|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
apirAmi ammaip patikam of apirAmi paTTar (in tamil script, Unicode/UTF-8 format) |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
அபிராமி பட்டர் அருளிய |
|
"அபிராமி அம்மைப் பதிகம்" |
|
|
|
apirAmi ammaip patikam of apirAmi paTTar |
|
|
|
In tamil script, Unicode/utf-8 format |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Acknowledgements: |
|
|
|
Our Sincere thanks go to the following persons for their assistance in the preparation of this work. |
|
|
|
Etext in TSCII format: Dr. Naga Ganesan of Houston, Texas, USA |
|
|
|
Preparation of PDF version: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland. |
|
|
|
This webpage presents Etext in Tamil script in Unicode encoding (utf-8 format). |
|
|
|
|
|
|
|
© Project Madurai, 1998-2021. |
|
|
|
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation |
|
|
|
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. |
|
|
|
Details of Project Madurai are available at the website |
|
|
|
https://www.projectmadurai.org/ |
|
|
|
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact. |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
அபிராமி பட்டர் அருளிய "அபிராமி அம்மைப் பதிகம்" |
|
|
|
|
|
|
|
முதல் சரபோசி (கி.பி. 1771-1728) காலத்தவர் அபிராமி பட்டர். இயற்பெயர் |
|
|
|
அமிர்தலிங்கம் என்பாரின் மகன். இப்பாடல்களைத் தேடிச், சந்தி பிரித்து, |
|
நிறுத்துக் குறியுடன் தகுதரக் கணியெழுத்து ஆக்கம்: நா. கணேசன், டெக்சாசு, 9 மார்ச்சு 2000. |
|
|
|
|
|
|
|
|
|
காப்பு |
|
|
|
|
|
|
|
தூயதமிழ்ப் பாமாலை சூட்டுதற்கு மும்மதம், நால்வாய், |
|
|
|
ஐங் கரன்தாள் வழுத்துவாம் - நேயர்நிதம் |
|
|
|
எண்ணும் புகழ்க்கடவூர் எங்கள்அபி ராமவல்லி |
|
|
|
நண்ணும்பொற் பாதத்தில் நன்கு |
|
|
|
|
|
|
|
|
|
நூல் |
|
|
|
|
|
கலையாத கல்வியும், குறையாத வயதும், |
|
|
|
ஓர் கபடு வாராத நட்பும், கன்றாத வளமையும், |
|
|
|
குன்றாத இளமையும், கழுபிணி இலாத உடலும், |
|
|
|
சலியாத மனமும், அன்பு அகலாத மனைவியும், |
|
|
|
தவறாத சந்தானமும், தாழாத கீர்த்தியும், |
|
|
|
மாறாத வார்த்தையும், தடைகள் வாராத கொடையும், |
|
|
|
தொலையாத நிதியமும், கோணாத கோலும், |
|
|
|
ஒரு துன்பம் இல்லாத வாழ்வும், |
|
|
|
துய்ய நின்பாதத்தில் அன்பும் உதவிப், |
|
|
|
பெரிய தொண்டரொடு கூட்டு கண்டாய்; |
|
|
|
அலைஆழி அறி துயில்கொள் மாயனது தங்கையே! |
|
|
|
ஆதி கடவூரின் வாழ்வே! |
|
|
|
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி! |
|
|
|
அருள் வாமி! அபிராமியே! (1) |
|
|
|
|
|
|
|
கார் அளக பந்தியும், பந்தியின் அலங்கலும், |
|
|
|
கரிய புருவச் சிலைகளும், |
|
|
|
கர்ண குண்டலமும், மதி முக மண்டலமும், |
|
|
|
நுதல் கத்தூரிப் பொட்டும் இட்டுக், |
|
|
|
கூர் அணிந்திடு விழியும், அமுத மொழியும், |
|
|
|
சிறிய கொவ்வையின் கனி அதரமும், |
|
|
|
குமிழ் அனைய நாசியும், குந்த நிகர் |
|
|
|
தந்தமும் கோடு சோடான களமும், |
|
|
|
வார் அணிந்து இறுமாந்த வனமுலையும், |
|
|
|
மேகலையும், மணி நூபுரப் பாதமும், |
|
|
|
வந்து எனது முன் நின்று, மந்தகாசமுமாக |
|
|
|
வல் வினையை மாற்றுவாயே; |
|
|
|
ஆர மணி வானில் உறை தாரகைகள் போல |
|
|
|
நிறை ஆதி கடவூரின் வாழ்வே! |
|
|
|
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி! |
|
|
|
அருள் வாமி! அபிராமியே! (2) |
|
|
|
|
|
|
|
மகர வார் குழை மேல் அடர்ந்து, குமிழ் மீதினில் மறைந்து, |
|
|
|
வாளைத் துறந்து, மைக் கயலை வென்ற நின் செங்கமல |
|
|
|
விழி அருள் வரம் பெற்ற பேர்கள் அன்றோ- |
|
|
|
செகம் முழுதும் ஒற்றைத் தனிக் குடை கவித்து, |
|
|
|
மேல் சிங்க ஆதனத்தில் உற்றுச், செங்கோலும், |
|
|
|
மனு நீதி முறைமையும் பெற்று, மிகு திகிரி உலகு ஆண்டு, பின்பு |
|
|
|
புகர் முகத்து ஐராவதப் பாகர் ஆகி, நிறை புத்தேளிர் |
|
|
|
வந்து போற்றிப் போக தேவேந்திரன் எனப் புகழ |
|
|
|
விண்ணில் புலோமசையொடும் சுகிப்பர்; |
|
|
|
அகர முதல் ஆகி வளர் ஆனந்த ரூபியே! |
|
|
|
ஆதி கடவூரின் வாழ்வே! |
|
|
|
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி! |
|
|
|
அருள் வாமி! அபிராமியே! (3) |
|
|
|
|
|
|
|
மறி கடல்கள் ஏழையும், திகிரி இரு நான்கையும், |
|
|
|
மாதிரக் கரி எட்டையும், மா நாகம் ஆனதையும், |
|
|
|
மா மேரு என்பதையும், மா கூர்மம் ஆனதையும், ஓர் |
|
|
|
பொறி அரவு தாங்கிவரு புவனம் ஈர் ஏழையும், |
|
|
|
புத்தேளிர் கூட்டத்தையும், பூமகளையும், திகிரி மாயவனையும், |
|
|
|
அரையில் புலி ஆடை உடையானையும், |
|
|
|
முறை முறைகளாய் ஈன்ற முதியவளாய்ப், |
|
|
|
பழைமை முறைமை தெரியாத நின்னை- |
|
|
|
மூவுலகில் உள்ளவர்கள் வாலை என்று அறியாமல் |
|
|
|
மொழிகின்றது ஏது சொல்வாய்? |
|
|
|
அறிவு நிறை விழுமியர்தம் ஆனந்த வாரியே! |
|
|
|
ஆதி கடவூரின் வாழ்வே! |
|
|
|
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி! |
|
|
|
அருள் வாமி! அபிராமியே! (4) |
|
|
|
|
|
|
|
வாடாமல் உயிர் எனும் பயிர் தழைத்து ஓங்கி வர, |
|
|
|
அருள் மழை பொழிந்தும், |
|
|
|
இன்ப வாரிதியிலே நின்னது அன்பு எனும் |
|
|
|
சிறகினால் வருந்தாமலே அணைத்துக், |
|
|
|
கோடாமல் வளர் சிற்றெறும்பு முதல் குஞ்சரக் |
|
|
|
கூட்டம் முதலான சீவ கோடிகள் தமக்குப் புசிக்கும் |
|
|
|
புசிப்பினைக் குறையாமலே கொடுத்தும், |
|
|
|
நீடாழி உலகங்கள் யாவையும் நேயமாய் நின் |
|
|
|
உதர பந்தி பூக்கும் நின்மலீ அகிலங்களுக்கு அன்னை |
|
|
|
என்று ஓதும்; நீலி என்று ஓதுவாரோ? |
|
|
|
ஆடாய நான்மறையின் வேள்வியால் ஓங்கு புகழ் |
|
|
|
ஆதி கடவூரின் வாழ்வே! |
|
|
|
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி! |
|
|
|
அருள் வாமி! அபிராமியே! (5) |
|
|
|
|
|
|
|
பல் குஞ்சரம் தொட்டு எறும்பு கடையானது ஒரு |
|
|
|
பல் உயிர்க்கும், கல் இடைப் பட்ட தேரைக்கும், |
|
|
|
அன்று உற்பவித்திடு கருப் பை உறு சீவனுக்கும், |
|
|
|
மல்கும் சராசரப் பொருளுக்கும், இமையாத வானவர் |
|
|
|
குழாத்தினுக்கும், மற்றும் ஒரு மூவருக்கும், யாவருக்கும், |
|
|
|
அவரவர் மனச் சலிப்பு இல்லாமலே, |
|
|
|
நல்கும் தொழில் பெருமை உண்டாய் இருந்தும், |
|
|
|
மிகு நவ நிதி உனக்கு இருந்தும், |
|
|
|
நான் ஒருவன் வறுமையில் சிறியன் ஆனால், |
|
|
|
அந் நகைப்பு உனக்கே அல்லவோ? |
|
|
|
அல் கலந்து, உம்பர் நாடு அளவு எடுக்கும் சோலை, |
|
|
|
ஆதி கடவூரின் வாழ்வே! |
|
|
|
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி! |
|
|
|
அருள் வாமி! அபிராமியே! (6) |
|
|
|
|
|
|
|
நீடு உலகங்களுக்கு ஆதாரமாய் நின்று, நித்தமாய், |
|
|
|
முத்தி வடிவாய், நியமமுடன் முப்பத்து இரண்டு |
|
|
|
அறம் வளர்க்கின்ற நீ மனைவியாய் இருந்தும்,- |
|
|
|
வீடு வீடுகள் தோறும் ஓடிப் புகுந்து, கால் வேசற்று, |
|
|
|
இலச்சையும் போய், வெண் துகில் அரைக்கு அணிய |
|
|
|
விதியற்று, நிர்வாண வேடமும் கொண்டு, கைக்கு ஓர் |
|
|
|
ஓடு ஏந்தி, நாடு எங்கும் உள்ளம் தளர்ந்து நின்று, |
|
|
|
உன்மத்தன் ஆகி, அம்மா! உன் கணவன் எங்கெங்கும் ஐயம் |
|
|
|
புகுந்து, ஏங்கி, உழல்கின்றது ஏது சொல்வாய்? |
|
|
|
ஆடு கொடி மாடமிசை மாதர் விளையாடி வரும் |
|
|
|
ஆதி கடவூரின் வாழ்வே! |
|
|
|
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி! |
|
|
|
அருள் வாமி! அபிராமியே! (7) |
|
|
|
|
|
|
|
ஞானம் தழைத்து, உன் சொரூபத்தை அறிகின்ற |
|
|
|
நல்லோர் இடத்தினில் போய், நடுவினில் இருந்து, உவந்து, |
|
|
|
அடிமையும் பூண்டு, அவர் நவிற்றும் உபதேசம் உட்கொண்டு, |
|
|
|
ஈனம்தனைத் தள்ளி எனது, நான் எனும் மானம் |
|
|
|
இல்லாமலே துரத்தி, இந்திரிய வாயில்களை இறுகப் புதைத்து, |
|
|
|
நெஞ்சு இருள் அற, விளக்கு ஏற்றியே- |
|
|
|
வான் அந்தம் ஆன விழி அன்னமே! உன்னை என் |
|
|
|
அகத் தாமரைப் போதிலே வைத்து, வேறே கவலை அற்று, |
|
|
|
மேல் உற்ற பர வசம் ஆகி, அழியாதது ஓர் |
|
|
|
ஆனந்த வாரிதியில் ஆழ்கின்றது என்று காண்? |
|
|
|
ஆதி கடவூரின் வாழ்வே? |
|
|
|
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி! |
|
|
|
அருள் வாமி! அபிராமியே! (8) |
|
|
|
|
|
|
|
சலதி உலகத்தில் சராசரங்களை ஈன்ற தாய் ஆகில், |
|
|
|
எனக்குத் தாய் அல்லவோ? யான் உன் மைந்தன் அன்றோ? |
|
|
|
எனது சஞ்சலம் தீர்த்து, நின்றன் |
|
|
|
முலை சுரந்து ஒழுகு பால் ஊட்டி, என் முகத்தை உன் |
|
|
|
முந்தானையால் துடைத்து, மொழிகின்ற மழலைக்கு |
|
|
|
உகந்துகொண்டு, இள நிலா முறுவல் இன்புற்று, அருகில் யான் |
|
|
|
குலவி விளையாடல் கொண்டு, அருள் மழை பொழிந்து, |
|
|
|
அங்கை கொட்டி, வா என்று அழைத்துக், |
|
|
|
குஞ்சர முகன், கந்தனுக்கு இளையன் என்று எனைக் |
|
|
|
கூறினால், ஈனம் உண்டோ? |
|
|
|
அலை கடலிலே தோன்றும் ஆராத அமுதமே! |
|
|
|
ஆதி கடவூரின் வாழ்வே! |
|
|
|
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி! |
|
|
|
அருள் வாமி! அபிராமியே! (9) |
|
|
|
|
|
|
|
கைப் போது கொண்டு, உன் பதப் போது தன்னில் கணப் |
|
|
|
போதும் அர்ச்சிக்கிலேன்; கண் போதினால், உன் முகப் போது |
|
|
|
தன்னை, யான் கண்டு தரிசனை புரிகிலேன்; |
|
|
|
முப் போதில் ஒரு போதும், என் மனப் போதிலே முன்னி, |
|
|
|
உன் ஆலயத்தின் முன் போதுவார் தமது பின் போத நினைகிலேன்; |
|
|
|
மோசமே போய் உழன்றேன்; |
|
|
|
மைப் போதகத்திற்கு நிகர் எனப் போது எரு- |
|
|
|
மைக் கடா மீது ஏறியே, மா கோர காலன் வரும்போது, |
|
|
|
தமியேன் மனம் கலங்கித் தியங்கும் |
|
|
|
அப் போது, வந்து உன் அருட்போது தந்து அருள்; |
|
|
|
ஆதி கடவூரின் வாழ்வே! |
|
|
|
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி! |
|
|
|
அருள் வாமி! அபிராமியே! (10) |
|
|
|
|
|
|
|
மிகையும் துரத்த, வெம் பிணியும் துரத்த, வெகுளி |
|
|
|
ஆனதும் துரத்த, மிடியும் துரத்த, நரை திரையும் துரத்த, |
|
|
|
மிகு வேதனைகளும் துரத்தப், |
|
|
|
பகையும் துரத்த, வஞ்சனையும் துரத்தப், பசி என்பதும் |
|
|
|
துரத்தப், பாவம் துரத்தப், பதி மோகம் துரத்தப், |
|
|
|
பல காரியமும் துரத்த, |
|
|
|
நகையும் துரத்த, ஊழ் வினையும் துரத்த, என் நாளும் துரத்த, |
|
|
|
வெகுவாய் நா வறண்டு ஓடிக், கால் தளர்ந்திடும் என்னை |
|
|
|
நமனும் துரத்துவானோ? |
|
|
|
அகில உலகங்கட்கும் ஆதார தெய்வமே! |
|
|
|
ஆதி கடவூரின் வாழ்வே! |
|
|
|
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி! |
|
|
|
அருள் வாமி! அபிராமியே! (11) |
|
|
|
|
|
|
|
------------ |
|
|
|
|
|
|
|
|
|
"அபிராமி அம்மைப் பதிகம்" -(இரண்டாவது) |
|
|
|
|
|
|
|
கங்கையொடு தும்பையும் அணிந்தவர் வியக்கும் |
|
|
|
கலா மதியை நிகர் வதனமும், கருணை பொழி விழிகளும், |
|
|
|
விண் முகில்கள் வெளிறெனக் காட்டிய கரும் கூந்தலும், |
|
|
|
சங்கை இல்லாது ஒளிரும் மாங்கல்ய தாரணம் தங்கு |
|
|
|
மணி மிடறும், மிக்க சதுர் பெருகு துங்க பாசாங்குசம் |
|
|
|
இலங்கு கர தலமும், விரல் அணியும் அரவும், |
|
|
|
புங்கவர்க்கு அமுது அருளும் அந்தர குசங்களும், |
|
|
|
பொலியும் நவமணி நூபுரம் பூண்ட செஞ் சேவடியை நாளும் |
|
|
|
புகழ்ந்துமே- போற்றி என வாழ்த்த, விடை மேல் |
|
|
|
மங்களம் மிகுந்த நின் பதியுடன் வந்து, அருள் செய்; |
|
|
|
வளர் திருக் கடவூரில் வாழ் வாமி! சுப நேமி! புகழ் நாமி! |
|
|
|
சிவ சாமிமகிழ் வாமி! அபிராமி உமையே! (1) |
|
|
|
|
|
|
|
சந்திர சடாதரி! முகுந்த சோதரி! துங்க சலச |
|
|
|
லோசன மாதவி! சம்ப்ரம பயோதரி! சுமங்கலி! |
|
|
|
சுலட்சணி! சாற்ற அரும் கருணாகரி! |
|
|
|
அந்தரி! வராகி! சாம்பவி! அமர தோத்ரி! அமலை! |
|
|
|
செக சால சூத்ரி! அகில ஆத்ம காரணி! வினோத சய நாரணி! |
|
|
|
அகண்ட சின்மய பூரணி! |
|
|
|
சுந்தரி! நிரந்தரி! துரந்தரி! வரை ராச சுகுமாரி! |
|
|
|
கௌமாரி! உத் துங்க கல்யாணி! புட்ப அத்திர அம்புய |
|
|
|
பாணி! தொண்டர்கட்கு அருள் சர்வாணி! |
|
|
|
வந்து அரி, மலர்ப் பிரமராதி துதி, வேத ஒலி வளர் |
|
|
|
திருக் கடவூரில் வாழ் வாமி! சுப நேமி! புகழ் நாமி! |
|
|
|
சிவ சாமிமகிழ் வாமி! அபிராமி உமையே! (2) |
|
|
|
|
|
|
|
வாச மலர் மரு அளக பாரமும், தண் கிரண மதி முகமும், |
|
|
|
அயில் விழிகளும், வள்ள நிகர் முலையும், மான் நடையும், |
|
|
|
நகை மொழிகளும், வளமுடன் கண்டு, மின்னார் |
|
|
|
பாச பந்தத்திடை, மனம் கலங்கித், தினம் பல வழியும் |
|
|
|
எண்ணி, எண்ணிப் பழி பாவம் இன்னது என்று அறியாமல், |
|
|
|
மாயப்ர- பஞ்ச வாழ்வு உண்மை என்றே, |
|
|
|
ஆசை மேலிட்டு, வீணாக, நாய் போல் திரிந்து அலைவது |
|
|
|
அல்லாமல், உன்றன் அம்புயப் போது எனும் செம் பதம் |
|
|
|
துதியாத அசடன் மேல் கருணை வருமோ? |
|
|
|
மாசு இலாது ஓங்கிய குணாகரி! பவானி! சீர் வளர் திருக் |
|
|
|
கடவூரில் வாழ் வாமி! சுப நேமி! புகழ் நாமி! சிவ |
|
|
|
சாமிமகிழ் வாமி! அபிராமி உமையே! (3) |
|
|
|
|
|
|
|
நன்று என்று, தீது என்று நவிலும் இவ் இரண்டனுள், |
|
|
|
நன்றதே உலகில் உள்ளோர் நாடுவார் ஆதலின், |
|
|
|
நானுமே அவ்விதம் நாடினேன்; நாடினாலும் |
|
|
|
இன்று என்று சொல்லாமல், நினது திரு உள்ளம் அது இரங்கி, |
|
|
|
அருள் செய்குவாயேல் ஏழையேன் உய்குவேன், |
|
|
|
மெய்யான மொழி இ•து;உன் இதயம் அறியாதது உண்டோ? |
|
|
|
குன்றம் எல்லாம் உறைந்து, என்றும் அன்பர்க்கு அருள் |
|
|
|
குமார தேவனை அளித்த குமரி! மரகத வருணி! |
|
|
|
விமலி! பைரவி! கருணை குலவு கிரி ராச புத்ரி! |
|
|
|
மன்றல் மிகு நந்தன வனங்கள், சிறை அளி முரல, |
|
|
|
வளர் திருக் கடவூரில் வாழ் வாமி! சுப நேமி! புகழ் நாமி! |
|
|
|
சிவ சாமிமகிழ் வாமி! அபிராமி உமையே! (4) |
|
|
|
|
|
|
|
ஒரு நாள், இரண்டு நாள் அல்ல; நான் உலகத்து |
|
|
|
உதித்த இந் நாள் வரைக்கும் ஒழியாத கவலையால், |
|
|
|
தீராத இன்னல் கொண்டு, உள்ளம் தளர்ந்து, மிகவும் |
|
|
|
அரு நாண் அற்றிட்ட வில் போல் இருக்கும் இவ் |
|
|
|
அடிமைபால் கருணை கூர்ந்து, இங்கு அஞ்சேல் எனச் சொல்லி, |
|
|
|
ஆதரிப்பவர்கள் உனை அன்றி இலை உண்மையாக; |
|
|
|
இரு நாழிகைப் போதும் வேண்டாது, நிமிடத்தில் இவ் அகில |
|
|
|
புவனத்தையும் இயற்றி, அருளும் திறம் கொண்ட நீ, |
|
|
|
ஏழையேன் இன்னல் தீர்த்து, அருளல் அரிதோ? |
|
|
|
வரு நாவலூரர் முதலோர் பரவும், இனிய புகழ் வளர் |
|
|
|
திருக் கடவூரில் வாழ் வாமி! சுப நேமி! புகழ் நாமி! |
|
|
|
சிவ சாமிமகிழ் வாமி! அபிராமி உமையே! (5) |
|
|
|
|
|
|
|
எண்ணிக்கை இல்லாத துன்பங்கள் மேன்மேல் |
|
|
|
ஏறிட்டு ஒறுக்க, அந்தோ! எவ்விதம் உளம் சகித்து |
|
|
|
உய்குவேன்? இப்பொழுது எடுத்திட்ட சன்மம் இதனில், |
|
|
|
நண்ணி எள் அளவு சுகம் ஆனது ஒரு நாளினும் நான் |
|
|
|
அனுபவித்தது இல்லை; நாடு எலாம் அறியும், இது கேட்பது ஏன்? |
|
|
|
நின் உளமும் நன்றாய் அறிந்து இருக்கும்; |
|
|
|
புண்ணியம் பூர்வ சனனத்தினில் செய்யாத புலையன் |
|
|
|
ஆனாலும், நினது பூரண கடாட்ச வீட்சண்ணியம் செய்து, |
|
|
|
எனது புன்மையை அகற்றி அருள்வாய்; |
|
|
|
மண்ணவர்கள், விண்ணவர்கள் நித்தமும் பரவும், |
|
|
|
இசை வளர் திருக் கடவூரில் வாழ் வாமி! சுப நேமி! புகழ் நாமி! |
|
|
|
சிவ சாமிமகிழ் வாமி! அபிராமி உமையே! (6) |
|
|
|
|
|
|
|
தெரிந்தோ, அலாது, தெரியாமலோ, இவ் அடிமை |
|
|
|
செய்திட்ட பிழை இருந்தால் சினம் கொண்டு அது ஓர் |
|
|
|
கணக்காக வையாது, நின் திரு உளம் இரங்கி, மிகவும் |
|
|
|
பரிந்து வந்து இனியேனும் பாழ் வினையில் ஆழ்ந்து, |
|
|
|
இனல் படாது, நல் வரம்அளித்துப், பாதுகாத்து அருள் செய்ய |
|
|
|
வேண்டும்; அண்டாண்ட உயிர் பரிவுடன் அளித்த முதல்வி! |
|
|
|
புரந்தரன், போதன், மாதவன் ஆகியோர்கள் துதி புரியும் |
|
|
|
பதாம்புய மலர்ப் புங்கவி! புராந்தகி! புரந்தரி! புராதனி! |
|
|
|
புராணி! திரி புவனேசுவரி! |
|
|
|
மருந்தினும் நயந்த சொல் பைங் கிளி! வராகி! எழில் |
|
|
|
வளர் திருக் கடவூரில் வாழ் வாமி! சுப நேமி! புகழ் நாமி! |
|
|
|
சிவ சாமிமகிழ் வாமி! அபிராமி உமையே! (7) |
|
|
|
|
|
|
|
வஞ்சகக் கொடியோர்கள் நட்பு வேண்டாமலும், மருந்தினுக்கா |
|
|
|
வேண்டினும், மறந்தும் ஓர் பொய்ம்மொழி சொலாமலும், |
|
|
|
தீமை ஆம் வழியினில் செல்லாமலும், |
|
|
|
விஞ்சு நெஞ்சு அதனில் பொறாமை தரியாமலும், வீண் |
|
|
|
வம்பு புரியாமலும், மிக்க பெரியோர்கள் சொலும் |
|
|
|
வார்த்தை தள்ளாமலும், வெகுளி அவை கொள்ளாமலும், |
|
|
|
தஞ்சம் என நினது உபய கஞ்சம் துதித்திடத், தமியேனுக்கு |
|
|
|
அருள் புரிந்து, சர்வ காலமும் எனைக் காத்து |
|
|
|
அருள வேண்டினேன்; சலக் கயல்கள் விழியை அனைய |
|
|
|
வஞ்சியர் செவ்வாய் நிகரும் வாவி ஆம்பல் மலரும் |
|
|
|
வளர் திருக் கடவூரில் வாழ் வாமி! சுப நேமி! புகழ் நாமி! |
|
|
|
சிவ சாமிமகிழ் வாமி! அபிராமி உமையே! (8) |
|
|
|
|
|
|
|
எனது இன்னல் இன்னபடி என்று வேறு ஒருவர்க்கு இசைத்திடவும், |
|
|
|
அவர்கள் கேட்டு, இவ் இன்னல் தீர்த்து, உள்ளத்து இரங்கி, |
|
|
|
நன்மைகள் செயவும், எள் அளவும் முடியாது; நின் |
|
|
|
உனதம் மருவும் கடைக் கண் அருள் சிறிது செயின், உதவாத |
|
|
|
நுண் மணல்களும் ஓங்கு மாற்று உயர் சொர்ண மலை ஆகும்; |
|
|
|
அது அன்றி உயர் அகில புவனங்களைக் கனமுடன் அளித்து, |
|
|
|
முப்பத்து இரண்டு அறங்களும் கவின் பெறச் செய்யும் |
|
|
|
நின்னைக் கருது நல் அடியவர்க்கு எளி வந்து, சடுதியில் |
|
|
|
காத்து, ரட்சித்தது ஓர்ந்து, |
|
|
|
வனசம் நிகர் நின் பாதம் நம்பினேன், வந்து அருள் செய்; |
|
|
|
வளர் திருக் கடவூரில் வாழ் வாமி! சுப நேமி! புகழ் நாமி! |
|
|
|
சிவ சாமிமகிழ் வாமி! அபிராமி உமையே! (9) |
|
|
|
|
|
|
|
கரு நீல வடிவமார் மாடு ஏறி, உத்தண்ட கன தண்ட |
|
|
|
வெம் பாசமும், கைக் கொண்டு, சண்ட மா காலன் முன் எதிர்க்க, |
|
|
|
மார்க்கண்டன் வெகுண்டு நோக்க, |
|
|
|
இரு நீல கண்டன் எனும் நின் பதியை உள்ளத்தில் |
|
|
|
இன்பு கொண்டு, அருச்சனை செய, ஈசன், அவ் இலிங்கம் பிளப்ப, |
|
|
|
நின்னொடு தோன்றி, யமனைச் சூலத்தில் ஊன்றிப் |
|
|
|
பெரு நீல மலை என, நிலத்தில் அன்னவன் விழப், |
|
|
|
பிறங்கு தாளால் உதைத்துப், பேசு முனி மைந்தனுக்கு அருள் |
|
|
|
செய்தது, உனது அரிய பேர் அருளின் வண்ணம் அலவோ? |
|
|
|
வரு நீல மட மாதர் விழி என்ன, மலர் வாவி வளர் |
|
|
|
திருக் கடவூரில் வாழ் வாமி! சுப நேமி! புகழ் நாமி! |
|
|
|
சிவ சாமிமகிழ் வாமி! அபிராமி உமையே! (10) |
|
|
|
|
|
|
|
சகல செல்வங்களும் தரும் இமய கிரி ராச தனயை! |
|
|
|
மா தேவி! நின்னைச் சத்யமாய், நித்யம் உள்ளத்தில் |
|
|
|
துதிக்கும் உத்தமருக்கு இரங்கி, மிகவும் |
|
|
|
அகிலமதில் நோய் இன்மை, கல்வி, தன தானியம், |
|
|
|
அழகு, புகழ், பெருமை, இளமை, அறிவு, சந்தானம், வலி, |
|
|
|
துணிவு, வாழ் நாள், வெற்றி, ஆகு நல்லூழ், நுகர்ச்சி |
|
|
|
தொகை தரும் பதினாறு பேறும் தந்து அருளி, நீ சுக ஆனந்த |
|
|
|
வாழ்வு அளிப்பாய்; சுகிர்த குண சாலி! பரி பாலி! அநு கூலி! |
|
|
|
திரி சூலி! மங்கள விசாலி! |
|
|
|
மகவு நான், நீ தாய், அளிக்க ஒணாதோ? மகிமை வளர் திருக் |
|
|
|
கடவூரில் வாழ் வாமி! சுப நேமி! புகழ் நாமி! |
|
|
|
சிவ சாமிமகிழ் வாமி! அபிராமி உமையே! (11) |
|
|
|
|
|
|
|
அபிராமி பதிகங்கள் முற்றுப்பெற்றது. |
|
|
|
------------ |
|
|
|
|
|
|
|
This webpage was last revised on 4 August 2021. |
|
|
|
Feel free to send the corrections by email to the webmaster ([email protected]). |
|
|
|
|
|
|
|
|