|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Abirami Anthaathi - With explanations - in Tamil script/unicode |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
AbirAmi andhAthi by AbirAmi Bhatter |
|
|
|
with explanations from Kavingar Kannathasan |
|
|
|
(in tamil script, unicode/UTF-8 format) |
|
|
|
அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி |
|
|
|
கவிஞர் கண்ணதாசனின் விளக்கவுரையுடன்
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Tamil EText preparation: Dr. Kumar Mallikarjunan, Blacksburg, VA, U.S.A. |
|
|
|
Acknowledgements: Our sincere thanks go to the family of Late Kavinjar Kannadhasan
|
|
(in particular Mr. Gandhi Kannadhasan) for giving us permission to include the explanations
|
|
of the Kavinjar as part of this Etext file. |
|
|
|
This webpage presents the Etxt in Tamil script but in Unicode encoding. |
|
To view the Tamil text correctly you need
|
|
to set up the following: |
|
|
|
i). You need to have Unicode fonts containing Tamil Block (Latha, |
|
|
|
Arial Unicode MS, TSCu_Inaimathi, Code2000, UniMylai,...) installed on your computer |
|
|
|
and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or Windows XP). |
|
|
|
|
|
|
|
ii)Use a browser that is capable of handling UTF-8 based pages |
|
|
|
(Netscape 6, Internet Explorer 5) with the Unicode Tamil font
|
|
chosen as the default font for the UTF-8 char-set/encoding view. |
|
.
|
|
In case of difficulties send an email request to |
|
[email protected] |
|
|
|
C : Project Madurai 1999 |
|
|
|
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted |
|
|
|
to preparation of electronic texts of tamil literary works and to |
|
|
|
distribute them free on the Internet. Details of Project Madurai are |
|
|
|
available at the website http://www.tamil.net.. |
|
|
|
|
|
|
|
You are welcome to freely distribute this file, provided this
|
|
header page is kept intact. |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
தார் அமர் கொன்றையும் சண்பக மாலையும் சாத்தும் தில்லை
|
|
|
|
ஊரர்தம் பாகத்து உமை மைந்தனே.-உலகு ஏழும் பெற்ற
|
|
|
|
சீர் அபிராமி அந்தாதி எப்போதும் எந்தன் சிந்தையுள்ளே-
|
|
|
|
கார் அமர் மேனிக் கணபதியே.-நிற்கக் கட்டுரையே. --- காப்பு |
|
|
|
|
|
கொன்றை மாலையும், சண்பக
|
|
மாலையும் அணிந்து நிற்கும் தில்லையம்பதி நாயகனுக்கும், அவன்
|
|
ஒரு பாதியாய் நிற்கும் உமைக்கும் மைந்தனே! மேகம் போன்ற கருநிற மேனியை உடைய
|
|
பேரழகு விநாயகரே! ஏழுலகையும் பெற்ற சீர் பொருந்திய அபிராமித் தாயின்
|
|
அருளையும், அழகையும் எடுத்துக்கூறும் இவ்வந்தாதி எப்பொழுதும் என்
|
|
சிந்தையுள்ளே உறைந்து இருக்க அருள் புரிவாயாக.
|
|
|
|
|
|
|
|
|
|
1: உதிக்கின்ற செங்கதிர், உச்சித் திலகம், உணர்வுடையோர் |
|
|
|
மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம்போது, மலர்க்கமலை |
|
|
|
துதிக்கின்ற மின் கொடி, மென் கடிக் குங்கும தோயம்-என்ன |
|
|
|
விதிக்கின்ற மேனி அபிராமி, எந்தன் விழுத் துணையே: |
|
|
|
|
|
உதய சூரியனின் செம்மையான
|
|
கதிரைப் போலவும், உச்சித்திலகம் என்கிற செம்மலரைப் போலவும், போற்றப்படுகின்ற மாணிக்கத்தைப் போலவும்,
|
|
மாதுள மொட்டைப் போலவும், ஒத்து
|
|
விளங்கும் மென்மையான மலரில் வீற்றிருக்கின்ற திருமகளும் துதிக்கக்கூடிய வடிவையுடையவள்
|
|
என் அபிராமியாகும். அவள் கொடி மின்னலைப் போன்றும், மணம் மிகு குங்குமக்
|
|
குழம்பு போன்றும் சிவந்த மேனியுடையவள். இனி அவளே எனக்குச் சிறந்த துணையாவாள்.
|
|
|
|
|
|
|
|
|
|
2: துணையும், தொழும் தெய்வமும் பெற்ற தாயும், சுருதிகளின் |
|
|
|
பணையும் கொழுந்தும் பதிகொண்ட வேரும்-பனி மலர்ப்பூங் |
|
|
|
கணையும், கருப்புச் சிலையும், மென் பாசாங்குசமும், கையில் |
|
|
|
அணையும் திரிபுர சுந்தரி-ஆவது அறிந்தனமே. |
|
|
|
|
|
அபிராமி அன்னையை நான் அறிந்து கொண்டேன். அவளே எனக்குத் துணையாகவும், தொழுகின்ற தெய்வமாகவும்,
|
|
பெற்ற தாயாகவும் விளங்குகின்றாள். வேதங்களில் தொழிலாகவும், அவற்றின் கிளைகளாகவும், வேராகவும்
|
|
நிலைபெற்று இருக்கின்றாள். அவள் கையிலே குளிர்ந்த மலர் அம்பும், கரும்பு வில்லும், மெல்லிய பாசமும், அங்குசமும்
|
|
கொண்டு விளங்குகின்றாள். அந்தத் திரிபுர சுந்தரியே எனக்குத் துணை.
|
|
|
|
|
|
3: அறிந்தேன், எவரும் அறியா மறையை, அறிந்துகொண்டு |
|
|
|
செறிந்தேன், நினது திருவடிக்கே,-திருவே.- வெருவிப் |
|
|
|
பிறிந்தேன், நின் அன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால், |
|
|
|
மறிந்தே விழும் நரகுக்கு உறவாய மனிதரையே. |
|
|
|
|
|
அருட்செல்வத்தை அன்பர்களுக்கு வழங்கும் அபிராமியே! நின் பெருமையை உணர்த்தும் அடியார்களின்
|
|
கூட்டுறவை நான் நாடியதில்லை. மனத்தாலும் அவர்களை எண்ணாத காரணத்தால் தீவினை மிக்க என் நெஞ்சானது
|
|
நரகத்தில் வீழ்ந்து மனிதரையே நாடிக் கொண்டிருந்தது. இப்பொழுது நான் அறிந்து கொண்டேன்.
|
|
ஆதலினால் அத்தீயவழி மாக்களை விட்டுப் பிரிந்து வந்து விட்டேன். எவரும் அறியாத வேதப் பொருளை தெரிந்து
|
|
கொண்டு உன் திருவடியிலேயே இரண்டறக் கலந்து விட்டேன். இனி நீயே எனக்குத் துணையாவாய்.
|
|
|
|
|
|
4: மனிதரும், தேவரும்,
|
|
மாயா முனிவரும், வந்து, சென்னி |
|
|
|
குனிதரும் சேவடிக் கோமளமே.கொன்றை வார்சடைமேல் |
|
|
|
பனிதரும் திங்களும், பாம்பும்,பகீரதியும் படைத்த |
|
|
|
புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே. |
|
|
|
|
|
மனிதர், தேவர், பெரும் தவமுனிவர் முதலியோர் தலை வைத்து வணங்கும் அழகிய சிவந்த
|
|
பாதங்களுடைய கோமளவல்லியே! தன்னுடைய நீண்ட சடாமுடியில் கொன்றையும், குளிர்ச்சி தரும்
|
|
இளம் சந்திரனையும், அரவையும், கங்கையையும் கொண்டு விளங்குகின்ற புனிதரான சிவபெருமானும்
|
|
நீயும் இடையறாது என் மனத்திலே ஆட்சியருள வேண்டும்.
|
|
|
|
|
|
5: பொருந்திய முப்புரை, செப்பு உரைசெய்யும் புணர் முலையாள்,
|
|
|
|
வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி, வார் சடையோன்
|
|
|
|
அருந்திய நஞ்சு அமுது ஆக்கிய அம்பிகை, அம்புயமேல்
|
|
|
|
திருந்திய சுந்தரி, அந்தரி-பாதம் என் சென்னியதே. |
|
|
|
|
|
அபிராமி அன்னையே! உயிர்களிடத்திலே படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூவகை நிலைகளிலும், நிறைந்து
|
|
இருப்பவளே! மாணிக்க பூண் அணிந்த நெருக்கமான, அடர்ந்த தனங்களின் சுமையால் வருந்துகின்ற வஞ்சிக் கொடி
|
|
போன்ற இடையை உடையவளே! மனோன்மணியானவளே! (அன்பர்களை ஞான நிலைக்கு கொண்டு செல்கின்றவள்)
|
|
நீண்ட சடையை உடைய சிவபெருமான் அன்றொரு நாள் அருந்திய விஷத்தை அமுதமாக்கிய அழகிய தேவி!
|
|
நீ வீற்றிருக்கும் தாமரையைக் காட்டிலும் மென்மையான நின் திருவடிகளையே, என் தலைமேல் கொண்டேன்.
|
|
|
|
|
|
6: சென்னியது, உன் பொன் திருவடித் தாமரை. சிந்தையுள்ளே
|
|
|
|
மன்னியது, உன் திரு மந்திரம்,- சிந்துர வண்ணப் பெண்ணே.-
|
|
|
|
முன்னியநின் அடியாருடன் கூடி, முறை முறையே
|
|
|
|
பன்னியது, என்றும் உந்தன் பரமாகம பத்ததியே. |
|
|
|
|
|
செம்மையான திருமேனியுடைய அபிராமித் தாயே! என்றும்
|
|
என் தலைமேல் இருக்கக்கூடியது, நின் அழகிய திருவடியே!
|
|
என்றும் என் சிந்தையுள்ளே நிலை பெற்று இருக்கக் கூடியது, நின்
|
|
திருமந்திரமே! செந்தூர நிறமுடைய அழகிய தேவி, நான்
|
|
இனி என்றும் கலந்திருப்பது நின்னையே மறவாது தொழும்
|
|
அடியார்களையே! நான் தினந்தோறும் பாராயணம் செய்வது,
|
|
உன்னுடைய மேலான ஆகம நெறியையே!
|
|
|
|
|
|
7: ததியுறு மத்தின் சுழலும் என் ஆவி, தளர்வு இலது ஓர்
|
|
|
|
கதியுறுவண்ணம் கருது கண்டாய்-கமலாலயனும்,
|
|
|
|
மதியுறுவேணி மகிழ்நனும், மாலும், வணங்கி, என்றும்
|
|
|
|
துதியுறு சேவடியாய். சிந்துரானன சுந்தரியே. |
|
|
|
|
|
தாமரை மலரில் உதித்தவனும், கலைமகளின் கொழுநனும்
|
|
ஆகிய பிரம்மனும், திருமாலும் வணங்கிப் போற்றுகின்ற
|
|
சிவந்த பாதங்களையுடைய செந்தூரத் திலகம் கொண்டு
|
|
விளங்கும் பேரழகானவளே! தயிரைக் கடையும் மத்துப்
|
|
போன்று உலகில் பிறப்பு இறப்பு என்று சுழன்று வருந்தாமல்
|
|
என் உயிர் நல்லதொரு மோட்ச கதியையடைய அருள்
|
|
புரிவாயாக!
|
|
|
|
|
|
|
|
8: சுந்தரி எந்தை துணைவி, என் பாசத்தொடரை எல்லாம்
|
|
|
|
வந்து அரி சிந்துர வண்ணத்தினாள், மகிடன் தலைமேல்
|
|
|
|
அந்தரி, நீலி, அழியாத கன்னிகை, ஆரணத்தோன்
|
|
|
|
கம் தரி கைத்தலத்தாள்-மலர்த்தாள் என் கருத்தனவே |
|
|
|
|
|
என் அபிராமி அன்னையே பேரழகானவள். அவள் என்
|
|
தந்தை சிவபெருமானின் துணைவி. என்னுடைய அகம்,
|
|
புறமாகிய அனைத்து பந்த பாசங்களையும் போக்கக் கூடியவள்.
|
|
செந்நிறத் திருமேனியாள். அன்றொருநாள் மகிஷாசுரனின்
|
|
தலை மேல் நின்று, அவனை வதம் செய்தவள் (அகந்தையை
|
|
அழித்தவள்). நீல நிறமுடைய நீலி என்னும் கன்னியானவள்.
|
|
தன்னுடைய கையில் பிரம்ம கபாலத்தைக் கொண்டிருப்பவள்.
|
|
அவளுடைய மலர்த்தாளையே என்றும் என் கருத்தில் கொண்டுள்ளேன்.
|
|
|
|
|
|
|
|
9: கருத்தன எந்தைதன் கண்ணன,வண்ணக் கனகவெற்பின்
|
|
|
|
பெருத்தன, பால் அழும் பிள்ளைக்கு நல்கின, பேர் அருள்கூர்
|
|
|
|
திருத்தன பாரமும், ஆரமும், செங்கைச் சிலையும், அம்பும்,
|
|
|
|
முருத்தன மூரலும், நீயும், அம்மே. வந்து என்முன் நிற்கவே. |
|
|
|
|
|
அபிராமித்தாயே! என் தந்தை சிவபெருமானின் கருத்திலும்,
|
|
கண்ணிலும் நின்று விளங்கக் கூடியது, பொன் மலையென
|
|
மதர்த்து நிற்கும் நின் திருமுலையே ஆகும். அம்முலையே நீ
|
|
உயிர்களிடத்தில் காட்டும் பரிவைக் காட்டுவதற்காக அமுதப்
|
|
பிள்ளையாகிய ஞானசம்பந்தருக்கு பால் நல்கியது. இப்படிப்பட்ட
|
|
அருள்மிக்க கனமான கொங்கையும், அதில் விளங்கக் கூடிய
|
|
ஆரமும், சிவந்த கைகளில் விளங்கும் வில்லும் அம்பும், நின்னுடைய
|
|
சிவந்த இதழ் நகையும் என் முன் காட்சியருள வேண்டும்.
|
|
|
|
|
|
10: நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை,
|
|
|
|
என்றும் வணங்குவது உன் மலர்த் தாள்.-எழுதாமறையின்
|
|
|
|
ஒன்றும் அரும்பொருளே. அருளே. உமையே. இமயத்து
|
|
|
|
அன்றும் பிறந்தவளே. அழியா முத்தி ஆனந்தமே. |
|
|
|
|
|
அறிதற்கரிய பொருளே! அருளே உருவான உமையே! அக்காலத்தில்
|
|
இமயமலையில் பிறந்தவளே! என்றும் அழியாத முக்தி ஆனந்தமாக
|
|
விளங்குபவளே! உணர்தற்கரிய பெருமை வாய்ந்த வேதப் பொருளில்
|
|
ஒன்றிய பொருளே! நான் நின்றாலும், இருந்தாலும், கிடந்தாலும்,
|
|
எந்நிலையில் இருப்பினும் நின்னையே நினைத்து தியானிக்கின்றேன்.
|
|
நான் வணங்குவதும் நின் மலர் போன்ற பாதங்களையே யாகும்.
|
|
|
|
|
|
11: ஆனந்தமாய், என் அறிவாய், நிறைந்த அமுதமுமாய்,
|
|
|
|
வான் அந்தமான வடிவு உடையாள், மறை நான்கினுக்கும்
|
|
|
|
தான் அந்தமான, சரணாரவிந்தம்-தவள நிறக்
|
|
|
|
கானம் தம் ஆடரங்கு ஆம் எம்பிரான் முடிக் கண்ணியதே. |
|
|
|
|
|
அபிராமித்தாய் என் ஆனந்தமாகவும், என் அறிவாகவும் விளங்குகின்றாள்.
|
|
என் வாழ்வில் அமுதமாக நிறைந்திருக்கின்றாள். அவள் ஆகாயத்தில்
|
|
தொடங்கி மண், நீர், நெருப்பு, காற்று என்ற ஐம்பெரும் வடிவுடையவள்.
|
|
வேதம் நான்கினுக்கும் தானே தொடக்கமாகவும், முடிவாகவும்
|
|
இருப்பவள். இப்படிப்பட்ட தாயின் திருவடித் தாமரைகள், திருவெண்
|
|
காட்டில் திருநடனம் புரியும் எம்பிரான் ஈசன் முடிமேல் தலைமாலையாகத் திகழ்வன.
|
|
|
|
|
|
12: கண்ணியது உன் புகழ், கற்பது உன் நாமம், கசிந்து பக்தி
|
|
|
|
பண்ணியது உன் இரு பாதாம்புயத்தில், பகல் இரவா
|
|
|
|
நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து-நான் முன்செய்த
|
|
|
|
புண்ணியம் ஏது? என் அம்மே. புவி ஏழையும் பூத்தவளே. |
|
|
|
|
|
என் அம்மையே! அபிராமித்தாயே! ஏழ் உலகையும் பெற்றவளே!
|
|
நான் எப்பொழுதும் ஊனுருக நினைவது உன்புகழே! நான் கற்பதோ
|
|
உன் நாமம். என் மனம் கசிந்து பக்தி செய்வதோ உன் திருவடித்
|
|
தாமரை. நான் இரவென்றும், பகலென்றும் பாராமல் சென்று
|
|
சேர்ந்திருப்பது உன் அடியார் கூட்டம். இவைகளுக்கெல்லாம்
|
|
தாயே! நான் செய்த புண்ணியம்தான் என்ன!
|
|
|
|
|
|
13: பூத்தவளே, புவனம் பதினான்கையும். பூத்தவண்ணம்
|
|
|
|
காத்தவளே. பின் கரந்தவளே. கறைக்கண்டனுக்கு
|
|
|
|
மூத்தவளே. என்றும்மூவா முகுந்தற்கு இளையவளே.
|
|
|
|
மாத்தவளே. உன்னை அன்றி மற்று ஓர் தெய்வம் வந்திப்பதே? |
|
|
|
|
|
உலகம் பதினான்கையும் பெற்றவளே! எப்படிப் பெற்றாயோ,
|
|
அப்படியே உலகத்தைக் காப்பவளே! பின்பு ஏதோ ஒரு காரணம்
|
|
கருதி, உலகத்தை உன்னில் அடக்கிக் கொண்டவளே! கறைக்
|
|
கண்டனுக்கு (ஆலகால விஷத்தை உண்டதால் கறை எனப்பட்டது)
|
|
மூத்தவளே! (ஆதி சக்தியிலிருந்தே சிவன், பிரம்மா, விஷ்ணு
|
|
முதலானோர் தோன்றினார்கள் என்பது வரலாறு) என்றும் சீர்
|
|
இளமை பொருந்திய திருமாலுக்குத் தங்கையே! அருந்தவத்தின்
|
|
தலைவியே! அபிராமி அன்னையே! உன்னையன்றி மற்றொரு
|
|
தெய்வத்தை வணங்கேன்.
|
|
|
|
|
|
14: வந்திப்பவர் உன்னை, வானவர் தானவர் ஆனவர்கள்,
|
|
|
|
சிந்திப்பவர், நல்திசைமுகர் நாரணர், சிந்தையுள்ளே
|
|
|
|
பந்திப்பவர், அழியாப் பரமானந்தர், பாரில் உன்னைச்
|
|
|
|
சந்திப்பவர்க்கு எளிதாம் எம்பிராட்டி. நின் தண்ணளியே: |
|
|
|
|
|
ஏ அபிராமி அன்னையே! உன்னை வணங்குபவர்கள் தேவர்கள்,
|
|
அசுரர்கள், மற்றும் உன்னை விரும்பிப் பல காலமும் தொழும்
|
|
அடியார்கள்! நான்கு முகங்களையுடைய பிரம்மனும் விஷ்ணுவுமே
|
|
உன்னைச் சிந்திப்பவர்கள்! நின்னை மனத்திற்கு கட்டுப்படுத்தியவர்
|
|
என்றும் அழியாத பரமானந்த நாதனாகிய சிவபெருமானே!
|
|
இவர்களைக் காட்டிலும் உலகத்தில் நின்னைத் தரிசனம்
|
|
செய்வார்க்கே நீ எளிதில் அருள் புரிகின்றாய். என் தாயே!
|
|
உன் கருணைதான் என்னே! வியத்தற்குரிய தன்மையது!
|
|
|
|
|
|
15: தண்ணளிக்கு என்று, முன்னே பல கோடி தவங்கள் செய்வார்,
|
|
|
|
மண் அளிக்கும் செல்வமோ பெறுவார்? மதி வானவர் தம்
|
|
|
|
விண் அளிக்கும் செல்வமும் அழியா முத்தி வீடும், அன்றோ?-
|
|
|
|
பண் அளிக்கும் சொல் பரிமள யாமளைப் பைங்கிளியே. |
|
|
|
|
|
அன்னையே! அபிராமித் தாயே! இசையை எழுப்பக்கூடிய
|
|
அழகிய இன்சொல் கூறும் எம் பசுங்கிளியே! நின் திருவருள்
|
|
நாடிப் பலகோடி தவங்களைச் செய்தவர்கள் இவ்வுலகத்தில்
|
|
கிடைக்கக் கூடிய செல்வங்களை மட்டுமா பெறுவர்? சிறந்த
|
|
தேவேந்திரன் ஆட்சி செய்யக்கூடிய விண்ணுலக போகத்தையும்
|
|
பெறுவர். மற்றும், அழியாத முக்திப் பேற்றையும் அடைவார்கள்
|
|
அல்லவா!
|
|
|
|
|
|
16: கிளியே, கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்து ஒளிரும்
|
|
|
|
ஒளியே, ஒளிரும் ஒளிக்கு இடமே, எண்ணில் ஒன்றும் இல்லா
|
|
|
|
வெளியே, வெளி முதல் பூதங்கள் ஆகி விரிந்த அம்மே.-
|
|
|
|
அளியேன் அறிவு அளவிற்கு அளவானது அதிசயமே. |
|
|
|
|
|
கிளி போன்றவளே! தாயே! உன்னை நினைந்து வழிபடும் அடியார்
|
|
மனத்தினிலே சுடர் விட்டுப் பிரகாசிக்கும் ஒளியே! அவ்வாறு ஒளிரும்
|
|
ஒளிக்கு நிலையாக இருப்பவளே! ஒன்றுமே இல்லாத அண்டமாகவும்,
|
|
அவ்வண்டத்தினின்று ஐம்பெரும் பூதங்களாகவும் விரிந்து நின்ற
|
|
தாயே! எளியேனாகிய என் சிற்றறிவுக்கு நீ எட்டுமாறு நின்றதும்
|
|
அதிசயமாகும்!
|
|
|
|
|
|
17: அதிசயம் ஆன வடிவு உடையாள், அரவிந்தம் எல்லாம்
|
|
|
|
துதி சய ஆனன சுந்தரவல்லி, துணை இரதி
|
|
|
|
பதி சயமானது அபசயம் ஆக, முன் பார்த்தவர்தம்
|
|
|
|
மதி சயம் ஆக அன்றோ, வாம பாகத்தை வவ்வியதே? |
|
|
|
|
|
அபிராமி அன்னை அதிசயமான அழகுடையவள்! அவள் தாமரை
|
|
போன்ற மலர்களெல்லாம் துதிக்கக் கூடிய வெற்றி பொருந்திய
|
|
அழகிய முகத்தையுடையவள்; கொடி போன்றவள்; அவள் கணவன்
|
|
முன்பு ஒருநாள் மன்மதனின் வெற்றிகளையெல்லாம் தோல்வியாக
|
|
நெற்றிக் கண்ணைத் திறந்து பார்த்தார். அப்படிப்பட்டவரின் மனத்தையும் குழையச் செய்து,
|
|
அவருடைய இடப் பாகத்தைக் கவர்ந்து கொண்டாள், வெற்றியுடைய தேவி.
|
|
|
|
|
|
18: வவ்விய பாகத்து இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும்
|
|
|
|
செவ்வியும், உங்கள் திருமணக் கோலமும், சிந்தையுள்ளே
|
|
|
|
அவ்வியம் தீர்த்து என்னை ஆண்டபொற் பாதமும் ஆகிவந்து-
|
|
|
|
வெவ்விய காலன் என்மேல் வரும்போது-வெளி நிற்கவே. |
|
|
|
|
|
அபிராமித் தாயே! என் அகப்பற்று, புறப்பற்று ஆகிய பாசங்களை
|
|
அகற்றி, என்னை ஆட்கொண்டு அருளிய நின் பொற்பாதங்களோடு,
|
|
எந்தை எம்பிரானோடு இரண்டறக் கலந்திருக்கும் அர்த்த நாரீஸ்வரர்
|
|
அழகும், தனித்தனி நின்று காட்சி தரும் திருமணக்கோலமும்,
|
|
கொடிய காலன் என்மேல் எதிர்த்து வரும் காலங்களில் காட்சியருள
|
|
வேண்டும்.
|
|
|
|
|
|
19: வெளிநின்ற நின்திருமேனியைப் பார்த்து, என் விழியும் நெஞ்சும்
|
|
|
|
களிநின்ற வெள்ளம் கரைகண்டது, இல்லை, கருத்தினுள்ளே
|
|
|
|
தெளிநின்ற ஞானம் திகழ்கின்றது, என்ன திருவுளமோ?-
|
|
|
|
ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே. |
|
|
|
|
|
ஒளி பொருந்திய ஒன்பது கோணங்களில் (நவசக்தி) உறைகின்ற
|
|
தாயே! நின் திருமணக் காட்சி தருவதைக் கண்ட என் கண்களும்,
|
|
நெஞ்சும் கொண்ட மகிழ்ச்சி வெள்ளத்திற்கு இதுவரை ஒரு கரை
|
|
கண்டதில்லை. ஆயினும் தெளிந்த ஞானம் இருப்பதை உணர்கிறேன்.
|
|
இது உன்னுடைய திருவருள் பயனேயாகும்.
|
|
|
|
|
|
20: உறைகின்ற நின் திருக்கோயில்-நின் கேள்வர் ஒரு பக்கமோ,
|
|
|
|
அறைகின்ற நான் மறையின் அடியோ முடியோ, அமுதம்
|
|
|
|
நிறைகின்ற வெண் திங்களோ, கஞ்சமோ, எந்தன் நெஞ்சகமோ,
|
|
|
|
மறைகின்ற வாரிதியோ?- பூரணாசல மங்கலையே. |
|
|
|
|
|
என்றும் பூரணமாய் விளங்குகின்ற அபிராமி அன்னையே! நீ
|
|
வீற்றிருக்கும் திருக்கோயில் நின் கொழுநராகிய சிவபெருமானின்
|
|
ஒரு பாகமோ? அன்றி, ஓதப்படுகின்ற நான்கு வேதங்களின் ஆதியோ?
|
|
அந்தமோ? அன்றியும், அமிர்தம் போன்ற குளிர்ந்த முழுச்சந்திரனேயன்றி
|
|
வெண் தாமரையோ? இல்லை, என்னுடைய நெஞ்சம்தானேயோ
|
|
அல்லது செல்வமெல்லாம் மறைந்திருகக் கூடிய பாற் கடலோ?
|
|
தாயே! நீ எங்கும் நிறைந்திருப்பதால் எதில் என்று தோன்றவில்லையே!
|
|
|
|
|
|
21: மங்கலை, செங்கலசம் முலையாள், மலையாள், வருணச்
|
|
|
|
சங்கு அலை செங்கைச் சகல கலாமயில் தாவு கங்கை
|
|
|
|
பொங்கு அலை தங்கும் புரிசடையோன் புடையாள், உடையாள்
|
|
|
|
பிங்கலை, நீலி, செய்யாள், வெளியாள், பசும் பெண்கொடியே. |
|
|
|
|
|
அம்மா அபிராமி! என்றும் பசுமையான பெண் கொடியாக விளங்குபவளே!
|
|
என்றும் சுமங்கலியே! செங்கலசம் போன்ற தனங்களையுடையவளே!
|
|
உயர்ந்த மலையிலே உதித்தவளே! வெண்மையான சங்கு வளையல்களை
|
|
அணியும் செம்மையான கரங்களையுடையவளே! சகல கலைகளும்
|
|
உணர்ந்த மயில் போன்றவளே! பாய்கின்ற கங்கையை, நுரை கடலைத்
|
|
தன் முடியிலே தரித்த சிவபெருமானின் ஒரு பாதி ஆனவளே! என்றும்
|
|
பக்தர்களையுடையவளே! பொன் நிறமுடையவளே! கருநிறமுடைய
|
|
நீலியே! சிவந்த மேனியாகவும் விளங்குகின்றவளே!
|
|
|
|
|
|
22: கொடியே, இளவஞ்சிக் கொம்பே, எனக்கு வம்பே பழுத்த
|
|
|
|
படியே மறையின் பரிமளமே, பனி மால் இமயப்
|
|
|
|
பிடியே, பிரமன் முதலாய தேவரைப் பெற்ற அம்மே.
|
|
|
|
அடியேன் இறந்து இங்கு இனிப் பிறவாமல் வந்து ஆண்டு கொள்ளே. |
|
|
|
|
|
கொடியானவளே! இளமையான வஞ்சிப் பொற் கொம்பே! தகுதியற்ற
|
|
எனக்குத் தானே முன் வந்து அருளளித்த கனியே! மணம் பரப்பும்
|
|
வேத முதற் பொருளே! பனி உருகும் இமயத்தில் தோன்றிய பெண்
|
|
யானை போன்றவளே! பிரம்மன் முதலாகிய தேவர்களைப் பெற்றெடுத்த
|
|
தாயே! அடியேன் இப்பிறவியில் இறந்தபின், மீண்டும் பிறவாமல்
|
|
தடுத்தாட் கொள்ள வேண்டும்.
|
|
|
|
|
|
23: கொள்ளேன், மனத்தில் நின் கோலம் அல்லாது, அன்பர் கூட்டந்தன்னை
|
|
|
|
விள்ளேன், பரசமயம் விரும்பேன், வியன் மூவுலகுக்கு
|
|
|
|
உள்ளே, அனைத்தினுக்கும் புறம்பே, உள்ளத்தே விளைந்த
|
|
|
|
கள்ளே, களிக்குங்களியே, அளிய என் கண்மணியே. |
|
|
|
|
|
அபிராமித் தாயே! நின்னுடைய கோலமில்லாத வேறொரு தெய்வத்தை
|
|
மனத்தில் கொள்ளேன். நின்னுடைய அடியார்கள் கூட்டத்தைப்
|
|
பகைத்துக் கொள்ள மாட்டேன். உன்னையன்றி பிற சமயங்களை
|
|
விரும்ப மாட்டேன். மூன்றுலகங்கட்கு (மண், விண், பாதாளம்) உள்ளேயும்,
|
|
யாவற்றினுக்கும் வெளியேயும் நிறைந்திருப்பவளே! எம்முடைய
|
|
உள்ளத்திலே ஆனந்தக் களிப்பை உண்டாக்கும் கள்ளே! ஆனந்தத்திற்கு
|
|
ஆனந்தமானவளே! எளியேனாகிய எனக்கும் அருள் பாலித்த என்
|
|
கண்மணி போன்றவளே!
|
|
|
|
|
|
24: மணியே, மணியின் ஒளியே, ஒளிரும் மணி புனைந்த
|
|
|
|
அணியே, அணியும் அணிக்கு அழகே, அணுகாதவர்க்குப்
|
|
|
|
பிணியே, பிணிக்கு மருந்தே, அமரர் பெரு விருந்தே.-
|
|
|
|
பணியேன், ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்தபின்னே. |
|
|
|
|
|
அபிராமித்தாயே! மணியாக விளங்குபவளே! அம் மணியில் உண்டாகும்
|
|
ஒளியாகவும் விளங்குபவளே! ஒளி பொருந்திய நவமணிகளால்
|
|
இழைக்கப்பட்ட அணியாகவும், அந்த அணிக்கு அழகாகவும்
|
|
திகழ்பவளே! நின்னை அணுகாதவர்க்குப் பிணியென நிற்பவளே!
|
|
நின்னை அண்டிவரும் பாபாத்துமாக்களின் பிணிக்கு மருந்தாகவும்
|
|
நிற்பவளே! தேவர்களுக்கு பெரும் விருந்தாய்த் தோன்றும் அன்னையே!
|
|
நின் அழகிய தாமரை போலுள்ள சேவடியைப் பணிந்த பின்னே,
|
|
வேறொரு தெய்வத்தை வணங்க மனத்தாலும் நினையேன்.
|
|
|
|
|
|
25: பின்னே திரிந்து, உன் அடியாரைப் பேணி, பிறப்பு அறுக்க,
|
|
|
|
முன்னே தவங்கள் முயன்று கொண்டேன்,- முதல் மூவருக்கும்
|
|
|
|
அன்னே. உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே.-
|
|
|
|
என்னே?-இனி உன்னை யான் மறவாமல் நின்று ஏத்துவனே. |
|
|
|
|
|
அம்மையே! மும்மூர்த்திகளின் தாயாக விளங்குபவளே! மூவுலகத்திற்கும்
|
|
கிடைத்த அருமருந்தே! இனி நான் பிறவாமல் இருக்க, முன்னதாகவே
|
|
தவங்கள் பல முயன்று செய்து கொண்டேன். அதற்காகவே நின்
|
|
அடியார்கள் பின் திரிந்து அவர்களுக்குப் பணி செய்து வருகின்றேன்.
|
|
அம்மா! அபிராமித்தாயே! நான் முன் செய்த தவப் பயனே, இப்பிறவியில்
|
|
உன்னை மறவாமல் நல்வழி நின்று வணங்குகின்றேன். இன்னும்
|
|
வணங்கிக் கொண்டேயிருப்பேன்.
|
|
|
|
|
|
|
|
26: ஏத்தும் அடியவர், ஈரேழ் உலகினையும் படைத்தும்
|
|
|
|
காத்தும் அழித்தும் திரிபவராம்,- கமழ்பூங்கடம்பு
|
|
|
|
சாத்தும் குழல் அணங்கே.- மணம் நாறும் நின் தாளிணைக்கு என்
|
|
|
|
நாத் தங்கு புன்மொழி ஏறியவாறு, நகையுடைத்தே. |
|
|
|
|
|
பதினான்கு உலகினையும் முறையாகப் படைத்தும், காத்தும்,
|
|
அழித்தும் தொழில் புரியும் தேவாதி தேவர்கள் முறையே பிரம்மா,
|
|
விஷ்ணு, சிவன் என்னும் மும்மூர்த்திகளாவார்கள். இம் மும்மூர்த்திகளும்
|
|
போற்றி வணங்கக்கூடிய அன்னை, அபிராமியேயாகும். இத்துணை
|
|
பெருமையும், மணம் வீசுகின்ற கடம்ப மாலையையும் அணிந்தவளாகிய
|
|
ஆரணங்கே! மணம் வீசுகின்ற நின் இணையடிகளில், எளியேனாகிய
|
|
என்னுடைய நாவினின்று தோன்றிய வார்த்தைகளைச் (அபிராமி அந்தாதி)
|
|
சாத்துகின்றேன். அவ்வாறு நின் திருவடியில் என் பாடல்
|
|
ஏற்றம் பெற்றிருப்பது, எனக்கே நகைப்பை விளைவிக்கின்றது.
|
|
|
|
|
|
27: உடைத்தனை வஞ்சப் பிறவியை, உள்ளம் உருகும் அன்பு
|
|
|
|
படைத்தனை, பத்ம பதயுகம் சூடும் பணி எனக்கே
|
|
|
|
அடைத்தனை, நெஞ்சத்து அழுக்கையெல்லாம் நின் அருட்புனலால்
|
|
|
|
துடைத்தனை,- சுந்தரி - நின் அருள் ஏதென்று சொல்லுவதே. |
|
|
|
|
|
அபிராமி அன்னையே! நான் அகத்தே கொண்டிருந்த ஆணவம்,
|
|
கன்மம், மாயை என்கிற பொய் ஜாலங்களை உடைத்தெறிந்தாய்.
|
|
பக்திக்கனல் வீசும் அன்பான உள்ளத்தினை அளித்தாய். இந்த
|
|
யுகத்தில் நின் தாமரை போலும் சேவடிக்குப் பணி செய்ய எனக்கு
|
|
அருள் புரிந்தாய். என் நெஞ்சத்திலேயிருந்த அழுக்கையெல்லாம்
|
|
துப்புரவாக உன்னுடைய அருள் வெள்ளத்தால் துடைத்தாய். பேரழகு
|
|
வடிவே! நின் அருளை எப்படி நான் வாய்விட்டு உரைப்பேன்!
|
|
|
|
|
|
28: சொல்லும் பொருளும் என, நடம் ஆடும் துணைவருடன்
|
|
|
|
புல்லும் பரிமளப் பூங்கொடியே. நின் புதுமலர்த் தாள்
|
|
|
|
அல்லும் பகலும் தொழுமவர்க்கே அழியா அரசும்
|
|
|
|
செல்லும் தவநெறியும், சிவலோகமும் சித்திக்குமே. |
|
|
|
|
|
தூய்மையான சொல்லோடு இணைந்த பொருள் போல ஆனந்தக்
|
|
கூத்தாடும் துணைவருடன் இணைந்து நிற்கும் மணம் வீசுகின்ற
|
|
அழகிய பூங்கொடி போன்றவளே! அன்றலர்ந்த பரிமள மலரைப்
|
|
போல உள்ள உன் திருவடிகளை இரவென்றும், பகலென்றும்
|
|
பாரமால் தொழுகின்ற அடியார் கூட்டத்திற்கே என்றும் அழியாத
|
|
அரச போகமும், நல்ல மோட்சத்திற்கான தவநெறியும், சிவபதமும்
|
|
வாய்க்கும்.
|
|
|
|
|
|
29: சித்தியும் சித்தி தரும் தெய்வம் ஆகித் திகழும் பரா
|
|
|
|
சக்தியும், சக்தி தழைக்கும் சிவமும், தவம் முயல்வார்
|
|
|
|
முத்தியும், முத்திக்கு வித்தும், வித்து ஆகி முளைத்து எழுந்த
|
|
|
|
புத்தியும், புத்தியினுள்ளே புரக்கும் புரத்தை அன்றே. |
|
|
|
|
|
அபிராமித் தேவி! நீயே சகலத்திற்கும் சித்தியாவாய். அச்சித்தியைத்
|
|
தரும் தெய்வமான ஆதி சக்தியாகவும் திகழ்கின்றாய். பராசக்தியாகிய
|
|
நீ கிளைத்தெழக் காரணமான பரமசிவமும், அச்சிவத்தைக் குறித்துத்
|
|
தவம் செய்யும் முனிவர்களுக்கு முக்தியும், அம் முக்தியால் ஏற்படுகின்ற
|
|
விதையும், அவ்விதையில் ஏற்பட்ட ஞானமும், ஞானத்தின் உட்பொருளும், என் நின்று,
|
|
சகல பந்தங்களினின்று, காக்கக்கூடிய தெய்வம் திரிபுர சுந்தரியாகிய உன்னைத் தவிர வேறு யார் உளர்?
|
|
|
|
|
|
30: அன்றே தடுத்து என்னை ஆண்டுகொண்டாய், கொண்டது அல்ல என்கை
|
|
|
|
நன்றே உனக்கு? இனி நான் என் செயினும் நடுக்கடலுள்
|
|
|
|
சென்றே விழினும், கரையேற்றுகை நின் திருவுளமோ.-
|
|
|
|
ஒன்றே, பல உருவே, அருவே, என் உமையவளே. |
|
|
|
|
|
அபிராமி அன்னையே! என் உமையவளே! நான் பாவங்களைச்
|
|
செய்வதற்கு முன்பே என்னை தடுத்தாட் கொண்டவளே! நான்
|
|
பாவங்களையே செய்தாலும், நடுக்கடலில் சென்று வீழ்ந்தாலும்,
|
|
அதனின்று காப்பது நின் கடைமையாகும். என்னை ஈடேற்ற
|
|
முடியாது என்று சொன்னால் நன்றாகாது. இனி உன் திருவுளம்தான்
|
|
என்னைக் கரை ஏற்ற வேண்டும் (பந்தபாசக் கடலில் இருந்து
|
|
முக்திக் கரை ஏற்றுதல்). ஒன்றாகவும், பலவாகவும், விளங்குகின்ற
|
|
என் உமையவளே!
|
|
|
|
|
|
31: உமையும் உமையொருபாகனும், ஏக உருவில் வந்து இங்கு
|
|
|
|
எமையும் தமக்கு அன்பு செய்யவைத்தார், இனி எண்ணுதற்குச்
|
|
|
|
சமையங்களும் இல்லை, ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை,
|
|
|
|
அமையும் அமையுறு தோளியர்மேல் வைத்த ஆசையுமே. |
|
|
|
|
|
அபிராமித் தேவியே! நீயும், உன்னைப் பாகமாகவுடைய எம்பிரானும்,
|
|
ஆண்பாதி, பெண்பாதி என்ற நிலையில் காட்சியளித்ததோடு
|
|
அல்லாமல், என்னை உங்களுக்குத் தொண்டு செய்யும்படியாகவும்
|
|
அருள்புரிந்தீர்கள். ஆகவே எனக்கன்றி இனிச் சிந்திப்பதற்கு
|
|
ஒரு மதமும் இல்லை. என்னை ஈன்றெடுக்க ஒரு தாயும் இல்லை.
|
|
வேய் (மூங்கில்) போன்ற தோளையுடைய பெண்ணின் மேல் வைத்த
|
|
ஆசையும் இல்லாமல் ஒழிந்தது.
|
|
|
|
|
|
32: ஆசைக் கடலில் அகப்பட்டு, அருளற்ற அந்தகன் கைப்
|
|
|
|
பாசத்தில் அல்லற்பட இருந்தேனை, நின் பாதம் என்னும்
|
|
|
|
வாசக் கமலம் தலைமேல் வலிய வைத்து, ஆண்டு கொண்ட
|
|
|
|
நேசத்தை என் சொல்லுவேன்?- ஈசர் பாகத்து நேரிழையே. |
|
|
|
|
|
அபிராமித்தாயே! எந்தன் ஈசன் இடப்பாகத்தில் தானொரு பகுதியாக
|
|
அமைந்தவளே! அம்மா! நான் கொடிய ஆசையென்னும் துயரக்
|
|
கடலில் மூழ்கி இரக்கமற்ற எமனின் பாச வலையில் சிக்கியிருந்தேன்.
|
|
அத் தருணத்தில் பாவியாகிய என்னை மணம் பொருந்திய உன்னுடைய
|
|
பாதத் தாமரையே வலிய வந்து என்னை ஆட்கொண்டது! தாயே!
|
|
நின் அரும்பெரும் கருணையை என்னென்று உரைப்பேன்!
|
|
|
|
|
|
33: இழைக்கும் வினைவழியே அடும் காலன், எனை நடுங்க
|
|
|
|
அழைக்கும் பொழுது வந்து, அஞ்சல் என்பாய். அத்தர் சித்தம் எல்லாம்
|
|
|
|
குழைக்கும் களபக் குவிமுலை யாமளைக் கோமளமே.
|
|
|
|
உழைக்கும் பொழுது, உன்னையே அன்னையே என்பன் ஓடிவந்தே |
|
|
|
|
|
தாயே! அபிராமியே! நான் செய்த தீய வழிகளுக்காக என்னை
|
|
நெருங்குகின்ற எமன் என்னைத் துன்புறுத்தி, வதைக்கும் பொழுது,
|
|
தாயே உன்னை அழைக்க, அஞ்சேல் என ஓடிவந்து காப்பவளே!
|
|
சிவ பெருமானின் சித்தத்தையெல்லாம் குழையச் செய்கின்ற
|
|
சந்தனம் பூசிய குவிந்த முலைகளையுடைய இளமையான கோமளவல்லித் தாயே!
|
|
மரண வேதனையில் நான் துன்புறும் போது உன்னை,
|
|
'அன்னையே' என்பேன். ஓடிவந்து என்னைக் காத்தருள்வாய்!
|
|
|
|
|
|
34: வந்தே சரணம் புகும் அடியாருக்கு, வானுலகம்
|
|
|
|
தந்தே பரிவொடு தான் போய் இருக்கும்--சதுர்முகமும்,
|
|
|
|
பைந் தேன் அலங்கல் பரு மணி ஆகமும், பாகமும், பொற்
|
|
|
|
செந் தேன் மலரும், அலர் கதிர் ஞாயிறும், திங்களுமே. |
|
|
|
|
|
தாயே! அபிராமி, நீ நான்முகங்களையுடைய பிரம்மனின் படைப்புத் தொழிலில் இருக்கின்றாய்!
|
|
பசுமையான தேன் கலந்த துபள மாலையையும், நவமணி மாலைகளையும் அணிந்த மார்பினனாகிய
|
|
திருமாலின் மார்பில் இருக்கின்றாய்! சிவபெருமானின் இடப்பாகத்திலும், பொன் தாமரை மலரிலும்,
|
|
விரிந்த கதிர்களுடைய சூரியனிடத்திலும், சந்திரனிடத்தும் தங்கியிருக்கின்றாய். உன்னைச் சரணமென்று
|
|
வந்தடையும் பக்தர்களைத் துயரங்களிலிருந்து நீக்கி, வானுலக வாழ்வைக் கொடுப்பவள் நீயே.
|
|
|
|
|
|
35: திங்கட் பகவின் மணம் நாறும் சீறடி சென்னி வைக்க
|
|
|
|
எங்கட்கு ஒரு தவம் எய்தியவா, எண் இறந்த விண்ணோர்--
|
|
|
|
தங்கட்கும் இந்தத் தவம் எய்துமோ?- தரங்கக் கடலுள்
|
|
|
|
வெங் கண் பணி அணைமேல் துயில்கூரும் விழுப்பொருளே. |
|
|
|
|
|
அன்னையே! அபிராமியே! திருப்பாற்கடலிற் சிவந்த கண்களையுடை
|
|
பாம்புப் படுக்கையில் வைஷ்ணவி என்னும் பெயரால் அறிதுயில்
|
|
அமர்ந்தவளே! பிறைச் சந்திரனின் மணம் பொருந்திய அழகிய
|
|
பாதங்களை எம்மேல் வைக்க நாங்கள் செய்த தவம்தான் என்னவோ!
|
|
விண்ணுலகத் தேவர்களுக்கும் இந்தப் பாக்கியம் கிட்டுமோ!
|
|
|
|
|
|
36: பொருளே, பொருள் முடிக்கும் போகமே, அரும் போகம் செய்யும்
|
|
|
|
மருளே, மருளில் வரும் தெருளே, என் மனத்து வஞ்சத்து
|
|
|
|
இருள் ஏதும் இன்றி ஒளி வெளி ஆகி இருக்கும் உன்தன்
|
|
|
|
அருள் ஏது.- அறிகின்றிலேன், அம்புயாதனத்து அம்பிகையே. |
|
|
|
|
|
குவிந்த தனங்களையுடைய அபிராமியே! நீ பொருளாக
|
|
இருக்கின்றாய் என்கிறார்கள். பிறகு அப்பொருளால் நுகரப்படும்
|
|
போகமும் நீயே என்கிறார்கள். பிறகு அப்போகத்தால் ஏற்படுகின்ற
|
|
மாயையாகவும் இருக்கின்றாய் என்றும், அம்மாயையில் தோன்றி
|
|
விளங்கும் தெளிவாகவும் விளங்குகின்றாய் என்றும் கூறுகின்றார்கள்;
|
|
இவ்வாறு பல கூறுபாடுகளாகவுள்ள நீயே என் மனத்தில் அஞ்ஞான
|
|
மாயை அகற்றி தூய ஞான ஒளியை ஏற்றியிருக்கின்றாய். பரவொளியாய்
|
|
விளங்கும் அபிராமியே! நின் திருவருளின் மகிமையை உணர
|
|
மாட்டாது மயங்குகின்றேன்.
|
|
|
|
|
|
37: கைக்கே அணிவது கன்னலும் பூவும், கமலம் அன்ன
|
|
|
|
மெய்க்கே அணிவது வெண் முத்துமாலை, விட அரவின்
|
|
|
|
பைக்கே அணிவது பண்மணிக் கோவையும், பட்டும், எட்டுத்
|
|
|
|
திக்கே அணியும் திரு உடையானிடம் சேர்பவளே. |
|
|
|
|
|
என் அபிராமி அன்னையே! நின் அருட் கரங்களில் அணிவது
|
|
இனிய கரும்பும், மலர்க் கொத்துமாகும். தாமரை மலரைப் போன்ற
|
|
மேனியில் அணிந்து கொள்வது, வெண்மையான நன்முத்து
|
|
மாலையாகும். கொடிய பாம்பின் படம் போல் உள்ள அல்குலைக்
|
|
கொண்ட இடையில் அணிவது பலவித நவமணிகளால் செய்யப்பட்ட
|
|
மேகலையும் பட்டுமேயாகும். அனைத்துச் செல்வங்களுக்கும்
|
|
தலைவனாகிய எம்பெருமான் எட்டுத் திசைகளையுமே ஆடையாகக்
|
|
கொண்டுள்ளான். அப்படிப்பட்ட எம்பிரானின் இடப்பாகத்தில்
|
|
பொலிந்து தோன்றுகின்றாய் நீ!
|
|
|
|
|
|
38: பவளக் கொடியில் பழுத்த செவ்வாயும், பனிமுறுவல்
|
|
|
|
தவளத் திரு நகையும் துணையா, எங்கள் சங்கரனைத்
|
|
|
|
துவளப் பொருது, துடியிடை சாய்க்கும் துணை முலையாள்--
|
|
|
|
அவளைப் பணிமின் கண்டீர், அமராவதி ஆளுகைக்கே. |
|
|
|
|
|
என் அன்னை அபிராமி பவளக்கொடி போலும் சிவந்த வாயை
|
|
உடையவள். குளிர்ச்சி தரும் முத்துப்பல் சிரிப்பழகி, அது மட்டுமா?
|
|
எம் ஈசன் சங்கரனின் தவத்தைக் குலைத்தவள். எப்படி? உடுக்கை
|
|
போலும் இடை நோகும்படியுள்ள இணைந்த முலைகளால்!
|
|
அப்படிப்பட்டவளைப் பணிந்தால் தேவர் உலகமே கிடைக்கும்.
|
|
ஆகவே அவளைப் பணியுங்கள்.
|
|
|
|
|
|
|
|
39: ஆளுகைக்கு, உன்தன் அடித்தாமரைகள் உண்டு, அந்தகன்பால்
|
|
|
|
மீளுகைக்கு, உன்தன் விழியின் கடை உண்டு, மேல் இவற்றின்
|
|
|
|
மூளுகைக்கு, என் குறை, நின் குறையே அன்று,-முப்புரங்கள்.
|
|
|
|
மாளுகைக்கு, அம்பு தொடுத்த வில்லான், பங்கில் வாணுதலே. |
|
|
|
|
|
அபிராமி! நின் திருவடித் தாமரைகள் இருக்கின்றன. அவற்றிற்கு
|
|
என்னை ஆளும் அருள் உண்டு. உன்னுடைய கடைக்கண்
|
|
கருணையுண்டு. ஆகையால் எமனிடத்திலிருந்து எனக்கு
|
|
மீட்சியுண்டு. நான் உன்னை முயன்று வணங்கினால் பயன் உண்டு.
|
|
வணங்காவிடின் அது என் குறையே; உன் குறையன்று. அழகிய
|
|
நெற்றியை உடையவளே! முப்புரத்தை அழிக்க வில்லையும்
|
|
அம்பையும் எடுத்த சிவபெருமானின் இடப்பாகத்தில் அமர்ந்தவளே!
|
|
அபிராமியே!
|
|
|
|
|
|
40: வாள்-நுதல் கண்ணியை, விண்ணவர் யாவரும் வந்து இறைஞ்சிப்
|
|
|
|
பேணுதற்கு எண்ணிய எம்பெருமாட்டியை, பேதை நெஞ்சில்
|
|
|
|
காணுதற்கு அண்ணியள் அல்லாத கன்னியை, காணும்--அன்பு
|
|
|
|
பூணுதற்கு எண்ணிய எண்ணம் அன்றோ, முன் செய் புண்ணியமே. |
|
|
|
|
|
ஒளி பொருந்திய நெற்றியுடையவள் அபிராமி! தேவர்களும் வணங்க
|
|
வேண்டும் என்ற நினைப்பை உண்டு பண்ணக்கூடியவள்! அறியாமை
|
|
நிறைந்த நெஞ்சுடையார்க்கு எளிதில் புலப்படாதவள். என்றும்
|
|
கன்னியானவள். இப்படிப்பட்டவளை நான் அண்டிக் கொண்டு
|
|
வணங்க எண்ணினேன். இதுவே நான் முற்பிறவிகளில் செய்த
|
|
புண்ணியமாகும்.
|
|
|
|
|
|
41: புண்ணியம் செய்தனமே-மனமே.- புதுப் பூங் குவளைக்
|
|
|
|
கண்ணியும் செய்ய கணவரும் கூடி, நம் காரணத்தால்
|
|
|
|
நண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடு இருக்கப்
|
|
|
|
பண்ணி, நம் சென்னியின் மேல் பத்ம பாதம் பதித்திடவே. |
|
|
|
|
|
அபிராமி, புதிதாக மலர்ந்த குவளைக் கண்களையுடையவள்.
|
|
அவள் கணவரோ சிவந்த திருமேனியையுடைய சிவபெருமான்.
|
|
அவர்களிருவரும் இங்கே கூடிவந்து அடியார்களாகிய நம்மைக்
|
|
கூட்டினார்கள். அத்துடன் நம்முடைய தலைகளை அவர்களுடைய
|
|
திருப்பாதங்களின் சின்னமாகச் சேர்த்துக் கொண்டார்கள்.
|
|
அவர்களின் அருளுக்கு நாம் புண்ணியமே செய்திருக்கிறோம்.
|
|
|
|
|
|
|
|
42: இடங்கொண்டு விம்மி, இணைகொண்டு இறுகி, இளகி, முத்து
|
|
|
|
வடங்கொண்ட கொங்கை-மலைகொண்டு இறைவர் வலிய நெஞ்சை
|
|
|
|
நடங்கொண்ட கொள்கை நலம் கொண்ட நாயகி, நல் அரவின்
|
|
|
|
வடம் கொண்ட அல்குல் பணிமொழி--வேதப் பரிபுரையே. |
|
|
|
|
|
அம்மையே! ஒளிவீசும் முத்துமாலை உன்னுடைய தனங்களில்
|
|
புரள்கின்றது. உம்முடைய தனங்களோ ஒன்றுக்கொன்று இடமின்றி
|
|
பருத்து மதர்த்திருக்கின்றது. இந்தக் கொங்கையாகிய மலை
|
|
சிவபெருமானின் வலிமை பொருந்திய மனத்தை ஆட்டுவிக்கின்றது.
|
|
அபிராமி சுந்தரியே! நல்ல பாம்பின் படம் போன்ற அல்குலை
|
|
உடையவளே! குளிர்ச்சியான மொழிகளையுடையவளே! வேதச்
|
|
சிலம்புகளைத் திருவடிகளில் அணிந்து கொண்டவளே! தாயே!
|
|
|
|
|
|
43: பரிபுரச் சீறடிப் பாசாங்குசை, பஞ்சபாணி, இன்சொல்
|
|
|
|
திரிபுர சுந்தரி, சிந்துர மேனியள் தீமை நெஞ்சில்
|
|
|
|
புரிபுர, வஞ்சரை அஞ்சக் குனி பொருப்புச்சிலைக் கை,
|
|
|
|
எரி புரை மேனி, இறைவர் செம்பாகத்து இருந்தவளே. |
|
|
|
|
|
சிலம்பணிந்த அழகிய பாதங்களை உடையவளே! பாசத்தையும்
|
|
அங்குசத்தையும் உடையவளே! பஞ்ச பாணங்களையும், இனிமையான
|
|
சொல்லையுமுடைய திரிபுர சுந்தரியே! சிவந்த சிந்தூர மேனி
|
|
உடையவளே! கொடிய மனத்தையுடைய முப்புரத்தை ஆண்ட
|
|
அசுரரை அஞ்சி நடுங்கும்படி முப்புரத்தை அழித்த சிவபெருமானின்
|
|
இடப்பாகத்தில் அமர்ந்தவளே!
|
|
|
|
|
|
|
|
44: தவளே இவள், எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம்
|
|
|
|
அவளே, அவர்தமக்கு அன்னையும் ஆயினள், ஆகையினால்,
|
|
|
|
இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியும் ஆம்,
|
|
|
|
துவளேன், இனி ஒரு தெய்வம் உண்டாக மெய்த் தொண்டு செய்தே. |
|
|
|
|
|
எங்கள் இறைவனாகிய சங்கரனின் இல்லத் துணைவியே!
|
|
அவருக்கே அன்னையாகவும் (பராசக்தி ஈன்ற பரமசிவம்)
|
|
ஆனவளே! ஆகையால் நீயே யாவர்க்கும் மேலானவள்! ஆகவே,
|
|
உனக்கே இனி உண்மையான தொண்டு செய்வேன். ஆதலால்,
|
|
இனி நான் துன்பங்களால் துவள மாட்டேன். தாயே!
|
|
|
|
|
|
45: தொண்டு செய்யாதுநின் பாதம் தொழாது, துணிந்து இச்சையே
|
|
|
|
பண்டு செய்தார் உளரோ, இலரோ? அப் பரிசு அடியேன்
|
|
|
|
கண்டு செய்தால் அது கைதவமோ, அன்றிச் செய்தவமோ?
|
|
|
|
மிண்டு செய்தாலும் பொறுக்கை நன்றே, பின் வெறுக்கை அன்றே. |
|
|
|
|
|
அன்னையே! உனக்கு பணிவிடை செய்யாமல், உன் பாதங்களை
|
|
வணங்காமல், தன் இச்சைப்படியே கடமையைச் செய்த ஞானிகளும்
|
|
உளர். அவர்களின்படி நான் நடந்தால் நீ வெறுப்பாயோ, அல்லது
|
|
பொறுத்து அருள் செய்வாயோ, எனக்குத் தெரியாது! ஆயினும்,
|
|
நான் தவறே செய்தாலும், என்னை வெறுக்காமல் பொறுத்துக்
|
|
கொண்டு நீ அருள் பண்ணுவதே நீதியாகும்.
|
|
|
|
|
|
46: வெறுக்கும் தகைமைகள் செய்யினும், தம் அடியாரை மிக்கோர்
|
|
|
|
பொறுக்கும் தகைமை புதியது அன்றே,-புது நஞ்சை உண்டு
|
|
|
|
கறுக்கும் திருமிடற்றான் இடப்பாகம் கலந்த பொன்னே.-
|
|
|
|
மறுக்கும் தகைமைகள் செய்யினும், யானுன்னை வாழ்த்துவனே. |
|
|
|
|
|
ஏ அபிராமியே! விஷத்தை உண்டவனும், அதனால் கருத்திருக்கும்
|
|
கழுத்தை உடையவனுமாகிய சிவபெருமானின் இடப்பாகத்தில்
|
|
அமர்ந்தவளே! சிறியோர்கள் செய்யக்கூடாத செயல்களைச் செய்து
|
|
விடுவர். அறிவிற் சிறந்த ஞானிகள் அதைப் பொறுத்து அருளியதும்
|
|
உண்டு. இது ஒன்றும் புதுமையல்ல. பொன் போன்றவளே! நான்
|
|
தகாத வழியில் சென்றாலும், அது உனக்கே வெறுப்பாகயிருந்தாலும்
|
|
மீண்டும் மீண்டும் உன்னையே சரணடைவேன். அத்துடன் மேலும்
|
|
வாழ்த்தி வழிபடுவேன்.
|
|
|
|
|
|
47: வாழும்படி ஒன்று கண்டு கொண்டேன், மனத்தே ஒருவர்
|
|
|
|
வீழும்படி அன்று, விள்ளும்படி அன்று, வேலை நிலம்
|
|
|
|
ஏழும் பரு வரை எட்டும், எட்டாமல் இரவு பகல்
|
|
|
|
சூழும் சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்றதே. |
|
|
|
|
|
அன்னையே!அபிராமித் தாயே! நீ கடல்களுக்கும் ஏழ் உலகங்களுக்கும்,
|
|
உயர்ந்த மலைகள் எட்டினிற்கும் அரிதில் எட்டாதவள். மேலாக உள்ள
|
|
இரவையும், பகலையும் செய்யும் சந்திர சூரியர்க்கு இடையே நின்று,
|
|
சுடர்விட்டுப் பிராகாசிக்கின்றவள்!
|
|
|
|
|
|
48: சுடரும் கலைமதி துன்றும் சடைமுடிக் குன்றில் ஒன்றிப்
|
|
|
|
படரும் பரிமளப் பச்சைக் கொடியைப் பதித்து நெஞ்சில்
|
|
|
|
இடரும் தவிர்த்து இமைப்போது இருப்பார், பின்னும் எய்துவரோ-
|
|
|
|
குடரும் கொழுவும் குருதியும் தோயும் குரம்பையிலே. |
|
|
|
|
|
ஏ அபிராமியே! பச்சைப் பரிமளக் கொடி நீயேயாகும். ஒளிரும் இளம்
|
|
பிறையை, குன்றை ஒத்த சடாமுடியில் அணிந்திருக்கும் சிவபெருமானை
|
|
இணைந்தவளே! உன்னையே நெஞ்சில் நினைந்து வழிபடும் யோகிகளூம்,
|
|
இமையாது கடுந்தவம் புரியும் ஞானிகளூம் மீண்டும் பிறப்பார்களோ?
|
|
மாட்டார்கள்! ஏனென்றால் தோலும், குடலும், இரத்தமும், இறைச்சியும்
|
|
கொண்ட இந்த மானிடப் பிறவியை விரும்பார், ஆதலின்!
|
|
|
|
|
|
49: குரம்பை அடுத்து குடிபுக்க ஆவி, வெங் கூற்றுக்கு இட்ட
|
|
|
|
வரம்பை அடுத்து மறுகும் அப்போது, வளைக்கை அமைத்து,
|
|
|
|
அரம்பை அடுத்து அரிவையர் சூழ வந்து, அஞ்சல் என்பாய்--
|
|
|
|
நரம்பை அடுத்து இசை வடிவாய் நின்ற நாயகியே. |
|
|
|
|
|
நரம்புக் கருவிகளைக் கொண்ட, இசையே வடிவாக உள்ள அபிராமியே!
|
|
அடியேனாகிய என்னுடைய உடலையும், அதிலே இணைந்த உயிரையும்
|
|
கொடுமையான எமன் வந்து பறிக்க, நானும் மரணத்திற்கு அஞ்சி வருந்துவேன்.
|
|
அப்பொழுது அரம்பையரும், தேவமகளிரும் சூழ என்னிடத்து வந்து அஞ்சேல்
|
|
என்பாய்! எனக்கு அருள் புரிவாய்!
|
|
|
|
|
|
50: நாயகி, நான்முகி, நாராயணி, கை நளின பஞ்ச
|
|
|
|
சாயகி, சாம்பவி, சங்கரி, சாமளை, சாதி நச்சு
|
|
|
|
வாய் அகி மாலினி, வாராகி, சூலினி, மாதங்கி என்று
|
|
|
|
ஆய கியாதியுடையாள் சரணம்-அரண் நமக்கே. |
|
|
|
|
|
ஏ அபிராமியே! நீயே உலக நாயகி. பிரம்ம சக்தியும், விஷ்ணு சக்தியும்
|
|
நீ. நீயே ஒய்யாரமாக ஐவகை மலர் அம்புகளைக் கையிலேந்தியவள்.
|
|
சம்புசக்தி, சங்கரி, எழிலுடையாள், நாகபாணி, மாலினி, உலகளிக்கும்
|
|
வராகி, சூலி, மாதங்க முனிமகள் என்றெல்லாம் பல வடிவானவள்!
|
|
நீயே ஆதியானவள். ஆகவே, உன்னுடைய திருவடியையே வணங்கினோம்.
|
|
அதுவே எமக்குப் பாதுகாவல்.
|
|
|
|
|
|
51: அரணம் பொருள் என்று, அருள் ஒன்று இலாத அசுரர் தங்கள்
|
|
|
|
முரண் அன்று அழிய முனிந்த பெம்மானும், முகுந்தனுமே,
|
|
|
|
சரணம் சரணம் என நின்ற நாயகி தன் அடியார்,
|
|
|
|
மரணம் பிறவி இரண்டும் எய்தார், இந்த வையகத்தே. |
|
|
|
|
|
திரிபுரத்தை நிலையென்று நினைத்த, தன்மையற்ற அசுரர்களை அழித்த
|
|
சிவபெருமானும், திருமாலும் வணங்கக்கூடிய அபிராமியே! அன்னையே!
|
|
உன்னையே சரணம் சரணம் என்று அண்டிய அடியார்களின் மரண
|
|
பயத்தை ஒழிப்பாய்! அது மட்டுமல்ல; அவர்களைப் பொய்மையான இந்த
|
|
உலக வாழ்வினின்றும் விடுவிப்பாய் (பிறப்பறுப்பாய்), பெருநிலை தருவாய்!
|
|
|
|
|
|
52: வையம், துரகம், மதகரி, மா மகுடம், சிவிகை
|
|
|
|
பெய்யும் கனகம், பெருவிலை ஆரம்,--பிறை முடித்த
|
|
|
|
ஐயன் திருமனையாள் அடித் தாமரைக்கு அன்பு முன்பு
|
|
|
|
செய்யும் தவமுடையார்க்கு உளவாகிய சின்னங்களே. |
|
|
|
|
|
ஏ, அபிராமி! உன்னிடம் அன்பு கொண்டு தவம் செய்யும் ஞானிகள் உன்
|
|
திருவடித் தாமரைகளையே வணங்குகிறார்கள். அத்திருவடிகளைக் கண்டுகொள்ள
|
|
அடையாளம் எதுவென்றால், பிறையணிந்த சிவபெருமானின் துணைவியே! கேள்:
|
|
வையம், தேர், குதிரை, யானை, உயர்ந்த மணிமுடிகள், பல்லக்குகள், கொட்டும்
|
|
பொன், உயர்ந்த முத்து மாலைகள் - இவையே நின் திருவடிச் சின்னம்!
|
|
|
|
|
|
53: சின்னஞ் சிறிய மருங்கினில் சாத்திய செய்ய பட்டும்
|
|
|
|
பென்னம் பெரிய முலையும், முத்தாரமும், பிச்சி மொய்த்த
|
|
|
|
கன்னங்கரிய குழலும், கண் மூன்றும், கருத்தில் வைத்துத்
|
|
|
|
தன்னந்தனி இருப்பார்க்கு, இது போலும் தவம் இல்லையே. |
|
|
|
|
|
ஏ, அபிராமி! மென்மையான இடையில், செம்மையான பட்டணிந்தவளே! அழகிய
|
|
பெரிய முலைகளில் முத்தாரம் அணிந்தவளே! வண்டுகள் மொய்க்கும் பிச்சிப்பூவைக்
|
|
கன்னங்கரிய குழலில் சூடியவளே! ஆகிய மூன்று திருக்கண்களை உடையவளே!
|
|
உன்னுடைய இந்த அழகையெல்லாம் கருத்திலே கொண்டு தியானித்திருக்கும்
|
|
அடியார்களுக்கு இதைவிடச் சிறந்த தவம் ஏதுமில்லை.
|
|
|
|
|
|
54: இல்லாமை சொல்லி, ஒருவர் தம்பால் சென்று, இழிவுபட்டு
|
|
|
|
நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல், நித்தம் நீடு தவம்
|
|
|
|
கல்லாமை கற்ற கயவர் தம்பால் ஒரு காலத்திலும்
|
|
|
|
செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே. |
|
|
|
|
|
ஏ, வறிஞர்களே! நீங்கள் வறுமையால் பாதிக்கப்பட்டு, ஒருவரிடத்திலே பொருளுக்காகச்
|
|
சென்று, அவர்கள் உங்களை இழிவு படுத்தாமல் இருக்க வேண்டுமா? என் பின்னே
|
|
வாருங்கள். முப்புர நாயகியின் பாதங்களையே சேருங்கள். தவத்தையே செய்யாத
|
|
பழக்கமுடைய கயவர்களிடத்திலிருந்து என்னைத் தடுத்தாட் கொண்டவள் அவளே!
|
|
|
|
|
|
55: மின் ஆயிரம் ஒரு மெய் வடிவு ஆகி விளங்குகின்றது
|
|
|
|
அன்னாள், அகம் மகிழ் ஆனந்தவல்லி, அருமறைக்கு
|
|
|
|
முன்னாய், நடு எங்கும் ஆய், முடிவு ஆய முதல்விதன்னை
|
|
|
|
உன்னாது ஒழியினும், உன்னினும், வேண்டுவது ஒன்று இல்லையே. |
|
|
|
|
|
அபிராமி! நீ ஆயிரம் மின்னல்கள் சேர்ந்தாற் போன்ற வடிவுடையவள்! தன்னுடைய
|
|
அடியவர்களுக்கு அகமகிழ்ச்சி தரக்கூடிய ஆனந்த வல்லி! அருமையான வேதத்திற்கு தொடக்கமாகவும்
|
|
நடுவாகவும், முடிவாகவும் விளங்கும் முதற் பொருளானவள்! உன்னை மானிடர் நினையாது
|
|
விட்டாலும், நினைத்திருந்தாலும், அதனால் உனக்கு ஆகக்கூடிய பொருள் ஒன்றும்
|
|
இல்லையே!
|
|
|
|
|
|
56: ஒன்றாய் அரும்பி, பலவாய் விரிந்து, இவ் உலகு எங்குமாய்
|
|
|
|
நின்றாள், அனைத்தையும் நீங்கி நிற்பாள்--என்றன், நெஞ்சினுள்ளே
|
|
|
|
பொன்றாது நின்று புரிகின்றவா. இப் பொருள் அறிவார்--
|
|
|
|
அன்று ஆலிலையில் துயின்ற பெம்மானும், என் ஐயனுமே. |
|
|
|
|
|
அபிராமி அன்னையே! நீ ஒன்றாக நின்று, பலவாகப் பிரிந்து, இவ்வுலகில் எங்கும் பரந்திருக்கின்றாய்
|
|
(பராசக்தியினின்று, பிரிந்த பல சக்திகள்). அவைகளிடத்திலிருந்து நீங்கியும், இருக்கக் கூடியவள் நீ!
|
|
ஆனால், எளியோனாகிய என் மனத்தில் மட்டும் இடையுறாது நீடு நின்று ஆட்சி செய்கின்றாய்.
|
|
இந்த இரகசியத்தின் உட்பொருளை அறியக் கூடியவர்கள், ஆலிலையில் துயிலும் திருமாலும்,
|
|
என் தந்தை சிவபெருமான் ஆகிய இருவருமே ஆவர்.
|
|
|
|
|
|
57: ஐயன் அளந்தபடி இரு நாழி கொண்டு, அண்டம் எல்லாம்
|
|
|
|
உய்ய அறம் செயும் உன்னையும் போற்றி, ஒருவர் தம்பால்
|
|
|
|
செய்ய பசுந்தமிழ்ப் பாமாலையும் கொண்டு சென்று, பொய்யும்
|
|
|
|
மெய்யும் இயம்பவைத்தாய்: இதுவோ, உன்தன் மெய்யருளே? |
|
|
|
|
|
ஏ, அபிராமி! என் தந்தை சிவபெருமான் அளந்த இரு நாழி நெல்லைக் கொண்டு முப்பத்திரண்டு
|
|
அறமும் செய்து உலகத்தைக் காத்தவளே! நீ எனக்கு அருளிய செந்தமிழால் உன்னையும் புகழ்ந்து
|
|
போற்ற அருளினாய்! அதே சமயத்தில் நின் தமிழால் ஒருவனிடத்திலே சென்று இருப்பதையும்,
|
|
இல்லாததையும் பாடும்படி வைக்கிறாய்! இதுவோ உனது மெய்யருள்? (விரைந்து அருள் புரிவாயாக!).
|
|
|
|
|
|
+'ஐயன் அளந்த படியிருநாழி' என்பது காஞ்சியில் ஏகாம்பரநாதர் நெல்லளந்ததைக் குறித்தது. அதனைப்
|
|
பெற்ற அபிராமி, காத்தலைச் செய்யும் காமாட்சியாகி, முப்பத்திரெண்டு அறங்களையும் புரிந்து, உலகைப்
|
|
புரந்தனள் என்பது வழக்கு.
|
|
|
|
|
|
58: அருணாம்புயத்தும், என் சித்தாம்புயத்தும் அமர்ந்திருக்கும்
|
|
|
|
தருணாம்புயமுலைத் தையல் நல்லாள், தகை சேர் நயனக்
|
|
|
|
கருணாம்புயமும், வதனாம்புயமும், கராம்புயமும்,
|
|
|
|
சரணாம்புயமும், அல்லால் கண்டிலேன், ஒரு தஞ்சமுமே. |
|
|
|
|
|
அபிராமி! வைகறையில் மலர்ந்த தாமரையினிடத்தும் என்னுடைய மனத்தாமரையிலும் வீற்றிருப்பவளே!
|
|
குவிந்த தாமரை மொக்குப் போன்ற திருமுலையுடைய தையலே! நல்லவளே! தகுதி வாய்ந்த கருணை
|
|
சேர்ந்த நின் கண் தாமரையும், முகத்தாமரையும், பாதத் தாமரையுமேயல்லாமல், வேறொரு புகலிடத்தை
|
|
நான் தஞ்சமாக அடைய மாட்டேன்.
|
|
|
|
|
|
59: தஞ்சம் பிறிது இல்லை ஈது அல்லது, என்று உன் தவநெறிக்கே
|
|
|
|
நெஞ்சம் பயில நினைக்கின்றிலேன், ஒற்றை நீள்சிலையும்
|
|
|
|
அஞ்சு அம்பும் இக்கு அலராகி நின்றாய்: அறியார் எனினும்
|
|
|
|
பஞ்சு அஞ்சு மெல் அடியார், அடியார் பெற்ற பாலரையே. |
|
|
|
|
|
அபிராமித் தாயே! நீண்ட கரும்பு வில்லையும், ஐவகை மலர் அம்புகளையும் கொண்டவளே! உன்னைத்
|
|
தவிர வேறொரு புகலிடம் இல்லையென்று தெரிந்தும், உன்னுடைய தவநெறிகளைப் பயிலாமலும், நெஞ்சத்தில்
|
|
நினையாமலும் இருக்கின்றேன். அதற்காக நீ என்னைத் தண்டிக்கக் கூடாது. புறக்கணிக்காமல் எனக்கு
|
|
அருள் பாலிக்க வேண்டும். உலகத்திலுள்ள பேதைகளாகிய பஞ்சும் நாணக்கூடிய மெல்லிய அடிகளை
|
|
உடைய பெண்கள் தாங்கள் பெற்ற குழந்தைகளைத் தண்டிக்க மாட்டார்கள் அல்லவா? அதே போன்றே
|
|
நீயும் எனக்கு அருள வேண்டும்.
|
|
|
|
|
|
60: பாலினும் சொல் இனியாய். பனி மா மலர்ப் பாதம் வைக்க--
|
|
|
|
மாலினும், தேவர் வணங்க நின்றோன் கொன்றை வார் சடையின்
|
|
|
|
மேலினும், கீழ்நின்று வேதங்கள் பாடும் மெய்ப் பீடம் ஒரு
|
|
|
|
நாலினும், சால நன்றோ--அடியேன் முடை நாய்த் தலையே? |
|
|
|
|
|
ஏ, அபிராமி! பாலைவிட இனிமையான சொல்லை உடையவளே! நீ உன்னுடைய திருவடித் தாமரையை,
|
|
திருமாலைக் காட்டிலும் உயர்ந்த தேவர்கள் வணங்கும் சிவபிரானின் கொன்றையனிந்த நீண்ட சடைமுடியில்
|
|
பதித்தாய். அடுத்துன் அருட்கண்கள் பட்டு உயர்ந்து நிற்கும் நால்வகை வேதத்திலே உன்னுடைய திருவடித்
|
|
தாமரைகளைப் பதித்தாய். ஆனால் இன்று நாற்றமுடைய நாயாகிய என்னுடைய தலையையும், உன்னுடைய
|
|
திருவடிகளில் சேர்த்துக் கொண்டாய். (மேற்கூறிய சிவபெருமான், நான்கு வேதங்களோடு என்னையும்
|
|
ஒப்பிட, நான் அவ்வளவு சிறந்தவனா?)
|
|
|
|
|
|
61: நாயேனையும் இங்கு ஒரு பொருளாக நயந்து வந்து,
|
|
|
|
நீயே நினைவின்றி ஆண்டு கொண்டாய், நின்னை உள்ளவண்ணம்
|
|
|
|
பேயேன் அறியும் அறிவு தந்தாய், என்ன பேறு பெற்றேன்.--
|
|
|
|
தாயே, மலைமகளே, செங்கண் மால் திருத் தங்கைச்சியே. |
|
|
|
|
|
தாயே! மலையரசர் மகளே! சிவந்த கண்களையுடைய திருமாலின் தங்கையே! நாயாகவுள்ள என்னையும்
|
|
இங்கே ஒரு பொருட்டாக மதித்து, நீயே, தன்னை மறந்து ஆட்கொண்டு விட்டாய்! அது மட்டுமல்லாமல்,
|
|
உன்னையே உள்ளபடியே அறிந்து கொள்ளும் அறிவையும் பேயேனாகிய எனக்குத் தந்தாய். நான்
|
|
பெறுதற்கரிய பேறல்லவோ பெற்றேன்!
|
|
|
|
|
|
62: தங்கச் சிலை கொண்டு, தானவர் முப்புரம் சாய்த்து, மத
|
|
|
|
வெங் கண் கரி உரி போர்த்த செஞ்சேவகன் மெய்யடையக்
|
|
|
|
கொங்கைக் குரும்பைக் குறியிட்ட நாயகி, கோகனகச்
|
|
|
|
செங் கைக் கரும்பும், மலரும், எப்போதும் என் சிந்தையதே. |
|
|
|
|
|
ஏ, அபிராமி! உன் கணவர் பொன் மலையை வில்லாகக் கொண்டு, முப்புரத்தை எரித்த, சிவந்த கண்களை
|
|
உடைய, யானைத்தோலைப் போர்த்திய சிறந்த காவலனாவான். அன்னவனின் திருமேனியையும்,
|
|
உன்னுடைய குரும்பையொத்த கொங்கையால் சோர்வடையச் செய்தவளே! பொன் போன்ற சிவந்த
|
|
கைகளில் கரும்பு வில்லோடும், மலர் அம்போடும், என் சிந்தையில் எப்போதும் உறைந்திருப்பாய்.
|
|
|
|
|
|
|
|
63: தேறும்படி சில ஏதுவும் காட்டி, முன் செல்கதிக்குக்
|
|
|
|
கூறும் பொருள், குன்றில் கொட்டும் தறி குறிக்கும்--சமயம்
|
|
|
|
ஆறும் தலைவி இவளாய் இருப்பது அறிந்திருந்தும்,
|
|
|
|
வேறும் சமயம் உண்டு என்று கொண்டாடிய வீணருக்கே. |
|
|
|
|
|
ஆறு சமயங்களுக்கு தலைவியாக இருக்கக் கூடியவள், அபிராமி அன்னையாகும். அவளே பேதையர்களுக்கு
|
|
நற்கதியடைவதற்குச் சில உண்மையான வழிகளைக் காட்டுபவள். அப்படியிருந்தும் சில வீணர்கள் பிற
|
|
சமயம் உண்டென்று அலைந்து திரிகிறார்கள். இவர்களின் செயல் பெரிய மலையைத் தடி கொண்டு
|
|
தகர்ப்பேன் என்பது போல் உள்ளது.
|
|
|
|
|
|
64: வீணே பலி கவர் தெய்வங்கள்பால் சென்று, மிக்க அன்பு
|
|
|
|
பூணேன், உனக்கு அன்பு பூண்டுகொண்டேன், நின்புகழ்ச்சி அன்றிப்
|
|
|
|
பேணேன், ஒரு பொழுதும், திருமேனி ப்ரகாசம் அன்றிக்
|
|
|
|
காணேன், இரு நிலமும் திசை நான்கும் ககனமுமே. |
|
|
|
|
|
ஏ, அபிராமி! உன்னையன்றி வீணாகப் பலி வாங்கும் வேறொரு தெய்வத்தை நாடேன். உன்னையே
|
|
அன்பு செய்தேன். உன்னுடைய புகழ் வார்த்தையன்றி வேறொரு வார்த்தை பேசேன். எந்நேரமும்
|
|
உன்னுடைய திருமேனிப் பிரகாசத்தைத் தவிர, வேறொன்றும் இவ்வுலகத்திலும், நான்கு திசைகளிலும்
|
|
காண மாட்டேன்.
|
|
|
|
|
|
65: ககனமும் வானும் புவனமும் காண, விற் காமன் அங்கம்
|
|
|
|
தகனம் முன் செய்த தவம்பெருமாற்கு, தடக்கையும் செம்
|
|
|
|
முகனும், முந்நான்கு இருமூன்று எனத் தோன்றிய மூதறிவின்
|
|
|
|
மகனும் உண்டாயது அன்றோ?--வல்லி. நீ செய்த வல்லபமே. |
|
|
|
|
|
ஏ, ஆனந்தவல்லி அபிராமி! உனது கணவனாகிய சிவபெருமான் ஒரு காலத்தில் மன்மதனை அண்டமும்,
|
|
வானமும், பூமியும் காணும்படியாக எரித்தார். அப்படிப்படவருக்கும் நீ ஆறுமுகமும், பன்னிரு கைகளும்
|
|
சிறந்த அறிவும் கொண்ட அழகனாகிய முருகனைப் பெற சக்தியைக் கொடுத்தாய். உன்னுடைய அன்புதான்
|
|
என்னவோ!
|
|
|
|
|
|
66: வல்லபம் ஒன்று அறியேன், சிறியேன், நின் மலரடிச் செய்
|
|
|
|
பல்லவம் அல்லது பற்று ஒன்று இலேன், பசும் பொற் பொருப்பு--
|
|
|
|
வில்லவர் தம்முடன் வீற்றிருப்பாய். வினையேன் தொடுத்த
|
|
|
|
சொல் அவமாயினும், நின் திரு நாமங்கள் தோத்திரமே. |
|
|
|
|
|
ஏ, அபிராமியே! பசுமையான பொன்மலையை வில்லாக உடைய சிவபிரானின் இடப்பாகத்தில் அமர்ந்தவளே!
|
|
நான் அறிவே இன்னதென்று அறியாதவன். மிகவும் சிறியவன். நின் மலர்ப்பாதத் துணையன்றி வேறொரு
|
|
பற்றுமில்லாதவன். ஆகையால் பாவியாகிய நான் உன்னைப் பாடிய பாடலில் சொற் குற்றங்கள்
|
|
இருப்பினும், தாயே! நீ தள்ளி விடுதல் ஆகாது. ஏனெனில், அது உன்னைப் பாடிய தோத்திரங்களேயாகும்.
|
|
|
|
|
|
67: தோத்திரம் செய்து, தொழுது, மின் போலும் நின் தோற்றம் ஒரு
|
|
|
|
மாத்திரைப் போதும் மனத்தில் வையாதவர்--வண்மை, குலம்,
|
|
|
|
கோத்திரம், கல்வி, குணம், குன்றி, நாளும் குடில்கள் தொறும்
|
|
|
|
பாத்திரம் கொண்டு பலிக்கு உழலாநிற்பர்--பார் எங்குமே. |
|
|
|
|
|
அன்னையே! அபிராமி! உன்னையே பாடி, உன்னையே வணங்காமல், மின்போலும் ஒளியுடைய நின்
|
|
தோற்றத்தை ஒரு மாத்திரை நேரமாகிலும் மனதில் நினையாத பேர்களுக்கு, என்ன நேரும் தெரியுமா?
|
|
அவர்கள் கொடைக்குணம், சிறந்த குலம், கல்வி குணம் இவையெல்லாம் குன்றி, வீடு வீடாகச் சென்று,
|
|
ஓடேந்தி உலகெங்கும் பிச்சை எடுத்துத் திரிவர்.
|
|
|
|
|
|
68: பாரும், புனலும், கனலும், வெங் காலும், படர் விசும்பும்,
|
|
|
|
ஊரும் முருகு சுவை ஒளி ஊறு ஒலி ஒன்றுபடச்
|
|
|
|
சேரும் தலைவி, சிவகாம சுந்தரி, சீறடிக்கே
|
|
|
|
சாரும் தவம், உடையார் படையாத தனம் இல்லையே. |
|
|
|
|
|
ஏ, அபிராமி! நீ நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற ஐவகைப் பூதங்களாகவும், சுவை, ஒளி,
|
|
ஊறு, ஓசை, நாற்றம் என்ற அவைகளின் தன்மையாகவும் நிற்கக் கூடியவள். சுந்தரியே! உன்னுடைய
|
|
செல்வம் பொருந்திய திருவடிகளைச் சார்ந்தவர்கள் சிறந்த தவத்தைப் பெறுவர். அத்துடன் அவர்கள் அடையாத
|
|
செல்வமும் இல்லை எனலாம் (எல்லாச் செல்வமும் பெறுவர்).
|
|
|
|
|
|
69: தனம் தரும், கல்வி தரும், ஒருநாளும் தளர்வு அறியா
|
|
|
|
மனம் தரும், தெய்வ வடிவும் தரும், நெஞ்சில் வஞ்சம் இல்லா
|
|
|
|
இனம் தரும், நல்லன எல்லாம் தரும், அன்பர் என்பவர்க்கே--
|
|
|
|
கனம் தரும் பூங் குழலாள், அபிராமி, கடைக்கண்களே, |
|
|
|
|
|
ஏ, அபிராமி! மேகம் போலும் அடர்ந்த கூந்தலையுடையவளே! நின்னுடைய அருள் பெருக்கும்
|
|
கடைக்கண்களை வணங்கினாலே போதும். அக்கண்களே அடியார்களுக்குச் சிறந்த செல்வத்தைத்
|
|
தரும். நல்ல கல்வி தரும். சோர்வடையாத மனத்தைத் தரும். தெய்வீக அழகைத் தரும். நெஞ்சில்
|
|
வஞ்சம் கலவாத உறவினர்களைத் தரும். நல்லன எல்லாம் கிட்டும்.
|
|
|
|
|
|
70: கண்களிக்கும்படி கண்டுகொண்டேன், கடம்பாடவியில் பண்
|
|
|
|
களிக்கும் குரல் வீணையும், கையும் பயோதரமும்,
|
|
|
|
மண் களிக்கும் பச்சை வண்ணமும் ஆகி, மதங்கர்க்குலப்
|
|
|
|
பெண்களில் தோன்றிய எம்பெருமாட்டிதன் பேரழகே. |
|
|
|
|
|
ஏ, அபிராமி! உன்னை என் கண்கள் களிக்குமாறு கண்டு கொண்டேன். கடம்ப வனம் என்னும் பதியில்
|
|
உறைந்த அபிராமி அன்னையே! நின் பேரழகைக் கண்டு கொண்டேன். பண்ணும் விரும்புகின்ற குரல்,
|
|
வீணை தாங்கிய அழகிய கரங்கள், திருமுலை தாங்கிய திருமார்பு, மண்மகள் மகிழும் பச்சை நிறம் -
|
|
இவைகளெல்லாம் கொண்ட மதங்கர் எனும் குலத்தில் தோன்றிய பேரழகானவளே! உன்னைக் கண்டு
|
|
கொண்டேன்.
|
|
|
|
|
|
71: அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி, அரு மறைகள்
|
|
|
|
பழகிச் சிவந்த பதாம்புயத்தாள், பனி மா மதியின்
|
|
|
|
குழவித் திருமுடிக் கோமளயாமளைக் கொம்பு இருக்க--
|
|
|
|
இழவுற்று நின்ற நெஞ்சே.-இரங்கேல், உனக்கு என் குறையே? |
|
|
|
|
|
அபிராமித் தேவி எவருக்கும் இணையில்லாத திருமேனியழகுடையவள். வேதப் பொருளிலே திருநடம்
|
|
புரிந்த சிவந்த பாதத் தாமரைகளை உடையவள். குளிர்ந்த இளம்பிறையைத் தன் திருமுடிகளில் சூடிய
|
|
கோமளவல்லி, இனிமையான கொம்பான தேவி இருக்க, நெஞ்சே! ஊக்கம் குறைந்து, ஏக்கம் கொள்ளாதே!
|
|
உற்ற இடத்தில் ஊன்று கோலாக அன்னை இருக்க உனக்கு ஏன் குறை?
|
|
|
|
|
|
72: எங்குறை தீரநின்று ஏற்றுகின்றேன், இனி யான் பிறக்கில்,
|
|
|
|
நின் குறையே அன்றி யார் குறை காண்?-இரு நீள் விசும்பின்
|
|
|
|
மின் குறை காட்டி மெலிகின்ற நேர் இடை மெல்லியலாய்.-
|
|
|
|
தன் குறை தீர, எம்கோன் சடை மேல் வைத்த தாமரையே. |
|
|
|
|
|
ஏ, அபிராமி! என்னுடைய குறைகளெல்லாம் தீர உன்னையே வணங்குகின்றேன். இக்குறையுடைய
|
|
பிறவியை நான் மறுபடியும் எடுத்தால் என் குறையே அல்ல. உன்னுடைய குறையேயாகும். அகன்ற
|
|
வானத்தில் தோன்றும் அம்மின்னலையும் பழிக்குமாறுள்ள நுண்ணிய இடையையுடையவளே! எம்முடைய தந்தை
|
|
சிவபெருமான், தன் குறை தீர, தனது திருமுடி மேல் சாத்திய அழகிய பாதத் தாமரைகளையுடையவளே!
|
|
|
|
|
|
73: தாமம் கடம்பு, படை பஞ்ச பாணம், தனுக் கரும்பு,
|
|
|
|
யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது, எமக்கு என்று வைத்த
|
|
|
|
சேமம் திருவடி, செங்கைகள் நான்கு, ஒளி செம்மை, அம்மை
|
|
|
|
நாமம் திரிபுரை, ஒன்றோடு இரண்டு நயனங்களே. |
|
|
|
|
|
ஏ, அபிராமி! உன்னுடைய மாலை, கடம்ப மாலை, படைகளோ பஞ்ச பாணங்கள் (ஐவகை மலர்
|
|
அம்புகள்); வில்லோ கரும்பு; உன்னுடைய நெற்றிக் கண்களோ அருட் கண்கள்; நான்கு கரங்களோ
|
|
செந்நிறமாகும். உன்னை வயிரவர்கள் வணங்கும் நேரமோ நள்ளிரவாகும். திரிபுரை என்ற பெயரும்
|
|
உண்டும். நீ எனக்கு மேலாக வைத்திருக்கும் செல்வம் நின்னுடைய திருவடித் தாமரைகளேயாகும்.
|
|
|
|
|
|
74: நயனங்கள் மூன்றுடை நாதனும், வேதமும், நாரணனும்,
|
|
|
|
அயனும் பரவும் அபிராம வல்லி அடி இணையைப்
|
|
|
|
பயன் என்று கொண்டவர், பாவையர் ஆடவும் பாடவும், பொன்
|
|
|
|
சயனம் பொருந்து தமனியக் காவினில் தங்குவரே. |
|
|
|
|
|
முக்கண்களையுடைய சிவன், திருமால், பிரும்மா முதலானோரும் வணங்கக்கூடிய தேவி அபிராமியாகும்.
|
|
அவளுடைய பாதங்களிலே சரண் என்றடைந்த அடியார்கள் இந்திர போகத்தையும் விரும்ப மாட்டார்கள்.
|
|
அரம்பை முதலான தேவ மகளிர் பாடி, ஆட, பொன் ஆசனமே கிட்டினும், அன்னையின் பாதச்
|
|
சேவையையே பெரிதென நினைவார்கள்.
|
|
|
|
|
|
75: தங்குவர், கற்பக தாருவின் நீழலில், தாயர் இன்றி
|
|
|
|
மங்குவர், மண்ணில் வழுவாய் பிறவியை,-மால் வரையும்,
|
|
|
|
பொங்கு உவர் ஆழியும், ஈரேழ் புவனமும், பூத்த உந்திக்
|
|
|
|
கொங்கு இவர் பூங்குழலாள் திருமேனி குறித்தவரே. |
|
|
|
|
|
பெரிய மலைகளையும், நுரைக் கடலையும், பதினான்கு உலகத்தையும் பெற்றெடுத்த ஏ அபிராமி!
|
|
மணம் வீசும் பூவையணிந்த குழலுடையவளே! உன்னுடைய திருமேனியை இடையுறாது சிந்தையிலே
|
|
தியானிப்பவர் சகலத்தையும் தருகின்ற கற்பக மரத்தின் நிழலையும் பெற்று இன்புறுவர். இடைவிடாது
|
|
தோன்றும் மானிடப் பிறவியும் இல்லாமல் போவர். அத்தகைய பல பிறவிகளில் பெற்றெடுக்கும்
|
|
மானிடத் தாயாரும் இல்லாமல் போவர் (என்றும் நிலையாகிய தாய் நீயே).
|
|
|
|
|
|
76: குறித்தேன் மனத்தில் நின் கோலம் எல்லாம், நின் குறிப்பு அறிந்து
|
|
|
|
மறித்தேன் மறலி வருகின்ற நேர்வழி, வண்டு கிண்டி
|
|
|
|
வெறித்தேன் அவிழ் கொன்றை வேணிப் பிரான் ஒரு கூற்றை, மெய்யில்
|
|
|
|
பறித்தே, குடிபுகுதும் பஞ்ச பாண பயிரவியே. |
|
|
|
|
|
ஏ, அபிராமி! பஞ்ச பாணங்களையுடையவளே! உன்னுடைய திருக்கோலத்தையே மனத்தில் நினைத்து
|
|
தியானிக்கின்றேன். உன்னுடைய திருவருளைக் கொண்டு, மருட்டுகின்ற யமன்வரும் வழியைக்
|
|
கண்டு கொண்டேன். கண்டதும் அல்லாமல், அவன் வருவதற்கு முன், அவன் வழியை அடைத்தும்
|
|
விட்டேன் (எல்லாம் நின் திருவருளே). வண்டு மொய்க்கும் தேனொடு கூடிய கொன்றை
|
|
மாலையை அணிந்த சிவபெருமானின் இடப்பாகத்தை வெற்றி கொண்டு, தானொரு பாதியாக
|
|
அமர்ந்தவளே!
|
|
|
|
|
|
77: பயிரவி, பஞ்சமி, பாசாங்குசை, பஞ்ச பாணி, வஞ்சர்
|
|
|
|
உயிர் அவி உண்ணும் உயர் சண்டி, காளி, ஒளிரும் கலா
|
|
|
|
வயிரவி, மண்டலி, மாலினி, சூலி, வராகி--என்றே
|
|
|
|
செயிர் அவி நான்மறை சேர் திருநாமங்கள் செப்புவரே. |
|
|
|
|
|
ஏ, அபிராமி! உன்னை, பைரவர் வணங்கக்கூடிய பைரவி; பஞ்சமி; பாசத்தையும், அங்குசத்தையும்
|
|
உடைய பாசாங்குசை; ஐவகை மலர் அம்புகளையுடைய பஞ்சபாணி; வஞ்சகரின் உயிரை மாய்த்து,
|
|
அவர்கள் இரத்தத்தைக் குடிக்கின்ற மேலான சண்டி; மகா காளி; ஒளிவீசும் கலை பொருந்திய
|
|
வயிரவி, சூரிய, சந்திர மண்டலத்திலுள்ளோர்க்கு மண்டலி; சூலத்தையுடைய சூலி; உலகளந்த
|
|
வராகி என்றெல்லாம் அடியார் பல்வேறு நாமங்களைச் சொல்லி வணங்குவர். குற்றமற்ற வேதங்களிலும்,
|
|
நின் திரு நாமங்கள் இவ்வாறு கூறப்படுகின்றன. அதையே அடியார்கள் மீண்டும் மீண்டும் சொல்லி
|
|
வாழ்த்தி வணங்கி வழிபடுகின்றனர்.
|
|
|
|
|
|
78: செப்பும் கனக கலசமும் போலும் திருமுலைமேல்
|
|
|
|
அப்பும் களப அபிராம வல்லி, அணி தரளக்
|
|
|
|
கொப்பும், வயிரக் குழையும், விழியின் கொழுங்கடையும்,
|
|
|
|
துப்பும், நிலவும் எழுதிவைத்தேன், என் துணை விழிக்கே. |
|
|
|
|
|
என் தாயே! அபிராமி! உன்னையே என் இரு கண்களில் எழுதி வைத்தேன். அந்த உருவம் எப்படிப்
|
|
பட்டதெனின், மாணிக்கப் பூண் அணிந்த பொற்கலசம் போன்ற திருமுலை; அம்முலைமேல் பூசிய
|
|
மணம் வீசும் சிறந்த சந்தனக் கலவை; அங்கே புரளும் அணிகலன்கள்; சிறந்த முத்துக் கொப்பு;
|
|
வைரத்தோடு; செழுமையான கருணைமிகும் கடைக்கண்கள்; குளிர்ச்சியை உமிழ்கின்ற நிலவைப்
|
|
போன்ற திருமுகம் இவைகளெல்லாம் கொண்ட வடிவையே என் மனத்தில் இருத்தினேன்.
|
|
|
|
|
|
79: விழிக்கே அருள் உண்டு, அபிராம வல்லிக்கு, வேதம் சொன்ன
|
|
|
|
வழிக்கே வழிபட நெஞ்சு உண்டு எமக்கு, அவ்வழி கிடக்க,
|
|
|
|
பழிக்கே சுழன்று, வெம் பாவங்களே செய்து, பாழ் நரகக்
|
|
|
|
குழிக்கே அழுந்தும் கயவர் தம்மோடு, என்ன கூட்டு இனியே? |
|
|
|
|
|
அபிராமியின் விழிகளில் என்றும் அருளுண்டு. வேதமுறைப்படி அவளை வழிபட எனக்கு நெஞ்சமும்
|
|
உண்டு. ஆகையால் பழியையும், பாவத்தையுமே விளைவித்து, பாழ் நரகக்குழியில் அழுந்தி
|
|
வாடும் பேதையர்களோடு எனக்கு இனி என்ன தொடர்பு? (அபிராமி அன்னை சிறந்த துணையாவாள்).
|
|
|
|
|
|
80: கூட்டியவா என்னைத் தன் அடியாரில், கொடிய வினை
|
|
|
|
ஓட்டியவா, என்கண் ஓடியவா, தன்னை உள்ளவண்ணம்
|
|
|
|
காட்டியவா, கண்ட கண்ணும் மனமும் களிக்கின்றவா,
|
|
|
|
ஆட்டியவா நடம்--ஆடகத் தாமரை ஆரணங்கே. |
|
|
|
|
|
ஏ, அபிராமித்தாயே! பொற்றாமரையில் வாழும் பேரழகானவளே! என்னை உன் அடியார்கள் கூட்டத்தில்
|
|
சேர்த்தவளே! நான் செய்த கொடிய வினைகளையெல்லாம் ஒழித்தவளே! ஒன்றையும் அறியாத எனக்கு,
|
|
உன்னுடைய உண்மை உருவைக் காட்டியவளே! உன்னைக் கண்ட என் கண்ணும், மனமும் களிநடம்
|
|
புரிகின்றது. இவ்வாறெல்லாம் என்னை நாடகமாடச் செய்தவளே! உன்னுடைய கருணையத்தான்
|
|
என்னவென்பேன்.
|
|
|
|
|
|
81: அணங்கே.-அணங்குகள் நின் பரிவாரங்கள் ஆகையினால்,
|
|
|
|
வணங்கேன் ஒருவரை, வாழ்த்துகிலேன் நெஞ்சில், வஞ்சகரோடு
|
|
|
|
இணங்கேன், எனது உனது என்றிருப்பார் சிலர் யாவரொடும்
|
|
|
|
பிணங்கேன், அறிவு ஒன்று இலேன், என்கண் நீ வைத்தபேர் அளியே. |
|
|
|
|
|
ஏ, அபிராமி! என்னிடத்தில் நீ வைத்த பெருங்கருணையினால் நான் கள்ள நெஞ்சம் உடையவரிடம்
|
|
நெருங்க மாட்டேன். உலகத்தில் மற்ற சக்திகளெல்லாம் உன்னுடைய பரிவாரத் தேவதைகளேயாகும்.
|
|
ஆதலினால் நான் அவர்களை வணங்க மாட்டேன்; ஒருவரையும் போற்றவும் மாட்டேன்; நான்
|
|
அறிவில்லாதவனாயினும், என்னுடையதெல்லாம் உன்னுடையது என்று உன்னை வணங்கும் சில
|
|
ஞானிகளோடு மட்டுமே பிணங்காது சேர்ந்து உறவாடுவேன்!
|
|
|
|
|
|
82: அளி ஆர் கமலத்தில் ஆரணங்கே. அகிலாண்டமும் நின்
|
|
|
|
ஒளியாக நின்ற ஒளிர் திருமேனியை உள்ளுந்தொறும்,
|
|
|
|
களி ஆகி, அந்தக்கரணங்கள் விம்மி, கரைபுரண்டு
|
|
|
|
வெளியாய்விடின், எங்ஙனே மறப்பேன், நின் விரகினையே? |
|
|
|
|
|
ஏ, அபிராமி! வண்டுகள் ஆர்க்கும் தாமரையில் வாழ்பவளே! பேரழகானவளே! உலகமெல்லாம்
|
|
ஒளியாக நின்ற, ஒளிவீசும் உன்னுடைய திருமேனியை நான் நினைக்கும்தோறும் களிப்படைகின்றேன்.
|
|
அக்களிப்பின் மிகுதியால் அந்தக் காரணங்கள் விம்மிக் கரைபுரண்டு, பரவெளியாகவுள்ள ஆகாயத்தில்
|
|
ஒன்றி விடுகின்றன. இவ்வளவு பேரருள் காட்டியருளிய உன் தவநெறியை நான் எவ்வாறு மறப்பேன்?
|
|
(மறவேன் ஒருபோதும்).
|
|
|
|
|
|
83: விரவும் புது மலர் இட்டு, நின் பாத விரைக்கமலம்
|
|
|
|
இரவும் பகலும் இறைஞ்ச வல்லார், இமையோர் எவரும்
|
|
|
|
பரவும் பதமும், அயிராவதமும், பகீரதியும்,
|
|
|
|
உரவும் குலிகமும், கற்பகக் காவும் உடையவரே. |
|
|
|
|
|
அன்னையே, அபிராமி! உன்னுடைய மணம்மிக்க திருவடித் தாமரைகளில் தேன் சிந்தும் புதுமலர்களை
|
|
வைத்து இரவு, பகலாக தியானம் செய்யும் பெரியோர்கள், தேவர்கள் முதலிய யாவரும் இந்திர பதவி,
|
|
ஐராவதம் என்ற யானை, ஆகாய கங்கை, வலிமையான வஜ்ஜிர ஆயுதம், கற்பகச் சோலை முதலியவைகளை
|
|
முறையாகப் பெற்று பெருவாழ்வு வாழ்கின்றனர். (எனக்கும் அருள்வாயாக!)
|
|
|
|
|
|
84: உடையாளை, ஒல்கு செம்பட்டுடையாளை, ஒளிர்மதிச் செஞ்
|
|
|
|
சடையாளை, வஞ்சகர் நெஞ்சு அடையாளை, தயங்கு நுண்ணூல்
|
|
|
|
இடையாளை, எங்கள் பெம்மான் இடையாளை, இங்கு என்னை இனிப்
|
|
|
|
படையாளை, உங்களையும் படையாவண்ணம் பார்த்திருமே. |
|
|
|
|
|
ஏ, அடியார்களே! என் அபிராமி, இடையில் ஒளிவீசும் செம்பட்டு அணிந்தவள். ஒளி வீசும் பிறைச்
|
|
சந்திரனை அணிந்த சடையை உடையவள். வஞ்சகர்களின் நெஞ்சிலே குடி கொள்ளாதவள். ஒளி
|
|
விளங்கும் நுண்மையான நூலிடையாள். சிவபெருமானின் இடப்பாகத்தில் குடி கொண்டவள். என்
|
|
அன்னையாகிய இவள் அந்நாள் என்னை அடிமையாகக் கொண்டாள். என்னை இனி இவ்வுலகில்
|
|
பிறக்க வைக்க மாட்டாள். அத்தகைய தேவியை நீங்களும் தொழுது போற்றுங்கள். நீங்களும்
|
|
பிறவி எடுக்காப் பேறெய்த அவளையே தியானம் செய்யுங்கள்.
|
|
|
|
|
|
85: பார்க்கும் திசைதொறும் பாசாங்குசமும், பனிச் சிறை வண்டு
|
|
|
|
ஆர்க்கும் புதுமலர் ஐந்தும், கரும்பும், என் அல்லல் எல்லாம்
|
|
|
|
தீர்க்கும் திரிபுரையாள் திரு மேனியும், சிற்றிடையும்,
|
|
|
|
வார்க் குங்கும முலையும், முலைமேல் முத்து மாலையுமே. |
|
|
|
|
|
ஏ, அபிராமி! நான் எத்திசையை நோக்கினும் உன்னுடைய படைகளாகிய பாசமும், அங்குசமும்,
|
|
வண்டுகள் மறைந்திருக்கும் மலர் அம்பு ஐந்தும், கரும்பு வில்லும், என்னுடைய துன்பங்களெல்லாம்
|
|
தீர்க்கக் கூடிய திரிபுரையாகிய நின் திருமேனி அழகும், சிற்றிடையும், கச்சையணிந்த குங்குமம்
|
|
தோய்ந்த மார்பகங்களும், அவற்றின் மேலே அசையும் முத்துமாலையும் என்கண்முன் காட்சியாய்
|
|
நிற்கின்றன. (எங்கும் பரந்தவள்).
|
|
|
|
|
|
86: மால் அயன் தேட, மறை தேட, வானவர் தேட நின்ற
|
|
|
|
காலையும், சூடகக் கையையும், கொண்டு--கதித்த கப்பு
|
|
|
|
வேலை வெங் காலன் என்மேல் விடும்போது, வெளி நில் கண்டாய்
|
|
|
|
பாலையும் தேனையும் பாகையும் போலும் பணிமொழியே. |
|
|
|
|
|
ஏ, அபிராமி! பாலையும், தேனையும், பாகையும் ஒத்த இனிய மொழியுடையவளே! இயமன் கோபித்துப்
|
|
பல கிளைகளைக் கொண்ட சூலத்தை என்மீது செலுத்தும்போது, திருமாலும், பிரம்மனும், வேதங்களும்,
|
|
வானவர்களும் தேடியும் காணாத திருப்பாதங்களையும் சங்கையணிந்த திருக்கரங்களையும் கொண்டு
|
|
நீ என் முன்னே காட்சி தந்தருள வேண்டும்.
|
|
|
|
|
|
87: மொழிக்கும் நினைவுக்கும் எட்டாத நின் திருமூர்த்தம், என்தன்
|
|
|
|
விழிக்கும் வினைக்கும் வெளிநின்றதால்,--விழியால் மதனை
|
|
|
|
அழிக்கும் தலைவர், அழியா விரதத்தை அண்டம் எல்லாம்
|
|
|
|
பழிக்கும்படி, ஒரு பாகம் கொண்டு ஆளும் பராபரையே. |
|
|
|
|
|
ஏ, அபிராமி! நெற்றிக்கண் கொண்டு மன்மதனை எரித்த எம்பிரானாகிய சிவபெருமானின் அழியாத
|
|
யோக விரதத்தை எவ்வுலகத்தவரும் பழிக்குமாறு அவனது இடப்பக்கத்தில் இடம்கொண்டு ஆள்பவளே!
|
|
எளியோனாகிய என் கண்களிலும், என் செயல்களிலும் வாக்குக்கும், மனத்திற்கும் எட்டாத நின்
|
|
திருவுருவமே தோன்றிக் காட்சியளிக்கின்றதே! (ஈதென்ன வியப்போ!)
|
|
|
|
|
|
88: பரம் என்று உனை அடைந்தேன், தமியேனும், உன் பத்தருக்குள்
|
|
|
|
தரம் அன்று இவன் என்று தள்ளத் தகாது--தரியலர்தம்
|
|
|
|
புரம் அன்று எரியப் பொருப்புவில் வாங்கிய, போதில் அயன்
|
|
|
|
சிரம் ஒன்று செற்ற, கையான் இடப் பாகம் சிறந்தவளே. |
|
|
|
|
|
ஏ, அபிராமி! பகைவர்களது முப்புரத்தை எரிக்க மேருமலையை வில்லாகக் கொண்டவரும், திருமாலின்
|
|
உந்தித் தாமரையில் தோன்றிய பிரம்மனின் சிரம் ஒன்றைக் கிள்ளியழித்தவருமான சிவபெருமானின்
|
|
இடப்பாகத்தில் சிறந்து வீற்றிருப்பவளே! யாருமே துணையில்லாத நான், நீயே கதியென்று சரணடைந்தேன்.
|
|
ஆகையால் எளியோனாகிய என்னிடத்தில் உன் பக்தருக்குள்ள தரம் இல்லையென்று நீ தள்ளி
|
|
விடுதல் தகாது. அது உன் அருளுக்கும் அறமன்று.
|
|
|
|
|
|
89: சிறக்கும் கமலத் திருவே. நின்சேவடி சென்னி வைக்கத்
|
|
|
|
துறக்கம் தரும் நின் துணைவரும் நீயும், துரியம் அற்ற
|
|
|
|
உறக்கம் தர வந்து, உடம்போடு உயிர் உறவு அற்று அறிவு
|
|
|
|
மறக்கும் பொழுது, என் முன்னே வரல் வேண்டும் வருந்தியுமே. |
|
|
|
|
|
அபிராமித் தாயே! சிறந்த தாமரையில் வீற்றிருக்கும் செல்வமே! என்னுடைய உயிருக்கும், உடலுக்கும்
|
|
தொடர்பற்று, அறிவு மறதி மிகுந்து இருக்கும் வேளையில் உன்னுடைய சேவடி என்னுடைய சென்னியில்
|
|
படர வேண்டும். மேலும், பற்றின்மையை அனுக்கிரகிக்கும் உன்னுடைய துணைவரும் வந்து மோன
|
|
நிலையில் நான் அறிதுயிலில் அமரும் பேற்றை அருள வேண்டும்.
|
|
|
|
|
|
90: வருந்தாவகை, என் மனத்தாமரையினில் வந்து புகுந்து,
|
|
|
|
இருந்தாள், பழைய இருப்பிடமாக, இனி எனக்குப்
|
|
|
|
பொருந்தாது ஒரு பொருள் இல்லை--விண் மேவும் புலவருக்கு
|
|
|
|
விருந்தாக வேலை மருந்தானதை நல்கும் மெல்லியலே. |
|
|
|
|
|
ஏ, அபிராமி! உலகில் எனக்கு இனிக் கிடைக்காத பொருளென்று ஏதுமில்லை. என்னுடைய உள்ளத்
|
|
தாமரையை உன்னுடைய பழைய உறைவிடமாகக் கருதி வந்தமர்ந்தாய். மேலும் நான் பிறந்தும், இறந்தும்
|
|
வருந்தாமல் இருக்க அருள் புரிந்தாய். பாற்கடலில் தோன்றிய அமிர்தத்தை திருமால் தேவர்களுக்குக்
|
|
கொடுக்க முதலாக இருந்த அபிராமியே, எனக்கு இனியேது குறை?
|
|
|
|
|
|
91: மெல்லிய நுண் இடை மின் அனையாளை விரிசடையோன்
|
|
|
|
புல்லிய மென் முலைப் பொன் அனையாளை, புகழ்ந்து மறை
|
|
|
|
சொல்லியவண்ணம் தொழும் அடியாரைத் தொழுமவர்க்கு,
|
|
|
|
பல்லியம் ஆர்த்து எழ, வெண் பகடு ஊறும் பதம் தருமே. |
|
|
|
|
|
அபிராமித் தேவி! நீ மின்னல் போலும் மெல்லிய இடையினை உடையவள்; விரிந்த சடைமுடி
|
|
நாதர் சிவபிரானோடு இணைந்து நிற்கும் மென்மையான முலைகளையுடையவள்; பொன்னைப்
|
|
போன்றவள். இவ்வாறாகிய உன்னை வேதப்படி தொழுகின்ற அடியார்க்கும் அடியவர்கள்,
|
|
பல்வகை இசைக்கருவிகள் இனிதாக முழங்கிவர, வெள்ளையானையாகிய ஐராவதத்தின் மேலே
|
|
ஊர்ந்து செல்லும் இந்திரப் பதவி முதலான செல்வ போகங்களைப் பெறுவர்.
|
|
|
|
|
|
92: பதத்தே உருகி, நின் பாதத்திலே மனம் பற்றி, உன்தன்
|
|
|
|
இதத்தே ஒழுக, அடிமை கொண்டாய், இனி, யான் ஒருவர்
|
|
|
|
மதத்தே மதி மயங்கேன், அவர் போன வழியும் செல்லேன்--
|
|
|
|
முதல் தேவர் மூவரும் யாவரும் போற்றும்முகிழ் நகையே. |
|
|
|
|
|
ஏ, அபிராமி! முதல் என்று கூறப்படும் மும்மூர்த்திகளும் மற்றுமுள்ள தேவர்களும் போற்றித் தொழுகின்ற
|
|
புன்னகையையுடையவளே! உன்னுடைய ஞானத்திற்காகவே உருகிநின்ற என்னை உன் பாதத்திலேயே
|
|
பற்றும்படி செய்து, உன் வழிப்படியே யான் நடக்கும்படி அடிமையாகக் கொண்டவளே! இனி நான்
|
|
வேறொரு மதத்திலே மன மயக்கம் கொள்ள மாட்டேன். அவர்கள் செல்லும் வழியிலேயும் செல்ல
|
|
மாட்டேன்.
|
|
|
|
|
|
93: நகையே இது, இந்த ஞாலம் எல்லாம் பெற்ற நாயகிக்கு,
|
|
|
|
முகையே முகிழ் முலை, மானே, முது கண் முடிவுயில், அந்த
|
|
|
|
வகையே பிறவியும், வம்பே, மலைமகள் என்பதும் நாம்,
|
|
|
|
மிகையே இவள்தன் தகைமையை நாடி விரும்புவதே. |
|
|
|
|
|
உலகமெல்லாம் பெற்றெடுத்த தலைவியாகிய அபிராமி அன்னையின் திரு மார்பகங்களைத் தாமரை
|
|
மொட்டு என்கிறார்கள். கருணை ததும்பி நிற்கும் முதிர்ந்த கண்களை, மருட்சி மிக்க மான் கண்கள்
|
|
என்கிறார்கள். முடிவில்லாதவள் என்றெல்லாம் பக்தர்கள் கூறுகின்றார்கள். இவையெல்லாமே மாறுபட்ட கூற்றுகள். இவைகளை நினையும் போது எனக்கு நகைப்பே உண்டாகிறது. இனிமேல் நாம் செய்யக்கூடியது இத்தகைய கற்பனைகளைத் தள்ளி அவளின் உண்மை நிலையை அறிதலேயாகும்.
|
|
|
|
|
|
94: விரும்பித் தொழும் அடியார் விழிநீர் மல்கி, மெய் புளகம்
|
|
|
|
அரும்பித் ததும்பிய ஆனந்தம் ஆகி, அறிவு இழந்து
|
|
|
|
கரும்பின் களித்து, மொழி தடுமாறி, முன் சொன்ன எல்லாம்
|
|
|
|
தரும் பித்தர் ஆவர் என்றால் அபிராமி சமயம் நன்றே. |
|
|
|
|
|
அபிராமி அம்மையைப் பக்தியோடு விரும்பித்தொழும் அடியவர்களின் கண்களில் நீரானது பெருகி,
|
|
மெய்சிலிர்த்து, ஆனந்தம் ததும்பி, அறிவு மறந்து, வண்டைப் போல் களித்து, மொழி தடுமாறி,
|
|
முன்பு சொல்லிய பித்தரைப் போல் ஆவார்கள் என்றால், அப்பேரானந்தத்திற்கு மூலமான
|
|
அம்பிகையின் சமயமே மிகச்சிறந்ததாகும்.
|
|
|
|
|
|
95: நன்றே வருகினும், தீதே விளைகினும், நான் அறிவது
|
|
|
|
ஒன்றேயும் இல்லை, உனக்கே பரம்: எனக்கு உள்ளம் எல்லாம்
|
|
|
|
அன்றே உனது என்று அளித்து விட்டேன்:- அழியாத குணக்
|
|
|
|
குன்றே, அருட்கடலே, இமவான் பெற்ற கோமளமே. |
|
|
|
|
|
ஏ, அபிராமி! அழியாத குணக்குன்றே! அருட்கடலே! மலையரசன் பெற்றெடுத்த அழகிய கோமள
|
|
வல்லியே! எனக்கு உரிமை என்று எப்பொருளும் இல்லை. அனைத்தையும் அன்றே உன்னுடையதாக்கி
|
|
விட்டேன். இனி எனக்கு நல்லதே வந்தாலும், தீமையே விளைந்தாலும், அவற்றை உணராது விருப்பு,
|
|
வெறுப்பற்றவனாவேன். இனி என்னை உனக்கே பரம் என்று ஆக்கினேன்.
|
|
|
|
|
|
96: கோமளவல்லியை, அல்லியந் தாமரைக் கோயில் வைகும்
|
|
|
|
யாமள வல்லியை, ஏதம் இலாளை, எழுதரிய
|
|
|
|
சாமள மேனிச் சகலகலா மயில்தன்னை, தம்மால்
|
|
|
|
ஆமளவும் தொழுவார், எழு பாருக்கும் ஆதிபரே. |
|
|
|
|
|
என் அபிராமி அன்னையை, இளமையும் அழகும் மிக்க கோமள வல்லியை, அழகிய மென்மையான
|
|
தாமரையைக் கோயிலாகக் கொண்டு உறையும் யாமளவல்லியை, குற்றமற்றவளை, எழுதுதற்கு
|
|
இயலாத எழில் கொண்ட திருமேனியுடையவளை, சகல கலைகளிலும் வல்ல மயில் போன்றவளை,
|
|
தம்மால் கூடுமானவரை தொழுகின்ற அடியவர்களே, ஏழுலகையும் ஆட்சி புரியும் அதிபர்கள் ஆவார்கள்.
|
|
|
|
|
|
97: ஆதித்தன், அம்புலி, அங்கி குபேரன், அமரர்தம் கோன்,
|
|
|
|
போதிற் பிரமன் புராரி, முராரி பொதியமுனி,
|
|
|
|
காதிப் பொருபடைக் கந்தன், கணபதி, காமன் முதல்
|
|
|
|
சாதித்த புண்ணியர் எண்ணிலர் போற்றுவர், தையலையே. |
|
|
|
|
|
என்னுடைய அன்னை அபிராமியை, புண்ணியம் பல செய்து, அவற்றின் பயனையும் அடைந்த சூரியன்,
|
|
சந்திரன், அக்கினி, குபேரன், தேவர்களின் தலைவன் இந்திரன், தாமரை மலரில் உதித்த பிரம்மன்,
|
|
முப்புரங்களை எரித்த சிவபெருமான், முரனைத் தண்டித்த திருமால், பொதியமலை முனியாகிய
|
|
அகத்தியர், கொன்று போர் புரியும் கந்தன், கணபதி, மன்மதன் முதலாகிய எண்ணற்ற தேவர்கள்
|
|
அனைவரும் போற்றித் துதிப்பர்.
|
|
|
|
|
|
98: தைவந்து நின் அடித் தாமரை சூடிய சங்கரற்கு
|
|
|
|
கைவந்த தீயும், தலை வந்த ஆறும், கரலந்தது எங்கே?--
|
|
|
|
மெய் வந்த நெஞ்சின் அல்லால் ஒருகாலும் விரகர் தங்கள்
|
|
|
|
பொய்வந்த நெஞ்சில், புகல் அறியா மடப் பூங் குயிலே. |
|
|
|
|
|
ஏ, அபிராமி! நீ உண்மை பொருந்திய நெஞ்சைத் தவிர வஞ்சகர்களுடைய பொய் மனத்தில் ஒருபோதும்
|
|
வந்து புகுந்தறியாதவள். பூங்குயில் போன்றவளே! உன்னுடைய பாதத்தாமரையைத் தலையில் சூடிக்
|
|
கொண்ட சிவபெருமானாகிய சங்கரனின் கையிலிருந்த தீயும், முடிமேல் இருந்த ஆறும் (ஆகாய கங்கை)
|
|
எங்கே ஒளிந்து கொண்டனவோ?
|
|
|
|
|
|
99: குயிலாய் இருக்கும் கடம்பாடவியிடை, கோல வியன்
|
|
|
|
மயிலாய் இருக்கும் இமயாசலத்திடை, வந்து உதித்த
|
|
|
|
வெயிலாய் இருக்கும் விசும்பில், கமலத்தின்மீது அன்னமாம்,
|
|
|
|
கயிலாயருக்கு அன்று இமவான் அளித்த கனங்குழையே |
|
|
|
|
|
ஏ, அபிராமி! அன்று கைலயங்கிரித் தலைவனாகிய சிவபிரானுக்கு மணம் முடித்த மலையரசன் மகளே!
|
|
கடம்பவனத்தில் உறைந்த குயிலே! இமயமலையில் தோன்றிய் அழகிய மயிலே! ஆகாயத்தில் நிறைந்திருப்பவளே!
|
|
தாமரை மீது அன்னமாக அமர்ந்திருக்கும் திருக்கோலத்தையுடையவளே! (மதுரையில் குயிலாகவும்,
|
|
இமயத்தில் மயிலாகவும், சிதம்பரத்தில் ஞானசூரிய ஒளியாகவும், திருவாரூரில் அன்னமாகவும்
|
|
அம்பிகை விளங்குகின்றாள் என்பது வழக்கு).
|
|
|
|
|
|
100: குழையைத் தழுவிய கொன்றையந் தார் கமழ் கொங்கைவல்லி
|
|
|
|
கழையைப் பொருத திருநெடுந் தோளும், கருப்பு வில்லும்
|
|
|
|
விழையப் பொரு திறல் வேரியம் பாணமும் வெண் நகையும்
|
|
|
|
உழையைப் பொருகண்ணும் நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றவே! |
|
|
|
|
|
ஏ, அபிராமி! குழையிலே தவழும்படியாகவுள்ள கொன்றை மலரால் தொடுத்த மாலையின் மணம்கமழும்
|
|
மார்பகங்களையும் தோளையும் உடையவளே! மூங்கிலை ஒத்த அழகிய கரும்பு வில்லும், கலவிபோருக்கு
|
|
விரும்பக்கூடிய மணம் மிகுந்த ஐவகை மலர் அம்பும், வெண்மையான முத்துப்பல் இதழ்ச் சிரிப்பும், மானை
|
|
ஒத்த மருண்ட கண்களுமே எப்பொழுதும் என் நெஞ்சில் நிறைந்திருக்கிறது. அத் திருமேனியையே நான்
|
|
வழிபடுகின்றேன்.
|
|
|
|
|
|
நூற்பயன்
|
|
|
|
ஆத்தாளை, எங்கள் அபிராம வல்லியை, அண்டம் எல்லாம்
|
|
|
|
பூத்தாளை, மாதுளம் பூ நிறத்தாளை, புவி அடங்கக்
|
|
|
|
காத்தாளை, ஐங்கணைப் பாசங்குசமும் கருப்புவில்லும்
|
|
|
|
சேர்த்தாளை, முக்கண்ணியைத், தொழுவார்க்கு ஒரு தீங்கு இல்லையே. |
|
|
|
|
|
எங்கள் தாயானவளை, அபிராமி வல்லியை, எல்லா உலகங்களையும் பெற்றவளை, மாதுளம் பூப்போன்ற
|
|
நிறத்துடையவளை, உலகமெல்லாம் காத்தவளை, திருக்கரங்களில் மலர் அம்புகள் ஐந்தையும், பாசத்தையும்,
|
|
அங்குசத்தையும், கரும்பு வில்லையும் வைத்திருபவளை, மூன்று கண்களையுடைய தேவியைத் தொழுவார்க்கு
|
|
ஒரு தீங்கும் நேராது; உலகில் வளமும் நலமும் பெற்று வாழ்வர்.
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|