் சுழல்கின்ற வாறே |
|
|
|
|
|
|
|
.754.. |
|
|
|
சுழல்கின்ற வாறின் துணைமலர் காணான் |
|
|
|
தழலிடைப் புக்கிடுந் தன்னு ளிலாமற் |
|
|
|
கழல்கண்ட போம்வழி காணவல் லார்க்குக் |
|
|
|
குழல்வழி நின்றிடுங் கூத்தனு மாமே |
|
|
|
|
|
|
|
.755.. |
|
|
|
கூத்தன் குறியிற் குணம்பல கண்டவர் |
|
|
|
சாத்திரந் தன்னைத் தலைப்பெய்து நிற்பர்கள் |
|
|
|
பார்த்திருந் துள்ளே அனுபோக நோக்கிடில் |
|
|
|
ஆத்தனு மாகி யலர்ந்திரு மொன்றே |
|
|
|
|
|
|
|
.756.. |
|
|
|
ஒன்றில் வளர்ச்சி உலப்பிலி கேளினி |
|
|
|
நன்றென்று மூன்றுக்கு நாளது சென்றிடுஞ் |
|
|
|
சென்றிடு முப்பதுஞ் சேர இருந்திடிற் |
|
|
|
குன்றிடைப் பொன்திகழ் கூத்தனு மாமே |
|
|
|
|
|
|
|
.757.. |
|
|
|
கூத்தவன் ஒன்றிடுங் கூர்மை அறிந்தங்கே |
|
|
|
ஏத்துவர் பத்தினில் எண்டிசை தோன்றிடப் |
|
|
|
பார்த்து மகிழ்ந்து பதுமரை நோக்கிடிற் |
|
|
|
சாத்திடு நூறு தலைப்பெய்ய லாமே |
|
|
|
|
|
|
|
.758.. |
|
|
|
சாத்திடு நூறு தலைப்பெய்து நின்றவர் |
|
|
|
காத்துடல் ஆயிரங் கட்டுறக் காண்பர்கள் |
|
|
|
சேர்த்துடல் ஆயிரஞ் சேர இருந்தவர் |
|
|
|
மூத்துடன் .(1). கோடி யுகமது வாமே |
|
|
|
.(1). கூடி |
|
|
|
|
|
|
|
.759.. |
|
|
|
உகங்கோடி கண்டும் ஒசிவற நின்று |
|
|
|
அகங்கோடி .(1). கண்டு ளயலறக் காண்பர்கள் |
|
|
|
சிவங்கோடி விட்டுச் செறிய இருந்தங் |
|
|
|
குகங்கோடி கண்டல் குயருறு வாரே |
|
|
|
.(1). கண்டு ளயர்வறக் |
|
|
|
|
|
|
|
.760.. |
|
|
|
உயருறு வாருல கத்தொடுங் கூடிப் |
|
|
|
பயனுறு வார்பலர் தாமறி யாமற் |
|
|
|
செயலுறு வார்சிலர் சிந்தையி லாமற் |
|
|
|
கயலுறு கண்ணியைக் காணகி லாரே |
|
|
|
|
|
|
|
.761.. |
|
|
|
காணகி லாதார் கழிந்தோடிப் போவர்கள் |
|
|
|
நாணகி லாதார் நயம்பேசி விடுவர்கள் |
|
|
|
காணகி லாதார் கழிந்த பொருளெலாங் |
|
|
|
காணகி லாமற் கழிகின்ற வாறே |
|
|
|
|
|
|
|
.762.. |
|
|
|
கழிகின்ற அப்பொருள் காணகி லாதார் |
|
|
|
கழிகின்ற அப்பொருள் காணலு மாகுங் |
|
|
|
கழிகின்ற வுள்ளே கருத்துற நோக்கிற் |
|
|
|
கழியாத அப்பொருள் காணலு மாமே |
|
|
|
|
|
|
|
.763.. |
|
|
|
கண்ணன் பிறப்பிலி காணந்தி யாயுள்ளே |
|
|
|
எண்ணுந் திசையுடன் ஏகாந்த னாயிடுந் |
|
|
|
திண்ணென் றிருக்குஞ் சிவகதி .(1). யாநிற்கும் |
|
|
|
நண்ணும் பதமிது நாடவல் லார்கட்கே |
|
|
|
.(1). யாய்நிற்கும் |
|
|
|
|
|
|
|
.764.. |
|
|
|
நாடவல் லார்க்கு நமனில்லை கேடில்லை |
|
|
|
நாடவல் லார்கள் நரபதி யாய்நிற்பர் |
|
|
|
தேடவல் லார்கள் தெரிந்த பொருளிது |
|
|
|
கூடவல் லார்கட்குக் கூறலு மாமே |
|
|
|
|
|
|
|
.765.. |
|
|
|
கூறும் பொருளி தகார வுகாரங்கள் |
|
|
|
தேறும் பொருளிது சிந்தையுள் நின்றிடக் |
|
|
|
கூறு மகாரங் குழல்வழி யோடிட |
|
|
|
ஆறும் அமர்ந்திடும் அண்ணலு மாமே |
|
|
|
|
|
|
|
.766.. |
|
|
|
அண்ணல் இருப்பிட மாரும் அறிகிலர் |
|
|
|
அண்ணல் இருப்பிடம் ஆய்ந்துகொள் வார்களுக் |
|
|
|
கண்ணல் அழிவின்றி உள்ளே அமர்ந்திடும் |
|
|
|
அண்ணலைக் காணில் அவனிவ வாகுமே |
|
|
|
|
|
|
|
.767.. |
|
|
|
அவனிவ நாகும் பரிசறி வாரில்லை |
|
|
|
அவனிவ நாகும் பரிசது கேள்நீ |
|
|
|
அவனிவ நோசை ஔiயினுள் ஒன்றிடும் |
|
|
|
அவனிவன் வட்டம தாகிநின் றானே |
|
|
|
|
|
|
|
.768.. |
|
|
|
வட்டங்க ளேழு மலர்ந்திடும் உம்முளே |
|
|
|
சிட்டன் இருப்பிடஞ் சேர அறிகிலீர் |
|
|
|
ஒட்டி யிருந்துள் உபாயம் உணர்ந்திடக் |
|
|
|
கட்டி இருப்பிடங் காணலு மாகுமே |
|
|
|
|
|
|
|
.769.. |
|
|
|
காணலு மாகும் பிரமன் அரியென்று |
|
|
|
காணலு மாகுங் கறைக்கண்டன் ஈசனைக் |
|
|
|
காணலு மாகுஞ் சதாசிவ சத்தியங் |
|
|
|
காணலு மாகுங் கலந்துடன் வைத்ததே |
|
|
|
|
|
|
|
|
|
15.. ஆயுள் பரிட்சை |
|
|
|
|
|
|
|
|
|
.770.. |
|
|
|
வைத்தகை சென்னியில் நேரிதாய்த் தோன்றிடில் |
|
|
|
உத்தம மிக்கிடில் ஓராறு தங்களா |
|
|
|
மத்த மிகுத்திட் டிரட்டிய தாயிடில் |
|
|
|
நித்தல் உயிர்க்கொரு திங்களில் ஓசையே |
|
|
|
|
|
|
|
.771.. |
|
|
|
ஓசையும் ஈசனும் ஒக்கும் உணர்வின்கண் |
|
|
|
ஓசை .(1). யிறந்தவர் ஈசனை உள்குவர் |
|
|
|
ஓசை யிறந்தவர் நெஞ்சினுள் ஈசனும் |
|
|
|
ஓசை யுணர்ந்த உணர்விது வாமே |
|
|
|
.(1). பிறந்தவர் |
|
|
|
|
|
|
|
.772.. |
|
|
|
ஆமே அழிகின்ற வாயுவை நோக்கிடில் |
|
|
|
நாமே உறைகின்ற நன்மை யளித்திடும் |
|
|
|
பூமேல் உறைகின்ற போதகம் வந்திடுந் |
|
|
|
தாமே யுலகில் தலைவனு மாமே |
|
|
|
|
|
|
|
.773.. |
|
|
|
தலைவ னிடம்வலஞ் சாதிப்பார் இல்லை |
|
|
|
தலைவ னிடம்வல மாயிடில் தையல் |
|
|
|
தலைவ னிடம்வலந் தன்வழி யஞ்சில் |
|
|
|
தலைவ நிடம்வலந் தன்வழி நூறே |
|
|
|
|
|
|
|
.774.. |
|
|
|
ஏறிய வாறினில் எண்பது சென்றிடுந் |
|
|
|
தேறிய ஏழிற் சிறக்கும் வகையெண்ணில் |
|
|
|
ஆறொரு பத்தாய் அமர்ந்த இரண்டையுந் |
|
|
|
தேறியே நின்று தௌiயிவ் வகையே |
|
|
|
|
|
|
|
.775.. |
|
|
|
இவ்வகை எட்டும் இடம்பெற ஓடிடில் |
|
|
|
அவ்வகை .(1). ஐம்பதே யென்ன அறியலாஞ் |
|
|
|
செவ்வகை ஒன்பதுஞ் சேரவே நின்றிடின் |
|
|
|
முவ்வகை யாமது முப்பத்து மூன்றே |
|
|
|
.(1). யையொன்பதே |
|
|
|
.(1). யொன்பதே |
|
|
|
.(1). யன்பதே |
|
|
|
|
|
|
|
.776.. |
|
|
|
மும்மூன்றும் ஒன்றும் முடிவுற நின்றிடிற் |
|
|
|
.(1). எண்மூன்றும் நாலும் இடவகை யாய்நிற்கும் |
|
|
|
ஐம்மூன்றும் ஓடி அகலவே நின்றிடிற் |
|
|
|
பன்மூன்றொ டீராறு பார்க்கலு மாமே |
|
|
|
.(1). எண்முன் றினாலும் |
|
|
|
|
|
|
|
.777.. |
|
|
|
பார்க்கலு மாகும் பகல்முப் பதுமாகில் |
|
|
|
ஆக்கலு மாகுமவ் வாறிரண் டுள்ளிட்டுப் |
|
|
|
போக்கலு மாகும் புகலற ஒன்றெனில் |
|
|
|
தேக்கலு மாகுந் திருந்திய பத்தே |
|
|
|
|
|
|
|
.778.. |
|
|
|
ஏயிரு நாளும் இயல்புற ஓடிடிற் |
|
|
|
பாயிரு நாலும் பகையற நின்றிடும் |
|
|
|
தேய்வுற மூன்றுந் திகழவே நின்றிடில் |
|
|
|
ஆயுரு வாறென் றளக்கலு மாமே |
|
|
|
|
|
|
|
.779.. |
|
|
|
அளக்கும் வகைநாலும் அவ்வழியே .(1). ஓடில் |
|
|
|
விளக்கும் ஒருநாலு மெய்ப்பட நிற்கும் |
|
|
|
துளக்கும் வகையைந்துந் தூய்நெறி ஓடில் |
|
|
|
களக்க மறமூன்றிற் காணலு மாமே |
|
|
|
.(1). ஓடிடில் |
|
|
|
|
|
|
|
.780.. |
|
|
|
காணலு மாகுங் கருதிய பத்தோடிற் |
|
|
|
காணலு மாகுங் கலந்த இரண்டையும் |
|
|
|
காணலு மாகுங் .(1). கலப்பற மூவைந்தேற் |
|
|
|
காணலு மாகுங் கருத்துற ஒன்றே |
|
|
|
.(1). கலப்புற மூவைந்தேழ் |
|
|
|
|
|
|
|
.781.. |
|
|
|
கருதும் இருபதிற் .(1). காண ஆறாகும் |
|
|
|
கருதிய .(2). ஐயைந்திற் காண்பது மூன்றாம் |
|
|
|
கருதும் இருப துடனாறு காணிற் |
|
|
|
கருதும் இரண்டெனக் காட்டலு மாமே |
|
|
|
.(1). ஈராறாகும் |
|
|
|
.(2). ஐந்திற் |
|
|
|
|
|
|
|
.782.. |
|
|
|
காட்டலு மாகுங் கலந்திரு பத்தேழில் |
|
|
|
காட்டலு மாகுங் கலந்தெழும் ஒன்றெனக் |
|
|
|
காட்டலு மாகுங் கலந்திரு பத்தெட்டிற் |
|
|
|
காட்டலு மாகுங் கலந்தஈ ரைந்தே |
|
|
|
|
|
|
|
.783.. |
|
|
|
ஈரைந்தும் ஐந்தும் இருமூன்றும் எட்டுக்கும் |
|
|
|
பாரஞ்சி நின்ற பகைபத்து நாளாகும் |
|
|
|
வாரஞ்செய் கின்ற .(1). வகையாறஞ் சாமாகில் |
|
|
|
ஓரஞ்சொ டொன்றொன் றெனவொன்று நாளே |
|
|
|
.(1). வகையான்ய் சமாதியில் |
|
|
|
|
|
|
|
.784.. |
|
|
|
ஒன்றிய நாள்கள் ஒருமுப்பத் தொன்றாகிற் |
|
|
|
கன்றிய நாலுங் கருத்துற மூன்றாகுஞ் |
|
|
|
சென்றுயிர் நாலெட்டுஞ் சேரவே நின்றிடின் |
|
|
|
மன்றியல் பாகு மனையில் இரண்டே |
|
|
|
|
|
|
|
.785.. |
|
|
|
மனையிலஒன் றாகும் மாதமு மூன்றுஞ் |
|
|
|
சுனையில்ஒன் றாகத் தொனித்தனன் நந்தி |
|
|
|
வினையற வோங்கி வௌiச்செய்து நின்றால் |
|
|
|
தனையுற நின்ற தலைவனு மாமே |
|
|
|
|
|
|
|
.786.. |
|
|
|
ஆரு மறியார் அளக்கின்ற வன்னியை |
|
|
|
ஆரு மறியார் அளக்கின்ற வாயுவை |
|
|
|
ஆரு மறியார் அழிகின்ற அப்பொருள் |
|
|
|
ஆரு மறியார் அறிவறிந் தேனே |
|
|
|
|
|
|
|
.787.. |
|
|
|
அறிவது வாயுவொ டைந்தறி வாய |
|
|
|
அறிவா வதுதான் உலகுயி ரத்தின் |
|
|
|
பிறிவுசெய் யாவகை பேணியுள் நாடிற் |
|
|
|
செறிவது நின்று திகழு மதுவே |
|
|
|
|
|
|
|
.788.. |
|
|
|
அதுவரு ளும்மரு ளான துலகம் |
|
|
|
பொதுவரு ளும்புக ழாளர்க்கு நாளு |
|
|
|
மதுவரு ளும்மலர் மங்கையர் செல்வி |
|
|
|
இதுவருள் செய்யும் இறையவ னாமே |
|
|
|
|
|
|
|
.789.. |
|
|
|
பிறப்பது சூழ்ந்த பெருந்தகை நந்தி |
|
|
|
குறிப்பது கூடிய கோலக் குரம்பைப் |
|
|
|
பழப்பதி யாவது பற்றறும் பாசம் |
|
|
|
அழப்படி செய்வார்க் ககலு மதியே |
|
|
|
|
|
|
|
|
|
16.. வாரசரம் |
|
|
|
|
|
|
|
|
|
.790.. |
|
|
|
வெள்ளிவெண் திங்கள் விளங்கும் புதனிடம் |
|
|
|
ஒள்ளிய மந்தன் இரவிசெவ் வாய்வலம் |
|
|
|
வள்ளிய பொன்னே வளரும் பிறையிடந் |
|
|
|
தெள்ளிய தேய்பிறை தான்வல மாமே |
|
|
|
|
|
|
|
.791.. |
|
|
|
வெள்ளிவெண் திங்கள் விளங்கும் புதன்மூன்றுந் |
|
|
|
தள்ளி இடத்தே தயங்குமே யாமாகில் |
|
|
|
ஒள்ளிய காயத்துக் கூன மிலையென்று |
|
|
|
வள்ளல் நமக்கு மகிழ்ந்துரைத் தானே |
|
|
|
|
|
|
|
.792.. |
|
|
|
செவ்வாய் வியாழஞ் சனிஞாயி றேஎன்னும் |
|
|
|
இவ்வா றறிகின்ற யோகி இறைவனே |
|
|
|
ஒவ்வாத வாயு வலத்துப் புரியவிட் |
|
|
|
டவ்வா றறிவார்க்கவ் வானந்த மாமே |
|
|
|
|
|
|
|
.793.. |
|
|
|
மாறி வருமிரு பான்மதி வெய்யவன் |
|
|
|
ஏறி இழியுந் இடைபிங் கலையிடை |
|
|
|
ஊறும் உயிர்நடு வேயுயி ருக்கிரந் |
|
|
|
தேறி அறிமின் தெரிந்து தௌiந்தே |
|
|
|
|
|
|
|
.794.. |
|
|
|
உதித்து வலத்திடம் போகின்ற போது |
|
|
|
.(1). அதிர்த்தஞ்சி யோடுத லாமகன் றாரும் |
|
|
|
உதித்தது வேமிக வோடிடு மாகில் |
|
|
|
உதித்த விராசி யுணர்ந்துகொ ளுற்றே |
|
|
|
.(1). அதிற்கஞ்சி |
|
|
|
.(1). அதிற்றுஞ்சி |
|
|
|
|
|
|
|
.795.. |
|
|
|
நடுவுநில் லாமல் இடம்வலம் ஓடி |
|
|
|
அடுகின்ற வாயுவை அந்தணன் கூடி |
|
|
|
இடுகின்ற வாறுசென் றின்பணி சேர |
|
|
|
முடிகின்ற தீபத்தின் முன்னுண்டென் றானே |
|
|
|
|
|
|
|
.796.. |
|
|
|
ஆயும் பொருளும் அணிமலர் மேலது |
|
|
|
வாயு விதமும் பதினா றுளவலி |
|
|
|
போய மனத்தைப் பொருகின்ற வாதாரம் |
|
|
|
ஆயவு நாளு .(1). முகுர்த்தமு மாமே |
|
|
|
.(1). முகுத்தமு |
|
|
|
|
|
|
|
|
|
17.. வாரசூலம் |
|
|
|
|
|
|
|
.797.. |
|
|
|
வாரத்திற் சூலம் வரும்வழி கூறுங்கால் |
|
|
|
நேரொத்த திங்கள் சனிகிழக் கேயாகும் |
|
|
|
பாரொத்த சேய்புதன் உத்தரம் பானுநாள் |
|
|
|
நேரொத்த வெள்ளி குடக்காக நிற்குமே |
|
|
|
|
|
|
|
.798.. |
|
|
|
தெக்கண மாகும் வியாழத்துச் சேர்த்திசை |
|
|
|
அக்கணி சூலமு மாமிடம் பின்னாகில் |
|
|
|
துக்கமும் இல்லை வலமுன்னே தோன்றிடின் |
|
|
|
மிக்கது மேல்வினை மேன்மேல் விளையுமே |
|
|
|
|
|
|
|
|
|
18.. கேசரி யோகம் |
|
|
|
|
|
|
|
.799.. |
|
|
|
கட்டக் கழன்று கீழ்நான்று வீழாமல் |
|
|
|
அட்டத்தைக் கட்டி அடுப்பை அணைகோலி |
|
|
|
விட்டத்தைப் பூட்டி மேற்பையைத் தாட்கோத்து |
|
|
|
நட்ட மிருக்க நமனில்லை தானே |
|
|
|
|
|
|
|
.800.. |
|
|
|
வண்ணான் ஒலிக்குஞ் சதுரப் பலகைமேற் |
|
|
|
கண்ணாறு மோழை படாமற் கரைகட்டி |
|
|
|
.(1). விண்ணாறு பாய்ச்சிக் குளத்தை .(2). நிரப்பினால் |
|
|
|
அண்ணாந்து பார்க்க அழுக்கற்ற வாறே |
|
|
|
.(1). விண்ணாற்றைத் தேக்கி |
|
|
|
.(2). நிரப்பிட்டு |
|
|
|
|
|
|
|
.801.. |
|
|
|
இடக்கை வலக்கை இரண்டையும் மாற்றித் |
|
|
|
துதிக்கையால் உண்பார்க்குச் சோரவும் வேண்டாம் |
|
|
|
உறக்கத்தை .(1). நீக்கி உணரவல் லார்க்கட் |
|
|
|
கிறக்கவும் வேண்டாம் இருக்கலு மாமே |
|
|
|
|
|
|
|
.802.. |
|
|
|
ஆய்ந்துரை செய்யில் அமுதநின் றூறிடும் |
|
|
|
வாய்ந்துரை செய்யும் வருகின்ற காலத்து |
|
|
|
நீந்துரை செய்யில் நிலாமண் டலமதாய்ப் |
|
|
|
பாய்ந்துரை செய்தது பாலிக்கு மாறே |
|
|
|
|
|
|
|
.803.. |
|
|
|
நாவின் நுனியை நடுவே சிவிறிடிற் |
|
|
|
சீவனும் அங்கே சிவனும் உறைவிடம் |
|
|
|
மூவரு முப்பத்து மூவருந் தோன்றுவர் |
|
|
|
சாவதும் இல்லை சதகோடி யூனே |
|
|
|
|
|
|
|
.804.. |
|
|
|
ஊனூறல் பாயும் உயர்வரை உச்சிமேல் |
|
|
|
வானூறல் பாயும் வகையறி வாரில்லை |
|
|
|
வானூறல் பாயும் வகையறி வாளர்க்குத் |
|
|
|
தேனூறல் உண்டு தௌiயலு மாமே |
|
|
|
|
|
|
|
.805.. |
|
|
|
மேலையண் ணவில் விரைந்திரு காலிடிற் |
|
|
|
காலனும் இல்லை கதவுந் திறந்திடும் |
|
|
|
ந்யாலம் அறிய நரைதிரை மாறிடும் |
|
|
|
பாலனு மாவான் பராநந்தி ஆணையே |
|
|
|
|
|
|
|
.806.. |
|
|
|
நந்தி முதலாக நாமேலே யேறிட்டுச் |
|
|
|
சந்தித் திருக்கில் தரணி முழுதாளும் |
|
|
|
பந்தித் திருக்கும் பகலோன் வௌiயாகச் |
|
|
|
சிந்தித் திருப்பவர் தீவினை யாளரே |
|
|
|
|
|
|
|
.807.. |
|
|
|
தீவினை யாடத் திகைத்தங் கிருந்தவர் |
|
|
|
நாவினை நாடின் நமனுக் கிடமில்லை |
|
|
|
பாவினை நாடிப் பயனறக் கண்டவர் |
|
|
|
தேவினை யாடிய தீங்கரும் பாமே |
|
|
|
|
|
|
|
.808.. |
|
|
|
தங்கரும் பாகவே செய்தொழி லுள்ளவர் |
|
|
|
ஆங்கரும் பாக அடையநா வேறிட்டுக் |
|
|
|
கோங்கரும் பாகிய கோணை நிமிர்த்திட |
|
|
|
ஊங்கரும் பாகியே ஊனீர் வருமே |
|
|
|
|
|
|
|
.809.. |
|
|
|
ஊனீர் வழியாக வுண்ணாவை யேறிட்டுத் |
|
|
|
தேனீர் பருகிச் சிவாய நமவென்று |
|
|
|
கானீர் வரும்வழி கங்கை தருவிக்கும் |
|
|
|
வானீர் வரும்வழி வாய்ந்தறி வீரே |
|
|
|
|
|
|
|
.810.. |
|
|
|
வாய்ந்தறிந் துள்ளே வழிபாடு செய்தவர் |
|
|
|
காய்ந்தறி வாகக் கருணை பொழிந்திடும் |
|
|
|
பாய்ந்தறிந் துள்ளே படிக்கத வொன்றிட்டுக் |
|
|
|
.(1). கூய்ந்தறிந் துள்ளுறை கோயிலு மாமே |
|
|
|
.(1). கோய்ந்தறிந் |
|
|
|
|
|
|
|
.811.. |
|
|
|
கோயிலின் உள்ளே குடிசெய்து வாழ்பவர் |
|
|
|
தாயினும் நல்லார் தரணி முழுதுக்குங் |
|
|
|
காயினும் நல்லவர் காய்ந்தவர் தம்முளுந் |
|
|
|
தீயினுந் தீயரத் தீவினை யாளர்க்கே |
|
|
|
|
|
|
|
.812.. |
|
|
|
தீவினை யாளர்த்தஞ் சென்னியி லுள்ளவன் |
|
|
|
பூவினை யாளர்த்தம் பொற்பதி யானவன் |
|
|
|
பாவினை யாளர்த்தம் பாகவத் துள்ளவன் |
|
|
|
மாவினை யாளர்த்தம் மதியிலுள் ளானே |
|
|
|
|
|
|
|
.813.. |
|
|
|
மதியி நெழுங்கதிர் போலப் பதினாறாய்ப் |
|
|
|
பதிமனை நூறு.(1).நூற் றிருபத்து நாலாய்க் |
|
|
|
கதிமனை யுள்ளே கணைகள் பரப்பி |
|
|
|
எதிர்மலை யாமல் இருந்தனன் தானே |
|
|
|
.(1). W\ற்றைம்பதோ டொன்றாய்க் கதிமன வுள்ளே |
|
|
|
|
|
|
|
.814.. |
|
|
|
இருந்தனள் சத்தியு மக்கலை சூழ |
|
|
|
இருந்தனள் கன்னியு மந்நடு வாக |
|
|
|
இருந்தனள் மானேர் முகநில வார |
|
|
|
இருந்தனள் தானும் அமுதம் பொழிந்தே |
|
|
|
|
|
|
|
.815.. |
|
|
|
பொழிந்த இருவெள்ளி பொன்மண் ணடையில் |
|
|
|
வழிந்துள் ளிருந்தது வான்முத லங்குக் |
|
|
|
கழிந்தது போகாமற் காக்கவல் லார்க்குக் |
|
|
|
கொழுந்தது வாகுண்- குணமது தனே |
|
|
|
|
|
|
|
.816.. |
|
|
|
குணமது வாகிய கோமள வல்லி |
|
|
|
மணமது வாக மகிழ்ந்தங் கிருக்கில் |
|
|
|
தனமது வாகிய தத்துவ ஞானம் |
|
|
|
இனமது வாக இருந்தனன் தானே |
|
|
|
|
|
|
|
.817.. |
|
|
|
இருந்த பிராணனும் உள்ளே எழுமாம் |
|
|
|
பரிந்தஇத் தண்டுடன் அண்டம் பரிய |
|
|
|
விரிந்தஅப் பூவுடன் மேலெழ வைக்கின் |
|
|
|
மலர்ந்தது மண்டலம் வாழலு மாமே |
|
|
|
|
|
|
|
.818.. |
|
|
|
மண்டலத் துள்ளே மனவொட்டி யாணத்தைக் |
|
|
|
கண்டகத் தங்கே கருதியே கீழ்க்கட்டிப் |
|
|
|
பண்டகத் துள்ளே பகலே ஔiயாகக் |
|
|
|
குண்டலக் காதனுங் கூத்தொழிந் தானே |
|
|
|
|
|
|
|
.819.. |
|
|
|
ஒழிகின்ற வாயுவும் உள்ளே அமருங் |
|
|
|
கழிகின்ற வாயுவுங் காக்கலு மாகும் |
|
|
|
வழிகின்ற காலத்து வட்டக் கழலைப் |
|
|
|
பழிக்கின்ற காலத்துப் பையகற் றீரே |
|
|
|
|
|
|
|
.820.. |
|
|
|
பையினி நுள்ளே படிக்கத வொன்றிடின் |
|
|
|
மெய்யினிநுள்ளே விளங்கும் ஔiயதாங் |
|
|
|
கையினுள் வாயுக் கதித்தங் கெழுந்திடின் |
|
|
|
மையணி கோயில் மணிவிளக் காமே |
|
|
|
|
|
|
|
.821.. |
|
|
|
விளங்கிடும் வாயுவை மேலெழ உன்னி |
|
|
|
.(1). நலங்கிடுங் கண்டத்து நாபியி நுள்ளே |
|
|
|
வணங்கிடு மண்டலம் வாய்த்திடக் கும்பிச் |
|
|
|
சுணங்கிட நின்றவை சொல்லலு மாமே |
|
|
|
.(1). நலண்-கிடுண்- காமத்து நாடியி Wள்ளே |
|
|
|
|
|
|
|
.822.. |
|
|
|
சொல்லலு மாயிடு மாகத்து வாயுவுஞ்f |
|
|
|
சொல்லலு மாகு மண்ணீர்க் கடினமுஞ்f |
|
|
|
சொல்லலு மாகும் இவையஞ்சுங் கூடிடிற் |
|
|
|
சொல்லலு மாந்தூர தெரிசனந் தானே |
|
|
|
|
|
|
|
.823.. |
|
|
|
தூர தெரிசனஞ் f சொல்லுவன் காணலாங் |
|
|
|
காராருங் கண்ணி கடைன்யான முட்பெய்தி |
|
|
|
ஏராருந் தீபத் தெழிற்சிந்தை வைத்திடிற் |
|
|
|
பாரா ருலகம் பகன்முன்ன தாமே |
|
|
|
|
|
|
|
.824.. |
|
|
|
முன்னெழு நாபிக்கு முந்நால் விரற்கீழே |
|
|
|
பன்னெழு வேதப் பகலொளி யுண்டென்னும் |
|
|
|
நன்னெழு நாதத்து நற்றீபம் வைத்திடத் |
|
|
|
தன்னெழு கோயில் தலைவனு மாமே |
|
|
|
|
|
|
|
|
|
19.. .(1). பரியண்-க யோகம் |
|
|
|
.(1). பரியண்-கி யோகம் |
|
|
|
|
|
|
|
.825.. |
|
|
|
பூசு வனவெல்லாம் பூசிப் புலர்த்திய |
|
|
|
வாச நறுங்குழல் மாலையுஞ்f சாத்திக் |
|
|
|
காயக் குழலி கலவி யொடுங்கலந் |
|
|
|
.(1). தூசித் துளையுறத் தூங்காது .(2). போகமே |
|
|
|
.(1). தூசத் துணையறத் |
|
|
|
.(2). யோகமே |
|
|
|
.(2). போதமே |
|
|
|
.(2). மோகமே |
|
|
|
|
|
|
|
.826.. |
|
|
|
போகத்தை யுன்னவே போகாது வாயுவு |
|
|
|
மோகத்தை வெள்ளியு மீளும் வியாழத்தில் |
|
|
|
சூதொத்த மென்முலை யாளுநற் சூதனுந் |
|
|
|
தாதிற் குழைந்து தலைகண்ட வாறே |
|
|
|
|
|
|
|
.827.. |
|
|
|
கண்டனுங் கண்டியுங் காதல்செய் யோகத்து |
|
|
|
மாண்டலங் கொண்டிரு பாலும் வௌiநிற்கும் |
|
|
|
வண்டியை மேற்கொண்டு வானீர் உருட்டிடத் |
|
|
|
தண்டொரு காலுந் தளராது அங்கமே |
|
|
|
|
|
|
|
.828.. |
|
|
|
அங்கப் புணர்ச்சியு மாகின்ற தத்துவ |
|
|
|
மங்கத்தில் விந்து வருகின்ற போகத்துப் |
|
|
|
பங்கப் படாமற் பரிகரித் துத்தம்மைத் |
|
|
|
தங்கிக் கொடுக்கத் தலைவனு மாமே |
|
|
|
|
|
|
|
.829.. |
|
|
|
தலைவனு மாயிடுந் தன்வழி ஞானந் |
|
|
|
தலைவனு மாயிடுந் தன்வழி போகந் |
|
|
|
தலைவனு மாயிடுந் தன்வழி யுள்ளே |
|
|
|
தலைவனு மாயிடுந் தன்வழி அஞ்சே |
|
|
|
|
|
|
|
.830.. |
|
|
|
அஞ்சு .(1). கடிகைமேல் ஆறாங் கடிகையில் |
|
|
|
துஞ்சுவ தொன்றத் துணைவி துணைவன்பால் |
|
|
|
நெஞ்சு நிறைந்தது வாய்கொளா தென்றது |
|
|
|
பஞ்ச கடிகை பரியங்க யோகமே |
|
|
|
.(1). கடிகையில் ஆறாண்- கடிகைமேற் |
|
|
|
|
|
|
|
.831.. |
|
|
|
பரியங்க யோகத்துப் பஞ்ச கடிகை |
|
|
|
அரியஇவ் வியோகம் அடைந்தவர்க் கல்லது |
|
|
|
சரிவளை முன்கைச்சி சந்தனக் கொங்கை |
|
|
|
உருவித் தழுவ ஒருவற்கொண் ணாதே |
|
|
|
|
|
|
|
.832.. |
|
|
|
ஒண்ணாத யோகத்தை உற்றவ ராரென்னில் |
|
|
|
விண்ணந்த கங்கை விரிசடை வைத்தவன் |
|
|
|
பண்ணார் அமுதினைப் பஞ்ச கடிகையில் |
|
|
|
எண்ணா மெனஎண்ணி இருந்தான் இருந்தே |
|
|
|
|
|
|
|
.833.. |
|
|
|
ஏய்ந்த பிராயம் இருபது முப்பதும் |
|
|
|
வாய்ந்த குழலிக்கு மன்னர்க்கு மானந்தம் |
|
|
|
வாய்ந்த குழலியோ டைந்து மலர்ந்திடச் |
|
|
|
சோர்ந்தன சித்தமுன்ய் சோர்வில்லை வெள்ளிக்கே |
|
|
|
|
|
|
|
.834.. |
|
|
|
வெள்ளி யுருகிப் பொன்வழி ஓடாமே |
|
|
|
கள்ளத்தட் டானார் கரியிட்டு மூடினார் |
|
|
|
கொள்ளி பறியக் குழல்வழி யேசென்று |
|
|
|
வள்ளியுண் ணாவில் அடக்கிவைத் தாரே |
|
|
|
|
|
|
|
.835.. |
|
|
|
வைத்த இருவருந் தம்மின் மகிழ்ந்துடன் |
|
|
|
சித்தங் கலங்காது செய்கின்ற ஆனந்தம் |
|
|
|
பத்து வகைக்கும் பதினெண் கணத்துக்கும் |
|
|
|
வித்தக நாய்நிற்கும் வெங்கதி ரோனே |
|
|
|
|
|
|
|
.836.. |
|
|
|
வெங்கதி ருக்குஞ் சனிக்கும் இடைநின்ற |
|
|
|
நங்கையைப் புல்லிய நம்பிக்கோ ரானந்தந் |
|
|
|
தங்களிற் பொன்னிடை வெள்ளிதா ழாமுனந் |
|
|
|
தங்களிற் செவ்வாய் .(1). புதைத்திருந் தாரே |
|
|
|
.(1). புதனிருந் தானே |
|
|
|
|
|
|
|
.837.. |
|
|
|
திருத்திப் புதனைத் திருத்தல்செய் வார்க்குக் |
|
|
|
கருத்தழ காலே கலந்தங் கிருக்கில் |
|
|
|
வருத்தமு மில்லையா மங்கை பங்கற்குந் |
|
|
|
துருத்தியுள் வெள்ளியஞ் சோரா தெழுமே |
|
|
|
|
|
|
|
.838.. |
|
|
|
எழுகின்ற தீயை முன்னே கொண்டு சென்றிட்டால் |
|
|
|
மெழுகுரு கும்பரி செய்திடும் மெய்யே |
|
|
|
உழுகின்ற தில்லை ஔயை அறிந்தபின் |
|
|
|
விழுகின்ற தில்லை வௌiயறி வார்க்கே |
|
|
|
|
|
|
|
.839.. |
|
|
|
வௌiயை அறிந்து வௌiயி னடுவே |
|
|
|
.(1). ஔiயை அறியி நுளிமுறி யாமே |
|
|
|
தௌiவை அறிந்து செழுநந்தி யாலே |
|
|
|
வௌiயை அறிந்தனன் மேலறி யேனே |
|
|
|
.(1). உளியை |
|
|
|
|
|
|
|
.840.. |
|
|
|
மேலாந் தலத்தில் விரிந்தவ ராரெனின் |
|
|
|
மாலாந் திசைமுகன் மாநந்தி யாயவர் |
|
|
|
நாலா நிலத்தி நடுவான வப்பொருள் |
|
|
|
மேலா யுரைத்தனர் மின்னிடை யாளுக்கே |
|
|
|
|
|
|
|
.841.. |
|
|
|
மின்னிடை யாளுமின் னாளனுங் கூட்டத்துப் |
|
|
|
பொன்னிடை வட்டத்தின் உள்ளே புகப்பெய்து |
|
|
|
தன்னொடு தன்னை தலைப்பெய்ய .(1). வல்லாரேன் |
|
|
|
மண்ணிடைப் பல்லூழி வாழலு மாமே |
|
|
|
.(1). வல்லீரே |
|
|
|
|
|
|
|
.842.. |
|
|
|
வாங்க லிறுதலை வாங்கலில் வாங்கிய |
|
|
|
வீங்க வலிக்கும் விரகறி வாரில்லை |
|
|
|
வீங்க வலிக்கும் விரகறி வாளரும் |
|
|
|
ஓங்கிய தன்னை உதம்பண்ணி னாரே |
|
|
|
|
|
|
|
.843.. |
|
|
|
உதமறிந் தங்கே ஒருசுழிப் பட்டாற் |
|
|
|
கதமறிந் தங்கே கபாலங் கறுக்கும் |
|
|
|
இதமறிந் தென்றும் இருப்பாள் ஒருத்தி |
|
|
|
பதமறிந் தும்முளே பார்க்கடிந் தாளே |
|
|
|
|
|
|
|
.844.. |
|
|
|
பாரில்லை நீரில்லை பங்கயம் ஒன்றுண்டு |
|
|
|
தாரில்லை வேரில்லை தாமரை பூத்தது |
|
|
|
ஊரில்லை காணும் ஔiயது .(1). ஒன்றுண்டு |
|
|
|
கீழில்லை மேலில்லை கேள்வியிற் பூவே |
|
|
|
.(1). ஒன்றில்லை |
|
|
|
|
|
|
|
|
|
20.. அமுரிதாரணை |
|
|
|
|
|
|
|
.845.. |
|
|
|
உடலிற் கிடந்த வுறுதிக் குடிநீர்க் |
|
|
|
கடலிற் சிறுகிணற் றேற்றமிட் டாலொக்கும் |
|
|
|
உடலில் ஒருவழி ஒன்றுக் கிறைக்கில் |
|
|
|
நடலைப் படாதுயிர் நாடலு மாமே |
|
|
|
|
|
|
|
.846.. |
|
|
|
தௌiதரும் இந்தச் சிவநீர் பருகில் |
|
|
|
ஔiதரு மோராண்டில் ஊனமொன் றில்லை |
|
|
|
வளியுறும் எட்டின் மனமும் ஒடுங்குங் |
|
|
|
களிதருங் காயங் கனகம தாமே |
|
|
|
|
|
|
|
.847.. |
|
|
|
நூறு மிளகு நுகருஞ் சிவத்தினீர் |
|
|
|
மாறும் இதற்கு மருந்தில்லை மாந்தர்கள் |
|
|
|
தேறில் இதனைத் தௌiயுச்சி கப்பிடின் |
|
|
|
மாறும் இதற்கு மறுமயி ராமே |
|
|
|
|
|
|
|
.848.. |
|
|
|
கரையரு கேநின்ற கானல் உவரி |
|
|
|
வரைவரை என்பர் மதியிலா மாந்தர் |
|
|
|
நுரைதிரை நீக்கி நுகரவல் லார்க்கு |
|
|
|
நரைதிரை மாறு நமனுமங் கில்லையே |
|
|
|
|
|
|
|
.849.. |
|
|
|
அளக நன்னுத லாயோ ரதிசயங் |
|
|
|
களவு காயங் கலந்தஇந் நீரிலே |
|
|
|
மிளகு நெல்லியும் மஞ்சளும் வேம்பிடில் |
|
|
|
.(1). இளகும் மேனி இருளுங் கபாலமே |
|
|
|
.(1). இளகிடு |
|
|
|
|
|
|
|
.850.. |
|
|
|
வீர மருந்தென்றும் விண்ணோர் மருந்தென்றும் |
|
|
|
நாரி மருந்தென்றும் நந்தி அருள்செய்தான் |
|
|
|
ஆதி மருந்தென் றறிவார் அகலிடஞ் |
|
|
|
சோதி மருந்திது சொல்லவொண் ணாதே |
|
|
|
|
|
|
|
|
|
21.. சந்திர யோகம் |
|
|
|
|
|
|
|
.851.. |
|
|
|
எய்து .(1). மதிக்கலை சூக்கத்தி லேறியே |
|
|
|
எய்துவ தூலம் இருவகைப் பக்கத்துள் |
|
|
|
எய்துங் கலைபோல ஏறி இறங்குமாந் |
|
|
|
துய்யது சூக்கத்து தூலத்த காயமே |
|
|
|
.(1). மதிநிலை |
|
|
|
|
|
|
|
.852.. |
|
|
|
ஆகின்ற சந்திரன் சூரியன் அங்கியுள் |
|
|
|
ஆகின்ற ஈரெட்டா டாறிரண் டீரைந்துள் |
|
|
|
ஏகின்ற வக்கலை யெல்லா மிடைவழி |
|
|
|
ஆகின்ற யோகி அறிந்த அறிவே |
|
|
|
|
|
|
|
.853.. |
|
|
|
ஆறாத தாங்கலை ஆதித்தன் சந்திரன் |
|
|
|
நாறா நலங்கினார் ஞாலங் கவர்க்கொளப் |
|
|
|
பேறாங் கலைமுற்றும் பெருங்கால் ஈரெட்டு |
|
|
|
மாறாக் கதிர்க்கொள்ளு மற்றங்கி கூடவே |
|
|
|
|
|
|
|
.854.. |
|
|
|
பத்தும் இரண்டும் பகலோன் உயர்க்கலை |
|
|
|
பத்தினொ டாறும் உயர்க்கலை பான்மதி |
|
|
|
ஒத்தநல் அங்கிய தெட்டெட் டுயர்க்கலை |
|
|
|
அத்திறன் நின்றமை ஆய்ந்துகொள் வீரே |
|
|
|
|
|
|
|
.855.. |
|
|
|
எட்டெட் டனிலின் கலையாகும் ஈராறுட் |
|
|
|
சுட்டப் படுங்கதி ரோனுக்குஞ் சூழ்கலை |
|
|
|
கட்டப் படுமீ ரெட்டா மதிக்கலை |
|
|
|
ஒட்டப் படாஇவை ஒன்றோடொன் றாவே |
|
|
|
|
|
|
|
.856.. |
|
|
|
எட்டெட்டும் ஈராறும் .(1). ஈரெட்டுந் தீக்கதிர் |
|
|
|
சுட்டிட்ட சோமனில் தோன்றுங் கலையெனக் |
|
|
|
கட்டப் படுந்தார கைகதிர் நாலுள |
|
|
|
கட்டிட்ட தொண்ணூற்றொ டாறுங் கலாதியே |
|
|
|
.(1). ஈரெட்டுத் |
|
|
|
|
|
|
|
.857.. |
|
|
|
எல்லாக் கலையும் இடைபிங் கலைநடுச் |
|
|
|
சொல்லா நடுநாடி யூடே தொடர்மூலஞ் |
|
|
|
செல்லா எழுப்பிச் சிரத்துடன் சேர்தலால் |
|
|
|
நல்லோர் திருவடி நண்ணிநிற் போரே |
|
|
|
|
|
|
|
.858.. |
|
|
|
அங்கியிற் சின்னக் கதிரிரண் டாட்டத்துத் |
|
|
|
தங்கிய தாரகை யாகுஞ் சசிபானு |
|
|
|
வங்கிய தாரகை யாகும் பரையொளி |
|
|
|
தங்கு நவசக்ர மாகுந் தரணிக்கே |
|
|
|
|
|
|
|
.859.. |
|
|
|
தரணி சலங்கனல் கால்தக்க வானம் |
|
|
|
அரணிய பானு அருந்திங்கள் அங்கி |
|
|
|
முரணிய தாரகை முன்னிய ஒன்பான் |
|
|
|
பிரணவ மாகும் பெருநெறி தானே |
|
|
|
|
|
|
|
.860.. |
|
|
|
தாரகை மின்னுஞ் சசிதேயும் பக்கத்துத் |
|
|
|
தாரகை மின்னா சசிவளர் பக்கத்துத் |
|
|
|
தாரகை பூவிற் சகலத்தி யோனிகள் |
|
|
|
தாரகைத் தாரகை தானான்ய் சொரூபமே |
|
|
|
|
|
|
|
.861.. |
|
|
|
முற்பதி னைஞ்சின் முளைத்துப் பெருத்திடும் |
|
|
|
பிற்பதி னைஞ்சிற் பெருத்துச் சிறுத்திடும் |
|
|
|
அப்பதி னைஞ்சும் அறியவல் லார்க்கட்குச் |
|
|
|
செப்பரி யாங்கழல் சேர்தலு மாமே |
|
|
|
|
|
|
|
.862.. |
|
|
|
அங்கி எழுப்பி யருங்கதிர் ஊட்டத்துத் |
|
|
|
தங்குஞ் சசியால் தாமம்ஐந் தைந்தாகிப் |
|
|
|
பொங்கிய தாரகை யாம்புலன் போக்கறத் |
|
|
|
திங்கள் கதிரங்கி சேர்க்கின்ற யோகமே |
|
|
|
|
|
|
|
.863.. |
|
|
|
ஒன்றிய ஈரெண் கலையும் உடலுற |
|
|
|
நின்றது கண்டும் நினைக்கிலர் நீதர்கள் |
|
|
|
கன்றிய காலன் .(1). கருத்துழி வைத்தபின் |
|
|
|
சென்றதில் வீழ்வர் திகைப்பொழி யாரே |
|
|
|
.(1). கருக்குழி |
|
|
|
.(1). கழுக்குறி |
|
|
|
|
|
|
|
.864.. |
|
|
|
அங்கி மதிகூட வாகும் கதிரொளி |
|
|
|
அங்கி கதிர்க்கூட வாகு மதியொளி |
|
|
|
அங்கி .(1). சசிகதிர் கூடவத் தாரகை |
|
|
|
தங்கி யதுவே சகலமு மாமே |
|
|
|
.(1). சிவத்தினிற் |
|
|
|
|
|
|
|
.865.. |
|
|
|
ஈராறு பெண்கலை எண்ணிரண் டாண்கலை |
|
|
|
பேராமற் புக்குப் பிடித்துக் கொடுவந்து |
|
|
|
நேராகத் தோன்றும் நெருப்புற வேபெய்யில் |
|
|
|
ஆராத ஆனந்தம் ஆனந்த மானதே |
|
|
|
|
|
|
|
.866.. |
|
|
|
காணும் பரிதியின் காலை இடத்திட்டு |
|
|
|
மாணும் மதியதன் காலை வலத்திட்டுப் |
|
|
|
பேணியே யிவ்வாறு பிழையாமற் செய்வீரேல் |
|
|
|
ஆணி கலங்காதவ் வாயிரத் தாண்டே |
|
|
|
|
|
|
|
.867.. |
|
|
|
பாலிக்கும் நெஞ்சம் .(1). பறையோசை ஒன்பதில் |
|
|
|
ஆலிக்கும் அங்கே அமரர் பராபரன் |
|
|
|
மேலைக்கு முன்னே விளக்கொளி யாய்நிற்குங் |
|
|
|
காலைக்குச் சங்கு கதிரவன் தானே |
|
|
|
.(1). பரையோசை |
|
|
|
|
|
|
|
.868.. |
|
|
|
கதிரவன் சந்திரன் காலம் அளக்கும் |
|
|
|
பொதிரவ னுள்ளே பொழிமழை நிற்கும் |
|
|
|
அதிரவ னண்டப் புறஞ்சென் றடர்ப்ப |
|
|
|
எதிரவ நீச நிடமது தானே |
|
|
|
|
|
|
|
.869.. |
|
|
|
உந்திக் கமலத் துதித்தெழுஞ் சோதியை |
|
|
|
.(1). அந்திக்கு மந்திர மாரும் அறிகிலார் |
|
|
|
.(2). அந்திக்கு மந்திர மாரும் அறிந்தபின் |
|
|
|
தந்தைக்கு முன்னே .(3). மகன்பிறந் தானே |
|
|
|
.(1). அந்தித்த வண்ணம் அறிவா லறிந்திலர் |
|
|
|
.(2). அந்தித்த வண்ணம் அறிவா லறிந்தபின் |
|
|
|
.(3). மகனிருந் தானே |
|
|
|
|
|
|
|
.870.. |
|
|
|
ஊதியம் ஏதும் அறியார் உரைப்பினும் |
|
|
|
ஓதியும் ஏதும் அறியாத ஊமர்கள் |
|
|
|
ஆதியும் அந்தமும் அந்திக்க வல்லீரேல் |
|
|
|
வேதியன் அங்கே வௌiப்படுந் தானே |
|
|
|
|
|
|
|
.871.. |
|
|
|
பாம்பு மதியைத் .(1). தினலுறும் பாம்பினைத் |
|
|
|
தங்கு கதிரையஞ் .(2). சோதித் தனலுறும் |
|
|
|
பாம்பு மதியும் பகைதீர்த் .(3). துடங்கொளீஇ |
|
|
|
நீண்-கல் .(4). கொடானே நெடுந்தகை யானே |
|
|
|
.(1). தினலுறு மப்பாம்பு |
|
|
|
.(2). சேரத் தினலுறும் |
|
|
|
.(3). துடங்கொளின் |
|
|
|
.(4). கொடானெம் |
|
|
|
|
|
|
|
.872.. |
|
|
|
அயின்றது வீழ்வள வுந்துயில் இன்றிப் |
|
|
|
பயின்ற சசிவீழ் பொழுதில் துயின்று |
|
|
|
நயந்தரு பூரணை உள்ள நடத்தி |
|
|
|
வியந்தரு பூரணை மேவுன்ய் சசியே |
|
|
|
|
|
|
|
.873.. |
|
|
|
சசியுதிக் குமஅள வுந்துயி இன்றிச் |
|
|
|
சசியுதித் தானேல் தனதூண் அருந்திச் |
|
|
|
சசிசரிக் கின்றள வுந்துயி லாமற் |
|
|
|
சசிசரிப் .(1). பிங்கட்டன் கண்டுயில் கொண்டதே |
|
|
|
.(1). பிங்கட் டன்றுயில் |
|
|
|
|
|
|
|
.874.. |
|
|
|
ஊழி பிரியா திருக்கின்ற யோகிகள் |
|
|
|
நாழிகை யாக நமனை அளப்பர்க்கள் |
|
|
|
ஊழி முதலாய் உயர்வார் உலகினில் |
|
|
|
தாழவல் லார்.க்.(1).இச் சசிவன்ன ராமே |
|
|
|
.(1). இன் வழிச்சைவ ராமே |
|
|
|
|
|
|
|
.875.. |
|
|
|
தண்மதி பானுச் சரிபூமி யேசென்று |
|
|
|
மண்மதி காலங்கள் மூன்றும் வழிகண்டு |
|
|
|
வெண்மதி தோன்றிய நாளில் விளைந்தபின் |
|
|
|
தண்மதி வீழ்வள விற்கண மின்றே |
|
|
|
|
|
|
|
.876.. |
|
|
|
வளர்க்கின்ற ஆதித்தன் தங்கலை யாறுந் |
|
|
|
தளர்க்கின்ற சந்திரன் தங்கலை யாறு |
|
|
|
.(1). மலர்ந்தெழு பன்னிரண் டங்குலம் ஓடி |
|
|
|
அலர்ந்து விழுந்தமை யாரறி வாரே |
|
|
|
.(1). மலர்ந்தேறு பன்னிரண்டோ டெட்டு நாலாம் |
|
|
|
|
|
|
|
.877.. |
|
|
|
ஆமுயிர்த் தேய்மதி நாளே யெனல்விந்து |
|
|
|
போம்வழி எங்கணும் போகாது யோகிக்குக் |
|
|
|
காமுற இன்மையிற் கட்டுண்ணு மூலத்தில் |
|
|
|
ஓமதி யத்துள்விட் டுரையுணர் வாலே |
|
|
|
|
|
|
|
.878.. |
|
|
|
வேறுறச் செங்கதிர் மெய்க்கலை யாறொடுஞ் |
|
|
|
சூறுற நாங்குந் தொடர்ந்துற வேநிற்கும் |
|
|
|
ஈறிலி நங்கலை யீரைந்தொ டேமதித் |
|
|
|
தாறுட் கலையுள் அகலுவா வாமே |
|
|
|
|
|
|
|
.879.. |
|
|
|
உணர்விந்து சோணி உறவினன் வீசும் |
|
|
|
புணர்விந்து வீசுங் கதிரிற் குறையில் |
|
|
|
உணர்வும் உடம்பும் உவையொக்க நிற்கில் |
|
|
|
உணர்வும் உடம்பும் ஒருகால் விடாவே |
|
|
|
|
|
|
|
.880.. |
|
|
|
விடாத மனம்பவ நத்தொடு மேவி |
|
|
|
நடாவு சிவசங்கின் நாதங் கொளுவிக் |
|
|
|
கடாவிடா ஐம்புலன் கட்டுண்ணும் வீடு |
|
|
|
படாதன இன்பம் பருகார் அமுதமே |
|
|
|
|
|
|
|
.881.. |
|
|
|
அமுதப் புனல்வரு மாற்றங் கரைமேற் |
|
|
|
குமிழிக் குட்சுட ரைந்தையுங் கூட்டிச் |
|
|
|
சமையத்தண் டோ ட்டித் தரிக்கவல் லார்க்கு |
|
|
|
நமன்இகில்லை நற்கலை நாளனஇல்லை தானே |
|
|
|
|
|
|
|
.882.. |
|
|
|
உண்ணீ ரமுத முறுமூ றலைத்திறந் |
|
|
|
தெண்ணீர் இணையடித் தாமரைக் கேசெலத் |
|
|
|
தெண்ணீர்ச் சமாதி யமர்ந்துதீ ராநலங் |
|
|
|
கண்ணாற் றொடேசென்று கால்வழி மாறுமே |
|
|
|
|
|
|
|
.883.. |
|
|
|
மாறு .(1). மதியும் .(2). மதித்திரு மாறின்றித் |
|
|
|
தாறு படாமல் தண்டோ டே தலைப்படில் |
|
|
|
ஊறு படாதுடல் வேண்டும் உபாயமும் |
|
|
|
பாறு படாஇன்பம் பார்மிசை பொங்குமே |
|
|
|
.(1). மதியுமா தித்தனு மாறின்றித் |
|
|
|
.(2). ஆதித்தனு |
|
|
|
.(2). மதித்திடு |
|
|
|
---------- |
|
|
|
|
|
|
|
This webpage was last revised on 16 August 2021. |
|
|
|
Please send your comments and corrections to the webmaster (pmadurai AT gmail.com). |
|
|
|
|
|
|
|
|