|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
inna40, iniyavai40, kalavazhi40 & muthumozikkAnchi (in tamil script, unicode format) |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
patinenkiizkannakku noolkaL -I |
|
|
|
inna40, iniyavai40, |
|
|
|
kalavazhi40 & muthumozikkAnchi |
|
|
|
(in tamil script, unicode/utf-8 format) |
|
|
|
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் -I |
|
|
|
இன்னா நாற்பது, இனியவை நாற்பது |
|
|
|
களவழி நாற்பது & முதுமொழிக் காஞ்சி |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Acknowledgement: |
|
|
|
Our Sincere thanks go to Dr.K. Kalyanasundaram for his assistance in the preparation of this work. |
|
|
|
This webpage presents the Etext in Tamil script, in Unicode encoding (utfi-8 format). |
|
|
|
|
|
|
|
© Project Madurai, 1998-2021. |
|
|
|
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation |
|
|
|
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. |
|
|
|
Details of Project Madurai are available at the website |
|
|
|
https://www.projectmadurai.org/ |
|
|
|
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact. |
|
|
|
|
|
|
|
|
|
|
|
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் -I |
|
|
|
இன்னா நாற்பது (கபிலர்), இனியவை நாற்பது (பூதஞ்சேந்தனார்) |
|
|
|
களவழி நாற்பது (பொய்கையார்) & |
|
|
|
முதுமொழிக் காஞ்சி (மதுரைக் கூடலூர் கிழார்) |
|
|
|
|
|
|
|
|
|
1. இன்னா நாற்பது : கபிலர் இயற்றியது (கி பி 50-125) |
|
|
|
(பாட வேற்றுமைகள் @ % & குறிகள் கொண்டு காட்டப்பட்டுள்ளது ) |
|
|
|
|
|
|
|
கடவுள் வாழ்த்து |
|
|
|
முக்கட் பகவ னடிதொழா தார்க்கின்னா |
|
|
|
பொற்பனை வெள்ளையை@ யுள்ளா தொழுகின்னா |
|
|
|
சக்கரத் தானை மறப்பின்னா% வாங்கின்னா |
|
|
|
சத்தியான் றாடொழா தார்க்கு. |
|
|
|
@பொற்பன வெள்ளியை %மன்றப்பின்னாது |
|
|
|
|
|
|
|
நூல் |
|
|
|
பந்தமில் லாத மனையின் வனப்பின்னா |
|
|
|
தந்தையில் லாத புதல்வ னழகின்னா |
|
|
|
அந்தண ரில்லிருந் தூணின்னா@ வாங்கின்னா |
|
|
|
மந்திரம் வாயா விடின். 1 |
|
|
|
@ ஊணின்னாது |
|
|
|
|
|
|
|
பார்ப்பாரிற் கோழியு நாயும் புகலின்னா |
|
|
|
ஆர்த்த மனைவி யடங்காமை நன்கின்னா |
|
|
|
பாத்தில் புநடைவை யுடையின்னா@ வாங்கின்னா |
|
|
|
காப்பாற்றா வேந்த னுலகு. 2 |
|
|
|
@உடையின்னாது |
|
|
|
|
|
|
|
கொடுங்கோல் மறமன்னர் கீழ்வாழ்த லின்னா |
|
|
|
நெடுநீர் புணையின்றி நீந்துத லின்னா |
|
|
|
கடுமொழி யாளர் தொடர்பின்னா வின்னா |
|
|
|
தடுமாறி வாழ்த லுயிர்க்கு. 3 |
|
|
|
|
|
|
|
எருதி லுழவர்க்குப் போகீர மின்னா |
|
|
|
கருவிகண் மாறிப் புறங்கொடுத்த லின்னா |
|
|
|
திருவுடை யாரைச் செறலின்னா வின்னா |
|
|
|
பெருவலியார்க் கின்னா செயல். 4 |
|
|
|
|
|
|
|
சிறையில் கரும்பினைக் காத்தோம்ப லின்னா |
|
|
|
உறைசேர்@ பழங்கூரை சேர்ந்தொழுக லின்னா |
|
|
|
முறையின்றி யாளு மரசின்னா வின்னா |
|
|
|
மறையின்றிச் செய்யும் வினை. 5 |
|
|
|
@புரைசேர் |
|
|
|
|
|
|
|
அறமனத்தார் கூறுங் கடுமொழியு மின்னா@ |
|
|
|
மறமனத்தார் ஞாட்பின் மடிந்தொழுக லின்னா |
|
|
|
இடும்பை யுடையார் கொடையின்னா வின்னா |
|
|
|
கொடும்பா டுடையார்வாய்ச் சொல். 6 |
|
|
|
@ கடு மொழியின்னா |
|
|
|
|
|
|
|
ஆற்ற லிலாதான் பிடித்த படையின்னா |
|
|
|
நாற்ற மிலாத மலரி னழகின்னா |
|
|
|
தேற்ற மிலாதான் றுணிவின்னா வாங்கின்னா |
|
|
|
மாற்ற மறியா னுரை. 7 |
|
|
|
|
|
|
|
பகல்போலு நெஞ்சத்தார் பண்பின்மை யின்னா |
|
|
|
நகையாய நண்பினார் நாரின்மை யின்னா |
|
|
|
இகலி னெழுந்தவ ரோட்டின்னா வின்னா |
|
|
|
நயமின் மனத்தவர் நட்பு. 8 |
|
|
|
|
|
|
|
கள்ளில்லா மூதூர் களிகட்கு நன்கின்னா |
|
|
|
வள்ளல்க ளின்மை பரிசிலர்க்கு முன்னின்னா |
|
|
|
வண்மை யிலாளர் வனப்பின்னா வாங்கின்னா |
|
|
|
பண்ணில் புரவி பரிப்பு. 9 |
|
|
|
|
|
|
|
பொருளணர்வா ரில்வழிப் பாட்டுரைத்த லின்னா |
|
|
|
இருள்கூர் சிறுநெறி தாந்தனிப்போக் கின்னா |
|
|
|
அருளில்லார் தங்கட் செலவின்னா வின்னா |
|
|
|
பொருளில்லார் வண்மை புரிவு. 10 |
|
|
|
|
|
|
|
உடம்பா டில்லாத மனைவிதோ ளின்னா@ |
|
|
|
இடனில் சிறியரோ டியர்த்தநண் பின்னா |
|
|
|
இடங்கழி யாளர் தொடர்பின்னா வின்னா |
|
|
|
கடனுடையார் காணப் புகல். 11 |
|
|
|
@மனைவி தொழி லின்னா |
|
|
|
|
|
|
|
தலைதண்ட மாகச் சுரம்போத லின்னா |
|
|
|
வலைசுமந் துண்பான் பெருமித மின்னா |
|
|
|
புலையுள்ளி வாழ்த லுயிர்க்கின்னா வின்னா |
|
|
|
முலையிள்ளாள் பெண்மை விழைவு. 12 |
|
|
|
|
|
|
|
மணியிலாக் குஞ்சரம் வேந் தூர்த லின்னா |
|
|
|
துணிவில்லார் சொல்லுந் தறுகண்மை யின்னா |
|
|
|
பணியாத மன்னர்ப் பணிவின்னா வின்னா |
|
|
|
பிணியன்னார் வாழு மனை. 13 |
|
|
|
|
|
|
|
வணரொலி@ யைம்பாலார் வஞ்சித்த லின்னா |
|
|
|
துணர்தூங்கு மாவின் படுபழ மின்னா |
|
|
|
புணர்பாவை யன்னார் பிரிவின்னா வின்னா |
|
|
|
உணர்வா ருணராக் கடை. 14 |
|
|
|
@வணரொளி |
|
|
|
|
|
|
|
புல்லார் புரவி மணியின்றி யூர்வின்னா |
|
|
|
கல்லா ருரைக்குங் கருமப் பொருளின்னா |
|
|
|
இல்லாதார் நல்ல விருப்பின்னா@ வாங்கின்னா |
|
|
|
பல்லாரு ணாணப் படல். 15 |
|
|
|
@விழைவின்னா |
|
|
|
|
|
|
|
உண்ணாது வைக்கும் பெரும்பொருள் வைப்பின்னா |
|
|
|
நண்ணாப் பகைவர் புணர்ச்சி நனியின்னா |
|
|
|
கண்ணி லொருவன் வனப்பின்னா வாங்கின்னா |
|
|
|
எண்ணிலான் செய்யுங் கணக்கு. 16 |
|
|
|
|
|
|
|
ஆன்றவித்த சான்றோருட் பேதை புகலின்னா |
|
|
|
மான்றிருண்ட போழ்தின் வழங்கல் பெரிதின்னா |
|
|
|
நோன்றவிந்து வாழாதார் நோன்பின்னா வாங்கின்னா |
|
|
|
ஈன்றாளை யோம்பா விடல். 17 |
|
|
|
|
|
|
|
உரனுடையா னுள்ள மடிந்திருந்த லின்னா |
|
|
|
மறனுடை யாளுடையான் மார்பார்த்த லின்னா |
|
|
|
சுரமரிய கானஞ் செலவின்னா வின்னா |
|
|
|
மனவறி யாளர்@ தொடர்பு. 18 |
|
|
|
@அகம்வறியாளர் |
|
|
|
|
|
|
|
குலத்துப் பிறந்தவன் கல்லாமை யின்னா |
|
|
|
நிலத்திட்ட நல்வித்து நாறாமை யின்னா |
|
|
|
நலத்தகையார் நாணாமை யின்னாவாங் கின்னா |
|
|
|
கலத்தல் குலமில் வழி. 19 |
|
|
|
|
|
|
|
மாரிநாட் கூவுங் குயிலின் குரலின்னா |
|
|
|
வீர மிலாளர் கடுமொழிக் கூற்றின்னா |
|
|
|
மாரி வளம்பொய்ப்பி னூர்க்கின்னா வாங்கின்னா |
|
|
|
மூரி யெருத்தா லுழவு. 20 |
|
|
|
|
|
|
|
ஈத்த வகையா னுவவாதார்க் கீப்பின்னா |
|
|
|
பாத்துண லில்லா ருழைச்சென் றுணலின்னா |
|
|
|
மூத்த விடத்துப் பிணியின்னா வாங்கின்னா |
|
|
|
ஒத்திலாப் பார்ப்பா னுரை. 21 |
|
|
|
|
|
|
|
யானையின் மன்னரைக் காண்ட னனியின்னா |
|
|
|
ஊனைத்தின் றூனைப் பெருக்குதல் முன்னின்னா |
|
|
|
தேனெய் புளிப்பிற் சுவையின்னா வாங்கின்னா |
|
|
|
கான்யா@ றிடையிட்ட வூர். 22 |
|
|
|
@ கானாறு |
|
|
|
|
|
|
|
சிறையில்லாத மூதூரின் வாயில்காப் பின்னா |
|
|
|
துறையிருந் தாடை கழுவுத லின்னா |
|
|
|
அறைபறை யன்னவர்@ சொல்லின்னா வின்னா |
|
|
|
நிறையில்லான் கொண்ட தவம். 23 |
|
|
|
@அறைபறை யாயவர் |
|
|
|
|
|
|
|
ஏமமில் மூதூ ரிருத்தன் மிகவின்னா |
|
|
|
தீமை யுடையா ரயிலிருந்த னன்கின்னா |
|
|
|
காமமுதிரி னுயிர்க்கின்னா@ வாங்கின்னா |
|
|
|
யாமென் பவரொடு நட்பு. 24 |
|
|
|
@உயிர்க்கின்னாது |
|
|
|
|
|
|
|
நட்டா ரிடுக்கண்கள் காண்டல் நனியின்னா@ |
|
|
|
ஒட்டார் பெருமிதங் காண்டல் பெரிதின்னா% |
|
|
|
கட்டில்லா மூதூ ருறையின்னா வாங்கின்னா |
|
|
|
நட்ட கவற்றினாற் சூது. 25 |
|
|
|
@ இடுக்க ணனிகண்டா னன்கின்னா |
|
|
|
% கண்டாற் பெரிதின்னா |
|
|
|
|
|
|
|
பெரியாரோ டியாத்த தொடர்விடுத லின்னா |
|
|
|
அரியவை செய்து மெனவுரைத்த லின்னா |
|
|
|
பரியார்க்குத் தாமுற்ற கூற்றின்னா வின்னா |
|
|
|
பெரியோர்க்குத் தீய செயல். 26 |
|
|
|
|
|
|
|
பெருமை யுடையாரைப் பீடழித்த லின்னா |
|
|
|
கிழமை யுடையார்க்@ களைந்திடுத லின்னா |
|
|
|
வளமை யிலாளர் வனப்பின்னா வின்னா |
|
|
|
இளமையுண் மூப்புப் புகல். 27 |
|
|
|
@கிழமை யுடையாரை |
|
|
|
|
|
|
|
கல்லாதா னூருங் கலிமாப் பரிப்பின்னா |
|
|
|
வல்லாதான் சொல்லு முரையின் பயனின்னா |
|
|
|
இல்லார்வாய்ச் சொல்லி னயமின்னா வாங்கின்னா |
|
|
|
கல்லாதான் கோட்டி கொளல். 28 |
|
|
|
|
|
|
|
குறியறியான் மாநாக@ மாட்டுவித்த லின்னா |
|
|
|
தறியறியா% னீரின் பாய்ந்தாட& லின்னா |
|
|
|
அறிவறியா மக்கட் பெறலின்னா வின்னா |
|
|
|
செறிவிலான் கேட்ட மறை. 29 |
|
|
|
@மானாகம் %இன்னா தறிவறியான் |
|
|
|
& கீழ்நீர்ப்பாய்ந்தாடுதல் |
|
|
|
|
|
|
|
நெடுமர நீள்கோட் டுயர்பாய்த லின்னா@ |
|
|
|
கடுஞ்சின வேழத் தெதிர்சேற லின்னா |
|
|
|
ஒடுங்கி யரவுறையு மில்லின்னா வின்னா |
|
|
|
கடும்புலி வாழு மதர். 30 |
|
|
|
@ நெடுமார்நீள் கோட்டுயர் பாஅய்த லின்னா |
|
|
|
|
|
|
|
பண்ணமையா யாழின்கீழப் பாடல் பெரிதின்னா |
|
|
|
எண்ணறியா மாந்தர்@ ஒழுக்குநாட் கூற்றின்னா |
|
|
|
மண்ணின் முழவி னொலியின்னா வாங்கின்னா |
|
|
|
தண்மை யிலாளர்% பகை. 31 |
|
|
|
@ எண்ணறிய மாந்தர் %தன்மையிலாளர் |
|
|
|
|
|
|
|
தன்னைத்தான் போற்றா தொழுகுத னன்கின்னா |
|
|
|
முன்னை யுரையார் புறமொழிக் கூற்றின்னா |
|
|
|
நன்மை யிலாளர் தொடர்பின்னா வாங்கின்னா |
|
|
|
தொன்மை யுடையார் கெடல். 32 |
|
|
|
|
|
|
|
கள்ளுண்பான் கூறுங் கருமப் பொருளின்னா |
|
|
|
முள்ளுடைக் காட்டி னடத்த னனியின்னா@ |
|
|
|
வெள்ளம் படுமாக் கொலையின்னா வாங்கின்னா |
|
|
|
கள்ள மனத்தார் தொடர்பு. 33 |
|
|
|
@ நடக்கி னனியின்னா |
|
|
|
|
|
|
|
ஒழுக்க மிலாளார்க் குறவுரைத்த@ லின்னா |
|
|
|
விழுத்தகு நூலும்% விழையாதார்க் கின்னா |
|
|
|
இழித்த தொழிலவர் நட்பின்னா வின்னா |
|
|
|
கழிப்புவாய் மண்டிலங் கொட்பு. 34 |
|
|
|
@ ஒழுக்கமிலாளர் குறைவுரைத்தல் |
|
|
|
%விழித்தகுநூலும் |
|
|
|
|
|
|
|
எழிலி யுறைநீங்கி னீண்டையார்க் கின்னா |
|
|
|
குழலி னினிய@ மரத் தோசைநன் கின்னா |
|
|
|
குழவிக ளுற்ற பிணியின்னா வின்னா |
|
|
|
அழகுடையான் பேதை யெனல். 35 |
|
|
|
@குழலினிய |
|
|
|
|
|
|
|
பொருளிலான் வேளாண்மை காமுறுத லின்னா |
|
|
|
நெடுமாட நீணகர்க் கைத்தின்மை யின்னா |
|
|
|
வருமனை பார்த்திருந் தூணின்னா வின்னா |
|
|
|
கெடுமிடங் கைவிடுவார் நட்பு. 36 |
|
|
|
|
|
|
|
நறிய மலர்பெரிது நாறாமை யின்னா |
|
|
|
துறையறியா னீரிழிந்து@ போகுத லின்னா |
|
|
|
அறியாண் வினாப்படுத லின்னாவாங் கின்னா |
|
|
|
சிறியார்மேற் செற்றங் கொளல். 37 |
|
|
|
@துறையறியா நீரிழிந்து |
|
|
|
|
|
|
|
பிறர்மனையாள் பின்னோர்க்கும் பேதைமை யின்னா |
|
|
|
மறமிலா மன்னர் செருப்புகுத லின்னா |
|
|
|
வெறும்புறம் வெம்புரவி யேற்றின்னா வின்னா |
|
|
|
திறனிலான் செய்யும் வினை. 38 |
|
|
|
|
|
|
|
கொடுக்கும் பொருளில்லான் வள்ளன்மை யின்னா |
|
|
|
கடித்தமைந்த பாக்கினுட் கற்படுத லின்னா |
|
|
|
கொடுத்த விடாமை கவிக்கின்னா வின்னா |
|
|
|
மடுத்துழிப் பாடா விடல். 39 |
|
|
|
|
|
|
|
அடக்க முடையவன் மீளிமை யின்னா |
|
|
|
துடக்க மிலாதவன் றற்செருக் கின்னா |
|
|
|
அடைக்கலம் வவ்வுத லின்னாவாங் கின்னா |
|
|
|
அடக்க வடங்காதார் சொல். 40 |
|
|
|
|
|
|
|
|
|
இன்னா நாற்பது முற்றிற்று |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
2. இனியவை நாற்பது : பூதஞ்சேந்தனார் இயற்றியது |
|
|
|
( இனியது நாற்பது, இனிது நாற்பது, இனிய நாற்பது என்னும் பெயர்களானும் |
|
இந்நூல் வழங்குதலுண்டு ) |
|
|
|
|
|
|
|
கடவுள் வாழ்த்து |
|
|
|
கண்மூன் றுடையான்தாள் சேர்தல் கடிதினிதே |
|
|
|
தொல்மாண் துழாய்மாலை யானைத் தொழலினிதே |
|
|
|
முந்துறப் பேணி முகநான் குடையானைச் |
|
|
|
சென்றமர்ந் தேத்தல் இனிது. |
|
|
|
|
|
|
|
நூல் |
|
|
|
பிச்சைபுக் காயினுங் கற்றல் மிகஇனிதே |
|
|
|
நற்சலையில் கைக்கொடுத்தல் சாலவும் முன்னினிதே |
|
|
|
முத்தேர் முறுவலார் சொல்லினி தாங்கினிதே |
|
|
|
தெற்றவும் மேலாயார்ச் சேர்வு. 1 |
|
|
|
|
|
|
|
உடையான் வழக்கினி தொப்ப முடிந்தால் |
|
|
|
மனைவாழ்க்கை முன் இனிது மாணாதா மாயின் |
|
|
|
நிலையாமை நோக்கி நெடியார் துறத்தல் |
|
|
|
தலையாகத் தான்இனிது நன்கு. 2 |
|
|
|
|
|
|
|
ஏவது மாறா இளங்கிளைமை முன்இனிதே |
|
|
|
நாளும் நவைபோகான் கற்றல் மிகஇனிதே |
|
|
|
ஏருடையான் வேளாண்மை தானினிது ஆங்கினிதே |
|
|
|
தேரிற்கோள் நட்புத் திசைக்கு. 3 |
|
|
|
|
|
|
|
யானை யுடைய படைகாண்டல் முன்இனிதே |
|
|
|
ஊனைத்தின் றூனைப் பெருக்காமை முன்இனிதே |
|
|
|
கான்யாற் றடைகரை யூர்இனி தாங்கினிதே |
|
|
|
மான முடையார் மதிப்பு. 4 |
|
|
|
|
|
|
|
கொல்லாமை முன்இனிது கோல்கோடி மாராயஞ் |
|
|
|
செய்யாமை முன்இனிது செங்கோலன் ஆகுதல் |
|
|
|
எய்துங் திறத்தால் இனிதென்ப யார்மட்டும் |
|
|
|
பொல்லாங் குரையாமை நன்கு. 5 |
|
|
|
|
|
|
|
ஆற்றுந் துணையால் அறஞ்செய்கை முன்இனிதே |
|
|
|
பாற்பட்டார் கூறும் பயமொழி மாண்பினிதே |
|
|
|
வாய்ப்புடைய ராகி வலவைகள் அல்லாரைக் |
|
|
|
காப்படையக் கோடல் இனிது. 6 |
|
|
|
|
|
|
|
அந்தண ரோத்துடைமை ஆற்ற மிகஇனிதே |
|
|
|
பந்தம் உடையான் படையாண்மை முன்இனிதே |
|
|
|
தந்தையே ஆயினுந் தானடங்கான் ஆகுமேல் |
|
|
|
கொண்டடையா னாகல் இனிது. 7 |
|
|
|
|
|
|
|
ஊருங் கலிமா உரனுடைமை முன்இனிதே |
|
|
|
தார்புனை மன்னர் தமக்குற்ற வெஞ்சமத்துக் |
|
|
|
கார்வரை யானைக் கதங்காண்டல் முன்இனிதே |
|
|
|
ஆர்வ முடையவர் ஆற்றவும் நல்லவை |
|
|
|
பேதுறார் கேட்டல் இனிது 8 |
|
|
|
|
|
|
|
தங்க ணமர்புடையார் தாம்வாழ்தல் முன்இனிதே |
|
|
|
அங்கண் விசும்பின் அகல்நிலாக் காண்பினிதே |
|
|
|
பங்கமில் செய்கைய ராகிப் பரிந்துயார்க்கும் |
|
|
|
அன்புடைய ராதல் இனிது. 9 |
|
|
|
|
|
|
|
கடமுண்டு வாழாமை காண்டல் இனிதே |
|
|
|
நிறைமாண்பில் பெண்டிரை நீக்கல் இனிதே |
|
|
|
மனமாண்பி லாதவரை யஞ்சி யகறல் |
|
|
|
எனைமாண்புந் தான்இனிது நன்கு. 10 |
|
|
|
|
|
|
|
அதர்சென்று வாழாமை ஆற்ற இனிதே |
|
|
|
குதர்சென்று கொள்ளாத கூர்மை இனிதே |
|
|
|
உயிர்சென்று தான்படினும் உண்ணார்கைத் துண்ணாப் |
|
|
|
பெருமைபோற் பீடுடையது இல். 11 |
|
|
|
|
|
|
|
குழவி பிணியின்றி வாழ்தல் இனிதே |
|
|
|
சுழறும் அவையஞ்சான் கல்வி இனிதே |
|
|
|
மயரிக ளல்லராய் மாண்புடையார்ச் சேரும் |
|
|
|
திருவுந்தீர் வின்றேல் இனிது. 12 |
|
|
|
|
|
|
|
மான மழிந்தபின் வாழாமை முன்இனிதே |
|
|
|
தான மழியாமைத் தானடங்கி வாழ்வினிதே |
|
|
|
ஊனமொண் றின்றி உயர்ந்த பொருளுடைமை |
|
|
|
மானிடவர்க் கெல்லாம் இனிது. 13 |
|
|
|
|
|
|
|
குழவி தளர்நடை காண்டல் இனிதே |
|
|
|
அவர்மழலை கேட்டல் அமிழ்தின் இனிதே |
|
|
|
வினையுடையான் வந்தடைந்து வெய்துறும் போழ்து |
|
|
|
மனனஞ்சான் ஆகல் இனிது. 14 |
|
|
|
|
|
|
|
பிறன்மனை பின்னோக்காப் பீடினி தாற்ற |
|
|
|
வறனுழக்கும் பைங்கூழ்க்கு வான்சோர் வினிதே |
|
|
|
மறமன்னர் தங்கடையுள் மாமலைபோல் யானை |
|
|
|
மதமுழக்கங் கேட்டல் இனிது. 15 |
|
|
|
|
|
|
|
சுற்றார்முன் கல்வி உரைத்தல் மிகஇனிதே |
|
|
|
மிக்காரைச் சேர்தல் மிகமாண முன்இனிதே |
|
|
|
எள்துணை யானும் இரவாது தான்ஈதல் |
|
|
|
எத்துணையும் ஆற்ற இனிது. 16 |
|
|
|
|
|
|
|
நாட்டார்க்கு நல்ல செயலினி தெத்துணையும் |
|
|
|
ஒட்டாரை ஒட்டிக் கொளல் அதனின் முன்இனிதே |
|
|
|
பற்பல தானியத்தது ஆகிப் பலருடையும் |
|
|
|
மெய்த்துணையுஞ் சேரல் இனிது. 17 |
|
|
|
|
|
|
|
மன்றின் முதுமக்கள் வாழும் பதிஇனிதே |
|
|
|
தந்திரத்தின் வாழும் தவசிகள் மாண்பினிதே |
|
|
|
எஞ்சா விழுச்சீர் இருமுது மக்களைக் |
|
|
|
கண்டெழுதல் காலை இனிது. 18 |
|
|
|
|
|
|
|
நட்டார்ப் புறங்கூறான் வாழ்தால் நனிஇனிதே |
|
|
|
பட்டாங்கு பேணிப் பணிந்தொழுதல் முன்இனிதே |
|
|
|
முட்டில் பெரும்பொருள் ஆக்கியக்கால் மற்றது |
|
|
|
தக்குழி ஈதல் இனிது. 19 |
|
|
|
|
|
|
|
சலவாரைச் சாரா விடுதல் இனிதே |
|
|
|
புலவர்தம் வாய்மொழி போற்றல் இனிதே |
|
|
|
மலர்தலை ஞாலத்து மன்னுயிர்க் கெல்லாம் |
|
|
|
தகுதியால் வாழ்தல் இனிது. 20 |
|
|
|
|
|
|
|
பிறன்கைப் பொருள்வெளவான் வாழ்தல் இனிதே |
|
|
|
அறம்புரிந் தல்லவை நீக்கல் இனிதே |
|
|
|
மறந்தேயும் மாணா மயரிகள் சேராத் |
|
|
|
திறந்தெரிந்து வாழ்தல் இனிது. 21 |
|
|
|
|
|
|
|
வருவா யறிந்து வழங்கல் இனிதே |
|
|
|
ஒருவர்பங் காகாத ஊக்கம் இனிதே |
|
|
|
பெருவகைத் தாயினும் பெட்டவை செய்யார் |
|
|
|
திரிபின்றி வாழ்தல் இனிது. 22 |
|
|
|
|
|
|
|
காவோ டறக்குளம் தொட்டல் மிகஇனிதே |
|
|
|
ஆவோடு பொன்னீதல் அந்தணர்க்கு முன்இனிதே |
|
|
|
பாவமும் அஞ்சாராய்ப் பற்றுந் தொழில்மொழிச் |
|
|
|
சூதரைச் சோர்தல் இனிது. 23 |
|
|
|
|
|
|
|
வெல்வது வேண்டி வெகுளாதா னோன்பினிதே |
|
|
|
ஒல்லுந் துணையும்ஒன்று உய்ப்பான் பொறை இனிதே |
|
|
|
இல்லாது காமுற் றிரங்கி இடர்ப்படார் |
|
|
|
செய்வது செய்தல் இனிது. 24 |
|
|
|
|
|
|
|
ஐவாய வேட்கை யவாவடக்கல் முன்இனிதே |
|
|
|
கைவாய்ப் பொருள்பெறினுங் கல்லார்கண் தீர்வினிதே |
|
|
|
நில்லாத காட்சி நிறையில் மனிதரைப் |
|
|
|
புல்லா விடுதல் இனிது. 25 |
|
|
|
|
|
|
|
நச்சித்தற் சென்றார் நசைகொல்லா மாண்பினிதே |
|
|
|
உட்கில் வழிவாழா ஊக்கம் மிகஇனிதே |
|
|
|
எத்திறத் தானும் இயைவ கரவாத |
|
|
|
பற்றினின் பாங்கினியது இல். 26 |
|
|
|
|
|
|
|
தானங் கொடுப்பான் தகையாண்மைமுன் இனிதே |
|
|
|
மானம் படவரின் வாழாமை முன்இனிதே |
|
|
|
ஊனங்கொண் டாடார் உறுதி உடையவை |
|
|
|
கோள்முறையாற் கோடல் இனிது. 27 |
|
|
|
|
|
|
|
ஆற்றாமை யாற்றென் றலையாமை முன்இனிதே |
|
|
|
கூற்றம் வரவுண்மை சிந்தித்து வாழ்வனிதே |
|
|
|
ஆக்க மழியினும் அல்லவை கூறாத |
|
|
|
தேர்ச்சியின் தேர்வினியது இல். 28 |
|
|
|
|
|
|
|
கயவரைக் கைகழிந்து வாழ்தல் இனிதே |
|
|
|
உயர்வுள்ளி ஊக்கம் பிறத்தல் இனிதே |
|
|
|
எளியர் இவரென் றிகழ்ந்துரையா ராகி |
|
|
|
ஒளிபட வாழ்தல் இனிது. 29 |
|
|
|
|
|
|
|
நன்றிப் பயன்தூக்கி வாழ்தல் நனிஇனிதே |
|
|
|
மன்றக் கொடும்பா டுரையாத மாண்பினிதே |
|
|
|
அன்றறிவார் யாரென் றடைக்கலம் வெளவாத |
|
|
|
நன்றியின் நன்கினியது இல். 30 |
|
|
|
|
|
|
|
அடைந்தார் துயர்கூரா ஆற்றல் இனிதே |
|
|
|
கடன்கொண்டுஞ் செய்வன செய்தல் இனிதே |
|
|
|
சிறந்தமைந்த கேள்விய ராயினும் ஆராய்ந்து |
|
|
|
அறிந்துரைத்தல் ஆற்ற இனிது. 31 |
|
|
|
|
|
|
|
சுற்றறிந்தார் கூறுங் கருமப் பொருள்இனிதே |
|
|
|
பற்றமையா வேந்தன்கீழ் வாழாமை முன்இனிதே |
|
|
|
தெற்றென இன்றித் தெளிந்தாரைத் தீங்கூக்காப் |
|
|
|
பத்திமையிற் பாங்கினியது இல். 32 |
|
|
|
|
|
|
|
ஊர்முனியா செய்தொழுகும் ஊக்கம் மிகஇனிதே |
|
|
|
தானே மடிந்திராத் தாளாண்மை முன்இனிதே |
|
|
|
வாய்மயங்கு மண்டமருள் மாறாத மாமன்னர் |
|
|
|
தானை தடுத்தல் இனிது. 33 |
|
|
|
|
|
|
|
எல்லிப் பொழுது வழங்காமை முன்இனிதே |
|
|
|
சொல்லுங்கால் சோர்வின்றச் சொல்லுதல் மாண்பினிதே |
|
|
|
புல்லிக் கொளினும் பொருளல்லார் தங்கேண்மை |
|
|
|
கொள்ளர் விடுதல் இனிது. 34 |
|
|
|
|
|
|
|
ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரிதல் முன்இனிதே |
|
|
|
முற்றான தெரிந்து முறைசெய்தல் முன்இனிதே |
|
|
|
பற்றினலாய்ப் பல்லுயிர்க்கும் பாத்தூற்றுப் பாங்கறிதல் |
|
|
|
வெற்வேறில்@ வேந்தர்க்கு இனிது. 35 |
|
|
|
@ வெற்றல் வேல் |
|
|
|
|
|
|
|
அவ்வித் தழுக்கா றுரையாமை முன்இனிதே |
|
|
|
செவ்வியனாய்ச் செற்றுச் சினங்கடிந்து வாழ்வினிதே |
|
|
|
கவ்வித்தாங் கொண்டுதாங் கண்டது காமுற்று |
|
|
|
வவ்வார் விடுதல் இனிது. 36 |
|
|
|
|
|
|
|
இளமையை மூப்பென் றுணர்தல் இனிதே |
|
|
|
கிளைஞர்மாட் டச்சின்மை கேட்டல் இனிதே |
|
|
|
தடமென் பணைத்தோள் தளிரிய லாரை |
|
|
|
விடமென் றுணர்தல் இனிது. 37 |
|
|
|
|
|
|
|
சிற்றா ளுடையான் படைக்கல மாண்பினிதே |
|
|
|
நட்டா ருடையான் பகையாண்மை முன்இனிதே |
|
|
|
எத்துணையும் ஆற்ற இனிதென்ப பால்படுங் |
|
|
|
சுற்றா உடையான் விருந்து. 38 |
|
|
|
|
|
|
|
பிச்சைபுக் குண்பான் பிளிறாமை முன்இனிதே |
|
|
|
துச்சி லிருந்து துயர்கூரா மாண்பினிதே |
|
|
|
உற்றபே ராசை கருதி அறனொரூஉம் |
|
|
|
ஒற்கம் இலாமை இனிது. 39 |
|
|
|
|
|
|
|
பத்துக் கொடுத்தும் பதியிருந்து வாழ்வினிதே |
|
|
|
வித்துற்குற் றுண்ணா விழுப்பம் மிகஇனிதே |
|
|
|
பற்பல நாளும் பழுதின்றிப் பாங்குடைய |
|
|
|
கற்றலிற் காழினியது இல். 40 |
|
|
|
|
|
|
|
|
|
இனியவை நாற்பது முற்றிற்று |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
3. களவழி நாற்பது - பொய்கையார் இயற்றியது |
|
|
|
(பாட வேறுபாடுகள் @, %, & குறிகள் கொண்டு காட்டப்பட்டுள்ளன) |
|
|
|
|
|
|
|
நாண்ஞாயி றுற்ற செருவிற்கு வீழ்ந்தவர் |
|
|
|
வாண்மாய் குருதி களிறுழக்கத் - தாண்மாய்ந்து |
|
|
|
முன்பசு@ லெல்லாங் குழம்பாகிப் பின்பகல்% |
|
|
|
துப்புத் துகளிற் கெழூஉம் புனனாடான் |
|
|
|
தப்பியா ரட்ட களத்து. 1 |
|
|
|
@முற்பகல் %பிற்பகல் |
|
|
|
|
|
|
|
ஞாட்பினு ளெஞ்சிய ஞாலஞ்சேர் யானைக்கீழ் |
|
|
|
போர்ப்பி லிடிமுரசி னூடுபோ மொண்குருதி |
|
|
|
கார்ப்பெயல் பெய்தபிற் செங்குளக் கோட்டுக்கீழ் |
|
|
|
நீர்த்தூம்பு நீருமிழ்வ போன்ற புனனாடன் |
|
|
|
ஆர்த்தம ரட்ட களத்து. 2 |
|
|
|
|
|
|
|
ஒழுக்குங் குருதி யுழக்கித் தளர்வார் |
|
|
|
இழுக்குங் களிற்றுக்கோ டூன்றி யெழுவர்@ |
|
|
|
மழைக்குரன் மாமுரசின் மல்குநீர் நாடன் |
|
|
|
பிழைத்தாரை யட்ட களத்து. 3 |
|
|
|
@ எழூஉம் |
|
|
|
|
|
|
|
உருவக் கடுந்தேர் முருக்கிமற் றத்தேர்ப் |
|
|
|
பரிதி சுமந்தெழுந்த யானை - யிருவிசும்பிற் |
|
|
|
செல்சுடர் சேர்ந்த மலைபோன்ற செங்கண்மால் |
|
|
|
புல்லாரை யட்ட களத்து. 4 |
|
|
|
|
|
|
|
தெரிகணை யெஃகந் திறந்தவர் யெல்லாம் |
|
|
|
குருதி படிந்துண்ட காகம் - உருவிழந்து |
|
|
|
குக்கிற் புறத்த சிரல்வாய செங்கண்மால் |
|
|
|
தப்பியா ரட்ட களத்து. 5 |
|
|
|
|
|
|
|
நானாற் றிசையும் பிணம்பிறங்க யானை |
|
|
|
யடுக்குபு வேற்றிக் கிடந்த - இடித்துரறி |
|
|
|
யங்கண் விசும்பி னுருமெறித் தெங்கும் |
|
|
|
பெருமலை தூறெறிந்@ தற்றே யருமணிப் |
|
|
|
பூணேந் தெழின்மார் பியறிண்டேர்ச் செம்பியன் தெவ் |
|
|
|
வேந்தரை யட்ட களத்து. 6 |
|
|
|
@தூவெறிந்து |
|
|
|
|
|
|
|
அஞ்சனக் குன்றேய்க்கும் யானை யமருழக்கி |
|
|
|
இங்கு லிகக்குன்றே போற்றோன்றுஞ் - செங்கண் |
|
|
|
வரிவரான் மீன்பிறழுங் காவிரி நாடன் |
|
|
|
பொருநரை யட்ட களத்து. 7 |
|
|
|
|
|
|
|
யானைமேல் யானை நெரிதர வானாது |
|
|
|
கண்ணேர் கடுங்கணை மெய்ம்மாய்ப்ப @ - எவ்வாயும் |
|
|
|
எண்ணருங் குன்றிற் குரீஇயினம் போன்றவே |
|
|
|
பண்ணா ரிடிமுரசிற் பாய்ப்புன னீர்நாடன் |
|
|
|
நண்ணாரை யட்ட களத்து. 8 |
|
|
|
@ மெய்ம்மறைப்ப |
|
|
|
|
|
|
|
மேலோரைக் கீழோர் குறுகிக் குறைத்திட்ட |
|
|
|
காலார்சோ டற்ற கழற்கா லிருங்கடல் |
|
|
|
ஊணில் சுறபிறழ்வ @ போன்ற புனனாடன் |
|
|
|
நேராரை யட்ட களத்து. 9 |
|
|
|
@இருங்கடலுணீலச்சுறாப்பிறழ்வ |
|
|
|
|
|
|
|
பல்கணை யெவ்வாயும் பாய்தலிற் செல்கலா |
|
|
|
தொல்கி யுயங்குங் களிறெல்லாந் - தொல்சிறப்பிற் |
|
|
|
செவ்வலங் குன்றம்போற் றோன்றும் புனனாடன் |
|
|
|
தெவ்வரை யட்ட களத்து. 10 |
|
|
|
|
|
|
|
கழுமிய ஞாட்பினுண் மைந்திகந்தா ரிட்ட@ |
|
|
|
ஒழிமுரச மொண்குருதி யாடித் - தொழின்மடிந்து |
|
|
|
கண்காணா யானை யுதைப்ப விழுமென |
|
|
|
மங்குன் மழையி னிதிரு மதிராப்போர்ச் |
|
|
|
செங்கண்மா லட்ட களத்து. 11 |
|
|
|
@மைந்திழந்தாரிட்ட |
|
|
|
|
|
|
|
ஒவாக் கணைபாய வொல்கி யெழில்வேழந் |
|
|
|
தீவாய்க் குருதி யிழிதலாற் செந்தலைப் |
|
|
|
பூவலங் குன்றம் புயற்கேற்ற போன்றவெ |
|
|
|
காவிரி நாடன் கடாஅய்க் கடிதாகக் |
|
|
|
கூடாரை யட்ட களத்து. 12 |
|
|
|
|
|
|
|
நிரைகதிர் நீளெஃக நீட்டி வயவர் |
|
|
|
வரைபுரை யானைக்கை நூற - வரைமேல் |
|
|
|
உருமெறி பாம்பிற் புரளுஞ் செருமொய்ம்பிற் |
|
|
|
செஎய்பொரு தட்ட களத்து. 13 |
|
|
|
|
|
|
|
கவளங்கொள் யானையின் கைதுணிக்கப் பட்டுப்@ |
|
|
|
பவளஞ் சொரிதரு பைபோற் றிவளொளிய% |
|
|
|
வொண்செங் குருதி யுமிழும் புனனாடன் |
|
|
|
கொங்கரை யட்ட களத்து. 14 |
|
|
|
@கைகடுணிக்க %திகழொளிய |
|
|
|
|
|
|
|
கொல்யானை பாயக் குடைமுருக்கி யெவ்வாயும் |
|
|
|
புக்கவா யெல்லாம் பிணம்பிறங்கத் - தச்சன் |
|
|
|
வினைபடு பள்ளிறிய் றோன்றும் செங்கட் |
|
|
|
சினமால் பொருத களத்து. 15 |
|
|
|
|
|
|
|
பரும வினமாக் கடவித் தெரிமறவர் |
|
|
|
ஊக்கி யெடுத்த வரவத்தி னார்ப்பஞ்சாக் |
|
|
|
குஞ்சரக் கும்பத்துப் பாய்வன குன்றிவரும் |
|
|
|
வேங்கை யிரும்புலி போன்ற புனனாடன் |
|
|
|
வேந்தரை யட்ட களத்து. 16 |
|
|
|
|
|
|
|
ஆர்ப்பெழுந்த ஞாட்பினு ளாளா ளெதிர்த்தோடித் |
|
|
|
தாக்கி யெறிதா வீழ்தரு மொண்குருதி |
|
|
|
கார்த்திகைச் சாற்றிற் கழிவிளக்கைப் போன்றனவே@ |
|
|
|
ஆர்த்தம ரட்ட களத்து. 17 |
|
|
|
@விளக்குப்போன்றனவே |
|
|
|
|
|
|
|
நளிந்த கடலுட் டிமிறிசை போலெங்கும் |
|
|
|
விளிந்தார் பிணங்குருதி யீர்க்குந் - தெளிந்து |
|
|
|
தடற்றிடங் கொள்வாட்@ டளையவிழுந் தார்ச்சே(ய்) |
|
|
|
உடற்றியா ரட்ட களத்து. 18 |
|
|
|
@ தடற்றிலங்கொள்வாள் |
|
|
|
|
|
|
|
இடைமருப்பின்விட்டெறிந்தவெஃகங்கான்@ மூழ்திக் |
|
|
|
கடைமணி காண்வரத் தோற்றி% - நடைமெலிந்து |
|
|
|
முக்கோட்ட போன்ற களிறெல்லா நீர்நாடன் |
|
|
|
புக்கம ரட்ட களத்து. 19 |
|
|
|
@எஃகங்காழ் % தோன்றி |
|
|
|
|
|
|
|
இரிசிறக ரீர்க்குப் பரப்பி யெருவை |
|
|
|
குருதி பிணங்கவருந் தோற்றம் - அதிர்விலாச்@ |
|
|
|
சீர்முழாப் பண்ணமைப்பான் போன்ற புனனாடன் |
|
|
|
நேராரை யட்ட களத்து. 20 |
|
|
|
@தோற்றந்திரலிலா |
|
|
|
|
|
|
|
இணைவே லெழின்மருமத் திங்கப்புண் கூர்ந்து |
|
|
|
கணையலைக் கொல்கிய யானை - துணையிலவாய்த் |
|
|
|
தொல்வலி யாற்றித்@ துளங்கினவாய் மெல்ல |
|
|
|
நிலங்கால் கவரு மலைபோன்ற செங்கட் |
|
|
|
சினமால் பொருத களத்து. 21 |
|
|
|
@ தொல்வலியிற்றீர |
|
|
|
|
|
|
|
இருநிலஞ் சேர்ந்த குடைக்கீழ் வரிநுதல் |
|
|
|
ஆடியல் யானைத் தடக்கை யொளிறுவாள் |
|
|
|
ஓடா மறவர் துணிப்பத் துணிந்தவை |
|
|
|
கோடுகொ ளொண்மதியை நக்கும்பரம் பொக்குமே |
|
|
|
பாடா ரிடிமுரசிற் பாய்ப்புன னீர்நாடன் |
|
|
|
கூடாரை யட்ட களத்து. 22 |
|
|
|
|
|
|
|
ஏற்றி வயவ ரெறிய நுதல்பிளந்து |
|
|
|
நெய்த்தோர்ப் புனலு ணிவந்தகளிற் றுடம்பு |
|
|
|
செக்கர்கொள் வானிற் கருங்கொண்மூப் போன்றவே |
|
|
|
கொற்றவேற் றானைக் கொடித்திண்டோ ர்ச் செம்பியன் |
|
|
|
செற்றாரை யட்ட களத்து. 23 |
|
|
|
|
|
|
|
திண்டோ ண் மறவ ரெறியத் திசைதோறும் |
|
|
|
பைந்தலை பாரிற் புரள்பவை - நன்கெனைத்தும் |
|
|
|
பெண்ணையந் தோட்டம் பெருவளி புக்கேற்ற |
|
|
|
கண்ணார் கமழ்தெரியற் காவிரி நீர்நாடன் |
|
|
|
நண்ணாரை யட்ட களத்து. 24 |
|
|
|
|
|
|
|
மலைகலங்கப் பாயு மலைபோ னிலைகொள்ளாக் |
|
|
|
குஞ்சரம் பாயக் கொடி யெழுந்து பொங்குபு |
|
|
|
வானந் துடைப்பன போன்ற புனனாடன் |
|
|
|
மேவாரை யட்ட களத்து. 25 |
|
|
|
|
|
|
|
எவ்வாயு மோடி வயவர் துணித்திட்ட |
|
|
|
கைவாயிற் கொண்டெழுந்த செஞ்செவிப் புன்சேவல் |
|
|
|
ஐவாய் வயநாகங் கவ்வி விசும்பிவருஞ் |
|
|
|
செவ்வா யுவணத்திற் றோன்றும் புனனாடன் |
|
|
|
தெவ்வாரை யட்ட களத்து. 26 |
|
|
|
|
|
|
|
செஞ்சேற்றுட் செல்யானை சீறி மிதித்தலால் |
|
|
|
ஒண்செங் குருதிகள் தொக்கீண்டி நின்றவை |
|
|
|
பூநீர் வியன்றமிடாப்@ போன்ற புனனாடன் |
|
|
|
மேவாரை யட்ட களத்து. 27 |
|
|
|
@பூவியன்ற நீர்மிடா |
|
|
|
|
|
|
|
ஓடா மறவ ருருத்து மதஞ்செருக்கிப் |
|
|
|
பீடுடை வாளார்@ பிறங்கிய ஞாட்பினுட் |
|
|
|
கேடகத்தோ டற்ற தடக்கைகொண்% டோ டி |
|
|
|
இகலன்வாய்த் துற்றிய& தோற்ற மயலார்க்குக் |
|
|
|
கண்ணாடி காண்பாரிற் றோன்றும் புனனாடன் |
|
|
|
நண்ணாரை யட்ட களத்து. 28 |
|
|
|
@வாளர் % ஒரி இகலனயா & வாய்துற்றிய |
|
|
|
|
|
|
|
கடிகாவிற் காற்றுற் றெறிய வெடிபாட்டி |
|
|
|
வீற்றுவீற் றோடு மயிலினம்போல் - நாற்றிசையும் |
|
|
|
கேளி ரிழந்தா ரலறுபவே செங்கட் |
|
|
|
சினமால் பொருத களத்து. 29 |
|
|
|
|
|
|
|
மடங்க வெறிந்து மலையுருட்டு நீர்போல் |
|
|
|
தடங்கொண்ட வொண்குருதி கொள்களி றீர்க்கு |
|
|
|
மடங்கா மறமொய்ம்பிற்@ சினமால் |
|
|
|
அடங்காரை யட்ட களத்து. 30 |
|
|
|
@ மடங்கள் மறமொய்ம்பின் |
|
|
|
|
|
|
|
ஓடா மறவ ரெறிய நுதல்பிளந்த |
|
|
|
கோடேந்து கொல்களிற்றுக் கும்பத் தெழிலோடை |
|
|
|
மின்னுக் கொடியின் மிளிரும் புனனாடன் |
|
|
|
ஒன்னாரை யட்ட களத்து. 31 |
|
|
|
|
|
|
|
மையின்மா மேனி நிலமென்னு நல்லவள் [தீர்ந்த |
|
|
|
செய்யது போர்த்தாள்போற் செவ்வந்தாள்@ - பொய் |
|
|
|
பூந்தார் முரசிற் பொருபுன னீர்நாடன் |
|
|
|
காய்ந்தாரை யட்ட களத்து. 32 |
|
|
|
@ செவ்வென்றாள் |
|
|
|
|
|
|
|
பொய்கை யுடைந்து புனல்பாய்ந்த வாயெல்லா |
|
|
|
நெய்த லிடையிடை வாளை பிறழ்வனபோல் |
|
|
|
ஐதிலங் கெஃகி னவிரொளிவா டாயினவே |
|
|
|
கொய்சுவன் மாவிற் கொடித்திண்டோ ர் செம்பியன் |
|
|
|
தெவ்வரை யட்ட களத்து. 33 |
|
|
|
|
|
|
|
இணரிய ஞாட்பினு ளேற்றெழுந்த மைந்தர் |
|
|
|
சுடரிலங் கெஃக மெறியச் சோர்ந் துக்க |
|
|
|
குடர்கொண்டு@ வாங்குங் குறுநரி கந்தில் |
|
|
|
தொடரொடு கோணாய் புரையு மடர்பைம்பூட் |
|
|
|
சேய்பொரு தட்ட களத்து. 34 |
|
|
|
@ குடர் கொடு |
|
|
|
|
|
|
|
செவ்வரைச் சென்னி யரிமானோ டவ்வரை |
|
|
|
ஒல்கி யுருமிற் குடைந்தற்றான் - மல்கிக் |
|
|
|
கரைகொண் றிழிதரூஉம் காவிரி நாடன் |
|
|
|
உரைசா லுடம்பிடி மூழ்க வரசோ(டு) |
|
|
|
அரசுவா வீழ்ந்த களத்து. 35 |
|
|
|
|
|
|
|
ஓஓ உவம னுறழ்வின்றி யொத்ததே |
|
|
|
காவிரி நாடன் கழுமலங் கொண்டநாள் |
|
|
|
மாவுதைப்ப மாற்றார் குடையெலாங் கீழ்மேலா |
|
|
|
ஆவுதை காளாம்பி போன்ற புனனாடன் |
|
|
|
மேவாரை யட்ட களத்து. 36 |
|
|
|
|
|
|
|
அரசர் பிணங்கான்ற நெய்த்தோர் முரசொடு |
|
|
|
முத்தடைக் கோட்ட களிறீர்ப்ப - எத்திசையும் |
|
|
|
பெளவம் புணரம்பி போன்ற புனனாடன் |
|
|
|
தெவ்வரை யட்ட களத்து. 37 |
|
|
|
|
|
|
|
பருமப் பணையெருத்திற் பல்யானை புண்கூர்ந்(து) |
|
|
|
உருமெறி பாம்பிற் புரளுஞ் - செருமொய்ம்பிற் |
|
|
|
பொன்னார மார்பிற் புனைசுழற்காற் செம்பியன் |
|
|
|
துன்னாரை யட்ட களத்து. 38 |
|
|
|
|
|
|
|
மைந்துகால் யாத்து மயங்கிட ஞாட்பினுட் |
|
|
|
புய்ந்துகால் போகிப் புலான்முகந்த வெண்குடை |
|
|
|
பஞ்சிபெய் தாலமே போன்ற புனனாடன் |
|
|
|
வஞ்சிக்கோ வட்ட களத்து. 39 |
|
|
|
|
|
|
|
வெள்ளிவெண் ணாஞ்சிலான் ஞால முழுவனபோல் |
|
|
|
எல்லாக் களிறு நிலஞ்சேர்ந்த - பல்வேற் |
|
|
|
பணைமுழங்கு போர்த்தானைடச் செங்கட் சினமால் |
|
|
|
கணைமாரி பெய்த களத்து. 40 |
|
|
|
|
|
|
|
வேனிறத் திங்க வயவரா லேறுண்டு |
|
|
|
கானிலங் கொள்ளாக் கலங்கிச் செவிசாய்த்து |
|
|
|
மாநிலங் கூறு மறைகேட்ப போன்றவே |
|
|
|
பாடா ரிடிமுரசிற் பாய்புன னீர்நாடன் |
|
|
|
கூடாரை யட்ட களத்து. |
|
|
|
|
|
|
|
|
|
களவழி நாற்பது முற்றிற்று |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
4. முதுமொழிக் காஞ்சி :மதுரைக் கூடலூர் கிழார் அருளியது |
|
|
|
|
|
|
|
1. சிறந்த பத்து |
|
|
|
1. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் |
|
|
|
ஓதலிற் சிறந்தன்று ஒழுக்கம் உடைமை |
|
|
|
2. காதலிற் சிறந்தன்று கண்ணஞ்சப் படுதல் |
|
|
|
3. மேதையிற் சிறந்தன்று கற்றது மறவாமை |
|
|
|
4. வண்மையிற் சிறந்தன்று வாய்மை உடைமை |
|
|
|
5. இளமையிற் சிறந்தன்று மெய்பிணி யின்மை |
|
|
|
6. நலனுடை மையின் நாணுச் சிறந்தன்று |
|
|
|
7. குலனுடை மையின் கற்புச் சிறந்தன்று |
|
|
|
8. கற்றலின் கற்றாரை வழிபடுதல் சிறந்தன்று |
|
|
|
9. செற்றாரைச் செறுத்தலின் கற்செய்கை சிறந்தன்று |
|
|
|
10. முற்பெரு கலின்பின் சிறுகாமை சிறந்தன்று |
|
|
|
|
|
|
|
2. அறிவுப்பத்து |
|
|
|
11. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் |
|
|
|
பேரில் பிறந்தமை ஈரத்தின் அறிப |
|
|
|
12. ஈரம் உடைமை ஈகையின் அறிப |
|
|
|
13. சேரா நல்நட்(பு) உதவியின் அறிப |
|
|
|
14. கற்றது உடைமை காட்சியின் அறிப |
|
|
|
15. ஏற்ற முடைமை எதிர்கொளின் அறிப |
|
|
|
16. சிற்றில் பிறந்தமை பெருமிதத்தின் அறிப |
|
|
|
17. குத்திரம் செய்தலின் கள்வனாதல் அறிப |
|
|
|
18. சொற்சோர்வு உடைமையின் எச்சோர்வும் அறிப |
|
|
|
19. அறிவுசோர்வு உடைமையின் பிறிதுசோர்வும் அறிப |
|
|
|
20. சீருடை யாண்மை செய்கையின் அறிப |
|
|
|
|
|
|
|
3. பழியாப் பத்து |
|
|
|
21. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் |
|
|
|
யாப்பி லோரை இயல்குணம் பழியார் |
|
|
|
22. மீப்பி லோரை மீக்குணம் பழியார் |
|
|
|
23. பெருமை உடையதன் அருமை பழியார் |
|
|
|
24. அருமை யுடையதன் பெருமை பழியார் |
|
|
|
25. நிறையச் செய்யாக் குறைவினை பழியார் |
|
|
|
26. முறையில் அரசர்நாட் டிருந்து பழியார் |
|
|
|
27. செய்தக்க நற்கேளிர் செய்யாமை பழியார் |
|
|
|
28. அறியாத் தேசத்து ஆசாரம் பழியார் |
|
|
|
29. வறியோன் வள்ளியன் அன்மை பழியார் |
|
|
|
30. சிறியோர் ஒழுக்கம் சிறந்தோரும் பழியார். |
|
|
|
|
|
|
|
4. துவ்வாப் பத்து |
|
|
|
31. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் |
|
|
|
பழியோர் செல்வம் வறுமையில் துவ்வாது |
|
|
|
32. கழிதறு கண்மை பேடியின் துவ்வாது |
|
|
|
33. நாணில் வாழ்க்கை பசித்தலின் துவ்வாது |
|
|
|
34. பேணில் ஈகை மாற்றலின் துவ்வாது |
|
|
|
35. செய்யாமை மேற்கோள் சிதடியின் துவ்வாது |
|
|
|
36. பொய்வே ளாண்மை புலைமையின் துவ்வாது |
|
|
|
37. கொண்டுகண் மாறல் கொடுமையின் துவ்வாது |
|
|
|
38. அறிவிலி துணைப்பாடு தனிமையின் துவ்வாது |
|
|
|
39. இழிவுடை மூப்புக் கதத்தின் துவ்வாது |
|
|
|
40. தானோர் இன்புறல் தனிமையின் துவ்வாது. |
|
|
|
|
|
|
|
5. அல்ல பத்து |
|
|
|
41. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் |
|
|
|
நீரறிந்து ஒழுகாதான் தாரம் அல்லன் |
|
|
|
42. தார(ம்)மா ணாதது வாழ்க்கை யன்று |
|
|
|
43. ஈரலில் லாதது கிளைநட் பன்று |
|
|
|
44. சோராக் கையன் சொன்மலை யல்லன் |
|
|
|
45. நேரா நெஞ்சத்தோன் நட்டோ ன் அல்லன் |
|
|
|
46. நேராமற் கற்றது கல்வி யன்று |
|
|
|
47. வாழாமல் வருந்தியது வருத்தம் அன்று |
|
|
|
48. அறத்தாற்றின் ஈயாத(து) ஈனை யன்று |
|
|
|
49. திறத்தாற்றின் நேர்லா ததுநோன் பன்று |
|
|
|
50. மறுபிறப் பறியா ததுமூப் பன்று. |
|
|
|
|
|
|
|
6. இல்லைப் பத்து |
|
|
|
51. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் |
|
|
|
மக்கட் பேற்றின் பெறும்பே(று) இல்லை |
|
|
|
52. ஒப்புரவு அறிதலின் தகுவரவு இல்லை |
|
|
|
53. வாய்ப்புடை விழைச்சின் நல்விழைச்சு இல்லை |
|
|
|
54. வாயா விழைச்சின் தீவிழைச்சு இல்லை |
|
|
|
55. இயைவது கரத்தலின் கொடுமை இல்லை |
|
|
|
56. உணர்விலன் ஆதலின் சாக்காடு இல்லை |
|
|
|
57. நசையில் பெரியதோர் நல்குரவு இல்லை |
|
|
|
58. இசையின் பெரியதோர் எச்ச மில்லை |
|
|
|
59. இரத்தலின் ஊஉங்கு இளிவரவு இல்லை |
|
|
|
60. இரப்போர்க்கு ஈதலின் எய்தும் சிறப்பில்லை |
|
|
|
|
|
|
|
7. பொய்ப் பத்து |
|
|
|
61. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் |
|
|
|
பேரறவி னோன்இனிது வாழா மைபொய் |
|
|
|
62. பெருஞ்சீர் ஒன்றன் வெகுளியின் மைபொய் |
|
|
|
63. கள்ளுண் போன்சோர்வு இன்மை பொய் |
|
|
|
64. காலம்அறி யாதோன் கையுறல் பொய் |
|
|
|
65. மேல்வரவு அறியாதோன் தற்காத் தல்பொய் |
|
|
|
66. உறுவினை காய்வோன் உயர்வுவேண் டல்பொய் |
|
|
|
67. சிறுமைநோ னாதோன் பெருமைவேண் டல்பொய் |
|
|
|
68. பெருமைநோ னாதோன் சிறுமைவேண் டல்பொய் |
|
|
|
69. பொருள்நசை வேட்கையோன் முறைசெயல் பொய் |
|
|
|
70. வாலியன் அல்லாதோன் தவம்செய் தல்பொய். |
|
|
|
|
|
|
|
8. எளிய பத்து |
|
|
|
71. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் |
|
|
|
புகழ்வெய் யோர்க்குப் புத்தேள்நா(டு) எளிது |
|
|
|
72. உறழ்வெய் யோருக்கு உறுசெரு எளிது |
|
|
|
73. ஈரம்வெய் யோர்க்கு நசைகொடை எளிது |
|
|
|
74. குறளைவெய் யோர்க்கு மறைவிரி எளிது |
|
|
|
75. துன்பம்வெய் யோர்க்கு இன்பம் எளிது |
|
|
|
76. இன்பம்வெய் யோர்க்குத் துன்பம் எளிது |
|
|
|
77. உண்டிவெய் யோர்க்குப் உறுபிணி எளிது |
|
|
|
78. பெண்டிர்வெய் யோர்க்குப் படுபழி எளிது |
|
|
|
79. பாரம்வெய் யோர்க்குப் பாத்தூண் எளிது |
|
|
|
80. சார்பு இலோர்க்கு உறுகொலை எளிது |
|
|
|
|
|
|
|
9. நல்கூர்ந்த பத்து |
|
|
|
81. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் |
|
|
|
முறையில் அரச(ன்) நாடு நல்கூர்ந் தன்று |
|
|
|
82. மிகமூத்தோள் காமம் நல்கூர்ந் தன்று |
|
|
|
83. செற்றுடன் உறவோனைச் சேர்தல்நல் கூர்ந்தன்று |
|
|
|
84. பிணிகிடந்தோன் பெற்ற இன்பம்நல் கூர்ந்தன்று |
|
|
|
85. தன்போற் றாவழிப் புலவிநல் கூர்ந்தன்று |
|
|
|
86. முதிர்வுடை யோன்மேனி அணிநல் கூர்ந்தன்று |
|
|
|
87. சொற்சொல் லாவழிச் சொலவுநல் கூர்ந்தன்று |
|
|
|
88. அகம்வறி யோன்நண்ணல் நல்கூர்ந் தன்று |
|
|
|
89. உட்(கு)இல் வழிச்சினம் நல்கூர்ந் தன்று |
|
|
|
90. நட்(பு)இல் வழிச்சேறல் நல்கூர்ந் தன்று. |
|
|
|
|
|
|
|
10. தண்டாப் பத்து |
|
|
|
91. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் |
|
|
|
ஓங்கல் வேண்டுவோன் உயர்மொழி தண்டான் |
|
|
|
92. வீங்கல் வேண்டுவோன் பல்புகழ் தண்டான் |
|
|
|
93. கற்றல் வேண்டுவோன் வழிபாடு தண்டான் |
|
|
|
94. நிற்றல் வேண்டுவோன் தவஞ்செயல் தண்டான் |
|
|
|
95. வாழ்க்கை வேண்டுவோன் சூழ்ச்சி தண்டான் |
|
|
|
96. மிகுதி வேண்டுவோன் வருத்தம் தண்டான் |
|
|
|
97. இன்பம் வேண்டுவோன் துன்பம் தண்டான் |
|
|
|
98. துன்பம் வேண்டுவோன் இன்பம் தண்டான் |
|
|
|
99. ஏமம் வேண்டுவோன் முறைசெயல் தண்டான் |
|
|
|
100. காமம் வேண்டுவோன் குறிப்புச்சொல் தண்டான். |
|
|
|
|
|
|
|
|
|
முதுமொழிக்காஞ்சி முற்றிற்று |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
This webpage was last revised on 31 July 2021. |
|
|
|
Feel free to send the corrections by email to the webmaster ([email protected]). |
|
|
|
|
|
|
|
|