|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
tirumantiram of tirumUlar -part IIc (1419-1703) |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
tirumantiram of tirumUlar - part IIc - tantiram 5, 6 |
|
|
|
(10th tirumuRai in nampi ANTAr nampi anthology) |
|
|
|
(in Tamil Script, utf-8 format) |
|
|
|
திருமந்திரம் - (திருமூலர்) |
|
|
|
பத்தாம் திருமுறை |
|
|
|
ஐந்தாம் தந்திரம் (1419 - 1572) & |
|
ஆறாம் தந்திரம் (1573-1703) |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Acknowledgement : |
|
|
|
Our Sincere thanks go to the following persons for their assistance in the preparation of this work. |
|
|
|
Etext preparation & web version:: K. Kalyanasundaram, Lausanne, Switzerland and |
|
|
|
Proof-reading by Mr. G. Venugopalan, Dubai |
|
|
|
This etext was first put up in Inaimathi, Mylai versions on 1998 and converted to this unicode version on 13 Sept. 2002. |
|
|
|
|
|
|
|
© Project Madurai, 1998-2021. |
|
|
|
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to the preparation |
|
|
|
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. |
|
|
|
Details of Project Madurai are available at the website |
|
|
|
https://www.projectmadurai.org/ |
|
|
|
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact. |
|
|
|
Feel free to send the corrections by email to the webmaster "[email protected]". |
|
|
|
|
|
|
|
|
|
திருமூலர் அருளிய திருமந்திரம் |
|
|
|
ஐந்தாம் தந்திரம் (1419-1572) |
|
|
|
|
|
|
|
|
|
1. சுத்த சைவம் |
|
|
|
|
|
|
|
|
|
1419 |
|
|
|
ஊரும் உலகமும் ஓக்கப் படைக்கின்ற |
|
|
|
பேரறி வாளன் பெருமை குறித்திடின் |
|
|
|
மேருவும் மூவுல காளி யிலங்கெழுந் |
|
|
|
தாரணி நால்வகைச் சைவமு மாமே. 1 |
|
|
|
|
|
|
|
1420 |
|
|
|
சத்தும் அசத்துஞ் சதசத்துந் தான்கண்டு |
|
|
|
சித்தும் அசித்துஞ் சேர்வுறா மேநீத்த |
|
|
|
சுத்தம் அசுத்தமுந் தோய்வுறா மேநின்று |
|
|
|
நித்தம் பரஞ்சுத்த சைவர்க்கு நேயமே. 2 |
|
|
|
|
|
|
|
1421 |
|
|
|
கற்பன கற்றுக் கலைமன்னு மெய்யோகம் |
|
|
|
முற்பத ஞான முறைமுறை நண்ணியே |
|
|
|
சொற்பத மேவித் துரிசற்று மேலான |
|
|
|
தற்பரங் கண்டுளோர் சைவசித் தாந்தரே. 3 |
|
|
|
|
|
|
|
1422 |
|
|
|
வேதாந்தஞ் சுத்தம் விளங்கிய சித்தாந்த |
|
|
|
நாதாந்தங் கண்டோர் நடுக்கற்ற காட்சியர் |
|
|
|
புதாந்த போதாந்த மாதுப் புனஞ்செய்ய |
|
|
|
நாதாந்த பூரணர் ஞானநே யத்தரே. 4 |
|
|
|
|
|
|
|
|
|
2. அசுத்த சைவம் |
|
|
|
|
|
1423. |
|
|
|
இணையார் திருவடி ஏத்துஞ் சீரங்கத் |
|
|
|
தினையார் இணைக்குழை யீரணை முத்திரை |
|
|
|
குணமா ரிணைக்கண்ட மாலையுங் குன்றா |
|
|
|
தணைவாஞ் சரியை கிரியையி னார்க்கே. 1 |
|
|
|
|
|
|
|
1424 |
|
|
|
காதுப்பொ னார்ந்த கடுக்கன் இரண்டுசேர்த் |
|
|
|
தோதுந் திருமேனி யுட்கட் டிரண்டுடன் |
|
|
|
சோதனை செய்து துவாதெச மார்க்கராய் |
|
|
|
ஓதி யிருப்பார் ஒருசைவ ராகுமே. 2 |
|
|
|
|
|
|
|
1425 |
|
|
|
கண்டங்கள் ஒன்பதுங் கண்டவர் கண்டனர் |
|
|
|
கண்டங்கள் ஒன்பதுங் கண்டாய் அரும்பொருள் |
|
|
|
கண்டங்கள் ஒன்பதுங் கண்டவர் கண்டமாங் |
|
|
|
கண்டங்கள் கண்டோர் கடுஞ்சுத்த சைவரே. 3 |
|
|
|
|
|
|
|
1426 |
|
|
|
ஞானி புவியெழு நன்னூ லனைத்துடன் |
|
|
|
மோன திசையும் முழுஎண்ணெண் சித்தியும் |
|
|
|
ஏனை நிலமும் எழுதா மறையீறுங் |
|
|
|
கோனொடு தன்னையுங் காணுங் குணத்தனே. 4 |
|
|
|
|
|
|
|
|
|
3. மார்க்க சைவம் |
|
|
|
|
|
|
|
|
|
1427 |
|
|
|
பொன்னாற் சிவசாத னம்பூதி சாதனம் |
|
|
|
நன்மார்க்க சாதனம் மாஞான சாதனந் |
|
|
|
துன்மார்க்க சாதனந் தோன்றாத சாதனஞ் |
|
|
|
சன்மார்க்க சாதன மாஞ்சுத்த சைவர்க்கே. 1 |
|
|
|
|
|
|
|
1428. |
|
|
|
கேடறு ஞானி கிளர்ஞான பூபதி |
|
|
|
பாடறு வேதாந்த சித்தாந்த பாகத்தின் |
|
|
|
ஊடுறு ஞானோ தயனுண்மை முத்தியோன் |
|
|
|
பாடுறு சத்தசை வப்பத்த நித்தனே. 2 |
|
|
|
|
|
|
|
1429 |
|
|
|
ஆகமம் ஒன்பான் அதிலான நாலேழு |
|
|
|
மோகமில் நாலேழு முப்பேத முற்றுடன் |
|
|
|
வேகமில் வேதாந்த சித்தாந்த மெய்மேயொன் |
|
|
|
றாக முடிந்த வருஞ்சுத்த சைவமே. 3 |
|
|
|
|
|
|
|
1430 |
|
|
|
சுத்தம் அசுத்தந் துரியங்கள் ஓரேழுஞ் |
|
|
|
சத்தும் அசத்துந் தணந்த பராபரை |
|
|
|
உய்த்த பராபரை யுள்ளாம் பராபரை |
|
|
|
அத்தன் அருட்சத்தி யாய்எங்கு மாமே. 4 |
|
|
|
|
|
|
|
1431 |
|
|
|
சத்தும் அசுத்துந் தணந்தவர் தானாகிச் |
|
|
|
சித்தும் அசித்துந் தெரியாச் சிவோகமாய் |
|
|
|
முத்தியுள் ஆனந்த சத்தியுள் மூழ்கினார் |
|
|
|
சித்தியு மங்கே சிறந்துள தானே. 5 |
|
|
|
|
|
|
|
1432. |
|
|
|
தன்னைப் பரனைச் சதாசிவன் என்கின்ற |
|
|
|
மன்னைப் பதிபசு பாசத்தை மாசற்ற |
|
|
|
முன்னைப் பழமல முன்கட்டை வீட்டினை |
|
|
|
உன்னத் தகுஞ்சுத்த சைவர் உபாயமே. 6 |
|
|
|
|
|
|
|
1433 |
|
|
|
பூரணம் தன்னிலே வைத்தற்ற வப்போதே |
|
|
|
மாரண மந்த மதித்தானந் தத்தோடு |
|
|
|
நேரென ஈராறு நீதி நெடும் போகங் |
|
|
|
காரண மாஞ்சுத்த சைவர்க்குக் காட்சியே. 7 |
|
|
|
|
|
|
|
1434 |
|
|
|
மாறாத ஞான மதிப்பற மாயோகந் |
|
|
|
தேறாத சிந்தையைத் தேற்றிச் சிவமாக்கிப் |
|
|
|
பேறான பாவனை பேணி நெறிநிற்றல் |
|
|
|
கூறாகு ஞானி சரிதை குறிக்கிலே. 8 |
|
|
|
|
|
|
|
1435 |
|
|
|
வேதாந்தங் கண்டோர் பிரமமித் தியாதரர் |
|
|
|
நாதாந்தங் கண்டோர் நடுக்கற்ற யோகிகள் |
|
|
|
வேதாந்த மல்லாத சித்தாந்தங் கண்டுளோர் |
|
|
|
சாதா ரணமன்ன சைவர் உபாயமே. 9 |
|
|
|
|
|
|
|
1436 |
|
|
|
விண்ணினைச் சென்றணு காவியன் மேகங்கள் |
|
|
|
கண்ணினைச் சென்றணு காப்பல காட்சிகள் |
|
|
|
எண்ணினைச் சென்றணு காம லெணப்படும் |
|
|
|
அண்ணலைச் சென்றணு காபசு பாசமே. 10 |
|
|
|
|
|
|
|
1437 |
|
|
|
ஒன்றும் இரண்டும் இலதுமாய் ஒன்றாக |
|
|
|
நின்று சமய நிராகார நீங்கியே |
|
|
|
நின்று பராபரை நேயத்தைப் பாதத்தாற் |
|
|
|
சென்று சிவமாதல் சித்தாந்த சித்தியே. 11 |
|
|
|
|
|
|
|
|
|
4. கடுஞ் சுத்த சைவம் |
|
|
|
|
|
|
|
|
|
1438. |
|
|
|
வேடம் கடந்து விகிர்தன்தன் பால்மேனி |
|
|
|
ஆடம் பரமின்றி ஆசாபா சம்செற்றுப் |
|
|
|
பாடொன்று பாசம் பசுத்துவம் பாழ்படச் |
|
|
|
சாடும் சிவபோ தகர்சுத்த சைவரே. 1 |
|
|
|
|
|
|
|
1439 |
|
|
|
உடலான ஐந்தையும் ஓராறும் ஐந்து |
|
|
|
மடலான மாமாயை மற்றுள்ள நீவப் |
|
|
|
படலான கேவல பாசந் துடைத்துத் |
|
|
|
திடமாய்த் தனையுறல் சித்தாந்த மார்க்கமே. 2 |
|
|
|
|
|
|
|
1440. |
|
|
|
சுத்தச் சிவனுரை தானத்தில் தோயாமல் |
|
|
|
முத்தர் பதப்பொருள் முத்திவித் தாமூலம் |
|
|
|
அத்தகை யான்மா அரனை அடைந்தற்றாற் |
|
|
|
சுத்த சிவமாவ ரேசுத்த சைவரே. 3 |
|
|
|
|
|
|
|
1441. |
|
|
|
நானென்றும் தானென்றும் நாடிநான் சாரவே |
|
|
|
தானென்று நானென் றிரண்டிலாத் தற்பதந் |
|
|
|
தானென்று நானென்ற தத்துவ நல்கலால் |
|
|
|
தானென்று நானென்றுஞ் சாற்றகில் லேனே. 4 |
|
|
|
|
|
|
|
1442 |
|
|
|
சாற்றரி தாகிய தத்துவஞ் சித்தித்தால் |
|
|
|
ஆற்றரி தாகிய ஐந்தும் அடங்கிடும் |
|
|
|
மேற்றிகழ் ஞானம் விளக்கொளி யாய்நிற்கும் |
|
|
|
பாற்பர சாயுச்சிய மாகும் பதியே. 5 |
|
|
|
|
|
|
|
|
|
5. சரியை |
|
|
|
|
|
|
|
|
|
1443 |
|
|
|
நேர்ந்திடு மூல சரியை நெறியிதென் |
|
|
|
றாய்ந்திடுங் காலாங்கி கஞ்ச மலையமான் |
|
|
|
ஓர்ந்திடுங் கந்துரு கேண்மின்கள் பூதலத் |
|
|
|
தோர்ந்திடுஞ் சுத்த சைவத் துயிரதே. 1 |
|
|
|
|
|
|
|
1444. |
|
|
|
உயிர்க்குயி ராய்நிற்றல் ஒண்ஞான பூசை |
|
|
|
உயிர்க்கொளி நோக்கல் மகாயோக பூசை |
|
|
|
உயிர்ப்பெறு மாவா கனம்புறப் பூசை |
|
|
|
செயிற்கடை நேசஞ் சிவபூசை யாமே. 2 |
|
|
|
|
|
|
|
1445. |
|
|
|
நாடு நகரமும் நற்றிருக் கோயிலுந் |
|
|
|
தேடித் திரிந்து சிவபெரு மான்என்று |
|
|
|
பாடுமின் பாடிப் பணிமின் பணிந்தபின் |
|
|
|
கூடிய நெஞ்சத்துக் கோயிலாய்க் கொள்வனே. 3 |
|
|
|
|
|
|
|
1446. |
|
|
|
பத்தர் சரிதை படுவோர் கிரியையோர் |
|
|
|
அத்தகு தொண்டர் அருள்வேடத் தாகுவோர் |
|
|
|
சுத்த வியமாதி சாதகர் தூயோகர் |
|
|
|
சித்தர் சிவஞானஞ் சென்றெய்து வோர்களே. 4 |
|
|
|
|
|
|
|
1447 |
|
|
|
சார்ந்தமெய்ஞ் ஞானத்தோர் தானவ னாயினோர் |
|
|
|
சேர்ந்தவெண் யோகத்தர் சித்தர் சமாதியோர் |
|
|
|
ஆய்ந்த கிரியையோர் அருச்சனை தப்பாதோர் |
|
|
|
நேர்ந்த சரியையோர் நீள்நிலத் தோரே. 5 |
|
|
|
|
|
|
|
1448. |
|
|
|
கிரியை யோகங்கள் கிளர்ஞான பூசை |
|
|
|
அரிய சிவனுரு அமரும் அரூபந் |
|
|
|
தெரியும் பருவத்துத் தேர்ந்திடும் பூசை |
|
|
|
உரியன நேயத் துயர்பூசை யாமே. 6 |
|
|
|
|
|
|
|
1449. |
|
|
|
சரியாதி நான்குந் தருஞான நான்கும் |
|
|
|
விரிவான வேதாந்த சித்தாந்த மாறும் |
|
|
|
பொருளா னதுநந்தி பொன்னகர் போந்து |
|
|
|
மருளாகு மாந்தர் வணங்கவைத் தானே. 7 |
|
|
|
|
|
|
|
1450 |
|
|
|
சமையம் பலசுத்தித் தன்செயல் அற்றிடும் |
|
|
|
அமையும் விசேடமும் அரன்மந் திரசுத்தி |
|
|
|
சமைய நிருவாணங் கலாசுத்தி யாகும் |
|
|
|
அமைமன்னு ஞானமார்க் கம்அபிடேகமே. 8 |
|
|
|
|
|
|
|
|
|
6. கிரியை |
|
|
|
|
|
1451 |
|
|
|
பத்துத் திசையும் பரமொரு தெய்வமுண் |
|
|
|
டெத்திக் கிலரில்லை என்பதின் அமலர்க் |
|
|
|
கொத்துத் திருவடி நீழல் சரணெனத் |
|
|
|
தத்தும் வினைக்கடல் சாராது காணுமே. 1 |
|
|
|
|
|
|
|
1452. |
|
|
|
கானுறு கோடி கடிகமழ் சந்தனம் |
|
|
|
வானுறு மாமல ரிட்டு வணங்கினும் |
|
|
|
ஊனினை நீக்கி உண்பவர்க் கல்லது |
|
|
|
தேனமர் பூங்கழல் சேரவொண் ணாதே. 2 |
|
|
|
|
|
|
|
1453. |
|
|
|
கோனக்கன் றாயே குரைகழல் ஏத்துமின் |
|
|
|
ஞானக்கன் றாகிய நடுவே யுழிதரும் |
|
|
|
வானக்கன் றாகிய வானவர் கைதொழு |
|
|
|
மானக்கன் றீசன் அருள்வள்ள மாமே. 3 |
|
|
|
|
|
|
|
1454. |
|
|
|
இதுபணிந் தெண்டிசை மண்டிலம் எல்லாம் |
|
|
|
அதுபணி செய்கின் றவளொரு கூறன் |
|
|
|
இதுபணி மானுடர் செய்பணி யீசன் |
|
|
|
பதிபணி செய்வது பத்திமை காணே. 4 |
|
|
|
|
|
|
|
1455. |
|
|
|
பத்தன் கிரியை சரியை பயில்வுற்றுச் |
|
|
|
சுத்த அருளால் துரிசற்ற யோகத்தில் |
|
|
|
உய்த்த நெறியுற் றுணர்கின்ற ஞானத்தாற் |
|
|
|
சித்தங் குருவரு ளாற்சிவ மாகுமே. 5 |
|
|
|
|
|
|
|
1456. |
|
|
|
அன்பின் உருகுவ நாளும் பணிசெய்வன் |
|
|
|
செம்பொன்செய் மேனி கமலத் திருவடி |
|
|
|
முன்புநின் றாங்கே மொழிவ தெனக்கருள் |
|
|
|
என்பினுட் சோதி இலங்குகின் றானே. 6 |
|
|
|
|
|
|
|
|
|
7. யோகம் |
|
|
|
|
|
1457. |
|
|
|
நெறிவழி யேசென்று நேர்மையுள் ஒன்றித் |
|
|
|
தறியிருந் தாற்போல் தம்மை யிருத்திச் |
|
|
|
சொறியினுந் தாக்கினுந் துண்ணென் றுணராக் |
|
|
|
குறியறி வாளர்க்குக் கூடலு மாமே. 1 |
|
|
|
|
|
|
|
1458. |
|
|
|
ஊழிதோ றூழிஉணர்ந்தவர்க் கல்லால் |
|
|
|
ஊழிதோ றூழி உணரவுந் தானொட்டான் |
|
|
|
ஆழி அமரும் அரியயன் என்றுளார் |
|
|
|
ஊழி முயன்றும் ஒருச்சியு ளானே. 2 |
|
|
|
|
|
|
|
1459 |
|
|
|
பூவினிற் கந்தம் பொருந்திய வாறுபோற் |
|
|
|
சீவனுக் குள்ளே சிவமணம் பூத்தது |
|
|
|
ஓவியம் போல உணர்ந்தறி வாளர்க்கு |
|
|
|
நாவி யணைந்த நடுதறி யாமே. 3 |
|
|
|
|
|
|
|
1460. |
|
|
|
உய்ந்தனம் என்பீர் உறுபொருள் காண்கிலீர் |
|
|
|
கந்த மலரிற் கலக்கின்ற நந்தியைச் |
|
|
|
சிந்தை யுறவே தெளிந்திருள் நீங்கினால் |
|
|
|
முந்தைப் பிறவிக்கு மூலவித் தாமே. 4 |
|
|
|
|
|
|
|
1461 |
|
|
|
எழுத்தோடு பாடலும் எண்ணெண் கலையும் |
|
|
|
பழித்தலைப் பாசப் பிறவியும் நீங்கா |
|
|
|
வழித்தலைச் சோமனோ டங்கி யருக்கன் |
|
|
|
வழித்தலைச் செய்யும் வகையுணர்ந் தேனே. 5 |
|
|
|
|
|
|
|
1462 |
|
|
|
விரும்பிநின் றேசெயில் மேய்த்தவ ராகும் |
|
|
|
விரும்பிநின் றேசெயின் மெய்யுரை யாகும் |
|
|
|
விரும்பிநின் றேசெயின் மெய்த்தவ மாகும் |
|
|
|
விரும்பிநின் றேசெயில் விண்ணவ னாகுமே. 6 |
|
|
|
|
|
|
|
1463. |
|
|
|
பேணிற் பிறவா உலகருள் செய்திடுங் |
|
|
|
காணில் தனது கலவியு ளேநிற்கும் |
|
|
|
நாணில் நகர நெறிக்கே வழிசெயும் |
|
|
|
ஊனிற் சுடுமங்கி யுத்தமன் றானே. 7 |
|
|
|
|
|
|
|
1464 |
|
|
|
ஒத்தசெங் கோலார் உலப்பிலி மாதவர் |
|
|
|
எத்தனை யாயிரம் வீழ்ந்தனர் எண்ணிலி |
|
|
|
சித்தர்கள் தேவர்கள் மூவர் பெருமையாய் |
|
|
|
அத்த னிவனென்றே அன்புறு வார்களே. 8 |
|
|
|
|
|
|
|
1465. |
|
|
|
யோகிக்கு யோகாதி மூன்றுள கொண்டுற்றோர் |
|
|
|
ஆகத் தருகிரி யாதி சரியையாந் |
|
|
|
தாகத்தை விட்ட சரியையொன் றாம்ஒன்றுள் |
|
|
|
ஆதித்தன் பத்தியுள் அன்புவைத் தேனே. 9 |
|
|
|
|
|
|
|
1466 |
|
|
|
யோகச் சமயமே யோகம் பலவுன்னல் |
|
|
|
யோக விசேடமே அட்டாங்க யோகமாம் |
|
|
|
யோகநிர் வாணமே யுற்ற பரோதயம் |
|
|
|
யோக அபிடேகமே ஒண்சித்தி யுற்றலே. 10 |
|
|
|
|
|
|
|
|
|
8. ஞானம் |
|
|
|
|
|
|
|
|
|
1467 |
|
|
|
ஞானத்தின் மிக்க அறநெறி நாட்டில்லை |
|
|
|
ஞானத்தின் மிக்க சமயமும் நன்றன்று |
|
|
|
ஞானத்தின் மிக்கவை நன்முத்தி நல்காவா |
|
|
|
ஞானத்தின் மிக்கார் நரரின்மிக் காரே. 1 |
|
|
|
|
|
|
|
1468 |
|
|
|
சத்தமுஞ் சத்த மனனும் தகுமனம் |
|
|
|
உய்த்த வுணர்வு முணர்த்தும் அகந்தையுஞ் |
|
|
|
சித்தமென் றிம்மூன்றுஞ் சிந்திக்குஞ் செய்கையுஞ் |
|
|
|
சத்தங் கடந்தவர் பெற்றசன் மார்க்கமே. 2 |
|
|
|
|
|
|
|
1469 |
|
|
|
தன்பால் உலகுந் தனக்கரு காவதும் |
|
|
|
அன்பா லெனக்கரு ளாவது மாவன |
|
|
|
என்பார்கள் ஞானமும் எய்துஞ் சிவோகமும் |
|
|
|
பின்பாலின் நேயமும் பெற்றிடுந் தானே. 3 |
|
|
|
|
|
|
|
1470 |
|
|
|
இருக்குஞ் சேம இடம்பிரமமாகும் |
|
|
|
வருக்கஞ் சராசர மாகும் உலகந் |
|
|
|
தருக்கிய ஆசார மெல்லாந் தருமே |
|
|
|
திருக்கிலாஞானத்தைத் தேர்ந்துணர்ந் தோர்க்கே. 4 |
|
|
|
|
|
|
|
1471 |
|
|
|
அறிவும் அடக்கமும் அன்பும் உடனே |
|
|
|
பிறியா நகர்மன்னும் பேரரு ளாளன் |
|
|
|
குறியுங் குணமுங் குரைகழல் நீங்கா |
|
|
|
நெறியறி வார்க்கிது நீர்த்தொனி யாமே. 5 |
|
|
|
|
|
|
|
1472 |
|
|
|
ஞானம் விளைந்தெழு கின்றதோர் சிந்தையுள் |
|
|
|
ஏனம் விளைந்தெதி ரேகாண வழிதோறுங் |
|
|
|
கூனல் மதிமண் டலத்தெதிர் நீர்கண்டு |
|
|
|
ஊனம் அறுத்துநின் றொண்சுட ராகுமே. 6 |
|
|
|
|
|
|
|
1473 |
|
|
|
ஞானிக் குடன்குண ஞானத்தில் நான்குமா |
|
|
|
மோனிக் கிவையொன்றுங் கூடாமுன் மோகித்து |
|
|
|
மேனிற்ற லாஞ்சத்தி வித்தை விளைத்திடுந் |
|
|
|
தானிக் குலத்தோர் சரியை கிரியையே. 7 |
|
|
|
|
|
|
|
1474 |
|
|
|
ஞானத்தின் ஞானாதி நான்குமா ஞானிக்கு |
|
|
|
ஞானத்தின் ஞானமே நானென தென்னாமல் |
|
|
|
ஞானத்தில் யோகமே நாதாந்த நல்லொளி |
|
|
|
ஞானக் கிரியையே நன்முத்தி நாடலே. 8 |
|
|
|
|
|
|
|
1475 |
|
|
|
நண்ணிய ஞானத்தின் ஞானாதி நண்ணுவோன் |
|
|
|
புண்ணிய பாவங் கடந்த பிணக்கற்றோன் |
|
|
|
கண்ணிய நேயங் கரைஞானங் கண்டுளோன் |
|
|
|
திண்ணிய சுத்தன் சிவமுத்தன் சித்தனே. 9 |
|
|
|
|
|
|
|
1476 |
|
|
|
ஞானச் சமயமே நாடுந் தனைக் காண்டல் |
|
|
|
ஞான விசேடமே நாடு பரோதய |
|
|
|
ஞானநிர் வாணமே நன்றறி வானருள் |
|
|
|
ஞானாபி டேகமே நற்குறு பாதமே. 10 |
|
|
|
|
|
|
|
|
|
9. சன்மார்க்கம் |
|
|
|
|
|
|
|
|
|
1477 |
|
|
|
சாற்றுஞ்சன் மார்க்கமாந் தற்சிவ தத்துவத் |
|
|
|
தோற்றங் களான சுருதிச் சுடர்கண்டு |
|
|
|
சீற்றம் ஒழிந்து சிவயோக சித்தராய்க் |
|
|
|
கூற்றத்தை வென்றார் குறிப்பறிந் தார்களே. 1 |
|
|
|
|
|
|
|
1478. |
|
|
|
சைவப் பெருமைத் தனிநா யகன்நந்தி |
|
|
|
உய்ய வகுத்த குருநெறி ஒன்றுண்டு |
|
|
|
தெய்வச் சிவநெறி நன்மார்க்கஞ் சேர்ந்துய்ய |
|
|
|
வையத்துள் ளார்க்கு வகுத்தவைத் தானே. 2 |
|
|
|
|
|
|
|
1479 |
|
|
|
தெரிசிக்கப் பூசிக்கச் சிந்தனை செய்யப் |
|
|
|
பரிசிக்கக் கீர்த்திக்கப் பாதுகஞ் சூடக் |
|
|
|
குருபத்தி செய்யுங் குவலயத் தோர்க்குத் |
|
|
|
தருமுத்திச் சார்பூட்டுஞ் சன்மார்க்கந் தானே. 3 |
|
|
|
|
|
|
|
1480 |
|
|
|
தெளிவறி யாதார் சிவனை யறியார் |
|
|
|
தெளிவறி யாதார் சீவனு மாகார் |
|
|
|
தெளிவறி யாதார் சிவமாக மாட்டார் |
|
|
|
தெளிவறி யாதவர் தீரார் பிறப்பே. 4 |
|
|
|
|
|
|
|
1481 |
|
|
|
தானவ னாகித் தானைந்தா மலஞ்செற்று |
|
|
|
மோனம தாம்மொழிப் பான்முத்த ராவது |
|
|
|
மீனமில் ஞானானு பூதியில் இன்பமுந் |
|
|
|
தாவை னாயுறலானசன் மார்க்கமே. 5 |
|
|
|
|
|
|
|
1482 |
|
|
|
சன்மார்க்கத் தார்க்கு முகத்தொடு பீடமுஞ் |
|
|
|
சன்மார்க்கத் தார்க்கும் இடத்தொடு தெய்வமுஞ் |
|
|
|
சன்மார்க்கத் தார்க்கு வருக்கந் தரிசனம் |
|
|
|
எம்மார்க்கத் தார்க்கும் இயம்புவன் கேண்மினோ. 6 |
|
|
|
|
|
|
|
1483 |
|
|
|
சன்மார்க்க சாதனந் தான்ஞான ஞேயமாம் |
|
|
|
பின்மார்க்க சாதனம் பேதையர்க்காய்நிற்கும் |
|
|
|
துன்மார்க்கம் விட்ட துரியத் துரிசற்றார் |
|
|
|
சன்மார்க்கந் தானவ னாகுஞ்சன் மார்க்கமே. 7 |
|
|
|
|
|
|
|
1484 |
|
|
|
சன்மார்க்க மெய்த வருமருஞ் சீடர்க்குப் |
|
|
|
பின்மார்க்க மூன்றும் பெறவியல் பாமென்றால் |
|
|
|
நன்மார்க்கந் தானே சிவனொடு நாடலே |
|
|
|
சொன்மார்க்க மென்னச்சுருதிகைக்கொள்ளுமே. 8 |
|
|
|
|
|
|
|
1485 |
|
|
|
அன்னிய பாசமும் ஆகுங் கருமமும் |
|
|
|
முன்னும் அவத்தையும் மூலப் பகுதியும் |
|
|
|
பின்னிய ஞானமும் பேதாதி பேதமுந் |
|
|
|
தன்னொடுங் கண்டவர் சன்மார்க்கத் தோரே. 9 |
|
|
|
|
|
|
|
1486 |
|
|
|
பசுபாச நீக்கிப் பதியுடன் கூட்டிப் |
|
|
|
கசியாத நெஞ்சங் கசியக் கசிவித் |
|
|
|
தொசியாத வுண்மைச் சொரூபோ தயத்துற் |
|
|
|
றசைவான தில்லாமை யானசன் மார்க்கமே. 10 |
|
|
|
|
|
|
|
1487 |
|
|
|
மார்க்கஞ்சன் மார்க்கிகள் கிட்ட வகுப்பது |
|
|
|
மார்க்கஞ்சன் மார்க்கமே யன்றிமற் றொன்றில்லை |
|
|
|
மார்க்கஞ்சன் மார்க்க மெனுநெறி வைகாதோர் |
|
|
|
மார்க்கஞ்சன் மார்க்க மாஞ்சித்த யோகமே. 11 |
|
|
|
|
|
|
|
|
|
10. சகமார்க்கம் |
|
|
|
|
|
|
|
|
|
1488 |
|
|
|
சன்மார்க்கந் தானே சகமார்க்க மானது |
|
|
|
மனமார்க்க மாமுத்தி சித்திக்குள் வைப்பதாம் |
|
|
|
பின்மார்க்க மானது பேராப் பிறந்திறந் |
|
|
|
துன்மார்க்க ஞானத் துறதியு மாமே. 1 |
|
|
|
|
|
|
|
1489 |
|
|
|
மருவுந் துவாதச மார்க்கமில் லாதார் |
|
|
|
குருவுஞ் சிவனுஞ் சமயமுங் கூடாம் |
|
|
|
வெருவுந் திருமகள் வீட்டில்லை யாகும் |
|
|
|
உருவுங் கிளையும் ஒருங்கிழப் பாரே. 2 |
|
|
|
|
|
|
|
1490 |
|
|
|
யோகச் சமாதியின் உள்ளே யகலிடம் |
|
|
|
யோகச் சமாதியின் உள்ளே யுளரொளி |
|
|
|
யோகச் சமாதியின் உள்ளே யுளசத்தி |
|
|
|
யோகச் சமாதி யுகந்தவர் சித்தரே. 3 |
|
|
|
|
|
|
|
1491 |
|
|
|
யோகமும் போகமும் யோகியர்க் காகுமால் |
|
|
|
யோகஞ் சிவரூபம் உற்றிடும் உள்ளத்தோர் |
|
|
|
போகம் புவியிற் புருடார்த்த சித்திய |
|
|
|
தாகும் இரண்டும் அழியாத யோகிக்கே. 4 |
|
|
|
|
|
|
|
1492 |
|
|
|
ஆதார சோதனை யானாடி சுத்திகள் |
|
|
|
மேதாதி யீரெண் கலாந்தத்து விண்ணொளி |
|
|
|
போதா லயத்துப் புலன்கர ணம்புந்தி |
|
|
|
சாதா ரணங்கெட லாஞ்ச மார்க்கமே. 5 |
|
|
|
|
|
|
|
1493 |
|
|
|
பிணங்கிநிற் கின்றவை ஐந்தையும் பின்னை |
|
|
|
அணங்கி யெறிவ னயிர்மன வாளாற் |
|
|
|
கணம்பதி னெட்டுங் கருதும் ஒருவன் |
|
|
|
வணங்கவல் லான் சிந்தை வந்துநின் றானே. 6 |
|
|
|
|
|
|
|
1494 |
|
|
|
வளங்கனி யொக்கும் வளநிறத் தார்க்கும் |
|
|
|
வளங்கனி யொப்பதோர் வாய்மைய னாகும் |
|
|
|
உளங்கனிந் துள்ள முகந்திருப் பார்க்குப் |
|
|
|
பழங்கனிந் துள்ளே பகுந்துநின் றானே. 7 |
|
|
|
|
|
|
|
|
|
11. சற்புத்திர மார்க்கம் |
|
|
|
|
|
1495 |
|
|
|
மேவிய சற்புத்திர மார்க்க மெய்த்தொழில் |
|
|
|
தாவிப்ப தாஞ்சக மார்க்கம் சகத்தொழில் |
|
|
|
ஆவ திரண்டும் அகன்று சகமார்க்கத் |
|
|
|
தேவியோ டொன்றல் சன்மார்க்கத் தெளிவதே. 1 |
|
|
|
|
|
|
|
1496 |
|
|
|
பூசித்தல் வாசித்தல் போற்றல் செபித்திடல் |
|
|
|
ஆசற்ற நற்றவம் வாய்மை அழுக்கின்மை |
|
|
|
நேசித்திட் டன்னமும் நீசுத்தி செய்தன்மர் |
|
|
|
றாசற்ற சற்புத் திரமார்க்க மாகுமே. 2 |
|
|
|
|
|
|
|
1497 |
|
|
|
அறுகாற் பறவை அலர்தேர்ந் துழலும் |
|
|
|
மறுகா நரையன்னந் தாமரை நீலங் |
|
|
|
குறுகா நறுமலர் கொய்வன கண்டுஞ் |
|
|
|
சிறுகால் அறநெறி சேர்கி லாரே. 3 |
|
|
|
|
|
|
|
1498 |
|
|
|
அருங்கரை யாவது அவ்வடி நீழற் |
|
|
|
பெருங்கரை யாவது பிஞ்ஞக னாணை |
|
|
|
வருங்கரை யேகின்ற மன்னுயிர்க் கெல்லாம் |
|
|
|
ஒருங்கரை யாயுல கேழினொத் தானே. 4 |
|
|
|
|
|
|
|
1499 |
|
|
|
உயர்ந்தும் பணிந்தும் முகந்துந் தழுவி |
|
|
|
வியந்தும் அரனடிக் கேமுறை செய்மின் |
|
|
|
பயந்தும் பிறவிப் பயனது வாகும் |
|
|
|
பயந்து பிரிக்கிலப் பான்மையு னாமே. 5 |
|
|
|
|
|
|
|
1500 |
|
|
|
நின்றுதொழுவன் கிடந்தெம் பிரான்தன்னை |
|
|
|
என்றுந் தொழுவன் எழிற்பரஞ் சோதியைத் |
|
|
|
துன்று மலர்தூவித் தொழுமின் தொழுந்தோறுஞ் |
|
|
|
சென்று வெளிப்படுந் தேவர் பிரானே. 6 |
|
|
|
|
|
|
|
1501 |
|
|
|
திருமன்னுஞ் சற்புத் திரமார்க்கச் சரியை |
|
|
|
உருமன்னி வாழும் உலகத்தீர்கேண்மின் |
|
|
|
கருமன்னு பாசங் கைகூம்பத் தொழுது |
|
|
|
இருமன்னு நாடோறும் இன்புற் றிருந்தே. 7 |
|
|
|
|
|
|
|
|
|
12. தாச மார்க்கம் |
|
|
|
|
|
1502 |
|
|
|
எளியனல் தீப miடல்மலர் கொய்தல் |
|
|
|
அளிதின் மெழுக லதுதூர்த்தல் வாழ்த்தல் |
|
|
|
பளிமணி பற்றல் பன்மஞ் சனமாதி |
|
|
|
தளிதொழில் செய்வது தான்தாசமார்க்கமே. 1 |
|
|
|
|
|
|
|
1503 |
|
|
|
அதுவிது வாதிப் பரமென் றகல்வர் |
|
|
|
இதுவழி யென்றங் கிறைஞ்சின ரில்லை |
|
|
|
விதிவழி யேசென்று வேந்தனை நாடு |
|
|
|
மதுவிது நெஞ்சில் தணிக்கின்ற வாறே. 2 |
|
|
|
|
|
|
|
1504 |
|
|
|
அந்திப்பன் திங்க ளதன்பின்பு ஞாயிறு |
|
|
|
சிந்திப்பன் என்றும் ஒருவன் செறிகழல் |
|
|
|
வந்திப்ப வானவர் தேவனை நாடோறும் |
|
|
|
வந்திப்ப தெல்லாம் வகையின் முடிந்ததே. 3 |
|
|
|
|
|
|
|
1505 |
|
|
|
அண்ணலை வானவர் ஆயிரம் பேர்சொல்லி |
|
|
|
உன்னுவர் உள்மகிழ்ந்துண்ணின் றடிதொழக் |
|
|
|
கண்ணவ னென்று கருது மவர்கட்குப் |
|
|
|
பண்ணவன் பேரன்பு பற்றிநின் றானே. 4 |
|
|
|
|
|
|
|
1506 |
|
|
|
வாசித்தும் பூசித்தும்மாமலர் கொய்திட்டும் |
|
|
|
பாசிக் குளத்தில்வீழ் கல்லா மனம்பார்க்கின் |
|
|
|
மாசற்ற சோதி மணிமிடற் றாண்ணலை |
|
|
|
நேசத் திருந்த நினைவறி யாரே. 5 |
|
|
|
|
|
|
|
|
|
13. சாலோகம் |
|
|
|
|
|
|
|
|
|
1507 |
|
|
|
சாலோக மாதி சரியாதி யிற்பெறுஞ் |
|
|
|
சாலோகஞ் சாமீபந் தங்குஞ் சரியையால் |
|
|
|
மாலோகஞ் சேரில் வழியாகுஞ் சாரூபம் |
|
|
|
பாலோகம் இல்லாப் பரனுரு வாமே. 1 |
|
|
|
|
|
|
|
1508 |
|
|
|
சமயங் கிரியையிற் றன்மனங் கோயில் |
|
|
|
சமய மனுமுறை தானே விசேடஞ் |
|
|
|
சமயத்து மூலந் தனைத்தேறன் மூன்றாஞ் |
|
|
|
சமயாபி டேகந் தானாஞ் சமாதியே. 2 |
|
|
|
|
|
|
|
|
|
14. சாமீபம் |
|
|
|
|
|
|
|
|
|
1509 |
|
|
|
பாசம் பசுவான தாகும்இச் சாலோகம் |
|
|
|
பாச மருளான தாகும்இச் சாமீபம் |
|
|
|
பாசஞ் சிரமான தாகும்இச் சாரூபம் |
|
|
|
பாசங் கரைபதி சாயுச் சியமே. 1 |
|
|
|
|
|
|
|
|
|
15. சாரூபம் |
|
|
|
|
|
|
|
|
|
1510 |
|
|
|
தங்கிய சாரூபந் தானெட்டாம் யோகமாந் |
|
|
|
தங்குஞ்சன்மார்க்கந் தனிலன்றிக் கைகூடா |
|
|
|
அங்கத் துடல்சித்தி சாதன ராகுவர் |
|
|
|
இங்கிவ ராக விழிவற்ற யோகமே. 1 |
|
|
|
|
|
|
|
1511 |
|
|
|
சயிலலோ கத்தினைச் சார்ந்த பொழுதே |
|
|
|
சயிலம தாகுஞ் சராசரம் போலப் |
|
|
|
பயிலுங் குருவின் பதிபுக்க போதே |
|
|
|
கயிலை இறைவன் கதிர்வடி வாமே. 2 |
|
|
|
|
|
|
|
|
|
16. சாயுச்சியம் |
|
|
|
|
|
|
|
|
|
1512 |
|
|
|
சைவஞ் சிவனுடன் சம்பந்த மாவது |
|
|
|
சைவந் தனையறிந் தேசிவஞ் சாருதல் |
|
|
|
சைவஞ் சிவந்தன்னைச் சாராமல் நீங்குதல் |
|
|
|
சைவஞ் சிவானந்தஞ் சாயுச் சியமே. 1 |
|
|
|
|
|
|
|
1513 |
|
|
|
சாயுச் சியஞ்சாக் கிராதீதஞ் சாருதல் |
|
|
|
சாயுச் சியமுப சாந்தத்துத் தங்குதற் |
|
|
|
சாயுச் சியஞ்சிவ மாதல் முடிவிலாச் |
|
|
|
சாயுச் சியமனத் தானந்த சத்தியே. 2 |
|
|
|
|
|
|
|
|
|
17. சத்திநிபாதம் |
|
|
|
|
|
|
|
|
|
மந்தம் |
|
|
|
1514 |
|
|
|
இருட்டறை மூலை யிருந்த கிழவி |
|
|
|
குருட்டுக் கிழவனைக் கூடல் குறித்துக் |
|
|
|
குருட்டினை நீக்கிக் குணம்பல காட்டி |
|
|
|
மருட்டி யவனை மணம்புரிந் தாளே. 1 |
|
|
|
|
|
|
|
1515. |
|
|
|
தீம்புல னான திசையது சிந்திக்கில் |
|
|
|
ஆம்புல னாயறிவார்க்கமு தாய்நிற்குந் |
|
|
|
தேம்புல னான தெளிவறி வார்கட்குக் |
|
|
|
கோம்புல னாடிய கொல்லையு மாமே. 2 |
|
|
|
|
|
|
|
1516 |
|
|
|
இருள்நீக்கி எண்ணில் பிறவி கடத்தி |
|
|
|
அருள்நீங்கா வண்ணமே யாதியருளும் |
|
|
|
மருள்நீங்கா வானவர் கோனொடுங் கூடிப் |
|
|
|
பொருள்நீங்கா இன்பம் புலம்பயல் தானே. 3 |
|
|
|
|
|
|
|
1517 |
|
|
|
இருள்சூ ழறையில் இருந்தது நாடிற் |
|
|
|
பொருள்சூழ் விளக்கது புக்கெரிந் தாற்போன் |
|
|
|
மருள்சூழ் மயக்கத்து மாமலர் நந்தி |
|
|
|
அருள்சூழ் இறைவனும் அம்மையு மாமே. 4 |
|
|
|
|
|
|
|
மந்ததரம் |
|
|
|
1518 |
|
|
|
மருட்டிப் புணர்ந்து மயக்கமும் நீக்கி |
|
|
|
வெருட்டி வினையறுத் தின்பம் விளைத்துக் |
|
|
|
குருட்டினை நீக்கிக் குணம்பல காட்டி |
|
|
|
அருட்டிகழ் ஞான மதுபுரிந் தானே. 5 |
|
|
|
|
|
|
|
1519 |
|
|
|
கன்னித் துறைபடிந் தாடிய ஆடவர் |
|
|
|
கன்னித் துறைபடிந் தாடுங் கருத்திலர் |
|
|
|
கன்னித் துறைபடிந் தாடுங் கருத்துண்டேற் |
|
|
|
பின்னைப் பிறவி பிறிதில்லை தானே. 6 |
|
|
|
|
|
|
|
1520. |
|
|
|
செய்யன் கரியன் வெளியன் நற் பச்சையன் |
|
|
|
எய்த வுணர்ந்தவர் எய்வர் இறைவனை |
|
|
|
மைவென் றகன்ற பகடுரி போர்த்தவெங் |
|
|
|
கைய னிவனென்று காதல்செய் வீரே. 7 |
|
|
|
|
|
|
|
1521 |
|
|
|
எய்திய காலங்கள் எத்தனை யாயினுந் |
|
|
|
தையலுந் தானுந் தனிநா யகமென்பர் |
|
|
|
வைகலுந் தன்னை வணங்கு மவர்கட்குக் |
|
|
|
கையிற் கருமஞ்செய் காட்டது வாமே. 8 |
|
|
|
|
|
|
|
1522 |
|
|
|
கண்டுகொண்டோமிரண்டுந்தொடர்ந் தாங்கொளி |
|
|
|
பண்டுபண் டோயும் பரமன் பரஞ்சுடர் |
|
|
|
வண்டுகொண் டாடு மலர்வார் சடையண்ணல் |
|
|
|
நின்றுகண் டார்க்கிருள் நீக்கிநின் றானே. 9 |
|
|
|
|
|
|
|
தீவிரம் |
|
|
|
1523 |
|
|
|
அண்ணிக்கும் பெண்பிள்ளை அப்பனார் தோட்டத்தில் |
|
|
|
எண்ணிக்கும் ஏழேழ் பிறவி யுணர்விக்கும் |
|
|
|
உண்ணிற்ப தெல்லாம் ஒழிய முதல்வனைக் |
|
|
|
கண்ணுற்று நின்ற கனியது வாகுமே. 10 |
|
|
|
|
|
|
|
1524 |
|
|
|
பிறப்பை யறுக்கும் பெருந்தவம் நல்கும் |
|
|
|
மறப்பை யறுக்கும் வழிபட வைக்குங் |
|
|
|
குறப்பெண் குவிமுலை கோமள வல்லி |
|
|
|
சிறப்பொடு பூசனை செய்யநின் றார்க்கே. 11 |
|
|
|
|
|
|
|
1525 |
|
|
|
தாங்குமின் எட்டுத் திசைக்குந் தலைமகன் |
|
|
|
பூங்கமழ் கோதைப் புரிகுழ லாளொடும் |
|
|
|
ஆங்கது சேரும் அறிவுடை யார்கட்குத் |
|
|
|
தூங்கொளி நீலந் தொடர்தலு மாமே. 12 |
|
|
|
|
|
|
|
1526 |
|
|
|
நணுகினு ஞானக் கொழுந்தொன்று நல்கும் |
|
|
|
பணிகிலும் பன்மலர் தூவிப் பணிவன் |
|
|
|
அணுகிய தொன்றறி யாத வொருவன் |
|
|
|
அணுகும் உலகெங்கு மாவியு மாமே. 13 |
|
|
|
|
|
|
|
தீவிரதரம் |
|
|
|
1527 |
|
|
|
இருவினை நேரொப்பில் இன்னருட் சத்தி |
|
|
|
குருவென வந்து குணம்பல நீக்கித் |
|
|
|
தருமெனு ஞானத்தால் தன்செய லற்றால் |
|
|
|
திரிமலந் தீர்ந்து சிவனவ னாமே. 14 |
|
|
|
|
|
|
|
1528 |
|
|
|
இரவும் பகலும் இலாத இடத்தே |
|
|
|
குரவஞ் செய்கின்ற குழலியை உன்னி |
|
|
|
அரவஞ்செய் யாமல் அவளுடன் சேரப் |
|
|
|
பரிவொன்றி லாளும் பராபரை தானே. 15 |
|
|
|
|
|
|
|
1529 |
|
|
|
மாலை விளக்கும் மதியமும் ஞாயிறுஞ் |
|
|
|
சாலை விளக்குந் தனிச்சுடர் அண்ணலுள் |
|
|
|
ஞானம் விளக்கிய நாதன்என் உள்புகுந்(து) |
|
|
|
ஊனை விளக்கி யுடனிருந் தானே. 16 |
|
|
|
|
|
|
|
|
|
18. அருசமயப் பிணக்கம் |
|
|
|
|
|
|
|
|
|
1530 |
|
|
|
ஆயத்துள் நின்ற அறுசம யங்களுங் |
|
|
|
காயத்துள் நின்ற கடவுளைக் காண்கிலர் |
|
|
|
மாயக் குழியில் விழுவர் மனைமக்கள் |
|
|
|
பாசத்தில் உற்றுப் பதைக்கின்ற வாறே. 1 |
|
|
|
|
|
|
|
1531 |
|
|
|
உள்ளத்து ளேதான் கரந்தெங்கும் நின்றவன் |
|
|
|
வள்ளல் தலைவன் மலருறை மாதவன் |
|
|
|
பொள்ளற் குரம்பைப் புகுந்து புறப்படுங் |
|
|
|
கள்ளத் தலைவன் கருத்தறி யார்களே. 2 |
|
|
|
|
|
|
|
1532 |
|
|
|
உள்ளத்தும் உள்ளன் புறத்துள்ளன் என்பவர்க் |
|
|
|
குள்ளத்தும் உள்ளன் புறத்துள்ளன் எம்மிறை |
|
|
|
உள்ளத்தும் இல்லை புறத்தில்லை என்பவர்க் |
|
|
|
குள்ளத்தும் இல்லை புறத்தில்லை தானே. 3 |
|
|
|
|
|
|
|
1533 |
|
|
|
ஆறு சமயமும் கண்டவர் கண்டிலர் |
|
|
|
ஆறு சமயப் பொருளும் அவனலன் |
|
|
|
தேறுமின் தேறித் தெளிமின் தெளிந்தபின் |
|
|
|
மாறுதல் இன்றி மனைபுக லாமே. 4 |
|
|
|
|
|
|
|
1534 |
|
|
|
சிவமல்ல தில்லை யறையே சிவமாந் |
|
|
|
தவமல்ல தில்லை தலைப்படு வார்க்கிங்(கு) |
|
|
|
அவமல்ல தில்லை அறுசம யங்கள் |
|
|
|
தவம்வல்ல நந்திதாள் சார்ந்துய்யு நீரே. 5 |
|
|
|
|
|
|
|
1535 |
|
|
|
அண்ணலை நாடிய ஆறு சமயமும் |
|
|
|
விண்ணவ ராக மிகவும் விரும்பியே |
|
|
|
முண்ணின் றழியு முயன்றில ராதலான் |
|
|
|
மண்ணின் றொழியும் வகையறி யார்களே. 6 |
|
|
|
|
|
|
|
1536 |
|
|
|
சிவகதி யேகதி மற்றுள்ள எல்லாம் |
|
|
|
பவகதி பாசப் பிறவியொன் றுண்டு |
|
|
|
தவகதி தன்னொடு நேரொன்று தோன்றில் |
|
|
|
அவகதி மூவரும் அவ்வகை யாமே. 7 |
|
|
|
|
|
|
|
1537. |
|
|
|
நூறு சமயம் உளவா நுவலுங்கால் |
|
|
|
ஆறு சமயமவ் ஆறுட் படுவன |
|
|
|
கூறு சமயங்கன் கொண்டநெறிநில்லா |
|
|
|
ஈறு பரநெறி யில்லா நெறியன்றே. 8 |
|
|
|
|
|
|
|
1538 |
|
|
|
கத்துங் கழுதைகள் போலுங் கலதிகள் |
|
|
|
சுத்த சிவமெங்குந் தோய்வற்று நிற்கின்றான் |
|
|
|
குற்றம் தெளியார் குணங்கொண்டு கோதாட்டிப் |
|
|
|
பித்தேறி நாளும் பிறந்திறப் பாரே. 9 |
|
|
|
|
|
|
|
1539 |
|
|
|
மயங்குகின் றாரு மதிதெளிந் தாரும் |
|
|
|
முயங்கி யிருவினை முழைமுகப் பாச்சி |
|
|
|
இயங்கிப் பெறுவரே லீறது காட்டிற் |
|
|
|
பயங்கெட் டவர்க்கோர் பரநெறி யாமே. 10 |
|
|
|
|
|
|
|
1540 |
|
|
|
சேயன் அணியன் பிணியிலன் பேர்நந்தி |
|
|
|
தூயன் துளக்கற நோக்கவல் லார்கட்கு |
|
|
|
மாயன் மயக்கிய மானுட ராமவர் |
|
|
|
காயம் விளைக்குங் கருத்தறி யார்களே. 11 |
|
|
|
|
|
|
|
1541 |
|
|
|
வழியரண் டுக்குமோர் வித்தது வான |
|
|
|
பழியது பார்மிசை வாழ்தல் உறுதல் |
|
|
|
சுழியறி வாளன்றன் சொல்வழி முன்னின் |
|
|
|
றழிவழி வார்நெறி நாடநில் லாரே. 12 |
|
|
|
|
|
|
|
1542. |
|
|
|
மாதவர் எல்லாம் மாதேவன் பிரான்என்பர் |
|
|
|
நாதம தாக அறியப்படுநந்தி |
|
|
|
பேதஞ்செய் யாதே பிரான்என்று கைதொழில் |
|
|
|
ஆதியும் அந்நெறி யாகிநின் றானே. 13 |
|
|
|
|
|
|
|
1543. |
|
|
|
அரநெறி யப்பனை யாதிப் பிரானை |
|
|
|
உரநெறி யாகி யுளம்புகுந் தானைப் |
|
|
|
பரநெறி தேடிய பத்தர்கள் சித்தம் |
|
|
|
பரனெறி யாவிடிற் பல்வகைத் தூரமே. 14 |
|
|
|
|
|
|
|
1544 |
|
|
|
பரிசறி வானவன் பண்பன் பகலோன் |
|
|
|
பெரிசறி வானவர் பேற்றில் திகழுந் |
|
|
|
துரிசற நீநினை தூய்மணி வண்ணன் |
|
|
|
அரிதவன் வைத்த அறநெறி தானே. 15 |
|
|
|
|
|
|
|
1545 |
|
|
|
ஆன சமயம் அதுஇது நன்றெனும் |
|
|
|
மாய மனிதர் மயக்க மதுவொழி |
|
|
|
கானங் கடந்த கடவுளை நாடுமின் |
|
|
|
ஊனங் கடந்த வுருவது வாமே. 16 |
|
|
|
|
|
|
|
1546 |
|
|
|
அந்நெறி நாடி அமரரு முனிவருஞ் |
|
|
|
செந்நெறி கண்டார் சிவனெனப் பெற்றார்பின் |
|
|
|
முன்னெறி நாடி முதல்வன் அருளிலார் |
|
|
|
சென்னெறி செல்லார் திகைக்கின்ற வாறே. 17 |
|
|
|
|
|
|
|
1547 |
|
|
|
உறுமா றறிவதும் உள்நின்ற சோதி |
|
|
|
பெறுமா றறியிற் பிணக்கொன்றும் இல்லை |
|
|
|
அறுமா றதுவான வங்கியு ளாங்கே |
|
|
|
இறுமா றறிகிலர் ஏழைகள் தாமே. 18 |
|
|
|
|
|
|
|
1548 |
|
|
|
வழிநடக் கும்பரி சொன்றுண்டு வையங் |
|
|
|
கழிநடக் குண்டவர் கற்பனை கேட்பர் |
|
|
|
சுழிநடக் குந்துய ரம்மது நீக்கிப் |
|
|
|
பழிநடப் பார்க்குப் பரவலு மாமே. 19 |
|
|
|
|
|
|
|
1549 |
|
|
|
வழிசென்ற மாதவம் வைகின்ற போது |
|
|
|
பழிசெல்லும் வல்வினைப் பற்றறுத் தாங்கே |
|
|
|
வழிசெல்லும் வல்வினை யாம்திறம் விட்டிட் |
|
|
|
டுழிசெல்லில் உம்பர் தலைவன்முன் னாமே. 20 |
|
|
|
|
|
|
|
|
|
19. நிராசாரம் |
|
|
|
|
|
|
|
|
|
1550 |
|
|
|
இமையங்க ளாய்நின்ற தேவர்கள் ஆறு |
|
|
|
சமையங்கள் பெற்றனர் சாத்திரம் ஓதி |
|
|
|
யமையறிந் தோமென்ப ராதிப் பிரானுங் |
|
|
|
கமையறிந் தாருட் கலந்துநின் றானே. 1 |
|
|
|
|
|
|
|
1551 |
|
|
|
பாங்கமர் கொன்றைப் படர்சடை யானடி |
|
|
|
தாங்கு மனிதர் தரணியில் நேரொப்பர் |
|
|
|
நீங்கிய வண்ணம் நினைவுசெய் யாதவர் |
|
|
|
ஏங்கி உலகில் இருந்தழு வாரே. 2 |
|
|
|
|
|
|
|
1552 |
|
|
|
இருந்தழு வாரும் இயல்புகெ ட்டாரும் |
|
|
|
அருந்தவ மேற்கொண்டங் கண்ணலை எண்ணில் |
|
|
|
வருந்தா வகைசெய்து வானவர் கோனும் |
|
|
|
பெருந்தன்மை நல்கும் பிறப்பில்லை தானே. 3 |
|
|
|
|
|
|
|
1553. |
|
|
|
தூரறி வாளர் துணைவர் நினைப்பிலர் |
|
|
|
பாரறி வாளர் படுபயன் றானுண்பர் |
|
|
|
காரறி வாளர் கலந்து பிறப்பர்கள் |
|
|
|
நீரறி வார்நெடு மாமுகி லாமே. 4 |
|
|
|
|
|
|
|
1554 |
|
|
|
அறிவுடன் கூடி அழைத்தோர் தோணி |
|
|
|
பறியுடன் பாரம் பழம்பதி சிந்துங் |
|
|
|
குறியது கண்டுங் கொடுவினை யாளர் |
|
|
|
செறிய நினைக்கிலர் சேவடி தானே. 5 |
|
|
|
|
|
|
|
1555. |
|
|
|
மன்னும் ஒருவன் மருவு மனோமயன் |
|
|
|
என்னின் மனிதர் இகழ்வரிவ் வேழைகள் |
|
|
|
துன்னி மனமே தொழுமின் துணையிலி |
|
|
|
தன்னையும் அங்கே தலைப்பட லாமே. 6 |
|
|
|
|
|
|
|
1556. |
|
|
|
ஓங்காரத் துள்ளொளி உள்ளே உதயமுற் |
|
|
|
றாங்கார மற்ற அனுபவங் கைகூடார் |
|
|
|
சாங்கால முன்னார் பிறவாமை சார்வுறார் |
|
|
|
நீங்காச் சமயத்துள் நின்றொழிந் தார்களே. 7 |
|
|
|
|
|
|
|
20. உட்சமயம் |
|
|
|
1557. |
|
|
|
இமையவர் தம்மையும் எம்மையும் முன்னம் |
|
|
|
அமைய வகுத்தவன் ஆதி புராணன் |
|
|
|
சமயங்க ளாறும்தன் றாளிணை நாட |
|
|
|
அமையங் குழல்கின்ற ஆதிப் பிரானே. 1 |
|
|
|
|
|
|
|
1558. |
|
|
|
ஒன்றது பேரூர் வழியா றதற்கு |
|
|
|
என்றது போல இருமுச் சமயமும் |
|
|
|
நன்றிது தீதிது என்றுரை யாளர்கள் |
|
|
|
குன்று குரைத்தெழு நாயையொத் தார்களே. 2 |
|
|
|
|
|
|
|
1559. |
|
|
|
சைவப் பெருமைத் தனிநா யகன்தன்னை |
|
|
|
உய்ய வுயிர்க்கின்ற ஒண்சுடர் நந்தியை |
|
|
|
மெய்ய பெருமையர்க் கன்பனை இன்பஞ்செய் |
|
|
|
வையத் தலைவனை வந்தடைந் துயமினே. 2 |
|
|
|
|
|
|
|
1560. |
|
|
|
சிவனவன் வைத்ததோர் தெய்வ நெறியிற் |
|
|
|
பவனவன் வைத்த பழிவழி நாடி |
|
|
|
இவனவன் என்ப தறியவல் லார்கட் |
|
|
|
கவனவ னங்குள தாங்கட னாமே. 3 |
|
|
|
|
|
|
|
1561. |
|
|
|
ஆமா றுரைக்கும் அறுசம யாதிக்குப் |
|
|
|
போமாறு தானில்லை புண்ணிய மல்லதங் |
|
|
|
காமாம் வழியாக்கும் அவ்வே றுயிர்கட்கும் |
|
|
|
போமா றவ்வாதாரப் பூங்கொடி யாளே. 4 |
|
|
|
|
|
|
|
1562. |
|
|
|
அரன்நெறி யாவ தறிந்தேனும் நானுஞ் |
|
|
|
சிலநெறி தேடித் திரிந்தஅந் நாளும் |
|
|
|
உரநெறி யுள்ளக் கடல்கடந் தேறுந் |
|
|
|
தரநெறி நின்ற தனிச்சுடர் தானே. 5 |
|
|
|
|
|
|
|
1563. |
|
|
|
தேர்ந்த அரனை அடைந்த சிவநெறி |
|
|
|
பேர்ந்தவர் உன்னிப் பெயர்ந்த பெருவழி |
|
|
|
ஆர்ந்தவர் அண்டத்துப் புக்க அருள்நெறி |
|
|
|
போந்து புனைந்து புணர்நெறி யாமே. 6 |
|
|
|
|
|
|
|
1564. |
|
|
|
ஈரு மனத்தை யிரண்டற வீசுமின் |
|
|
|
ஊருஞ் சகாரத்தை ஓதுமின் னோதியே |
|
|
|
வாரு மரநெறி மன்னியே முன்னியத் |
|
|
|
தூருஞ் சுடரொளி தோன்றலு மாமே 7 |
|
|
|
|
|
|
|
1565. |
|
|
|
மினற்குறி யாளனை வேதியர் வேதத் |
|
|
|
தனற்குறி யாளனை ஆதிப் பிரான்தன்னை |
|
|
|
நினைக்குறி யாளனை ஞானக் கொழுந்தி |
|
|
|
னயக்குறி காணில் அரநெறி யாமே. 8 |
|
|
|
|
|
|
|
1566. |
|
|
|
ஆய்ந்துண ரார்களின் ஆன்மாச் சதுர்பல |
|
|
|
வாய்ந்துண ராவகை நின்ற அரனெறி |
|
|
|
பாய்ந்துணர் வார் அரன் சேவடி கைதொழு |
|
|
|
தேய்ந்துணர் செய்வதோர் இன்பமு மாமே. 9 |
|
|
|
|
|
|
|
1567. |
|
|
|
சைவ சமயத் தனிநா யகன்நந்தி |
|
|
|
உய்ய வகுத்த குருநெறி ஒன்றுண்டு |
|
|
|
தெய்வச் சிவநெறி சன்மார்க்கஞ் சேர்ந்துய்ய |
|
|
|
வையத் துளார்க்குவகுத்துவைத் தானே. 10 |
|
|
|
|
|
|
|
1568. |
|
|
|
இத்தவம் அத்தவம் என்றிரு பேரிடும் |
|
|
|
பித்தரைக் காணின் நகுமெங்கள் பேர்நந்தி |
|
|
|
எத்தவ மாகிலென் எங்குப் பிறக்கிலென் |
|
|
|
ஒத்துணர் வார்க்கொல்லை யூர்புக லாமே. 11 |
|
|
|
|
|
|
|
1569 |
|
|
|
ஆமே பிரான்முகம் ஐந்தொடு மாருயிர் |
|
|
|
ஆமே பிரானுக் கதோமுக மாறுள |
|
|
|
தாமே பிரானுக்குந் தன்சிர மாலைக்கும் |
|
|
|
நாமே பிரானுக்கு நரரியல் பாமே. 12 |
|
|
|
|
|
|
|
1570. |
|
|
|
ஆதிப்பிரானுல கேழும் அளந்தவன் |
|
|
|
ஓதக் கடலும் உயிர்களு மாய்நிற்கும் |
|
|
|
பேதிப் பிலாமையின் நின்ற பராசத்தி |
|
|
|
ஆதிக்கட் டெய்வமும் அந்தமு மாமே. 13 |
|
|
|
|
|
|
|
1571. |
|
|
|
ஆய்ந்தறி வார்கள் அமரர்வித் தியாதரர் |
|
|
|
ஆய்ந்தறி யாவண்ணம் நின்ற அரனெறி |
|
|
|
ஆய்ந்தறிந் தேனவன் சேவடி கைதொழ |
|
|
|
ஆய்ந்தறிந் தேனிம்மை அம்மைகண் டேனே. 14 |
|
|
|
|
|
|
|
1572. |
|
|
|
அறியவொண் ணாதவ் வுடம்பின் பயனை |
|
|
|
அறியவொண் ணாத அறுவகை யாக்கி |
|
|
|
அறியவொண் ணாத அறுவகைக் கோசத் |
|
|
|
தறியவொண் ணாததோர் அண்டம் பதிந்ததே. 15 |
|
|
|
|
|
|
|
|
|
ஐந்தாம் தந்திரம் முற்றிற்று |
|
|
|
|
|
|
|
|
|
திருமந்திரம் - ஆறாம் தந்திரம் (1573-1703) |
|
|
|
|
|
|
|
|
|
1. சிவகுரு தரிசினம் (1573-1589) |
|
|
|
|
|
|
|
1573 |
|
|
|
பத்திப் பணித்துப் பரவு மடிநல்கிச் |
|
|
|
சுத்த வுரையால் துரிசறச் சோதித்துச் |
|
|
|
சத்தும் அசத்துஞ் சதசத்துங் காட்டலாற் |
|
|
|
சித்தம் இறையே சிவகுரு வாமே. 1 |
|
|
|
|
|
|
|
1574. |
|
|
|
பாசத்தைக் கூட்டியே கட்டிப் பறித்திட்டு |
|
|
|
நேசித்த காயம் விடிவித்து நேர்நேரே |
|
|
|
கூசற்ற முத்தியிற் கூட்டலா நாட்டத்த |
|
|
|
தாசற்ற சற்குரு அம்பலமாமே. 2 |
|
|
|
|
|
|
|
1575. |
|
|
|
சித்திகள் எட்டோடுந் திண்சிவ மாக்கிய |
|
|
|
சுத்தியும் எண்சத்தித் தூய்மையும் யோகத்துச் |
|
|
|
சத்தியும்மந்திர சாதக போதமும் |
|
|
|
பத்தியும் நாதன் அருளிற் பயிலுமே. 3 |
|
|
|
|
|
|
|
1576. |
|
|
|
எல்லா உலகிற்கும் அப்பாலோன் இப்பாலாய் |
|
|
|
நல்லார் உள்ளத்து மிக்கருள் நல்கலால் |
|
|
|
எல்லாரும் உய்யக்கொண் டிங்கே அளித்தலாற் |
|
|
|
சொல்லார்ந்த நற்குருச் சுத்த சிவமே. 4 |
|
|
|
|
|
|
|
1577. |
|
|
|
தேவனுஞ் சுத்த குருவும் உபாயத்துள் |
|
|
|
யாவையும் மூன்றா யுனக்கண் டுரையாலே |
|
|
|
மூவாப் பசுபாச மாற்றியே முத்திப்பால் |
|
|
|
யாவையும் நல்குங் குருபரன் அன்புற்றே. 5 |
|
|
|
|
|
|
|
1578. |
|
|
|
சுத்த சிவன்குரு வாய்வந்து தூய்மைசெய் |
|
|
|
தத்தனை நல்கருள் காணா அதிமூடர் |
|
|
|
பொய்த்தகு கண்ணான் நமரென்பர் புண்ணியர் |
|
|
|
அத்தன் இவனென் றடிபணிவாரே. 6 |
|
|
|
|
|
|
|
1579. |
|
|
|
உண்மையிற் பொய்மை ஒழித்தலும் உண்மைப்பார் |
|
|
|
திண்மையும் ஒண்மைச் சிவமாய அவ்வரன் |
|
|
|
வண்மையும் எட்டெட்டுச் சித்தி மயக்கமும் |
|
|
|
அண்ணல் அருளன்றி யாரறி வாரே. 7 |
|
|
|
|
|
|
|
1580. |
|
|
|
சிவனே சிவஞானி யாதலாற் சுத்த |
|
|
|
சிவனே யெனஅடி சேரவல் லார்க்கு |
|
|
|
நவமான தத்துவ நன்முத்தி நண்ணும் |
|
|
|
பவமான தின்றிப் பரலோக மாமே. 8 |
|
|
|
|
|
|
|
1581 |
|
|
|
குருவே சிவமெனக் கூறினன் நந்தி |
|
|
|
குருவே சிவமென் பதுகுறித் தோரார் |
|
|
|
குருவே சிவனுமாய்க் கோனுமாய் நிற்கும் |
|
|
|
குருவே யுரையுணர் வற்றதோர் கோவே. 9 |
|
|
|
|
|
|
|
1582. |
|
|
|
சித்த யாவையுஞ் சிந்தித் திருந்திடும் |
|
|
|
அத்தம் உணர்த்துவ தாகும் அருளாலே |
|
|
|
சித்தம் யாவையுந் திண்சிவ மானக்கால் |
|
|
|
அத்தனும் அவ்விடத் தேயமர்ந் தானே. 10 |
|
|
|
|
|
|
|
1583. |
|
|
|
தாநந்தி சீர்மையுட் சந்தித்த சீர்வைத்த |
|
|
|
கோனந்தி யெந்தை குறிப்பறி வாரில்லை |
|
|
|
வானந்தி யென்று மகிழும் ஒருவற்குத் |
|
|
|
தானந்தி யங்கித் தனிச்சுட ராமே. 11 |
|
|
|
|
|
|
|
1584. |
|
|
|
திருவாய சித்தியும் முத்தியும் சீர்மை |
|
|
|
மருளா தருளும் மயக்கறும் வாய்மைப் |
|
|
|
பொருளாய வேதாந்த போதமும் நாதன் |
|
|
|
உருவாய் அருளாவிடிலோர ஒண்ணாதே. 12 |
|
|
|
|
|
|
|
1585. |
|
|
|
பத்தியும் ஞானவை ராக்கிய மும்பர |
|
|
|
சித்திக்கு வித்தாஞ் சிவோகமெ சேர்தலான் |
|
|
|
முத்தியின் ஞான முளைத்தலால் அம்முளை |
|
|
|
சத்தி யருள்தரில் தானெளி தாமே. 13 |
|
|
|
|
|
|
|
1586 |
|
|
|
பின்னெய்த வைத்ததோர் இன்பப் பிறப்பினை |
|
|
|
முன்எய்த வைத்த முதல்வனை எம்மிறை |
|
|
|
தன்எய்துங் காலத்துத் தானே வெளிப்படு |
|
|
|
மன்னெய்த வைத்த மனமது தானே. 14 |
|
|
|
|
|
|
|
1587. |
|
|
|
சிவமான ஞானந் தெளியவொண் சித்தி |
|
|
|
சிவமான ஞானந் தெளியவொண் முத்தி |
|
|
|
சிவமான ஞானஞ் சிவபரத்தே யேகச் |
|
|
|
சிவமான ஞானஞ் சிவானந்த நல்குமே. 15 |
|
|
|
|
|
|
|
1588 |
|
|
|
அறிந்துணர்ந் தேனிவ் வகலிட முற்றுஞ் |
|
|
|
செறிந்துணர்ந் தோதித் திருவருள் பெற்றேன் |
|
|
|
மறந்தொழிந் தேன்மதி மாண்டவர் வாழ்க்கை |
|
|
|
பிறந்தொழிந் தேனிப் பிறவியை நானே. 16 |
|
|
|
|
|
|
|
1589. |
|
|
|
தரிக்கின்ற பல்லுயிர்க் கெல்லாந் தலைவன் |
|
|
|
இருக்கின்ற தன்மையை ஏதும் உணரார் |
|
|
|
பிரிக்கின்ற இந்தப் பிணக்கறுத் தெல்லாங் |
|
|
|
கருக்கொண்ட ஈசனைக் கண்டுகொண் டேனே. 17 |
|
|
|
|
|
|
|
|
|
2. திருவடிப் பேறு (1590 -1604) |
|
|
|
1590. |
|
|
|
இசைந்தெழும் அன்பில் எழுந்த படியே |
|
|
|
பசைந்தெழும் ஈசரைப் பாசத்துள் ஏகச் |
|
|
|
சிவந்த குருவந்து சென்னிகை வைக்க |
|
|
|
உவந்த குருபதம் உள்ளத் துவந்ததே. 1 |
|
|
|
|
|
|
|
1591. |
|
|
|
தாடந்த போதே தலைதந்த எம்மிறை |
|
|
|
வாள்தந்த ஞான வலியையுந் தந்திட்டு |
|
|
|
வீடந்த மின்றியே யாள்கென விட்டருட் |
|
|
|
பாடின் முடிவைத்துப் பார்வந்து தந்ததே. 2 |
|
|
|
|
|
|
|
1592. |
|
|
|
தானவ னாகிச் சொரூபத் துவந்திட்டு |
|
|
|
ஆன சொரூபங்கள் நான்கும் அகற்றின |
|
|
|
ஏனைய முத்திரை ஈந்தாண்ட நன்நந்தி |
|
|
|
தானடி முற்சூட்டித் தாபித்த துண்மையே. 3 |
|
|
|
|
|
|
|
1593. |
|
|
|
உரையற் றுணர்வற் றுயிர்பர மற்றுத் |
|
|
|
திரையற்ற நீர்போல் சிவமாதல் தீர்த்துக் |
|
|
|
கரையற்ற சத்தாதி நான்குங் கடந்த |
|
|
|
சொரூபத் திருத்தனன் சொல்லிறந் தோமே. 4 |
|
|
|
|
|
|
|
1594. |
|
|
|
குரவன் உயிர்முச் சொரூபமுங் கைக்கொண் |
|
|
|
டரிய பொருள்முத் திரையாகக் கொண்டு |
|
|
|
பெரிய பிரானடி நந்தி பேச்சற் |
|
|
|
றுருகிட என்னையங் குய்யக்கொண் டானே. 5 |
|
|
|
|
|
|
|
1595. |
|
|
|
பேச்சற்ற இன்பத்துப் பேரானந் தத்திலே |
|
|
|
மாச்சற்ற என்னைச் சிவமாக்கி மாள்வித்துக் |
|
|
|
காச்சற்ற சோதி கடன்மூன்றுங் கைக்கொண்டு |
|
|
|
வாச்ச புகழ்மாளத் தாள்தந்து மன்னுமே. 6 |
|
|
|
|
|
|
|
1596. |
|
|
|
இதயத்தும் நாட்டத்தும் என்றன் சிரத்தும் |
|
|
|
பதிவித்த பாதப் பராபரன் நந்தி |
|
|
|
கதிவைத்த வாறும் மெய்காட் டியவாறும் |
|
|
|
விதிவைத்த வாறும் விளம்பவொண் ணாதே. 7 |
|
|
|
|
|
|
|
1597. |
|
|
|
திருவடி வைத்தென் சிரத்துருள் நோக்கிப் |
|
|
|
பெருவடி வைத்தந்த பேர்நந்தி தன்னைக் |
|
|
|
குருவடி விற்கண்ட கோனையெங் கோவைக் |
|
|
|
கருவழி வாற்றிடக் கண்டுகொண் டேனே. 8 |
|
|
|
|
|
|
|
1598. |
|
|
|
திருவடி ஞானஞ் சிவமாக்கு விக்குந் |
|
|
|
திருவடி ஞானஞ் சிவலோகஞ் சேர்க்குந் |
|
|
|
திருவடி ஞானஞ் சிறைமல மீட்குந் |
|
|
|
திருவடி ஞானமே திண்சித்தி முத்தியே. 9 |
|
|
|
|
|
|
|
1599. |
|
|
|
மேல்வைத்த வாறுசெய் யாவிடின் மேல்வினை |
|
|
|
மால்வைத்த சிந்தையை மாயம தாக்கிடும் |
|
|
|
பால்வைத்த சென்னிப் படரொளி வானவன் |
|
|
|
தாள்வைத்த வாறு தரிப்பித்த வாறே. 10 |
|
|
|
|
|
|
|
1600. |
|
|
|
கழலார் கமலத் திருவடி என்னும் |
|
|
|
நிழல்சேரப் பெற்றேன் நெடுமால் அறியா |
|
|
|
அழல்சேரும் அங்கியுள் ஆதிப் பிரானுங் |
|
|
|
குழல்சேரும் என்னுயிர்க் கூடுங் குலைத்தே. 11 |
|
|
|
|
|
|
|
1601. |
|
|
|
முடிமன்ன ராகிமூ வுலகம தாள்வர் |
|
|
|
அடிமன்னர் இன்பத் தளவில்லை கேட்கின் |
|
|
|
முடிமன்ன ராய்நின்ற தேவர்கள் ஈசன் |
|
|
|
குடிமன்ன ராய்க்குற்ற மற்றுநின் றாரே. 12 |
|
|
|
|
|
|
|
1602 |
|
|
|
வைத்தேன் அடிகள் மனத்தினுள் ளேநான் |
|
|
|
பொய்த்தே யெரியும் புலன்வழி போகாமல் |
|
|
|
எய்த்தேன் உழலும் இருவினை மாற்றிட்டு |
|
|
|
மெய்த்தேன் அறிந்தே னவ்வேதத்தின் அந்தமே. 13 |
|
|
|
|
|
|
|
1603 |
|
|
|
அடிசார லாம்அண்ண ல்பாத மிரண்டும் |
|
|
|
முடிசார வைத்தனர் முன்னை முனிவர் |
|
|
|
படிசார்ந்த இன்பப் பழவடி வெள்ளக் |
|
|
|
குடிசார் நெறிகூடி நிற்பவர் கொள்கையே. 14 |
|
|
|
|
|
|
|
1604 |
|
|
|
மந்திரமாவதும் மாமருந் தாவதுந் |
|
|
|
தந்திர மாவதுந் தானங்க ளாவதுஞ் |
|
|
|
சுந்தர மாவதுந் தூய்நெறி யாவதும் |
|
|
|
எந்தை பிரான்தன் இணையடி தானே. 15 |
|
|
|
|
|
|
|
|
|
3. ஞாதுரு ஞான ஞேயம் (1605 -1613) |
|
|
|
|
|
|
|
1605 |
|
|
|
நீங்காச் சிவானந்த ஞேயத்தே நின்றிடப் |
|
|
|
பாங்கான பாசம் படரா படரினும் |
|
|
|
ஆங்கார நீங்கி யதநிலை நிற்கவே |
|
|
|
நீங்கா அமுத நிலைபெற லாமே. 1 |
|
|
|
|
|
|
|
1606 |
|
|
|
ஞேயத்தே நின்றோர்க்கு ஞானாதி நின்றிடும் |
|
|
|
ஞேயத்தின் ஞாதுரு ஞேயத்தில் வீடாகும் |
|
|
|
ஞேயத்தின் ஞேயத்தை ஞேயத்தை யுற்றவர் |
|
|
|
ஆயத்தில் நின்ற அறிவறி வாரே. 2 |
|
|
|
|
|
|
|
1607. |
|
|
|
தானென் றவனென் றிரண்டாகும் தத்துவந் |
|
|
|
தானென் றவனென் றிரண்டுந் தனிற்கண்டு |
|
|
|
தானென்ற பூவை யவனடி சாத்தினால் |
|
|
|
நானென் றவனென்கை நல்லதொன் றன்றே. 3 |
|
|
|
|
|
|
|
1608 |
|
|
|
வைச்சன வாறாறு மாற்றியெனவைத்து |
|
|
|
மெச்சப் பரன்றன் வியாத்துவ மேலிட்டு |
|
|
|
நிச்சய மாக்கிச் சிவமாக்கி ஞேயத்தால் |
|
|
|
அச்சங் கெடுத்தென்னை யாண்டனன் நந்தியே. 4 |
|
|
|
|
|
|
|
1609 |
|
|
|
முன்னை யறிவறியாதஅம் மூடர்போற் |
|
|
|
பின்னை யறிவுஅறி யாமையைப் பேதித்தான் |
|
|
|
தன்aன யறியப் பரனாக்கித் தற்சிவத்து |
|
|
|
தென்னை யறிவித் திருந்தனன் நந்தியே. 5 |
|
|
|
|
|
|
|
1610 |
|
|
|
காணாத கண்ணுடன் கேளாத கேள்வியுங் |
|
|
|
கோணாத போகமுங் கூடாத கூட்டமும் |
|
|
|
நாணாத நாணமும் நாதாந்த போதமுங் |
|
|
|
காணா யெனவந்து காட்டினன் நந்தியே. 6 |
|
|
|
|
|
|
|
1611. |
|
|
|
மோனங்கை வந்தோர்க்கு முத்தியும் கைகூடும் |
|
|
|
மோனங்கை வந்தோர்க்குச் சித்தியும் முன்னிற்கும் |
|
|
|
மோனங்கை வந்தூமை யாமொழி முற்றுங்காண் |
|
|
|
மோனங்கை வந்தைந் கருமமும் முன்னுமே. 7 |
|
|
|
|
|
|
|
1612. |
|
|
|
முத்திரை மூன்றின் முடிந்தது மூன்றன்பால் |
|
|
|
வைத்த கலைகால் நான்மடங் கால்மாற்றி |
|
|
|
உய்த்தவத் தானந்தத் தொண்குரு பாதத்தே |
|
|
|
பெத்த மறுத்தோர் பிறந்திற வாரே. 8 |
|
|
|
|
|
|
|
1613 |
|
|
|
மேலைச் சொரூபங்கள் மூன்று மிகுசத்தி |
|
|
|
பாலித்த முத்திரை பற்றும் பரஞானி |
|
|
|
ஆலித்த நட்டமே ஞேயம் புகுந்தற்ற |
|
|
|
மூலச் சொரூபன் மொழிஞா துருவனே. 9 |
|
|
|
|
|
|
|
|
|
4. துறவு (1614- 1623) |
|
|
|
|
|
|
|
|
|
1614 |
|
|
|
இறப்பும் பிறப்பும் இருமையும் நீங்கித் |
|
|
|
துறக்குந் தவங்கண்ட சோதிப் பிரானை |
|
|
|
மறப்பில ராய்நித்தம் வாய்மொழி வார்கட் |
|
|
|
கறப்பதி காட்டும் அமரர் பிரானே. 1 |
|
|
|
|
|
|
|
1615 |
|
|
|
பிறந்தும் இறந்தும்பல் பேதைமை யாலே |
|
|
|
மறந்து பலஇருள் நீங்க மறைந்து |
|
|
|
சிறந்த சிவனருள் சேர்பரு வத்துத் |
|
|
|
துறந்த வுயிர்க்குச் சுடரொளி யாமே. 2 |
|
|
|
|
|
|
|
1616 |
|
|
|
அறவன் பிறப்பிலி யாரும் இலாதான் |
|
|
|
உறைவது காட்டகம் உண்பது பிச்சை |
|
|
|
துறவனுங் கண்டீர் துறந்தவர் தம்மைப் |
|
|
|
பிறவி யறுத்திடும் பித்தன்கண் டீரே 3 |
|
|
|
|
|
|
|
1617 |
|
|
|
நெறியைப் படைத்தான் நெருஞ்சில் படைத்தான் |
|
|
|
நெறியில் வழுவின் நெருஞ்சில் முட்பாயும் |
|
|
|
நெறியில் வழுவா தியங்கவல் லார்க்கு |
|
|
|
நெறியின் நெருஞ்சில்முட் பாயகி லாவே. 4 |
|
|
|
|
|
|
|
1618 |
|
|
|
கேடும் கடமையுங் கேட்டுவந் தைவரும் |
|
|
|
நாடி வளைந்தது நான்கட வேனலேன் |
|
|
|
ஆடல் விடையுடை அண்ணல் திருவடி |
|
|
|
கூடுந் தவஞ்செய்த கொள்கையன் தானே. 5 |
|
|
|
|
|
|
|
1619 |
|
|
|
உழவன் உழஉழ வானம் வழங்க |
|
|
|
உழவன் உழவினிற் பூத்த குவளை |
|
|
|
உழவன் உழத்தியர் கண்ணொக்கும் என்றிட் |
|
|
|
டுழவன் அதனை யுழவொழிந் தானே. 6 |
|
|
|
|
|
|
|
1620 |
|
|
|
மேல்துறந் தண்ணல் விளங்கொளி கூற்றுவன் |
|
|
|
நாள்துறந் தார்க்கவன் நண்ப னவாவிலி |
|
|
|
கார்துறந் தார்க்கவன் கண்ணுத லாய்நிற்கும் |
|
|
|
பார்துறந் தார்க்கே பதஞ்செய லாமே. 7 |
|
|
|
|
|
|
|
1621 |
|
|
|
நாகமும் ஒன்று படம்ஐந்து நாலது |
|
|
|
போகமுட் புற்றிற் பொருந்தி நிறைந்தது |
|
|
|
ஆக மிரண்டும் படம்விரித் தாட்டொழிந் |
|
|
|
தேகப் படம்செய் துடம்பிட மாமே. 8 |
|
|
|
|
|
|
|
1622 |
|
|
|
அகன்றார் வழிமுதல் ஆதிப் பிரானும் |
|
|
|
இவன்றா னெனநின் றெளியனும் அல்லன் |
|
|
|
சிவன்றாள் பலபல சீவனு மாகும் |
|
|
|
நயன்றான் வரும்வழி நாமறி யோமே. 9 |
|
|
|
|
|
|
|
1623 |
|
|
|
தூம்பு திறந்தன ஒன்பது வாய்தலும் |
|
|
|
ஆம்பற் குழலியின் கஞ்சுளிப் பட்டது |
|
|
|
வேம்பேறி நோக்கினன் மீகாமன் கூரையிற் |
|
|
|
கூம்பேறிக் கோயிலிற் பூக்கின்ற வாறே. 10 |
|
|
|
|
|
|
|
|
|
5. தவம் (1624 -1632) |
|
|
|
1624 |
|
|
|
ஒடுங்கி நிலைபெற்ற வுத்தமர் உள்ளம் |
|
|
|
நடுங்குவ தில்லை நமனுமங் கில்லை |
|
|
|
இடும்பையும் இல்லை இராப்பகல் இல்லை |
|
|
|
படும்பயன் இல்லை பற்றுவிட் டோர்க்கே. 1 |
|
|
|
|
|
|
|
1625 |
|
|
|
எம்மா ருயிரும் இருநிலத் தோற்றமுஞ் |
|
|
|
செம்மா தவத்தின் செயலின் பெருமையும் |
|
|
|
அம்மான் திருவருள் பெற்றவர்க் கல்லா(து) |
|
|
|
இம்மா தவத்தின் இயல்பறி யாரே. 2 |
|
|
|
|
|
|
|
1626 |
|
|
|
பிறப்பறி யார்பல பிச்சைசெய் மாந்தர் |
|
|
|
சிறப்பொடு வேண்டிய செல்வம் பெறுவர் |
|
|
|
மறப்பில ராகிய மாதவஞ் செய்வார் |
|
|
|
பிறப்பினை நீக்கும் பெருமைபெற் றாரே. 3 |
|
|
|
|
|
|
|
1627 |
|
|
|
இருந்து வருந்தி எழிறவஞ் செய்யும் |
|
|
|
பெருந்தன்மை யாளரைப் பேதிக்க வென்றே |
|
|
|
இருந்திந் திரனே யெவரே வரினுந் |
|
|
|
திருந்துந்தஞ் சிந்தை சிவனவன் பாலே. 4 |
|
|
|
|
|
|
|
1628 |
|
|
|
கரந்துங் கரந்திலன் கண்ணுக்குந் தோன்றான் |
|
|
|
பரந்த சடையன் பசும்பொன் நிறத்தன் |
|
|
|
அருந்தவர்க் கல்லால் அணுகலு மாகான் |
|
|
|
விரைந்து தொழப்படும் வெண்மதி யானே. 5 |
|
|
|
|
|
|
|
1629 |
|
|
|
பின்னெய்த வைத்ததோர் இன்பப் பிறப்பினை |
|
|
|
முன்னெய்த வைத்த முதல்வனை எம்மிறை |
|
|
|
தன்னெய்துங் காலத்துத் தானே வெளிப்படும் |
|
|
|
மன்னெய்த வைத்த மனமது தானே. 6 |
|
|
|
|
|
|
|
1630 |
|
|
|
அமைச்சரும் ஆனைக் குழாமும் அரசும் |
|
|
|
பகைத்தெழும் பூசலுட் பட்டார் நடுவே |
|
|
|
அமைத்ததோர் ஞானமும் ஆத்தமும் நோக்கி |
|
|
|
இமைத்தழி யாதிருந் தார்தவத் தாரே. 7 |
|
|
|
|
|
|
|
1631 |
|
|
|
சாத்திரம் ஓதுஞ் சதுர்களை விட்டுநீர் |
|
|
|
மாத்திரைப் போது மறித்துள்ளே நோக்குமின் |
|
|
|
பார்த்தவப் பார்வை பசுமரத் தாணிபோல் |
|
|
|
ஆர்த்த பிறவி அகலவிட் டோடுமே. 8 |
|
|
|
|
|
|
|
1632 |
|
|
|
தவம்வேண்டு ஞானந் தலைபட வேண்டில் |
|
|
|
தவம்வேண்டா ஞான சமாதிகை கூடில் |
|
|
|
தவம்வேண்டா மச்ச கசமார்க்கத் தோர்க்கு |
|
|
|
தவம்வேண்டா மாற்றந் தனையறி யாரே. 9 |
|
|
|
----- |
|
|
|
|
|
|
|
|
|
6. தவ நிந்தை (1633-1644 ) |
|
|
|
1633. |
|
|
|
ஓதலும் வேண்டாம் உயிர்க்குயி ருள்ளுற்றாற் |
|
|
|
காதலும் வேண்டாமெய்க் காய மிடம்கண்டாற் |
|
|
|
சாதலும் வேண்டாஞ் சமாதிகை கூடினாற் |
|
|
|
போதலும் வேண்டாம் புலன்வழி போகார்க்கே. 1 |
|
|
|
|
|
|
|
1634 |
|
|
|
கத்தவும் வேண்டாங் கருத்தறிந் தாறினாற் |
|
|
|
சத்தமும் வேண்டாஞ் சமாதிகை கூடினாற் |
|
|
|
சுத்தமும் வேண்டாந் துடக்கற்று நிற்றலாற் |
|
|
|
சித்தமும் வேண்டாஞ் செயலற்றிருக்கிலே. 2 |
|
|
|
|
|
|
|
1635 |
|
|
|
விளைவறி வார்பண்டை மெய்த்தவஞ் செய்வார் |
|
|
|
விளைவறி வார்பண்டை மெய்யுரை செய்வார் |
|
|
|
விளைவறி வார்பண்டை மெய்யறஞ் செய்வார் |
|
|
|
விளைவறி வார்விண்ணின் மண்ணின்மிக் காரே. 3 |
|
|
|
|
|
|
|
1636 |
|
|
|
கூடித் தவஞ்செய்து கண்டேன் குரைகழல் |
|
|
|
தேடித் தவஞ்செய்து கண்டேன் சிவகதி |
|
|
|
வாடித் தவஞ்செய்வ தேதவம் இவைகளைந் |
|
|
|
தூடிற் பலவுல கோரெத் தவரே. 4 |
|
|
|
|
|
|
|
1637 |
|
|
|
மனத்துரை மாகடல் ஏழுங் கைநீந்தித் |
|
|
|
தவத்திடை யாளர்தஞ் சார்வத்து வந்தார் |
|
|
|
பவத்திடை யாளர் அவர்பணி கேட்கின் |
|
|
|
முகத்திடை நந்தியை முந்தலு மாமே. 5 |
|
|
|
|
|
|
|
1638 |
|
|
|
மனத்திடை நின்ற மதிவாள் உருவி |
|
|
|
இனத்திடை நீக்கி இரண்டற வீர்த்துப் |
|
|
|
புனத்திடை அஞ்சும் போகாமல் மறித்தால் |
|
|
|
தவத்திடை யாறொளி தன்னொளி யாமே. 6 |
|
|
|
|
|
|
|
1639 |
|
|
|
ஒத்து மிகவு நின்றானை யுரைப்பது |
|
|
|
பத்தி கொடுக்கும் பணிந்தடி யார்தொழ |
|
|
|
முத்தி கொடுக்கும் முனிவன் னெனும்பதஞ் |
|
|
|
சத்தான செய்வது தான்தவந் தானே. 7 |
|
|
|
|
|
|
|
1640 |
|
|
|
இலைதொட்டுப் பூப்பறித் தெந்தைக்கென் றெண்ணி |
|
|
|
மலர்தொட்டுக் கொண்டேன் வரும்புனல் காணேன் |
|
|
|
தலைதொட்ட நூல்கண்டு தாழ்ந்ததென் உள்ளந் |
|
|
|
தலைதொட்டுக் கண்டேன் தவங்கொண்ட வாறே. 8 |
|
|
|
|
|
|
|
1641 |
|
|
|
படர்சடை மாதவம் பற்றிய பத்தர்க் |
|
|
|
கிடரடை யாவண்ணம் ஈசன் அருளும் |
|
|
|
இடரடை செய்தவர் மெய்த்தவ நோக்கில் |
|
|
|
உடரடை செய்வ தொருமனத் தாமே. 9 |
|
|
|
|
|
|
|
1642 |
|
|
|
ஆற்றிக் கிடந்த முதலைகண் டஞ்சிப்போய் |
|
|
|
ஈற்றுக் கரடிக் கெதிர்ப்பட்ட தன்னொக்கும் |
|
|
|
நோற்றுத் தவஞ்செய்யார் நூலறி யாதவர் |
|
|
|
சோற்றுக்கு நின்று சுழல்கின்ற வாறே. 10 |
|
|
|
|
|
|
|
1643 |
|
|
|
பழுக்கின்ற வாறும் பழமுண்ணு மாறுங் |
|
|
|
குழக்கன்று துள்ளியக் கோணியைப் பல்காற் |
|
|
|
குழக்கன்று கொட்டிலிற் கட்டவல் லார்க்குள் |
|
|
|
இழுக்காது நெஞ்சத் திடவொன்று மாமே. 11 |
|
|
|
|
|
|
|
1644 |
|
|
|
சித்தஞ் சிவமாகச் செய்தவம் வேண்டாவால் |
|
|
|
சித்தஞ் சிவானந்தஞ் சேர்ந்தோர் உறவுண்டால் |
|
|
|
சித்தஞ் சிவமாக வேசித்தி முத்தியாஞ் |
|
|
|
சித்தஞ் சிவமாதல் செய்தவப் பேறே. 12 |
|
|
|
----- |
|
|
|
|
|
|
|
|
|
7. அருளுடைமையின் ஞானம் வருதல் (1645- 1654) |
|
|
|
|
|
|
|
1645 |
|
|
|
பிரானருள் உண்டெனில் உண்டுநற் செல்வம் |
|
|
|
பிரானருள் உண்டெனில் உண்டுநன் ஞானம் |
|
|
|
பிரானரு ளிற்பெருந் தன்மையும் உண்டு |
|
|
|
பிரானரு ளிற்பெருந் தெய்வமு மாமே. 1 |
|
|
|
|
|
|
|
1646 |
|
|
|
தமிழ்மண் டலம்ஐந்துந் தாவிய ஞானம் |
|
|
|
உமிழ்வது போல உலகந் திரிவார் |
|
|
|
அவிழு மனமும்எம் ஆதியறிவுந் |
|
|
|
தமிழ்மண் டலம்ஐந்துந் தத்துவ மாமே. 2 |
|
|
|
|
|
|
|
1647 |
|
|
|
புண்ணிய பாவம் இரண்டுள பூமியில் |
|
|
|
நண்ணும் பொழுதறி வார்சில ஞானிகள் |
|
|
|
எண்ணி இரண்டையும் வேர்அறத் தப்புறத் |
|
|
|
தண்ணல் இருப்பிடம் ஆய்ந்துகொள் வீரே. 3 |
|
|
|
|
|
|
|
1648 |
|
|
|
முன்னின் றருளு முடிகின்ற காலத்து |
|
|
|
நன்னின் றுலகில் நடுவுயி ராய்நிற்கும் |
|
|
|
பின்னின் றருளும் பிறவியை நீக்கிடும் |
|
|
|
முன்னின் றெனக்கொரு முத்திதந் தானே. 4 |
|
|
|
|
|
|
|
1649 |
|
|
|
சிவனரு ளாற்சிலர் தேவரு மாவர் |
|
|
|
சிவனரு ளாற்சிலர் தெய்வத்தோ டொப்பர் |
|
|
|
சிவனரு ளால்வினை சேரகி லாமை |
|
|
|
சிவனருள் கூடின்அச் சிவலோக மாமே. 5 |
|
|
|
|
|
|
|
1650 |
|
|
|
புண்ணியன் எந்தை புனிதன் இணையடி |
|
|
|
நண்ணி விளக்கென ஞானம் விளைந்தது |
|
|
|
மண்ணவ ராவதும் வானவர் ஆவதும் |
|
|
|
அண்ணல் இறைவன் அருள்பெற்ற போதே. 6 |
|
|
|
|
|
|
|
1651 |
|
|
|
காயத்தே ரேறி மனப்பாகன் கைகூட்ட |
|
|
|
மாயத்தே ரேறி மயங்கு மவையுணர் |
|
|
|
நேயத்தே ரேறி நிமலன் அருள்பெற்றால் |
|
|
|
ஆயத்தே ரேறி யவனிவ னாமே. 7 |
|
|
|
|
|
|
|
1652 |
|
|
|
அவ்வுல கத்தே பிறக்கில் உடலொடும் |
|
|
|
அவ்வுல கத்தே யருந்தவர் நாடுவர் |
|
|
|
அவ்வுல கத்தே யரனடி கூடுவர் |
|
|
|
அவ்வுல கத்தே யருள்பெறு வாரே. 8 |
|
|
|
|
|
|
|
1653. |
|
|
|
கதிர்கண்ட காந்தங் கனலின் வடிவாம் |
|
|
|
மதிகண்ட காந்தம் மணிநீர் வடிவாஞ் |
|
|
|
சதிகொண்ட சாக்கி யெரியின் வடிவாம் |
|
|
|
எரிகொண்ட ஈசன் எழில்வடி வாமே. 9 |
|
|
|
|
|
|
|
1654 |
|
|
|
நாடும் உறவும் கலந்தெங்கள் நந்தியைத் |
|
|
|
தேடுவன் தேடிச் சிவபெரு மான்என்று |
|
|
|
கூடுவன் கூடிக் குரைகழற் கேசெல்ல |
|
|
|
வீடும் அளவும் விடுகின் றிலெனே. 10 |
|
|
|
--- |
|
|
|
|
|
|
|
|
|
8. அவ வேடம் (1655-1660) |
|
|
|
|
|
|
|
1655 |
|
|
|
ஆடம் பரங்கொண் டடிசிலுண் பான்பயன் |
|
|
|
வேடங்கள் கொண்டு வெருட்டிடும் பேதைகாள் |
|
|
|
ஆடியும் பாடியும் அழுதும் அரற்றியுந் |
|
|
|
தேடியுங் காணீர் சிவனவன் தாள்களே. 1 |
|
|
|
|
|
|
|
1656 |
|
|
|
ஞானமில் லேர்வேடம் பூண்டிருந்த நாட்டிடை |
|
|
|
ஈனம தேசெய் திரந்துண் டிருப்பினும் |
|
|
|
மான நலங்கெடும் வையகம் பஞ்ச்மாம் |
|
|
|
ஈனவர் வேடங் கழிப்பித்தல் இன்பமே. 2 |
|
|
|
|
|
|
|
1657 |
|
|
|
இன்பமும் துன்பமும் நாட்டா ரிடத்துள்ள |
|
|
|
நன்செயல் புன்செய லாலந்த நாட்டிற்காம் |
|
|
|
என்ப இறைநாடி நாடோறும் நாட்டினின் |
|
|
|
மன்பதை செப்பம் செயின்வையம் வாழுமே. 3 |
|
|
|
|
|
|
|
1658 |
|
|
|
இழிகுலத் தோர்வேடம் பூண்பர்மே லெய்த |
|
|
|
வழிகுலத் தோர்வேடம் பூண்பர்தே வாகப் |
|
|
|
பழிகுலத் தாகிய பாழ்சண்ட ரானார் |
|
|
|
கழிகுலத் தோர்கள் களையப்பட் டோரே. 4 |
|
|
|
|
|
|
|
1659 |
|
|
|
பொய்த்தவஞ் செய்வார் புகுவர் நரகத்துப் |
|
|
|
பொய்த்தவஞ் செய்தவர் புண்ணிய ராகாரேற் |
|
|
|
பொய்த்தவம்மெய்த்தவம் போகத்துட்போக்கியஞ் |
|
|
|
சத்திய ஞானத்தால் தங்குந் தவங்களே. 5 |
|
|
|
|
|
|
|
1660 |
|
|
|
பொய்வேடம் பூண்பர் போசித்தல் பயனாக |
|
|
|
மெய்வேடம் பூண்போர்மிகு பிச்சைகைக்கொள்வர் |
|
|
|
பொய்வேடம் மெய்வேடம் போலவே பூணினும் |
|
|
|
உய்வேட மாகும் உணர்ந்தறிந் தோர்க்கே. 6 |
|
|
|
--- |
|
|
|
|
|
|
|
|
|
9. தவவேடம் (1661 -1664) |
|
|
|
|
|
|
|
1661 |
|
|
|
தவமிக் கவரே தலையான வேடர் |
|
|
|
அவமிக் கவரே யதிகொலை வேடர் |
|
|
|
அவமிக் கவர்வேடத் தாகாரவ் வேடந் |
|
|
|
தவமிக் கவர்க்கன்றித் தாங்கவொண் ணாதே. 1 |
|
|
|
|
|
|
|
1662. |
|
|
|
பூதி யணிவது சாதன மாதியிற் |
|
|
|
காதணி தாம்பிர குண்டலங் கண்டிகை |
|
|
|
ஓதி யவர்க்கும் உருத்திர சாதனந் |
|
|
|
தீதில் சிவயோகி சாதனந் தேரிலே. 2 |
|
|
|
|
|
|
|
1663. |
|
|
|
யோகிக் கிடுமது வுட்கட்டுக் கஞ்சுளி |
|
|
|
தோகைக்குப் பாசத்துச் சுற்றுஞ் சடையதொன்று |
|
|
|
றாகத்து நீறனி யாங்கக் கபாலஞ் |
|
|
|
சீகந்த மாத்திரை தின்பிரம் பாகுமே. 3 |
|
|
|
|
|
|
|
1664 |
|
|
|
காதணி குண்டலங் கண்டிகை நாதமும் |
|
|
|
ஊதுநற் சங்கும் உயர்கட்டி கப்பரை |
|
|
|
ஏதமில் பாதுகம் யோகாந்த மாதனம் |
|
|
|
ஏதமில் யோகபட் டந்தண்டம் ஈரைந்தே. 4 |
|
|
|
---- |
|
|
|
|
|
|
|
|
|
10. திருநீறு (1665 -1667) ) |
|
|
|
|
|
|
|
1665 |
|
|
|
நூலுஞ் சிகையும் உணரார்நின் மூடர்கள் |
|
|
|
நூலது வேதாந்தம் நுண்சிகை ஞானமாம் |
|
|
|
பாலொன்றும் அந்தணர் பார்ப்பார் பரமுயிர் |
|
|
|
ஓரொன் றிரண்டெனில் ஓங்காரம் ஓதிலே. 1 |
|
|
|
|
|
|
|
1666 |
|
|
|
கங்காளன் பூசுng கவசத் திருநீற்றை |
|
|
|
மங்காமல் பூசி மகிழ்வரே யாமாகில் |
|
|
|
தங்கா வினைகளுஞ் சாருஞ் சிவகதி |
|
|
|
சிங்கார மான திருவடி சேர்வரே. 2 |
|
|
|
|
|
|
|
1667 |
|
|
|
அரசுட னாலத்தி யாகும்அக் காரம் |
|
|
|
விரவுகனலில் வியனுரு மாறி |
|
|
|
நிரவயன் நின்மலன் தாள்பெற்ற நீதர் |
|
|
|
உருவம் பிரமன் உயர்குலம் ஆமே. 3 |
|
|
|
---- |
|
|
|
|
|
|
|
|
|
11. ஞான வேடம் (1668-1675) |
|
|
|
|
|
|
|
1668. |
|
|
|
ஞானமி லார்வேடம் பூண்டும் நரகத்தர் |
|
|
|
ஞானமுள்ளார்வேடம்இன்றெனில்நன்முத்தர் |
|
|
|
ஞானமுளதாக வேண்டுவோர் நக்கன்பால் |
|
|
|
ஞானமுள வேட நண்ணிநிற் பாரே. 1 |
|
|
|
|
|
|
|
1669. |
|
|
|
புன்ஞானத் தோர்வேடம் பூண்டும் பயனில்லை |
|
|
|
நன்ஞானத்தோர்வேடம் பூணார் அருள்நண்ணித் |
|
|
|
துன்ஞானத் தோர்சம யத்துரி சுள்ளோர் |
|
|
|
பின்ஞானத் தோரொன்றும் பேசுகில்லாரே. 2 |
|
|
|
|
|
|
|
1670 |
|
|
|
சிவஞானி கட்குஞ் சிவயோகி கட்கும் |
|
|
|
அவமான சாதனம் ஆகாது தேரில் |
|
|
|
அவமா மவர்க்கது சாதன நான்கும் |
|
|
|
உவமான மில்பொருள் உள்ளுற லாமே. 3 |
|
|
|
|
|
|
|
1671 |
|
|
|
சுத்தித் திரிவர் கழுவடி நாய்போற் |
|
|
|
கொத்தித் திரிவர் குரக்களி ஞானிகள் |
|
|
|
ஒத்துப் பொறியும் உடலும் இருக்கவே |
|
|
|
செத்துத் திரிவர் சிவஞானி யோர்களே. 4 |
|
|
|
|
|
|
|
1672 |
|
|
|
அடியா ரவரே யடியா ரலாதார் |
|
|
|
அடியாரு மாகார்அவ் வேடமு மாகார் |
|
|
|
அடியார் சிவஞான மானது பெற்றோர் |
|
|
|
அடியா ரலாதார் அடியார்கள் அன்றே. 5 |
|
|
|
|
|
|
|
1673 |
|
|
|
ஞானிக்குச் சுந்தர வேடமும் நல்லவாந் |
|
|
|
தானுற்ற வேடமுந் தற்சிவ யோகமே |
|
|
|
ஆனவவ் வேடம் அருண்ஞான சாதனம் |
|
|
|
ஆனது மாமொன்றும் ஆகா தவனுக்கே. 6 |
|
|
|
|
|
|
|
1674 |
|
|
|
ஞானத்தின் னாற்பத நண்ணுஞ் சிவஞானி |
|
|
|
தானத்தில் வைத்த தனியால யத்தனாம் |
|
|
|
மோனத்த னாதலின் முத்தனாஞ் சித்தனாம் |
|
|
|
ஏனைத் தவசி இவனென லாகுமே. 7 |
|
|
|
|
|
|
|
1675 |
|
|
|
தானன்ற தன்மையுந் தானவ னாதலும் |
|
|
|
ஏனைய வச்சிவ மான இயற்கையுந் |
|
|
|
தானுறு சாதக முத்திரை சாத்தலு |
|
|
|
மேனமும் நந்தி பதமுத்தி பெற்றதே. 8 |
|
|
|
---- |
|
|
|
|
|
|
|
|
|
12. சிவ வேடம் (1676- 1679) |
|
|
|
|
|
|
|
1676 |
|
|
|
அருளால் அரனுக் கடிமைய தாகிப் |
|
|
|
பொருளாந் தனதுடற் பொற்பதி நாடி |
|
|
|
இருளான தின்றி யிருஞ்செயல் அற்றோர் |
|
|
|
தெருளாம் அடிமைச் சிவவேடத் தோரே. 1 |
|
|
|
|
|
|
|
1677 |
|
|
|
உடலில் துவக்கிய வேடம் உயிர்க்காகா |
|
|
|
உடல்கழன் றால்வேடம் உடனே கழலும் |
|
|
|
உடலுயிர் உண்மையென் றோர்ந்துகொள்ளாதார் |
|
|
|
கடலில் அகல்பட்ட கட்டையொத் தாரே. 2 |
|
|
|
|
|
|
|
1678 |
|
|
|
மயலற் றிருளற்று மாமன மற்றுக் |
|
|
|
கயலுற்ற கண்ணியர் கையிணைக் கற்றுத் |
|
|
|
தயலற் றவரோடும் தாமே தாமாகிச் |
|
|
|
செயலற் றிருப்பார் சிவவேடத் தாரே. 3 |
|
|
|
|
|
|
|
1679 |
|
|
|
ஒடுங் குதிரைக் குசைதிண்ணம் பற்றுமின் |
|
|
|
வேடங்கொண் டென்செய்வீர் வேண்டாமனிதரே |
|
|
|
நாடுமின் நந்தியை நம்பெரு மான்தன்னைத் |
|
|
|
தேடுமின் பப்பொருள் சென்றெய்த லாமே. 4 |
|
|
|
--- |
|
|
|
|
|
|
|
|
|
13. அபக்குவன் (1680 -1689 ) |
|
|
|
|
|
|
|
1680 |
|
|
|
குருட்டினை நீக்குங் குருவினைக் கொள்ளார் |
|
|
|
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வார் |
|
|
|
குருடுங் குருடுங் குருட்டாட்டம் ஆடிக் |
|
|
|
குருடுங் குருடுங் குழிவிழு மாறே. 1 |
|
|
|
|
|
|
|
1681. |
|
|
|
மனத்தில் எழுந்ததோர் மாயக்கண் ணாடி |
|
|
|
நினைப்பின் அதனின் நிழலையுங் காணார் |
|
|
|
வினைப்பயன் போக விளக்கியுங் கொள்ளார் |
|
|
|
புறக்கடை இச்சித்துப் போகின்ற வாறே. 2 |
|
|
|
|
|
|
|
1682 |
|
|
|
ஏயெனில் என்னென மாட்டார் பிரசைகள் |
|
|
|
வாய்முலை பெய்ய மதுரநின் றூறிடுந் |
|
|
|
தாய்முலை யாவ தறியார் தமருளோர் |
|
|
|
ஊனிலை செய்யும் உருவிலி தானே. 3 |
|
|
|
|
|
|
|
1683 |
|
|
|
வாயென்று சொல்லி மனமொன்று சிந்தித்து |
|
|
|
நீயொன்று செய்யல் உறுதி நெடுந்தகாய் |
|
|
|
நீயென்றிங் குன்னைத் தெளிவன் தெளிந்தபின் |
|
|
|
பேயென்றிங் கென்னைப் பிறர்தெளி யாரே. 4 |
|
|
|
|
|
|
|
1684 |
|
|
|
பஞ்சத் துரோகத்திப் பாதகர் தம்மை |
|
|
|
யஞ்சச் சமயத்தோர் வேந்தன் அருந்தண்டம் |
|
|
|
விஞ்சச்செய் திப்புவி வேறே விடாவிடிற் |
|
|
|
பஞ்சத்து ளாய்புவி முற்றும்பா ழாகுமே. 5 |
|
|
|
|
|
|
|
1685 |
|
|
|
தவத்திடை நின்றவர் தாமுண்ணும் கன்மஞ் |
|
|
|
சிவத்திடை நின்றது தேவர் அறியார் |
|
|
|
தவத்திடை நின்றறி யாதவர் எல்லாம் |
|
|
|
பவத்திடை நின்றதோர் பாடது வாமே. 6 |
|
|
|
|
|
|
|
1686 |
|
|
|
கன்றலுங் கருதலுங் கருமஞ் செய்தலும் |
|
|
|
தின்றலுஞ் சுவைத்தலுந் தீமைசெய்தலும் |
|
|
|
பின்றலும் பிறங்கலும் பெருமை கூறலும் |
|
|
|
என்றிவை இறைபால் இயற்கை அல்லவே. 7 |
|
|
|
|
|
|
|
1687 |
|
|
|
விடிவ தறியார் வெளிகாண மாட்டார் |
|
|
|
விடியில் வெளியில் விழிக்கவு மாட்டார் |
|
|
|
கடியதோ ருண்ணிமை கட்டுமின் காண்மின் |
|
|
|
விடியாமை காக்கும் விளக்கது வாமே. 8 |
|
|
|
|
|
|
|
1688 |
|
|
|
வைத்த பசுபாசம் மாற்று நெறிவைகிப் |
|
|
|
பெத்த மறமுத்த னாகிப் பிறழ்வுற்றுத் |
|
|
|
தத்துவ முன்னித் தலைப்படா தவ்வாறு |
|
|
|
பித்தான சீடனுக் கீயப் பெறாதானே. 9 |
|
|
|
|
|
|
|
1689 |
|
|
|
மன்னும் மலம்ஐந்தும் மாற்றும் வகையோரான் |
|
|
|
துன்னிய காமாதி தோயும் தொழில்நீங்கான் |
|
|
|
பின்னிய பொய்யன் பிறப்பிறப் பஞ்சாதான் |
|
|
|
அன்னிய னாவன் அசற்சீட னாமே. 10 |
|
|
|
--- |
|
|
|
|
|
|
|
|
|
14. பக்குவன்(1690 -1703) |
|
|
|
|
|
|
|
1690 |
|
|
|
தொழுதறி வாளர் கருதிகண் ணாகப் |
|
|
|
பழுதறியாத பரம குருவை |
|
|
|
வழியறி வார்நல் வழியறி வாளர் |
|
|
|
அழிவறி வார்மற்றை யல்லா தவரே. 1 |
|
|
|
|
|
|
|
1691 |
|
|
|
பதைதொழிந் தேன்பர மாவுனை நாடி |
|
|
|
யதைத்தொழிந் தேன்இனி யாரொடுங் கூடேன் |
|
|
|
சிதைத்தடி யேன்வினை சிந்தனை தீர |
|
|
|
உதைத்துடை யாயுகந் தாண்டரு ளாயே. 2 |
|
|
|
|
|
|
|
1692 |
|
|
|
பதைக்கின்ற போதே பரமென்னும் வித்தை |
|
|
|
விதைக்கின்ற வித்தினை மேல்நின்று நோக்கிச் |
|
|
|
சிதைக்கின்ற சிந்தையைச் செவ்வே நிறுத்தி |
|
|
|
இசைக்கின்ற அன்பருக் கீயலு மாமே. 3 |
|
|
|
|
|
|
|
1693 |
|
|
|
கொள்ளினும் நல்ல குருவினைக் கொள்ளுக |
|
|
|
உள்ள பொருளுடல் ஆவி யுடன்ஈக |
|
|
|
எள்ளத் தனையும் இடைவிடா தேநின்று |
|
|
|
தெள்ளி யறியச் சிவபதந் தானே. 4 |
|
|
|
|
|
|
|
1694 |
|
|
|
சோதி விசாகந் தொடர்ந்திரு தேள்நண்டு |
|
|
|
ஓதிய நாளே உணர்வது தானென்று |
|
|
|
நீதியுள் நேர்மை நினைந்தவர்க் கல்லது |
|
|
|
ஆதியும் ஏதும் அறியகி லானே. 5 |
|
|
|
|
|
|
|
1695 |
|
|
|
தொழிலார மாமணித் தூய்தான சிந்தை |
|
|
|
எழிலால் இறைவன் இடங்கொண்ட போதே |
|
|
|
விழலார் விறலாம் வினையது போகக் |
|
|
|
கழலார் திருவடி கண்டரு ளாமே. 6 |
|
|
|
|
|
|
|
1696 |
|
|
|
சாத்திக னாய்ப்பர தத்துவவந் தானுன்னி |
|
|
|
ஆத்திக பேத நெறிதோற்ற மாகியே |
|
|
|
ஆர்த்த பிறவியி னஞ்சி யறநெறி |
|
|
|
சாத்தவல் லானவன் சற்சீட னாமே. 7 |
|
|
|
|
|
|
|
1697 |
|
|
|
சத்தும் அசத்துமெவ் வாறெனத் தானுன்னிச் |
|
|
|
சித்தை யுருக்கிக் சிவனருள் கைகாட்டப் |
|
|
|
பத்தியின் ஞானம் பெறப்பணிந் தானந்தச் |
|
|
|
சத்தியில் இச்சை தகுவோன்சற் சீடனே. 8 |
|
|
|
|
|
|
|
1698 |
|
|
|
அடிவைத் தருளுதி யாசானின் றுன்னா |
|
|
|
அடிவைத்த மாமுடி மாயப் பிறவி |
|
|
|
அடிவைத்த காய அருட்சத்தி யாலே |
|
|
|
அடிபெற்ற ஞானத்த னாசற்று ளோனே. 9 |
|
|
|
|
|
|
|
1699 |
|
|
|
சீராரு ஞானத்தின் இச்சை செலச்செல்ல |
|
|
|
வாராத காதல் குருபரன் பாலாகச் |
|
|
|
சாராத சாதக நான்குந்தன் பாலுற்றோன் |
|
|
|
ஆராயும் ஞானத்த னாமடி வைக்கவே. 10 |
|
|
|
|
|
|
|
1700 |
|
|
|
உணர்த்து மதிபக் குவர்க்கே யுணர்த்தி |
|
|
|
இணக்கிற் பராபரத் தெல்லையுள் இட்டுக் |
|
|
|
குணக்கொடு தெற்குத் தரபச்சி மங்கொண் |
|
|
|
டுணர்த்துமி னாவுடை யாள்தன்னை யுன்னியே. 11 |
|
|
|
|
|
|
|
1701 |
|
|
|
இறையடி தாழ்ந்தை வணக்கமும் எய்திக் |
|
|
|
குறையது கூறிக் குணங்கொண்டு போற்றச் |
|
|
|
சிறையுடல் நீயறக் காட்டிச் சிவத்தோ |
|
|
|
டறிவுக் கறிவிப்போன் சன்மார்க்கி யாமே. 12 |
|
|
|
|
|
|
|
1702 |
|
|
|
வேட்கை விடுநெறி வேதாந்த மாதலால் |
|
|
|
வாழ்க்கைப் புனல்வழி மாற்றிச்சித் தாந்தத்து |
|
|
|
வேட்கை விடுமிக்க வேதாந்தி பாதமே |
|
|
|
தாழ்க்குந் தலையினோன் சற்சீட னாமே. 13 |
|
|
|
|
|
|
|
1703 |
|
|
|
சற்குணம் வாய்மை தயாவிவே கந்தண்மை |
|
|
|
சற்குரு பாதமே சாயைபோல் நீங்காமே |
|
|
|
சிற்பர ஞானந் தெளியத் தெளிவோர்தல் |
|
|
|
அற்புத மேதோன்ற லாகுஞ்சற் சீடனே. 14 |
|
|
|
--- |
|
|
|
|
|
ஆறாம் தந்திரம் முற்றிற்று |
|
|
|
|
|
|
|
|
|
|
|
This file was revised on 20 Sept 2018 and on 16 August 2021 |
|
|
|
Feel free to send the corrections to the webmaster. |
|
|
|
|
|
|
|
|